loader

All News

கோலாலம்பூர், டிச. 19-
சிங்கப்பூரில் வேலை செய்யும் 4 லட்சத்திற்கும் அதிகமான  மலேசியத் தொழிலாளர்களை பாதுகாக்க புதிய காப்புறுதி திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இன்று உறுதி அளித்தார்.

மனிதவள அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்ட அவர், இன்று சொக்சோ தலைமையகத்திற்கு அதிகாரப்பூர்வமாக மேற்கொண்ட வருகையின் போது இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

சொக்சோவின்கீழ் உள்ள நான்கு சட்டங்களை உள்ளடக்கிய அனைத்து சலுகை விண்ணப்பங்களையும் அடுத்த மாதம் முதல் முழுமையாக இணையத்தில் சமர்ப்பிக்கலாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த நடவடிக்கை பங்களிப்பாளர்களுக்கு விஷயங்களை எளிதாக்குவது மட்டுமல்லாமல், அவர்கள் இனி சொக்சோ அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டியதில்லை என்பதால் நேரத்தை மிச்சப்படுத்த முடியும்.

நாட்டில் உள்ள 10 மில்லியனுக்கும் அதிகமான முறையான, முறைசாரா துறை தொழிலாளர்களுக்கு சிறந்த சேவையை உறுதி செய்வதற்காக, அனைத்து சலுகை விண்ணப்பங்களையும் இணையத்தில் பதிவு செய்ய அனுமதிக்குமாறு சொக்சோவுக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன்.

இது ஊழியர்களின் சமூகப் பாதுகாப்புச் சட்டம் 1969 (சட்டம் 4), சுயதொழில் செய்பவர்களின் சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2017 (சட்டம் 789), வேலைவாய்ப்பு காப்பீட்டு அமைப்புச் சட்டம் 2017 (சட்டம் 800), இல்லத்தரசிகள் சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2022 (சட்டம் 838) ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

ஜொகூர் காஸ்வேயைக் கடக்கும் கிட்டத்தட்ட 400,000 உள்ளூர் தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்புப் பெறுவதில் இருந்து விடுபடாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, அடுத்த ஆண்டு முதல் ஒரு சாத்தியக்கூறு ஆய்வின் மூலம் முன்னோடியாக காப்புறுதித் திட்டத்தை செயல்படுத்துவ தாக அவர் சொன்னார்.

புதிய மனிதவள அமைச்சராக, தொழிலாளர்களின் நலனுக்காக 24 மணி நேர பாதுகாப்புத் திட்டம் தொடர்ச்சியாகவும், சுமூகமாகவும், திறம்படவும் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கும், வேலை நேரத்திற்கு வெளியே விபத்துகள் ஏற்பட்டால் அவர்களைப் பாதுகாப்பதற்கும் நான் உறுதி கொண்டுள்ளேன் என்றார்.

பெட்டாலிங் ஜெயா, டிச. 16-
தேசிய வகை எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளியின்   பசுமை மூலிகைப் பூங்கா கண்காட்சி  திட்டத்தில்  மூலிகைப் பூங்கா மற்றும் ஆய்வுக்கண்காட்சி மிகச் சிறப்பாக இன்று டிசம்பர் 16 ஆம் திகதி பள்ளியில்  நடைபெற்றது.

விழாவின் சிறப்பு வருகையாளராக பெட்டாலிங் உத்தாமா மாவட்டத்தின் இடைநிலை & படிவம் 6 க்கான உதவி அதிகாரியுமான மதிப்புமிகு குஹானிஸ் பிந்தி முகமட் சைன் அவர்கள் கலந்துக்கொண்டு நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

அனைத்து பள்ளிகளும் மூலிகைத் தாவரங்களின்  மகிமையைப் போற்றும்  நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
மாணவர்கள்  வகுப்பறைக் கற்றல் நடவடிக்கையில் மட்டும் ஈடுபட்டால் போதாது ,மாறாக வாழ்வியல் தொடர்பான பயனுள்ள நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தினார்.

ஆண்டு இறுதியில் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த எப்பிங்காம்  ஆசிரியர்கள் மேற்கொண்ட நடவடிக்கை மிகவும் பாராட்டுக்குறியது. அந்த வகையில் பள்ளியின் தலைமையாசிரியர் முனைவர்  வீ. சுகுணவதி அவர்கள் தமது சிறப்புரையில் ஆண்டு இறுதியில்  பள்ளி மாணவர்களின் வருகையை  அதிகரிக்கச் செய்ய இந்நடவடிக்கை எங்களுக்கு பெரிதும் துணை புரிந்தது என்றார்.

எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் மாணவர்களிடம் அதிக ஆற்றல் உள்ளது. அதனை வெளிக்கொணரவே  மூலிகைத் தாவரங்களின் மகிமையை ஒட்டி மாணவர்களுக்கு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. காய்கறிகள் சாப்பிடுவது என்றால் பிள்ளைகளுக்குப் பிடிக்காது. அதனை எவ்வாறு சத்துள்ள உணவாக மாற்றி உண்ணலாம் என்பதை இந்நிகழ்வின் வழி மாணவர்கள் அறிந்துக் கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வின் மற்றும் ஒரு சிறப்பு அம்சமாக மாணவர்கள் மூலிகைத் தாவரங்கள் அதில் உருவாக்கக் கூடிய மூலிகைப் பொருட்கள் தொடர்பான விளக்கங்களைப் பெற்றுக்கொண்டனர்.

அனைவரும் எதிர்வரும் காலங்களில் மேலும் அதிக தன்முனைப்போடு  இந்நடவடிக்கையில் ஈடுபட்டு பள்ளிக்கு பெருமை சேர்ப்பர் என்று எதிர்பார்ப்பதாகக் நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுத் தலைவரான குமாரி கார்த்தினா ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஒவ்வொரு ஆண்டுக்கும் இரண்டு வகை மூலிகைத் தாவரங்கள் கொடுக்கப்பட்டது.
ஏறக்குறைய 4 மாதங்கள் மூலிகை தாவரம் உருவாக்கவும் மூலிகைப் பொருட்கள் தயாரிக்க மாணவரைத் தயார் படுத்தவும் எடுத்துக் கொள்ளப்பட்டது.பாலர் பள்ளி முதல் ஆண்டு 6 வரையிலான மாணவர்கள்  மூலிகைத் தாவரத்தில் பொருட்கள் செய்யும் நடவடிக்கையில் கலந்துக் கொண்டனர். நிகழ்வில் மாணவரின் பார்வைக்காக பிராணிகளின் கண்காட்சி இடம்பெற்றது மிகவும் சிறப்பாக அமைந்தது. கற்பித்தல் மூலம் வடிவமைப்பு (KmR), திட்ட அடிப்படையிலான கற்றல் (PBL), TS25 திட்டத்தில்  மூலிகைப் பூங்கா மற்றும் ஆய்வுக்கண்காட்சியும் மிகச் சிறப்பாக   நடந்தது.

அனைவரும் எதிர்வரும் காலங்களில் மேலும் அதிக தன்முனைப்போடு  இந்நடவடிக்கையில் ஈடுபட்டு பள்ளிக்கு பெருமை சேர்ப்பர் என்று எதிர்பார்ப்பதாகக் கூறினார். ஒவ்வொரு ஆண்டுக்கும் இரண்டு வகை மூலிகைத் தாவரங்கள் கொடுக்கப்பட்டது.
ஏறக்குறைய 4 மாதங்கள் மூலிகை தாவரம் உருவாக்கவும் மூலிகைப் பொருட்கள் தயாரிக்க மாணவரைத் தயார் படுத்தவும் எடுத்துக் கொள்ளப்பட்டது.பாலர் பள்ளி முதல் ஆண்டு 6 வரையிலான மாணவர்கள்  மூலிகைத் தாவரத்தில் பொருட்கள் செய்யும் நடவடிக்கையில் கலந்துக் கொண்டனர். நிகழ்வில் மாணவரின் பார்வைக்காக பிராணிகளின் கண்காட்சி இடம்பெற்றது மிகவும் சிறப்பாக அமைந்தது.

புதிய அமைச்சரவையின் மாற்றத்தை பிரதமர் அறிவித்துள்ளார். இதில் சில அமைச்சர் மற்றும் துணையமைச்சர் பதவிகள் மாற்றப்பட்டன.

அந்த வகையில் இந்திய அமைச்சர்கள் கைவசம் இருந்த மனிதள அமைச்சு இதற்கு முன்னர் மாற்றம் கண்டது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய அறிவிப்பில் அந்த பதவி மீண்டும் இந்தியரின் கைவசம் திரும்பியது.

இதற்கு முன்னர் தொழில்முனைவோர்  மேம்பாட்டு மற்றும் கூட்டுறவு துணை அமைச்சராக பதவி வகித்த டத்தோஸ்ரீ ரமணன் தற்போது மனிதவள அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் இந்த அமைச்சர் பதவியை ஜசெகவை சேர்ந்த ஸ்டீவன் சிம் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலாலம்பூர், டிச.16-
இந்திய சமுதாயத்திற்காக தைரியமாக குரல் கொடுப்பதற்கு மஇகாதான் இருக்கிறது என்பதை இந்திய மக்கள் உணர்ந்து விட்டனர் என மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

மஇகாவிற்கு அரசாங்கத்தில் எந்த பதவியும் இல்லாதபோதும் கட்சி முறையாக செயல்பட்டு வருகிறது. கட்சியை வலுப்படுத்தும் வகையில் பல சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் தற்போது மஇகா வலுவான கட்சியாக செயல்படுகிறது.

ஆகையால் கட்சியின் தொகுதி மற்றும் கிளைத் தலைவர்களும் செயலவை உறுப்பினர்களும் மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் அதிக நாட்டம் செலுத்த வேண்டுமென அவர் சொன்னார்.

இதற்கிடையில் கட்சியை வலுப்படுத்துவதற்கு தன்னுடன் இணைந்து தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணனும் அதிகம் பாடுபட்டு வருகிறார். ஆகையால் அவருக்கு நான் கடமை பட்டுள்ளதாக டான்ஸ்ரீ விக்கி தெரிவித்தார்.

கட்சியின் தேசியத் துணைத் தலைவர் ஏற்பாட்டில் இன்று நேதாஜி மண்டபத்தில் கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனின் 60ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாக நடைப்பெற்றது.

மற்ற கட்சிகளின் மாநாட்டில் கலந்து கொண்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையை காட்டிலும் இன்று டான்ஸ்ரீ-இன் பிறந்த நாள் விழாவில் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளதாக கூறிய டத்தோஸ்ரீ எம்.சரவணன், தெரிந்திருந்தால் தேசிய முன்னணியின் தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹிட்டை இந்த கூட்டத்திற்கு அழைத்து அரசியல் அறிவிப்பை செய்திருக்கலாம் என நகைச்சுவையாக கூறினார்.

டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தலைமையில் கட்சி சிறப்பாக செயல்பட்டு வருவதை இந்த கூட்டம் உணர்த்துவதாக அவர் சொன்னார்.

டான்ஸ்ரீ பிறந்தநாளை முன்னிட்டு இந்த நிகழ்ச்சியில் சிறப்பு பிரமுகராக கவிபேரரசு வைரமுத்து கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலாலம்பூர்,டிச.12-
நாட்டின் இந்திய கட்சிகளின் ஒன்றான ஐ.பி.எஃப் கட்சியின் 33ஆவது பொது பேரவை எதிர்வரும் 14.12.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8 முதல் மாலை 4 மணி வரை  செமிஞ்சே ஏகோஹில் கிளாப் 360 எனும் இடத்தில் நடைப்பெறுகிறது.

இந்த பேரவையை அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்க தேசிய முன்னணி கட்சியின் தலைவரும் துணை பிரதமருமான டத்தோ ஸ்ரீ ஜாஹிட் ஹமிடி  சிறப்பு வருகை புரிய உள்ளதாக  கட்சியின் செயலாளர் மோகன் முத்துசாமி தெரிவித்தார்.
 
ஐ.பி.எஃப் கட்சி தேசிய முன்னணியின் தோழமை கட்சியாக  பல ஆண்டுகள் இருந்த வந்த நிலையில், உறுப்பு கட்சியாக உருமாற பல ஆண்டுகளாக போராடி வருகிறது.

அந்த வகையில், தற்போது தேசிய முன்னணியை விட்டு ம.இ.கா - ம.சீ.ச விலகும் சூழல் உருவாகி தலைவர்களிடையே கருத்து மோதல் கட்சியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

ம.இ.கா மாநாட்டில் தேசிய முன்னனி தலைவர் உட்பட பலருக்கு அழைப்பு இல்லை. இந்த கால சூழலில், இப்போது ஐ.பி.எஃப் மாநாட்டை திறந்து வைக்க தேசிய முன்னனி தலைவர் வருகிறார்.

அங்கு அவரது உரை எப்படி இருக்க போகிறது என அரசியல் வட்டாரம் காத்து கொண்டிருக்கிறது.

பல ஆண்டுகளாக உறுப்பு கட்சியாக உருவெடுக்க வேண்டும் என்ற ஐ.பி.எஃப் கட்சியின் கனவுகளுக்கு இந்த பேரவை மேடை கதவை திறந்து விடுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

எது எப்படியாகினும், ஐ.பி.எஃப் மாநாட்டிற்கு  துணை பிரதமரின் வருகை  பெரிய எதிர்பார்ப்பையும் அவர் என்ன சொல்ல போகிறார் என்ற ஆர்வத்தையும் அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தியுள்ளது.

கோலாலம்பூர், டிச.9-
தமிழ்ப்பள்ளிகளின் முன்னேற்றத்தையும், மாணவர்களின் நன்னெறி வளர்ச்சியையும் முன்னிருத்தி செயல்பட்டு வரும் மலேசிய முன்னாள் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பேரவை (பெர்த்தாமா), தனது புதிய கல்விசார் முயற்சியாக ‘வாசிப்பை நேசிப்போம் – நித்திரைக் கதைகள்’ எனும் கதைத் தொகுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த தொகுப்பினை வாங்கி தாங்கள் படித்த முன்னாள் பள்ளிகளுக்கு வழங்கும்படி பேரவை மக்களை கேட்டுக் கொள்கிறது.

பேரவையின் து. தலைவர் குமரன் மாரிமுத்து மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் பார்த்திபன் ராமசங்கரன் தலைமையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், 2009ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பெர்த்தாமாவின் நோக்கம், நாடு முழுவதும் உள்ள தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கங்களை ஒன்றிணைத்து ஒரே குடையின் கீழ் செயல்படச் செய்வதே என கூறப்பட்டது.

தற்போது 528 தமிழ்ப்பள்ளிகள் நாட்டில் இயங்கினாலும், வெறும் 120 பள்ளிகளுக்கு மட்டுமே முன்னாள் மாணவர் சங்கங்கள் உள்ளன என்பதைக் கவலையுடன் பேரவை தெரிவித்தது. சங்கங்கள் இயங்கும் பள்ளிகளில் பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், மேலும் பல பள்ளிகளில் இத்தகைய அமைப்புகள் உருவாக வேண்டும் என்பதையும் வலியுறுத்தியது.

பெர்த்தாமா தற்போது வெளியிடும் 10 புத்தகங்கள் அடங்கிய ‘நித்திரைக் கதைகள்’ தொகுப்பில் மொத்தம் 61 சிறுவர் கதைகள் இடம்பெற்றுள்ளன.
இந்தக் கதைகள் குழந்தைகளுக்கு நன்னெறி, ஒழுக்கம், கருணை போன்ற உயர்ந்த பண்புகளை விதைப்பதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.

புத்தக விற்பனையின் வருவாய் முழுவதும் பேரவையின் கல்வி மற்றும் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுவதாகவும், இந்த புத்தகத் தொகுப்பை வாங்கி மாணவர்களுக்கு வழங்க வேண்டுமெனவும் பேரவை நல்லுள்ளங்களை மீண்டும் கேட்டுக் கொண்டது.

கல்வி சமூகத்தில் மாற்றத்தை உருவாக்க ஒருமுறை நிகழ்ச்சிகள் போதாது; தொடர்ந்து, திட்டமிட்டு செயல்படும் பணிகளே பள்ளிகளுக்கு உண்மையான பலன்களை வழங்கும் என பெர்த்தாமா வலியுறுத்தியது. அதனை முன்னெடுக்க போதுமான நிதி நமக்கு தேவை என்றும் அவர்கள் கூறினர்.

பெர்த்தாமா நடைமுறைப்படுத்திய தமிழ்மொழி விழா சிறப்பாக நடத்தப்பட்டதாகவும், ஆனால் மானியம் பற்றாக்குறையால் அது தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த நிகழ்ச்சியின் தாக்கம் சிறப்பாக இருந்ததால் அதனை மற்ற தரப்புகள் தொடர்ந்து நடத்தி வருவதாக பார்த்திபன் கூறினார்.

அதே நேரத்தில், மாநில அளவிலும் செயல்பாடுகளை வலுப்படுத்த நான்கு மாநிலங்களில் மாநில பேரவைகள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கங்களின் பங்களிப்பு, பள்ளி வளர்ச்சி மற்றும் மாணவர்களின் எதிர்கால முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிப்பதாக பெர்த்தாமா வலியுறுத்தி, மேலும் பலர் இதில் இணைந்து செயல்பட வேண்டுமென கேட்டுக்கொண்டது.

கோலாலம்பூர், டிச 9-
ஜோகூர், மூவார் பகுதியை பூர்வீகமாக கொண்ட பேராக் மாநில சொக்சோ துறை அதிகாரி உமாதாஸ் பிள்ளை மற்றும் சரஸ்வதி தேவி தம்பதியரின் புதல்வி லுசிந்தரா பிள்ளை அண்மையில் மலாயா பல்கலைகழத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறந்த தேர்ச்சியோடு சட்டத் துறையில் முதுகலை பட்டம் பெற்றார்.

அவர் நேரத்தை சிறப்பாக நிர்வாகித்து படித்து முதுகலை கல்வியை அவர் நிறைவு செய்துள்ளார்.

அதே வேளை, லுசிந்திரா பிள்ளை வழக்கறிஞராகவும் பணிபுரித்து வருகிறார்.

அடுத்து, சட்டத்துறையில் முனைவர் பட்டப் படிப்பையும் தொடரவிருப்பதாக கூறினார்.

மேலும் தன்னுடைய குடும்பத்தினரின் ஊக்குவிப்பினால் தாம் முதுகலை படிப்பை நிறைவு செய்துள்ளதை தொடர்ந்து இறைவனுக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும், அவருடைய முதுகலை பட்டப் படிப்பு சுமூகமாக நிறைவுப் பெற விரிவுரையாளர்களும் நண்பர்களும் உறுத்துணையாக இருந்தாக அவர் குறிப்பிட்டார்.

ஈப்போ, டிச 9-
சுற்று வட்டார மக்களுக்கு பல வகையான சேவைகளை செய்து வரும் துரோனோ சட்டமன்ற உறுப்பினர் ஸ்டிவன் தீ சியாங் நேற்று 65 அங்குலம் கொண்ட நான்கு ஸ்மார்ட் ரக தொலைக்காட்சி பெட்டிகளை வழங்கினார்.

இந்த நிகழ்வில் அப்பள்ளியின் தலைமையாசிரியர் , பெற்றோர் சங்கத் தலைவர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

டிஜிட்டல் கல்விக்கு வழிவகுக்கும் வகையில் இந்த ஸ்மார்ட் தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்பட்டன.

இது மாணவர்களுக்கு மட்டும் நன்மையல்ல. மாறாக, ஆசிரியர்களின் போதனைக்கு துணையாக இருக்கும். பாடங்களை போதிக்க ஸ்மார்ட் தொலைக்காட்சி பெட்டி அவசியமாகிறது என ஸ்டிவன் தீ சியாங் கூறினார்.

கோலாலம்பூர்,டிச.4-
கடந்த நவம்பர் 24 ஆம் திகதி  மலாக்கா டுரியான் துங்கால்  பகுதியில் 3 ஆடவர்கள் போலீசார் நடத்திய அதிரடி நடவடிக்கையில் சுடப்பட்டு மரணம் அடைந்தனர்.

இது தொடர்பாக  மலாக்கா மாநில போலீஸ் தலைமையகம் கொடுத்த செய்தி அறிக்கையில் போலீசார் நடத்திய சோதனையின் போது 3 நபர்கள் பாராங் கத்தியை கொண்டு போலீசாரை தாக்க முற்பட்டபோது, ஒரு  போலீஸ் அதிகாரிக்கு வெட்டு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

தற்காப்பு காரணமாக  அந்த மூவரை அதிகாரிகள் சுட்டதாகவும் அதில் இருவருக்கு  ஏராளமான குற்றப் பதிவு உள்ளதாகவும் இன்னொருவர் யார் என்பது இன்னும் தெரியவில்லை என தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து இப்போது பதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தார்கள்  தங்களது வழக்கறிஞருடன் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி ஒரு முரண்பாடான தகவலையும் ஒரு  உரையாடல் பதிவையும் வெளியிட்டதுடன் இது தொடர்பாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் விசாரணை நடத்த வேண்டும் என்றனர்.

இதனை தொடர்ந்து புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்பிரிவு  துறை இந்த விசாரணை கையில் எடுத்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக கருத்துரைத்த ம.இ.காவின் தேசியத் துணைத் தலைவரும்  தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன், முதலில் புக்கிட்  அமான் போலீஸ் தலைமையகத்திற்கு தனது நன்றியும் பாராட்டையும் தெரிவித்தார்.

