இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணத்தை முன்னிட்டு பெட்டாலிங் ஜெயாவில் இசை நிகழ்ச்சி.
2026-09-17 22:35:39
கோலாலம்பூர்,செப்.11-
சிறுவயது முதலே பேக்கரி மற்றும் கேக் தயாரிப்பில் கொண்டிருந்த ஆர்வத்தை விடாமல்தொடர்ந்து வளர்த்து, இன்று அதே துறையில் சொந்த தொழிலை உருவாக்கியுள்ளார்விக்னேஸ்வரி நாராஜா.
அவரது முயற்சியின் அடுத்த கட்டமாக ‘பென்சி அக்கடாமி’ என்ற பெயரில் பேக்கரி பயிற்சிநிலையம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. OUG Parklane பகுதியில் அமைந்துள்ள இந்தஅக்கடாமி, பேக்கரி துறையில் ஆர்வம் கொண்டவர்களுக்கு தங்களது திறமைகளைவளர்த்துக் கொள்ளும் வாய்ப்பை வழங்கும் நோக்கத்துடன் செயல்படத் தொடங்கியுள்ளது.
தனது பயணம் குறித்து விக்னேஸ்வரி நாராஜா கூறுகையில், சிறுவயது முதலே பேக்கரிதுறையில் தனக்கு அதிக ஆர்வம் இருந்ததாக தெரிவித்தார்.
அந்த ஆர்வத்தின் அடிப்படையில் ஆரம்பத்தில் சிறிய அளவில் கேக் தயாரித்து விற்பனைசெய்யும் தொழிலில் ஈடுபட்டதாகவும், பின்னர் தனது அனுபவத்தையும் திறமையையும்மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு சிலருக்கு கேக் தயாரிப்பு தொடர்பான பயிற்சிகளைவழங்கியதாகவும் கூறினார்.
கேக் விற்பனையில் தொடங்கிய தனது பயணம், தற்போது பயிற்சி வழங்கும் அக்கடாமியைதொடங்கும் அளவுக்கு வளர்ந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“சிறுவயதில் எனக்கு இருந்த விருப்பத்தை இன்று ஒரு சொந்த தொழிலாக மாற்றியுள்ளேன். ஆரம்பத்தில் சிறிய அளவில் கேக் வியாபாரத்தை மேற்கொண்டேன். அதன் பின்னர்என்னிடம் கற்றுக்கொள்ள விரும்பிய சிலருக்கு பயிற்சி வழங்கினேன். அந்த அனுபவத்தின்தொடர்ச்சியாகவே தற்போது பென்சி அக்கடாமியை ஆரம்பித்துள்ளேன்,” என விக்னேஸ்வரிதெரிவித்தார்.
அக்கடாமியின் திறப்பு விழா இன்று நடைப்பெறுகிறது. இதனை திறந்து வைக்ககோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தின் தலைவர் வி.கே.கே.ராஜாவருகையளித்திருந்தார். இந்த குறுகிய நிலையில், அதற்குள் 5 பேர் பயிற்சியில்இணைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தமது முயற்சிக்கு கிடைத்துள்ள ஆரம்பகட்ட வரவேற்பாக அமைந்துள்ளதாகவும் அவர்மகிழ்ச்சி தெரிவித்தார்.
மேலும், இந்த வார சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் பென்சிஅக்கடாமிக்கு நேரடியாக வந்து, அங்கு வழங்கப்படும் பயிற்சிகள், பாடத்திட்டங்கள் மற்றும்பேக்கரி துறை தொடர்பான முழுமையான விவரங்களை அறிந்து கொள்ளலாம் என்றும்அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
அக்கடாமியின் தொடக்கத்தை முன்னிட்டு, அடுத்த ஒரு வாரத்தில் பதிவு செய்யும் புதியபயிலாளர்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேக்கரி துறையில் ஆர்வம் கொண்டவர்கள், குறிப்பாக கேக் தயாரிப்பு மற்றும் அதனைதொழிலாக முன்னெடுக்க விரும்புவோர், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பென்சிஅக்கடாமியை அணுகலாம் என விக்னேஸ்வரி நாராஜா தெரிவித்தார்.
சிறுவயது விருப்பத்தை விடாமுயற்சியுடன் வளர்த்து, சிறிய அளவிலான கேக்வியாபாரத்திலிருந்து பயிற்சி அக்கடாமி வரை தனது பயணத்தை முன்னெடுத்துள்ளவிக்னேஸ்வரி நாராஜாவின் இந்த முயற்சி, பேக்கரி துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு புதியவாய்ப்பை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெஸ்தாரி ஜெயா, ஜூலை 15-
பெஸ்தாரி ஜெயா சுங்கை டாரா ஸ்டார்த்மோர் தோட்டம் (கல்லுகுழி)
அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான ஆடி வெள்ளி சிறப்பு பூஜைகள் ஜூலை 17 முதல் செப்டம்பர் 4 வரை நடைபெறவுள்ளதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆடி மாதத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அதிகாலை முதல் இரவு வரை சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, தீபாராதனை, பஜனை உள்ளிட்ட ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்படும்.
இந்த ஆண்டு முதல் ஆடி வெள்ளி பூஜை ஜூலை 17-ஆம் தேதி தொடங்குகிறது. தொடர்ந்து ஜூலை 24, ஜூலை 31, ஆகஸ்ட் 7, ஆகஸ்ட் 14 மற்றும் ஆகஸ்ட் 21 ஆகிய தேதிகளில் ஆடி வெள்ளி வழிபாடுகள் நடைபெறுவதாக ஆலயத்தின் தலைவர் திரு.இராம கணேசன் தெரிவித்தார்.
நிறைவாக செப்டம்பர் 4-ஆம் தேதி கோகுலாஷ்டமி மற்றும் மகாலட்சுமி பூஜை நடைபெறவுள்ளது.
ஆடி மாதம் முழுவதும் நடைபெறும் அனைத்து சிறப்பு வழிபாடுகளிலும் பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு அம்மனின் அருளைப் பெறுமாறு ஆலய நிர்வாகம் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளது.
மேலும், சிறப்பு பூஜைகளுக்கான உபயம் மற்றும் காணிக்கை வழங்க விரும்பும் பக்தர்கள் ஆலய நிர்வாகத்தை 016-3758273 (ஆலயத்தலைவர்) அல்லது 016-8417335 ( ஆலய அர்ச்சகர்) என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்றும் தலைவர் தெரிவித்துள்ளார்
மோசடி நடந்ததை நிரூபித்தால் அன்றே ராஜினாமா செய்கிறேன்! -டான்ஸ்ரீ ஆர்.நடராஜா.
2026-09-01 22:13:32
கேஆர்சி கிண்ண பூப்பந்து போட்டி: சிறார்கள், பெரியவர்கள் 400 பேர் பங்கேற்றனர்!.
2026-07-29 03:18:38
மஇகா 80ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு 137 தொகுதிகளில் ஓட்டப்பந்தயம்.
2026-07-20 23:14:22
ஆலயத்தைப் பாதுகாக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் தீர்வு காண வேண்டும் என கோரிக்கை..
2026-07-02 04:12:42
தாதியர் துறையில் மஞ்சுளா முதுநிலை பட்டம் பெற்றார்! குடும்பத்தினர் வாழ்த்து!.
2026-05-20 22:51:51