இந்த நாட்டின் சட்டம் அனைவருக்கும் பொதுவானது, முரண்பாடான சில விவரங்கள் இருப்பதால் முழு விசாரணை  செய்வதின் வாயிலாக அனைவருக்கும் ஒரு தெளிவு கிடைக்கும். போலீஸ் படை மீது இப்படி ஒரு குற்றச்சாட்டு எழும்போது  அரச மலேசிய போலீஸ் படை நாட்டின் சட்டம் மீது களங்கம் வராமல் இருக்க புக்கிட் அமான் எடுத்த நடவடிக்கை பாராட்டுக்குறியது என டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.

அதே நேரத்தில் ஒரு குரல் பதிவின் வாயிலாக சந்தேகத்தை எழுப்பியுள்ள குடும்ப உறுப்பினர்களும் நியாயம் கேட்டு நிற்கின்றனர்.
அந்த வகையில் எந்த  ஒரு தலையீடும் இல்லாத விசாரணை நடத்தப்படவேண்டும். அதற்கு சுதந்திரமான விசாரணை   ஆணையத்தை அமைக்க  பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவு விட வேண்டும் என டத்தோஸ்ரீ எம்.சரவணன்  அரசாங்கத்தை கேட்டுக் கொண்டார்.

இந்த விசாரணை  ஆணையம் அமைக்க பட வேண்டும் என  தாம் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு  அதிகாரபூர்வ கடித்தை அனுப்பியுள்ளதாகவும்  டத்தோஸ்ரீ எம் .சரவணன் தெரிவித்தார்.

சட்டம் அனைவருக்கும் பொதுவானது. நீதி அனைத்து மக்களுக்கு சமமாக கிடைக்க வேண்டுமெனவும் டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.

செய்தி : வெற்றி விக்டர்
 

ஈப்போ, டிச 4-
2026 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை பேராக் மாநில அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது வரவேற்கத்தக்கது என ஜெலாப்பாங் சட்டமன்ற உறுப்பினர் சியா பாவ் ஹியான்‌ தெரிவித்துள்ளார்.

பேராக் மாநில ஒற்றுமை அரசாங்கம் அரசு ஊழியர்களுக்கு  இரண்டு மாத போனஸ் வழங்க தீர்மானித்துள்ளனர்.

  வரலாற்றுலேயே இதுவே சிறப்பான பேராக் மாநில பட்ஜெட் என்று கூறலாம்.

மேலும் பேராக் மாநிலத்திற்கு வருகையளிக்கும் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இது மகிழ்ச்சியான செய்தி என்றார்.

2023 ஆம்‌ ஆண்டு தொடங்கி பேராக் மாநில பட்ஜெட் அதிகரித்துள்ளது. மடானி அரசாங்கம் கீழ் அனைத்துமே வெற்றி என்றார்.

கோலாலம்பூர், டிச 4-
பள்ளி விடுமுறை தொடங்கவிருக்கும் இந்த காலக்கட்டத்தில் அடுத்த வருடம் பள்ளி பொருட்கள் வாங்கும் செலவும் பெற்றோர்களுக்கு உண்டு.  அந்த வகையில் பெற்றோர்கள் வாங்கி கொடுக்க முடியாத சூழ்நிலையில் இருக்கும் பிள்ளைகளுக்கு உதவும் நோக்கத்தில் ஒரே நோக்கம் சங்கம் நேற்று 
கூட்டரசு‌ பிரதேச முதியவர், சிறுவர்கள் பராமரிப்பு இல்லத்தை சேர்ந்த மாணவர்களுக்கு‌ பள்ளிக்கான பொருட்களை வழங்கினர்.

பள்ளிச் சீருடை தொடங்கி காலணி‌ வரை அனைத்துமே ஒரே நோக்கம் சங்கம் தங்கள் செலவில் வாங்கி கொடுத்தனர்.

இதனிடையே , இந்த சங்கத்தின் தலைவர் ஆனந் குணசேகரன், துணைத் தலைவர் ரேமன் பிரான்சிஸ் அப்பிள்ளைகளிடம் நேரடியாக பள்ளி பொருட்களை ஒப்படைத்தனர்.

அதனுடன் , மாணவர்களுக்கு வாழையிலை உணவும் வழங்கப்பட்டது.

இது சங்கத்தின் 114 ஆவது சமூகப்‌பணி‌ என ரேமன்‌ கூறினார்.

எங்களால் இயன்றவரை ஆதரவற்ற பிள்ளைகள், முதியவர்கள், பேர் குறைந்தவர்களுக்கு உதவி‌ வருகிறோம் என ரேமன் கூறினார்.

இவ்வேளையில் எங்களுடன் இணைந்து இந்த நிகழ்வினை வெற்றியடைய செய்த அனைவருக்கும் நன்றி என்றார் அவர்.

கோலாலம்பூர், டிச.3-
மலேசிய இந்திய சமூகத்தில் ஒற்றுமை என்பது முன்னேற்றத்திற்கும் சக்தி பெறுவதற்கும் மிக முக்கியமான அடித்தளம் என பிபிபி தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோக பால மோகன் தெரிவித்துள்ளார். கார்த்திகை தீபம் திருநாளை முன்னிட்டு அவர் இந்த செய்தியை வெளியிட்டார்.

டத்தோ டாக்டர் லோகா கூறுகையில், சைவ மரபில் முக்கியமான இடம் வகிக்கும் கார்த்திகை திருவிழா, முருகப் பெருமானின் உருவாக்கத்தையும், பரமசிவன் ஜோதி லிங்கமாகத் தோன்றியதையும் நினைவுகூரும் விழாவாகும். கிருத்திகை நட்சத்திரத்துடன் கூடிய பௌர்ணமி நாளிலும் தமிழ் மாதமான கார்த்திகையின் தொடக்கமாகவும் இந்த விழா கொண்டாடப்படுகிறது.

இந்த திருநாளில் வீடுகள், கோவில்கள் மற்றும் வேலைத்தளங்களில் மண் விளக்குகள் ஏற்றி தீபம் ஏற்றுவது புதிய நம்பிக்கை, தொடக்கம் மற்றும் வளம் என்பதைக் குறிக்கும் என அவர் கூறினார்.

தன் திருநாள் வாழ்த்துச் செய்தியில், இந்தியர்களின் ஒற்றுமை சமூக முன்னேற்றத்திற்கான மிகப் பெரிய பலம் என டத்தோ டாக்டர் லோகா வலியுறுத்தினார்.

"நாம் ஒன்றுபட்டிருக்கிறோம் என்ற வரையில், நமது குரல் அரசு மற்றும் சமூகத் தேவைகளில் தெளிவாகக் கேட்கப்படும். பிரிந்துவிட்டால், நம் கோரிக்கைகள் கவனிக்கப்படாமல் போகும் ஆபத்து உள்ளது," என அவர் தெரிவித்தார்.

அரசியல், சமூக, பொருளாதார வேறுபாடுகள் இருந்தாலும், இந்தியர்கள் அனைவரும் தங்களின் முன்னேற்றத்திற்கும் நிலைத்தன்மைக்குமான ஒன்றுபாட்டைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

கார்த்திகை திருநாளின் ஒளி அனைவரையும் இணைக்கும் சக்தியாக அமைய வேண்டும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
“கார்த்திகையின் ஒளி நமது எண்ணங்களை ஒளிரச் செய்து, வேறுபாடுகளைப் புறம் தள்ளி, அனைவரையும் ஒன்றுபடுத்தட்டும்,” என்று அவர் கூறினார்.

டத்தோ டாக்டர் லோகா, கார்த்திகை தீபம் கொண்டாடும் அனைத்து இந்தியர்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

பெட்டாலிங் ஜெயா, டிச.2-
ஹைனிகன் மலேசியா பெர்ஹாட் (HEINEKEN Malaysia) நடத்திய 2025 ஸ்டார் அகாடமி தேசிய இறுதிப்போட்டியில், சபாவில் உள்ள லங்காஹ் சியாபாஸ் பீச் ரிசார்ட் நிறுவனத்தைச் சேர்ந்த கோரா ஜீன் கான்ட்வெல் ஸ்டார் அகாடமி வரலாற்றில் முதல் பெண் தேசிய சாம்பியனாக வெற்றிப்பெற்றுள்ளார்.

இந்த சாதனைமிக்க வெற்றி அவருக்கு ஆம்ஸ்டர்டம்  செல்லும் பிரத்யேக வாய்ப்பை வழங்கியுள்ளது. அங்கு அவர் ஹைனிகனின் வரலாறு, புதுமை மற்றும் Joy of True Togetherness என்ற மதிப்பினை நேரடியாக அனுபவிக்க உள்ளார்.

ஏழாவது ஆண்டை எட்டியுள்ள ஸ்டார் அகாடமி திட்டம், மலேசியாவின் சேவைத் துறையை உயர்த்தும் அதன் முக்கிய நோக்கத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இது நாடு முழுவதும் உள்ள திறமையான பார் டெண்டர்களை பயிற்றுவித்து, அவர்களின் திறனை மேம்படுத்துவதன் மூலம் விருந்தோம்பல் துறைகளில் புதிய பரிணாமத்தை அமைத்து வருகிறது.

Star Academy 2025- இல் மேலும் ஒரு முக்கிய அறிமுகம் செய்யப்பட்டது – “Tap Into The Future” எனப்படும் புரட்சிகரமான மெய்நிகர் யதார்த்தம் (VR) அனுபவம். இந்த புதுமையான பயிற்சி முறை பல உணர்வுகளைக் கொண்ட (காட்சி, தொடுதல், ஒலி) முழுமையான கற்றல் சூழல் வழங்குகிறது. விளையாட்டுவழி நிலைச்சித்திரம்யான அணுகுமுறை நினைவுத்திறனை அதிகரித்து, தயாரிப்பு அறிவை ஆழப்படுத்தி, சரியான pouring தொழில்நுட்பத்தை மேம்படுத்துகிறது. இது ஹைனிகன் மலேசியா வழங்கும் தனிச்சிறப்பான அனுபவமாகும்.

ஹைனிகன் மலேசியாவின் மேலாண்மை இயக்குநர் மார்டெய்ன் வான் கீலன் கூறுகையில், இன்றுவரை 11,000-க்கும் மேற்பட்ட பார் டெண்டர்களை பயிற்றுவித்துள்ள ஸ்டார் அகாடமி, சேவைத் துறையை உயர்த்துவதில் நமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது. இது உள்ளூர் F&B துறையின் திறனை வலுப்படுத்தி, நாட்டின் விருந்தோம்பல் சூழலுக்கு ஆதரவளிக்கிறது. ஸ்டார் அகாடமி மலேசிய அளவில் சேவைத் திறமையின் தரத்தை உயர்த்துவதிலும் நாங்கள் பெருமை கொள்கிறோம் என அவர் கூறினார்.

இந்த ஆண்டின் இறுதிப்போட்டியில் கோலாலம்பூர்/டிலாங்கூர், சரவாக், சபா, பினாங்கு, பேராக், ஜொகூர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த போட்டியாளர்கள் கடுமையான போட்டியில் ஈடுபட்டனர்.

ஹைனிகன் மலேசியாவின் விற்பனை இயக்குநர் ஜிம்மி டிங் கூறுகையில், எங்களின் வர்த்தக கூட்டாளர்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கும், உயர்ந்த தரத்தை நிலைநிறுத்த பல சவால்களை எதிர்கொண்டு உழைக்கும் பார் டெண்டர்களுக்கும் நன்றி. அவர்களின் அர்ப்பணிப்பும் ஆர்வமும் இந்த துறையை முன்னேற்றுகிறது. இந்த ஆண்டில் நாங்கள் அறிமுகப்படுத்தும் VR பயிற்சி, நேரடி அனுபவத்துடன் கூடிய ஆழமான கற்றலை வழங்குவதால் மேலும் பெருமை அடைகிறோம் என்றார்.

போட்டியில் நீதிபதிகளாக ஹைனிகன் மலேசியாவின் காமெர்ஷியல் குவாலிட்டி மேலாளர் சியான் ஹுல்ம், காமெர்ஷியல் குவாலிட்டி லீட் வேன் வோங் மற்றும் சிறப்பு விருந்தினராக 2024 ஹைனிகன் குளோபல் டிராஃப்ட் சாம்பியன் ஜேசன் டெனிஸ் டி'குரூஸ் ஆகியோர் இணைந்தனர்.

தேசிய சாம்பியனான கோரா ஜீன் கான்ட்வெல் கூறுகையில், இந்த போட்டியில் வெற்றி பெறுவது எனக்கு நம்பமுடியாத அனுபவம். இந்த ஆண்டின் ஸ்டார் அகாடமி தேசிய இறுதியில் சபாவை பிரதிநிதித்துவப்படுத்துவதில் பெருமை கொள்கிறேன். இந்த அற்புத வாய்ப்புக்கு ஹைனிகன் மலேசியாவுக்கு நன்றி. ஆம்ஸ்டர்டம் செல்ல நான் மிகவும் உற்சாகமாக உள்ளேன் என்றார்.

ஜெராண்டூட், டிச.1- ஜெராண்டூட் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 100 பேர், நவம்பர் 28 அன்று இங்கு நடைபெற்ற கேஜே உடற்கட்டுப் பயிற்சி கிளப் (KJEY) அமைப்பு நடத்திய “அடிப்படை உடற்கட்டுப் பயிற்சி பயிற்சி முகாம்” நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

ElangKathir Enterprises வழங்கிய அனுசரணையுடன் நடைபெற்ற இம்முகாம், 12 வயதுக்குக் குறைவான மாணவர்களுக்கு உடல் உறுதிப்படுத்தல் அடிப்படை புரிதல், உடற்கட்டுப் பயிற்சி நுட்பங்கள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் முக்கியத்துவத்தை அறிமுகப்படுத்தியது.

நிகழ்ச்சி தலைவர் மற்றும் KJEY உடற்கட்டுப் பயிற்சி கிளப் தலைவர் டாக்டர் கே. ஜெய் பிரபாகரன் தேவர் கூறியதாவது, பள்ளி மாணவர்கள் மத்தியில் கட்டமைக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான பயிற்சி திட்டங்கள் மூலம் உடற்தகுதி கல்வியை மேம்படுத்துவதில் கிளப் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்றார்.

அவரது கருத்தில், ஆரம்ப வயதிலேயே உடற்கட்டுப் பயிற்சி விளையாட்டை அறிமுகப்படுத்துவது மாணவர்களின் ஒழுக்கம், தன்னம்பிக்கை மற்றும் உடல் பராமரிப்பு மேலான விழிப்புணர்வை உருவாக்க உதவுகிறது என கூறினார்.

“இத்தகைய தொடக்கப் பயிற்சி, மாணவர்கள் சரியான இயக்க நுட்பங்களை கற்றுக்கொள்வதற்கும், உடற்தகுதியின் அடிப்படைகளைப் புரிந்துகொள்ளவும், வயதிற்கு ஏற்ப பொருத்தமான பயிற்சி முறைகளை அறிந்துகொள்ளவும் உதவுகிறது,” என்றார் அவர்.

அவர் மேலும் கூறியதாவது, இத்திட்டத்தை மாவட்டத்திலுள்ள பிற பள்ளிகளுக்கும், பகாங் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தும் திட்டம் கிளப்பிடம் உள்ளது, இதன் மூலம் இளைஞர்களிடையே ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் ஊக்குவிக்க முடியும்.

ஒரு நாள் நிகழ்ச்சியாக நடைபெற்ற இம்முகாம், கோட்பாட்டு மற்றும் செயல்முறை அம்சங்களை உள்ளடக்கி, நீட்டிப்பு பயிற்சிகள், அடிப்படை தசை அமைப்பு அறிமுகம், வயதுக்கு ஏற்ற எளிய உடற்பயிற்சிகள் ஆகியவை சொல்லித் தரப்பட்டது.

KJEY உடற்கட்டுப் பயிற்சி கிளப், குழந்தைகளுக்கான உடற்தகுதி மேம்பாட்டு திட்டங்களை எதிர்காலத்தில் மேலும் பல முகவாடிகள் மற்றும் ஆதாரதாரர்கள் இணைந்து ஆதரிக்க வேண்டும் என்ற நம்பிக்கையைப் பகிர்ந்துள்ளது.

கோலாலம்பூர் டிசம்பர் - 1
ம.இ.கா எல்லா கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி  வருகிறது. எந்த கூட்டணியில் அந்த கட்சி இணையும் என்பது அடுத்த மத்திய செயலவை கூட்டத்திற்கு பிறகு தெரியவரும்.

இப்போது உள்ள சூழ்நிலையில் எந்த கூட்டணியில் இந்திய கட்சியின் குரலாக  ம.இ.கா இருக்க முடியும் என பேச்சு வார்த்தையை ம.இ.கா தொடங்கி விட்டது.

இதன் அடிப்படையில் பேச்சு வார்த்தைக்கு பிறகு ம.இ.கா தனது நிலைபாட்டை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் என சொல்லப்படுகிறது.

இப்போதைக்கு ம.இ.கா தேசிய முன்னனி , பாஸ், பெரிக்காத்தான் நேசனல், பி.கே.ஆர் கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் கிடைத்து உள்ளது.

இதனிடையே,  பெரிக்காத்தன் நேசனல் கட்சி தலைவர்  ,டான் ஸ்ரீ முகிடீன் யாசின் வெளியிட்ட தகவலுக்கு பிறகு ம.இ.கா செயலாளர்.. அது விண்ணப்பம் இல்லை விளக்கம் கோரிய கடிதம் என தெரிவித்துள்ளார்.

ம.இ.கா இப்போது பல கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வரும் நிலையில்  தேசிய முன்னனியையும் சந்திக்க உள்ளது.தங்களது முடிவை அதிகாரபூர்வமாக ம.இ.கா தெரிவிக்கும் வகையில், அனைத்தும் ஆரூடம் என பேசப்படுகிறது.

கோலாலம்பூர் நவ- 30
ம.இ.கா , பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் இணைவதற்கு விண்ணப்பம் செய்துள்ளதாக பெரிக்காத்தான் நேஷனல்  தலைவர் டான் ஸ்ரீ முகிடீன் யாசின்  உறுதி செய்துள்ளார்.

ம.இ.கா பெரிக்காத்தான் நேசனல் கட்சியில்  இணைவது தொடர்பாக உறுப்பு கட்சிகளுக்கு எந்த ஒரு ஆட்சியேபமும் இல்லை.

இருந்தபோதிலும் அடுத்த பெரிக்காத்தான்  நேஷனல் உச்ச மன்ற
கூட்டத்தில்  ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் என டான் ஸ்ரீ முகிடீன் யாசின் தெரிவித்தார்.

இதனிடையே  ம.இ.கா தங்களது அதிகாரப்பூர்வ அறிவிப்பை அடுத்த வாரம் அறிவிக்கும்  எனவும் கூறப்படுகிறது.

சிரம்பான், நவ 29-
ஆயிரம் குறை சொன்னாலும் இந்திய சமுதாயத்திற்கு போராடும்
ஒரே கட்சி மஇகா தான்.
இதை யாராலும் மறுக்க முடியாது என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்கினேஸ்வரன் கூறினார்.

மஇகா மகளிர் முன்னால் சேவையாளர் செயற்குழு மற்றும்  மஇகா நெகிரி செம்பிலான், மலாக்கா மாநில மகளிர்களுடன் ஒன்றுக்கூடும் நிகழ்வில் சிரம்பானில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு தலைமையேற்று பேசிய டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்,
மஇகா கட்சி இந்திய சமுதாயத்திற்காக பாடுபடும் கட்சியாக திகழ்ந்து வருகிறது.

இந்திய சமுதாயத்திற்கு ஒரு பிரச்சனை என்றால் மஇகா கட்சியும் அதன் தலைவர்கள்தான் முன் வருவார்கள்.

இந்திய சமுதாயத்திற்காக பாடுப்படுகின்ற கட்சி இந்திய சமுதாயத்திற்கு பிரச்சனை என்றால் நாம் முன் நிற்க்கிறோம் மற்ற கட்சியில் உள்ளவர்கள் அப்படி செய்ய முடியாது காரணம் மற்ற கட்சிகளில் பல இன மக்கள் உள்ளனர.

அப்படி அவர்கள் இந்திய சமுதாயத்திற்காக வாய் திறந்தால் மீண்டும் அடுத்த பொதுத் தேர்தலில் அவர்கள் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கிடைக்காது.

நமது கட்சி பல இந்திய பட்டதாரிகளை உருவாக்கியுள்ளது. அதே சமயத்தில் உருவாக்கியும் வருகிறது.

கடந்த காலங்களில் நமக்கு என்று எந்த கல்லூரியும் கிடையாது. நமது பிள்ளைகள் வெளிநாடு சென்று கல்வி கற்க்க வேண்டும் என்றால் பலரிடம் உதவி கேட்டு கல்வி கற்று வந்தனர்.

ஆனால் இப்பொழுது நமக்கு என்று எய்ம்ஸ் கல்லூரி உள்ளது. அந்த கல்லூரி மூலம் பல பட்டதாரிகளை உருவாக்கி வருகிறோம்.

அதே போல் டேஃப் கல்லூரியும் அமைந்துள்ளது. அந்த கல்லூரி மூலமும் பல பட்டதாரிகளை ம.இ.கா உருவாக்கி வருகிறது.

மஇகா கட்சி சுமார் 1.5 மில்லியன் ரிங்கிட்டை சேர்த்து வைத்துள்ளது. இந்த பணத்தில் பல மாணவர்களுக்கு கல்விக்கு வழங்கி வருகிறோம்.

மஇகா கட்டிடத்தில் 1/2 ஏக்கர் நிலமாக இருந்தது. ஆனால் இன்று 4 ஏக்கர் நிலத்தை மஇகா கட்டிடத்தின் அருகில் வாங்கியுள்ளது.

அந்த இடத்தில் பல மாடிக்கொண்ட கட்டிடத்தை கட்டவுள்ளது.

மஇகா கட்சி ஒரு மானமுள்ள கட்சி பட்டம் பதவிக்காக யாரிடமும் சென்று கெஞ்சவில்லை.

நாம் சுயநல அரசியல் நடத்தவில்லை பொதுநல கட்சியாக செயல்பட்டு வருகிறோம் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

செலாயாங் ஜெயா,நவ.28-
காளியம்மன், துர்க்கை அம்மன், இயேசுநாதர், புத்தமதம் மற்றும் சீனர் கோயில்களை ஆபாச வார்த்தைகளில் இழிவாக பேசிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து சிரம்பான் காவல்துறையில் முதல் போலீஸ் புகார் செய்யப்பட்டது. அதன் பிறகு தொடர்ச்சியாக 10க்கும் மேற்பட்ட போலீஸ்புகார்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து மாக் மண்டின் குமார், தேசம் குணாளன் மணியம் மற்றும் சிலர் கோம்பாக் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

கோம்பாக் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த அந்நபர் தற்போது சிரம்பான் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசும்  சம்பவங்கள் தற்போது கண்மூடித்தனமாக அதிகரித்து வரும் நிலையில்  ,  இப்போது இந்த நபர் கடவுளை குறித்து ஆபாசமாக பேசிய காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதை தொடர்ந்து அவருக்கு எதிராக ஆங்காங்கே 10க்கும் மேற்பட்ட போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில் செலாயாங் ஜெயாவை சேர்ந்த அந்நபர் காளியம்மன், துர்க்கை அம்மன், இயேசுநாதர் மற்றும் புத்த மதங்களை ஆபாச வார்த்தைகளை கொண்டு இழிவாக பேசியிருந்தார்.

இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட சில இளைஞர்கள் அந்நபரை தேடினர். அந்நபர் செலாயாங் ஜெயாவில் உள்ள ஒரு அங்காடியில் இருப்பதாக தகவல் கிடைத்து அங்கு சென்று அந்நபரை கையும் களவுமாக பிடித்தனர். அந்நபரை மன்னிப்பு காணொளி செய்யச் சொன்னதோடு போலீஸ்சுக்கு தகவல் கொடுத்து அந்நபரை கோம்பாக்காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

அந்நபரை மாக் மண்டின் குமார் நேரில் பார்த்து எச்சரித்தோடு கோம்பாக் போலீஸ் தலைமையக காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இந்த நபருக்கு எதிராக இதுவரை 10க்கும் மேற்பட்ட போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பில் முதல் போலீஸ் புகார் சிரம்பானில் செய்யப்பட்டதால் சம்பந்தப்பட்ட நபர் சிரம்பான் காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்து மதம் குறித்து ஆபாச வார்த்தைகளை கொண்டு இழிவாக பேசிய நபருக்கு எதிராக மாக் மண்டின் குமார் கோம்பாக் காவல்துறையில் புகார் செய்து 3R சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

தேசம் ஊடகத்தின் தோற்றுநரும் தலைமை ஆசிரியருமான குணாளன் மணியம் அவர்களும் கோம்பாக் காவல்நிலையத்தில் புகார் செய்து 3R சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலாலம்பூர், நவ. 27-
சமீபகாலமாக மாற்ற இனத்தை சாடி இழிவாக பேசுவது  இந்த நாட்டில் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் தகுந்த  நேரத்தில் அரசும் அதிகாரமும் இவர்கள் மீது  தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்காததே காரணம் என    டத்தோ டி. மோகன் தெரிவித்தார்.

இதற்கு முன் ஒருவர் இதே போல் மற்ற மதத்தை இழிவு படுத்தும்போது சுமார் 1,000 புகார்களுக்கு மேல்  கொடுக்கப்பட்டும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அதன் தொடர்ச்சியாக இப்போது ஒருவர்  இந்து கடவுள் மற்றும் கிருஷ்த்துவ கடவுளை வக்கிரமாக வர்ணித்து பேசியதோடு இழிவாக தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பேசியுள்ளார்.
இதனால் பொங்கி எழுந்த சில இந்தியர்கள் அவரை தேடிச் சென்று அவரை மன்னிப்பு கேட்க வைக்கும் நேரத்தில் அங்கு போலீஸ் வாகனம் வந்து அந்த நபரை விசாரனைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

இந்த நேரத்தில் நான் போலீஸ் மட்டும் அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்வது என்னவென்றால் வழக்கம் போல் அவர் ஒரு மன நோயாளி என்ற காரணத்தை மட்டும் சொல்லிவிடாதீர்கள். அதை இனியும் மக்கள் ஏற்க போவது இல்லை என டத்தோ டி .மோகன் தெரிவித்தார்.

அவர் பேசிய பதிவு உண்டு, அவரை பொதுமக்களே கண்டு பிடித்து போலீஸ்சிடம் ஒப்படைத்து விட்டனர்.

ஆகையால் 3R சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுங்கள் என டத்தோ டி. மோகன் தெரிவித்தார்.

இப்படிப்ட்ட நபர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் இப்படி பொதுவில் வாய்க்கு வந்ததை பேசக்கூடாது என்ற பயம் சிலருக்கு வரும்.

ஆகையால் உங்கள் வழக்கமான காரணம் வேண்டாம். நடவடிக்கை தேவை என டத்தோ  டி. மோகன் கேட்டுக் கொண்டார்.

கோலாலம்பூர், நவ.19-
தமிழ் லென்ஸ் ஆசிரியரும், அரசியல் செய்தியாளருமான வெற்றி விக்டர்  இன்று ம.இ கா இணைந்ததாக அதிகாரபூர்வ அறிவிப்பை செய்தார்.

ம.இ.கா உருவாக்கி உள்ள செயலி மூலம் நேரடி உறுப்பியம் அதன் வாயிலாக  இணைந்துள்ளார்.

இப்போது உள்ள ம.இ.கா எல்லா வகையிலும் உயிர் பெற்று
தைரியமாக குரல் எழுப்பி, எந்த கட்சிக்கும் அடிபணியாமல் இந்திய சமுதாயம் பக்கம் நிற்கிறது.  வரலாற்று மிக்க இந்த கட்சியை  அடுத்த தலைமுறையிடம்  ஒப்படைக்கும் போது ஒரு மரியாதைகுரிய கட்சியாக ஒப்படைக்க கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.

இந்த தருணத்தில் சில அம்னோ தலைவர்கள் ம.இ.கா இந்தியர்களின் ஆதரவை இழந்து அம்னோவை நம்பி பிழைக்கும் ஒரு கட்சி என சொல்லி வருகிறார்கள். இந்திய சமுதாயம் ம.இ.கா வை ஆதரிக்க வில்லை என சொல்கிறார்கள்.

அவர்களுக்கு பதிலடி கொடுக்க ம.இ.கா ஆட்சியில் இருக்கும்போது பல முறை சீண்டி எழுதிய வெற்றி விக்டர்.
இன்று  ம.இ.காவில் இணைந்தார்.

தான் இந்த கட்சியில்  இந்த காலகட்டத்தில் இணைந்தது  இளைஞர்கள் மத்தியில் ம.இ.கா  மீண்டும் ஒரு புரட்சியை எழுப்பு உள்ளது, புதிய தலைமுறைக்கு  ம.இ.காவின் வரலாறு தெரிய வேண்டும். அதே நேரத்தில் ம.இ.காவின் வழி இந்திய சமுதாயத்தின் தேவை  எதிர்ப்பார்ப்பை  நாமே  வகுப்போம், உருவாக்குவோம்.

இந்த தாய் கட்சியை மற்றவர் இந்திய சமுதாயத்தின் ஆதரவை இழந்த ஒரு கட்சி என சாடுவதை பொறுத்து கொள்ள முடியாது... ஒரு இந்தியனாக சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட ஒரு செய்தியாளராக   ம.இ.கா இந்திய சமுதாயத்தின் குரல் என்பதை உணர்த்த  இளைஞர்களை ஒரு குடையின் கீழ் ஒற்றுமையாக்க இந்திய சமுதாயத்தின் சக்தி மற்றவர்களுக்கு உணர்த்த நான் ம.இ.காவில் இப்போது இணைந்து சேவை செய்ய வருவதாக வெற்றி விக்டர் தெரிவித்தார்.

ம.இ.காவின் இணைவது தொடர்பான தனது என்னத்தை தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்து விட்டதாக வெற்றி விக்டர் கூறினார்.

ஒரு குடையின் கீழ் இந்திய சமுதாயத்தின் பிரச்சனைக்கு  கைகோர்த்து துணை நிற்போம் என்றார் வெற்றி விக்டர்.

கோலாலம்பூர், நவ.17-
கடந்த ஆண்டு போன்று இந்த ஆண்டும் மிகவும் சிறப்பாக பந்திங் தொலுக் பங்லீமா காராங் சமூக மண்டபத்தில் நடைபெற்றது.

சுற்று வட்டார பிரமுகர்கள் கோலா லங்காட் நகராண்மை கழக உறுப்பினர் கே.பன்னீர்செல்வம் , நட்புக்காக சங்கத் தலைவர் டாக்டர் ராமச்சந்திரன் சமூகச் சேவையாளர் டத்தோ வெள்ளையப்பன் , டாக்டர் செல்வேந்திரன் , திரு.ரவீந்திரன் போன்றோர் வருகை தந்து கலந்து அவர்களுக்கு இயக்க பொறுப்பாளர்கள் மாலை அணிவித்து சிறப்பும் செய்யப் பட்டது நிகழ்சியை மலேசிய பிரபல கலைஞர் எம்ஜிஆர் சேகர் பாடகர் டிஎம்எஸ் புகழ் அக்னி கனகா அருமையான பாடல்களை வழங்கி சிறப்பாக நடத்தி தந்தார்.

நட்புக்காக சங்கமம் அமைப்பின் உதவியுடன் தோட்ட முன்னாள் குடியிருப்பாளர்களுடன் ஒன்று கூடல் வழி பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்வதோடு பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை உதவிகள் போன்று செய்து வருகிறது என்று ஏற்பாட்டார்ளிகல் ஒருவரான பொன்.பெருமாள் கூறினார்..

பெட்டாலிங் ஜெயா,நவ.17–
மலேசியா மற்றும் இந்தோனேஷியாவில் முன்னணி மதிப்புமிக்க தங்க-வெள்ளி முதலீட்டு நிறுவனமான பப்ளிக் கோல்ட் உலகம் முழுவதும் இருந்து வருகை தந்த Public Gold Business Owners (PGBOs) உறுப்பினர்களை ஒருங்கிணைத்து, 2024/25ஆம் ஆண்டுக்கான சிறப்புப் பாராட்டு விழாவை மிகுந்த சிறப்பாக நடத்தியது.

இரட்டை மற்றும் மேகா டய்மண்ட் சாதனையாளர்களை கௌரவிக்கும் இந்த மாபெரும் நிகழ்வு பண்டார் உத்தாமாவில் உள்ள ஒன் வேர்ல்ட் தங்கு விடுதியில் நடைபெற்று, விருந்தினர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்த சிறப்பு விழாவை பப்ளிக் கோல்ட் குழுமத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாகத் தலைவர் டத்தோஸ்ரீ லுவிஸ் எங் அவர்கள் திறந்து வைத்தார்.

அவருடன் Aurora Italia International Berhad (AIIB) நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் டத்தின்ஸ்ரீ யுவான் லிம், மற்றும் இந்நிகழ்ச்சியின் அமைப்புக் குழு தலைவரும் PGMall நிறுவனத்தின் COO-வுமான ஜெர்ரி எங் ஆகியோரும் இணைந்தனர்.

2008இல் பினாங்கில் தன்னுடைய பயணத்தை தொடங்கிய பப்ளிக் கோல்ட், இன்று TRX நிதி மையத்தின் மையப் பகுதியாக திகழும் Menara Public Gold கட்டடத்திற்கு நகர்ந்து, உலகளாவிய நிறுவனமாகத் திகழ்கிறது. தற்போது மலேசியாவில் 20 கிளைகள், இந்தோனேஷியாவில் 7 கிளைகள், மேலும் துபாய் (UAE) மற்றும் லண்டன் (UK) ஆகிய இடங்களில் சர்வதேச அலுவலகங்களையும் நிறுவியுள்ளது.

அத்துடன், 2023ஆம் ஆண்டிலிருந்து மலேசியா முழுவதும் உலகின் முதல் பின்டெக் தொழில்நுட்பத்துடன் கூடிய தங்க ATM இயந்திரங்கள் 110 யூனிட்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது பப்ளிக் கோல்டின் வேகமான வளர்ச்சிக்கான சான்றாகும்.

2008 முதல் 2025 வரையிலான காலப்பகுதியில் நிறுவனத்தின் மொத்த வருவாய் RM23 பில்லியனை கடந்துள்ளது. மொத்தம் 87 டன் தங்கம் விற்பனையாக, 51 டன் தங்கம் மீள்கொள்வுக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மலேசியா, சிங்கப்பூர், ப்ரூனே மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் மட்டும் 2.2 மில்லியனுக்கும் மேற்பட்ட பதிவுசெய்யப்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ள பப்ளிக் கோல்ட், இன்று ஆசியாவைத் தாண்டி UAE மற்றும் UK-களிலும் தன்னுடைய தடம்பதிப்பை விரிவாக்கியுள்ளது.

இந்த விருது நிகழ்ச்சியில் மொத்தம் 7 பிரிவுகளைக் கொண்ட இவ்விருதுகள் — மில்லியன் ஸ்டார் டபுள் டையமண்ட், 5-ஸ்டார் டையமண்ட், 4-ஸ்டார் ரூபி, 3-ஸ்டார் ஜேட், 2-ஸ்டார் ஜேட், 3-ஸ்டார் பேர்ல், மற்றும் 2-ஸ்டார் பேர்ல் — தகுதியான PGBO-க்களுக்கு RM3.5 மில்லியன் மதிப்பிலான பரிசுகளாக வழங்கப்பட்டன. கடந்த 18 ஆண்டுகளில் PGBO-க்களுக்கு வழங்கப்பட்ட மொத்த ஊக்கத்தொகை RM420 மில்லியனை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விழாவின் முக்கிய சிறப்பாக, புகழ்பெற்ற மலேசிய தங்க மஹாகுரு  சுகோர் பின் ஹஷிம் மற்றும் அவரது துணைவியார் ஜோனய்னா பிந்தி நோர்டின் ஆகியோர் உயரிய மில்லியன் ஸ்டார் டபுள் டையமண்ட் பட்டத்தைப் பெற்றனர்.

அவர்களுக்கு RM962,623 மதிப்புள்ள பரிசுகளான போனஸ் டையமண்ட், பங்களா நிதி, சொகுசு கார் நிதி, மற்றும் தலைமைத்துவ ஊக்குவிப்பு தொகை ஆகியவை வழங்கப்பட்டன. உலகம் முழுவதும் 20 இலட்சம் தங்க சேகரிப்பவர்களை முன்னெடுத்து வந்த இவர்களின் தலைமையாற்றல், தொடர்ச்சியான முயற்சி பப்ளிக் கோல்டின் வளர்ச்சிக்கு வலு சேர்த்துள்ளது.

பப்ளிக் கோல்ட் வரலாற்றில் இதுவரை இல்லாத சாதனையாக, இவ்வாண்டு ஒரே நேரத்தில் மூன்று 5-ஸ்டார் டையமண்ட் விருதுகள் வழங்கப்பட்டன.

அஜீஸா பிந்தி ஹசன் (Public Gold Iron Lady), ஹாஜி ஹபிசுல் ஹகிம் பின் முகமது கெர்டா & ஹாஜ்ஜா அலிஃபா ரபினி பிந்தி அப்துல்லா (Raja Borneo), மார்லியா பிந்தி ரம்லி &  அகமது ஃபுவாட் ஆகியோருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

ஒவ்வொரு வெற்றியாளரும் RM604,000 மதிப்பில் தலைமைத்துவ ஊக்குவிப்பு தொகை, பங்களா நிதி, மற்றும் சொகுசு கார் நிதி ஆகியவை பெற்றனர்.

இதனை தொடர்ந்து அடுத்த விருதுகளான 4-ஸ்டார் ரூபி விருதை மஸ்லிஃபா பிந்தி ஓமர் பெற்றார். அவருக்கு RM9,000 தலைமைத்துவ ஊக்குவிப்பு தொகை வழங்கப்பட்டது.

3-ஸ்டார் ஜேட் விருதை  நூர்மரியா சாபிகா & பெங்கிரான் அப்துல் அசிஸ் ஆகியோர் பெற்றனர்.

2-ஸ்டார் ஜேட் விருதை அமீர் பைரூஸ் பின் அப்துல் அசிஸ் பெற்றார். அதனை தொடர்ந்து 3-ஸ்டார் பேர்ல் விருதை  நொர்சுஸிலாவதி & முகமது சுகூர் பெற்றனர்.

ஸ்டார் பேர்ல் விருதை அமிருல் பார்ஹான் &  அஸ்ஸுரா அஸ்லியனா,  ஷம்சுல் & நோரா, கஷிகா நாகராஜன் ஆகியோர் பெற்றனர்.

எங்கள் PGBO-க்களின் அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சி பப்ளிக் கோல்டின் மேன்மையை பிரதிபலிக்கிறது. உண்மையான செல்வம் என்பது நாம் வைத்திருப்பதில் அல்ல, நாம் பகிரும் அறிவிலும், நாம் ஊக்குவிக்கும் வாழ்க்கைகளிலும் உள்ளது.

பப்ளிக் கோல்ட் வழங்கும் இவ்விருதுகள் தங்கச் சேமிப்பை பொதுமக்களுக்கு எளிதில் அணுகக்கூடியதாக மாற்றுவதோடு, தங்கள் வாழ்க்கையை மாற்றியமைத்து முன்னேறிய ஆயிரக்கணக்கான PGBO-க்களின் சாதனைகளுக்கு ஒரு வண்ணமிகு சின்னமாக திகழ்கின்றது என டத்தோஸ்ரீ லுவிஸ் எங் தெரிவித்தார்.

கோலாலம்பூர்,நவ.16-
நாட்டின் இன்றை அரசியல் சூழ்நிலையில் மஇகா யாருக்கும் பயப்படாது. அதேவேளையில் கையேந்தி வாழ வேண்டிய தேவையும் எங்களுக்கு இல்லை என கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் சூளுரைத்தார்.

எங்களுக்கு மானம்தான் வேட்டிச் சட்டை மற்றதெல்லாம் வாழைமட்டை என்ற பாடல் வரியை அவர் மேடையில் கூறினார்.

அரசாங்கத்தில் எந்த பதவி இல்லை என்றாலும் எங்களால் சமுதாயத்திற்கு சேவை செய்ய முடியும். ஆகையால் யாரையும் நம்பி வாழும் நிலை எங்களுக்கு இல்லை.

கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தேசிய முன்னணி தோல்வி கண்டதும் அனைவரும் அம்னோவை குஷ்ட நோயாளியை போல பார்த்தார்கள். தேசிய முன்னணியில் மசீசவை தொடர்ந்து இருக்க வேண்டும் என இழுத்து பிடித்ததும் மஇகாதான். இதனை மறந்துவிட வேண்டாம் என அவர் வலியுறுத்தினார்.

மஇகாவிடம் உள்ள மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பதவி, சட்டமன்றம், கவுன்சலர் பதவிகள் எங்களுக்கு முக்கியமல்ல. எங்களுக்கு மானமும் மரியாதையையும்தான் முக்கியம். ஆகையால் எங்களின் முடிவு அதன் அடிப்படையில்தான் இருக்கும் என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

கோலாலம்பூர், நவ.16-
நாட்டு அரசியலில் அன்று எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு ஆட்சியில் இருந்த மஇகாவை காலம் காலமாக குறைக்கூறி வந்த அன்றைய எதிர்க்கட்சி இந்திய தலைவர்கள் இன்று குரல் இல்லாமல் ஆட்சியில் அமர்ந்துள்ளதாக மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கூறினார்.

அரசியலில் கேள்வி கேட்பது சுலபம். ஆனால் பதில் சொல்லும் இடத்தில் இருக்கும்போதுதான் அதன் கஷ்டம் புரியும் என்பதை அவர்கள் இன்று உணர்ந்திருப்பார்கள்.

நாட்டின் சுதந்திரம் முதல் இந்திய சமுதாயத்தின் அடிப்படை தேவைகள், நமது உரிமை அனைத்தையும் கேட்டு பெற்றுத் தந்தது மஇகாதான். தமிழ்ப்பள்ளி விவகாரம், ஆலயம் விவகாரம், கல்வி மேம்பாடு, தோட்ட மேம்பாடு என பலவற்றை இந்திய சமுயாத்திற்கு பெற்று தர போராடி கட்சி மஇகாதான். ஆனால் மன்சாட்சி இல்லாதவர்கள் இன்று மஇகா என்ன செய்தது என்று கேட்கிறார்கள் என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

அதேவேளையில் மஇகாவை வீழ்த்தினால்தான் இந்தியர்களின் வாக்கை பெற முடியும் என்று முடிவெடுத்து வேலை செய்தவர்கள், மஇகா இல்லை என்றால் இந்திய சமுதாயம் தத்தளிக்கும் என்பதை மறந்துவிட்டார். அதனை செய்து விட்டு அவர்களும் இன்று ஆட்சியில் அமர்ந்து கொண்டு மௌனம் சாதிக்கின்றனர் என அவர் மஇகாவின் 79ஆவது தேசிய பொது பேரவையில் கூறினார்.

செய்தி: காளிதாசன் காளிதாசன்

கோலாலம்பூர்,நவ.16-
தற்போது அரசாங்கத்திற்கு வேலை செய்வதற்கு சரியான இந்திய கட்சி இல்லை என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் என்னிடமும் டத்தோஸ்ரீ சரவணனிடம் கூறியதாக மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கூறினார்.

இந்தியர்களுக்காக செயல்பட இன்றை ஆட்சியில் முறையான இந்திய கட்சி இல்லை என பிரதமர் எங்களிடம் கூறினார். பிரதமர் இந்திய சமுதாயத்திற்கு உதவ தயாராக இருக்கிறார்.

ஆலயங்களுக்கு மானியம் தேவை என்ற கோரிக்கையை நான் இதற்கு முன்னவர் அவரிடம் முன்வைத்தேன். தற்போது ஆலயங்களுக்கான மானியம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அவருடனான சந்திப்பின்போது இதற்கு முன்னர் எம்ஐஇடி கீழ் 25 மில்லியன் வெள்ளி மானியம் வழங்குவதாக அறிவித்திருந்தீர்கள். அது இன்னும் கிடைக்கவில்லை என்றேன். உடனடியாக அதன் தொடர்பில் பேசி அந்த மானியத்தை எம்ஐஇடி-க்கு வழங்கினார்.

தற்போது அவர் இந்திய சமுதாயத்திற்கு செய்ய வேண்டிய உதவிகளை முறையாக செய்யவும் அந்த திட்டங்களையும் வழிநடத்தவும் முறையான தளம் இல்லை என்பதை அவர் எங்களிடம் கூறினார்.

இந்த தகவலி டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மஇகாவின் 79ஆவது தேசிய பொதுப் பேரவையில் மேடையில் பேசியபோது கூறினார்.


செய்தி: காளிதாசன் தியாகராஜன்

கோலாலம்பூர், நவ.16-
அன்றைய அரசியல் சூழ்நிலையில் அரசியலில் நிலைத்திருக்க அம்னோ பாஸுடனும் பக்காத்தானுடனும் கூட்டணி அமைத்தது. அன்று அம்னோ செய்தது சரி என்றால் இன்று அதனை நாங்கள் செய்வதால் என்ன தவறு என டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பினார்.

தே.மு. கூட்டணியில் எந்த கட்சியும் எந்த கட்சியையும் கட்டுப்படுத்த முடியாது. அதற்கு மஇகாவும் இடம் கொடுக்காது என அவர் சொன்னார்.

மஇகாவின் எதிர்கால நலனுக்காக எந்த முடிவு எடுக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். அதனை யாரும் எங்களுக்கு சொல்லி தர தேவையில்லை என அவர் சொன்னார்.

அன்றைய அரசியல் சூழ்நிலையில் நிலைத்திருக்க அம்னோ பாஸுடன் இணைந்து. பாஸ் மீதான நம்பிக்கையை நாங்கள் எங்கள் கட்சிக்காரர்களிடம் விதைத்து அன்றைய புதிய கூட்டணி ஆட்சியை நடத்துவதற்கு துணையாக இருந்தோம். அம்னோ எடுத்த முடிவை நாங்கள் மதித்து அவர்களுடன் செயல்பட்டோம் என்பதை அவர் மஇகாவின் 79ஆவது தேசிய பொதுப் பேரவையில் நினைவூட்டி கூறினார்.

இந்த பேரவையில் நேரடி உறுப்பியம் ஏற்றல் முறையை டான்ஸ்ரீ விக்னேஸ்வரனும் கட்சியின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணனும் அறிமுகம் செய்து வைத்தனர்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

கோலாலம்பூர், நவ.16-
ஒரு அரசியல் கூட்டணிக்குள் மரியாதை இல்லாத நடத்தை, மிரட்டல் போன்ற செயல்கள் நிலவும் நிலையில், இப்படியான கூட்டணி நீடிக்குமா என்பதை உறுதியாக கூற முடியாது என மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தேசிய முன்னணி கூட்டணி என்பது அம்னோ, மஇகா, மசீச ஆகிய கட்சிகளை கொண்டதாகும். இந்த கூட்டணி நாட்டின் சுதந்திர காலத்தில் தொடங்கப்பட்டும் கூட்டணியில் வரம்புகளும் உறுதி செய்யப்பட்ட நிலையில், ஒரு தரப்பின் ஆதிக்கம் இந்த கூட்டணியில் இருக்கக்கூடாது என மஇகாவின் 79ஆவது தேசிய பொதுப் பேரவையில் அவர் சொன்னார்.

தேசிய முன்னணி ஆட்சியை இழந்த பின்னர், பக்காத்தான் ஹராப்பானுடன் இணையம் முடிவை தேசிய முன்னணி எடுக்கவில்லை. அது அம்னோவின் சொந்த முடிவு என அவர் சொன்னார்.

அம்னோவின் இந்த முடிவினால் அது தற்போது 70% மலாய்காரர்களின் ஆதரவை இழந்துள்ளது. இது அவர்களின் சொந்த முடிவினால் ஏற்பட்ட விளைவாகும்.

கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுக்கு தங்கள் கருத்தை பதிவு செய்ய கூட அம்னோ வாய்ப்பு அளிக்கவில்லை என்பது கூட்டணிக்குள் விரக்தியை அதிகரிக்கும் அம்சமாக உள்ளது.

அதேவேளை, ஆட்சியை இழந்த பின்பு பல அம்னோ தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்ட காலகட்டத்திலும், மஇகா தொடர்ந்து அம்னோவை ஆதரித்தது குறிப்பிடத்தக்கது. இந்நேரத்தில் எடுக்கப்பட்ட புதிய அரசியல் முடிவு, கூட்டணியில் உள்ள தோழமை கட்சிகளுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் மேலும் சொன்னார்.

மஇகாவிடம் எந்த அரசாங்க பதவியும் இல்லை. இருந்தபோதும் தனித்து செயல்பட எங்களால் முடியும். ஒருபோதும் எங்களின் தன்மானத்தை நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம் என டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் சூளுரைத்தார்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

கோலாலம்பூர்,நவ.15-
நாளை நடக்கவிருக்கும்  ம.இ.கா ஆண்டு கூட்டத்தில் தேசிய முன்னணியை விட்டு ம.இ.கா  வெளியேறுமா இல்லையா என்பது இன்னும் கேள்விகுறியே?

அரசியலுக்கு அப்பாற்பட்டு பல விதமான ரகசிய கூட்டங்கள் தேசிய முன்னணி ,  பெரிக்காத்தான் நேஷனல்  மத்தியில் நிலவுவதாக தெரிகிறது.

அதோடு பிரதமரும் ம.இ.கா இப்போது  வெளியேறுவது   அவர்களின் சபா தேர்தலை பாதிக்கும் என நம்புவதாக தகவல் கிடைத்துள்ளது.

அந்த வகையில் சில தினங்களாக பல தரப்பட்ட  நிலையில் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

அதோடு ம.இ.காவுக்கு அடுத்த  அமைச்சரவை மாற்றத்தில் ஒரு முழு அமைச்சர் அல்லது 2 துணை அமைச்சர்  என்பதுபோல் பேச்சு வார்த்தையும் நடந்து வருவதாக தகவல் கசிந்து உள்ளது.

அம்னோ ம.இ.காவையும்  அதே நேரத்தில் டத்தோஸ்ரீ அன்வாரையும் இழக்க முடியாத ஒரு தர்ம சங்கட இடத்தில் இருப்பதால், இந்த பேச்சு வார்த்தையை சுமூகமாக முடிக்க  டத்தோஸ்ரீ  அன்வார் நேரடி பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என  வலியுறுத்தி உள்ளதாக தகவல்  கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் சில தினங்களாக  ரகசிய கூட்டங்கள் நடந்து வருகிறது.

நாளை ம.இ.கா, தேசிய முன்னணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தால் அது சபா தேர்தலை பாதிக்கும்.

அந்த வகையில் ம.இ.காவின் முடிவில் மாற்றம் அல்லது ஒத்திவைப்பு செய்ய சில நடவடிக்கைகள் இப்போது மேற்கொள்ள பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

எது எப்படியோ நாளை ம.இ.காவின்  ஆண்டு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை  அரசியல் வட்டாரம் கூர்ந்து கவனிக்கிறது.

செய்தி : வெற்றி விக்டர்

கோலாலம்பூர், நவ. 15-
நாட்டில் புகழ்பெற்ற கலைஞர் பூச்சி ரவியின் உறவுகள் மேடை நாடகத்தின் அரங்கேற்றம் 1-3-2026 ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை ஒரு வாரத்திற்கு டான்ஸ்ரீ சோமா அரங்கில் அரங்கேற்றம் காண்கிறது என்று இயக்குநர் பூச்சி ரவி தெரிவித்தார்.

இந்த நாடகத்தின் அறிமுக விழா மற்றும் வசன புத்தகம் வழங்கும் விழா அண்மையில் டான்ஸ்ரீ சோமா அரங்கில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

மலேசிய கலை கலாச்சார இயக்கம் ஏற்பாட்டில்
தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் கலை கலாச்சார அறவாரிய ஆதரவில் மலேசிய முத்தமிழ்ச் சங்கத்தின் ஒருங்கிணைப்பில்  பூச்சி ரவியின் உறவுகள் மேடை நாடகம் அரங்கேற்றம் காண்கிறது.

உறவுகள் மேடை நாடகத்தின் கதை, திரைக்கதை, இயக்குநர் ஆகிய பொறுப்புக்களை பூச்சி ரவி ஏற்றுள்ளார்.

தயாரிப்பாளர் எஸ்.பி. மணிவாசகம், நிர்வாக தயாரிப்பாளர் கரு.பன்னீர்செல்வம் மற்றும் ஆலோசகர் பாஸ்கரன் (பாஸ்கி) ஆகியோர் உறவுகள் மேடை நாடகம் வெற்றி பெற முக்கிய பங்காற்றி இருக்கிறார்கள்.

குடும்ப உறவுகளை மையப்படுத்தி இந்த உறவுகள் மேடை நாடகம் உயிரோட்டமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய நிதி கூட்டுறவு சங்கத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டத்தோ ப.சகாதேவன் முழு ஆதரவு வழங்கி உள்ளார்.

தேசிய நிலநிதி கூட்டுறவு கழகத்தின் சார்பில் முதல் கட்டமாக 5,000 வெள்ளி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் உதவி வழங்க டத்தோ சகாதேவன் முன் வந்திருப்பது பாராட்டுக்குரியது என்று பூச்சி ரவி தெரிவித்தார்.

கோலாலம்பூர்,நவ.15-
பிரியாணி விற்பனையில் புகழ்பெற்ற உணவகமான ஜப்பார் பாய் பிரியாணி உணவகத்தின் புதிய கிளை பிரிக்பீல்ட்ஸில் திறக்கப்பட்டுள்ளது.

இன்று இந்த உணவகத்தை அதிகாரப்பூர்வமாக மஇகாவின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணனும் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் தற்போது அதிகமான இளைஞர்கள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதியதாக பல வியாபாரங்களை அவர்கள் தொடங்கி வருகின்றனர்.

ஆகையால் வியாபாரத்தில் ஆர்வம் உள்ள இளைஞர்கள் பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் வியாபாரத்தை தொடரலாம் என டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

மேலும் கட்டங்களை வாங்க நினைப்பவர்கள் இந்த பகுதியில் விலை அதிகமாக இருந்தாலும் கூட இங்கு கட்டங்களை வாங்கி வாடகைக்கு விட்டால் எதிர்காலத்தில் நல்ல லாபத்தை பார்க்கலாம் என அவர் மேலும் வலியுறுத்தினார்.

கோலாலம்பூர், நவ. 14-
மலேசியத் தமிழ் பத்திரிகை துறையில் நீண்ட காலம் பணியாற்றிய நிருபர் முருகன் அவர்களின் மருத்துவ சிகிச்சை நிதிக்கு மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கம்  சார்பில் 5,250 வெள்ளியை நிதி திரட்டி தரப்பட்டது.

அவருக்கு இன்னும் நிதி  பற்றாகுறை ஏற்பட்ட நிலையில்
மஇகா தேசியத் துணைத் தலைவரும்  தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம் .சரவணன் நிருபர்  முருகனின் சிகிச்சைக்காக  3,000 வெள்ளி  நிதியை இன்று வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய தமிழ் ஊடகத்தில் நீண்ட காலம் பணியாற்றிய முருகன் அவர்கள் கடந்த  நவம்பர் 7ஆம் தேதி நடந்த விபத்தில் வலது கையில் இரண்டு எலும்புகள் முறிவு ஏற்பட்டது.

ஒரு எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ள வேளையில் மற்றொரு எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்கு மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் நிதி திரட்டப்பட்டது.

அதே நேரத்தில் தேசம் ஊடகத்தின் இயக்குந்ர் தேசம் குணாளன் மணியம் 1,000 வெள்ளி நிதியை  முருகனின் சிகிச்சைகாக வழங்கினார்.

மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன் தலைமையில் நிதி திரட்டப்பட்டது .

நல்லுள்ளம் படைத்தவர்கள்  பலர் நிதி வழங்கிய நிலையில்
ஆக மொத்தம் சங்கத்தின் சார்பில் 5,250 வெள்ளி திரட்டப்பட்டது.
அந்த நிதி இன்று நேரடியாக முருகனிடம் வழங்கப்பட்டது.

அதோடு டத்தோஸ்ரீ எம்.சரவணன் முருகனின் சிகிச்சை நிதிக்கு 3,000 வெள்ளியை வழங்கி பேருதவி புரிந்தார்.

ஆக மொத்தம் இன்று  மொத்தம் 8,500 வெள்ளி முருகனிடம் நேரடியாக  ஒப்படைக்கப்பட்டது.

மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் நலனில்  தொடர்ந்து அக்கறை செலுத்தி வருகின்ற டத்தோஸ்ரீ சரவணன் தலைமையிலேயே  அந்த நிதி முருகனிடம்  வழங்கப்பட்டது.

நிதியைப் பெற்றுக் கொண்ட முருகன் தனக்கு உற்ற நேரத்தில் ஆதரவளித்து உதவுகின்ற பத்திரிகையாளர் சங்கத்திற்கும் நேரில் வந்து நிதியுதவி வழங்கிய டத்தோஸ்ரீ  எம்.சரவணன் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

முருகனின் சிகிச்சைக்கு நிதி திரட்டிய மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் பணியை பெரிதும் பாராட்டுவதாக டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார். இது போல் ஒற்றுமையாக இருங்கள் என அவர்  வாழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியில்  மலேசியத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன், துணை தலைவர் காளிதாசன் தியாகராஜன், உதவித் தலைவர்கள் காளிதாசன் இளங்கோவன், எஸ். ஜீவாராஜா, ரவி  முனியாண்டி, செயலாளர் வெற்றி விக்டர், ஆட்சிக் குழு உறுப்பினர்களான  மூர்த்தி, காளிதாஸ் சுப்ரமணியம், இராமன் குட்டி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கோலாலம்பூர், நவ 13-
மலேசிய மாஹிர் அறக்கட்டளையின்  தலைவர் டத்தோ பி. ஸ்ரீ கணேசுக்கு, மலேசிய குடிமைப் பாதுகாப்பு படையினால் (APM) பட்டமளிக்கப்பட்ட கௌரவ லெப்டினன்ட் கர்னல் (PA) என்ற பதவி வழங்கப்பட்டுள்ளது.

இது ட்ரோன் தொழில்நுட்பம் மூலம் பாதுகாப்பு படையின் திறனை மேம்படுத்திய அவரது பங்களிப்புக்கு  அங்கீகார வழங்கும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.

அவரின் தலைமையில் பாங்கி ALPHA பயிற்சி மையத்தில் நடைபெற்ற தீவிர ட்ரோன் பயிற்சியின் மூலம் மலேசிய பாதுகாப்பு படையில் முதல் சான்றளிக்கப்பட்ட ட்ரோன் பயிற்சியாளர்கள் உருவாக்கப்பட்டனர்.

இரவு மீட்புப் பணிகளிலும், வெள்ளப்பாதிப்பு போன்ற அவசரநிலைகளிலும் வேகமான தகவல் பரிமாற்றம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் மலேசிய பாதுகாப்பு படையினருக்கு இந்த ட்ரோன் பயிற்சி மிகவும் உறுதுணையாக இருக்கும் என ஸ்ரீ கணேஷ் தெரிவித்தார்.

மேலும், வாயு கசிவு போன்ற ஆபத்தான சூழலில் ட்ரோன் மூலம் நிலை மதிப்பீடு செய்து, மீட்புக்குழுவின் பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும் என்றார்.

இதனிடையே தனது தலைமையில் செயல்படும் மாஹிர்  அறக்கட்டளையும், மலேசிய பாதுகாப்பு படையையும்  இணைந்து நடத்திய பொதுத்–தனியார் கூட்டாண்மையினால் (PPP), மலேசிய குடிமைப் பாதுகாப்பு படையில் முதல் அங்கீகரிக்கப்பட்ட ட்ரோன் பயிற்சி மையம் (RPTO) தொடங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

இதன் வழி தான் பெற்ற இந்த சாதனை, மலேசிய பாதுகாப்பு அமைப்பை நவீன தொழில்நுட்ப திசையில் முன்னேற்றும் வரலாற்றுச் செயல் எனப் பாராட்டப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

கோலாலம்பூர், நவ. 12-
நாடறிந்த கவிஞர் தி.ப. செழியனின் புதல்வி மலர்விழி தி.ப. செழியன் எழுதிய “நிலவாற்றுப்படை” கவிதைத் தொகுப்பு வரும் நவம்பர் 22 ஆம் திகதி சனிக்கிழமை, மாலை 3.30 மணிக்கு மஇகா தலைமையக நேதாஜி மண்டபத்தில் வெளியிடப்படுகிறது.

மஇகா தேசியத் துணைத் தலைவர் மற்றும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் சொல்வேந்தர் டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன் தலைமையில் இந் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் இலக்கியவாதிகள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்நிகழ்ச்சி குறித்த மேல் விவரங்களுக்கு  010-2601324 என்ற தொலைபேசி எண்ணில் கா. தமிழ்செல்வம் அவர்களை தொடர்பு கொண்டு விவரம் பெறலாம்.

கோலாலம்பூர், நவ.12-
நாட்டிலுள்ள தொழித் துறைகளில் அந்நிய தொழிலாளர்கள் பற்றாக்குறை விவகாரம் குறைந்த பாடில்லை. அதிலும் உணவு விற்பனை துறையில் உணவக உரிமையாளர் பெறும் பாடுபட்டு வருகின்றனர்.

தற்போது அரசாங்கம் மாற்றுத் தொழிலாளர் எனும் gantian முறையை அமல்படுத்தியுள்ளனர். ஆனால் இந்த முறைகான நடைமுறைகள் எளிதாக இருக்க வேண்டும் என மைக்கி எனப்படும் மலேசிய இந்திய வர்த்தகத் தொழிலியல் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் டத்தோஸ்ரீ என்.கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்த விதிமுறைகள் ஒவ்வொரு அரசு துறைகளுக்கு ஒவ்வொரு விதமாக உள்ளது. இவை அனைத்தையும் செய்து முடித்து மாற்றுத் தொழிலாளர்களை பெறச் சென்றால் 10 பேருக்கு மூன்று அல்லது இரு பேர் மட்டும்தான் கிடைக்கிறது.

இந்த விவகாரத்தில் நம் உணவகத்தை விட்டு check out செய்யும் அந்நிய தொழிலாளர்களுக்கு மட்டுமே மாற்றுத் தொழிலாளர் வழங்கப்படுகின்றனர். சொந்த ஊருக்கு திரும்பும் தொழிலாளர்களுக்கு மாற்றுத் தொழிலாளர்கள் கிடைப்பதில்லை என அவர் சொன்னார்.

கடந்த காலங்களில் இந்நிலை எங்களுக்கு இல்லை. 10 தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றால் 10 மாற்றுத் தொழிலாளர்கள் எங்களுக்கு கிடைத்து விடும். ஆகையால் இதை அரசாங்கம் கவனிக்க வேண்டுமென பிரிமாஸ் தலைவர் டத்தோ சுரேஷும் கூறினார்.

நாட்டில் அந்நிய தொழிலாளர்கள் தேவைகள் குறித்து அனைத்து தொழிலித்துறைகளில் எத்தனை பேர் தேவை என்பதை மொத்தமாக கணக்கு எடுப்பது அவசியமற்றதாகும். தனிப்பட்ட முறையில் உணவக துறைகளில் எத்தனை அந்நிய தொழிலாளர் இருக்கிறார்கள், மேலும் எவ்வளவு பேர் தேவை என்ற துள்ளிய விவரத்தை அரசு கொண்டிருக்க வேண்டும்.

ஆகையால் gantian முறையில் அரசின் அறிவிப்பு எங்களுக்கு அந்நிய தொழிலாளர்கள் தருவிப்பு என்பது வரும்...ஆனா வராது என்பது போலதான் உள்ளது என பிரேஸ்மா அமைப்பின் தலைவர் டத்தோ மோசின் தெரிவித்தார்.

மேலும் அந்நிய தொழிலாளர்கள் குறித்த தகவல் தணிக்கைகள் முறையாக கண்காணிக்க பட வேண்டும். அவ்வபோது அந்த விவகரங்கள் புதுபிக்கப்படுவது அவசியம் என அவர் கூறியதுடன், அந்நிய தொழிலாளர்கள் தங்கும் இடம் விவகாரத்திலும் சில தளர்வுகள் அவசியம் என்றார் அவர்.

இதற்கிடையில், இந்திய தொழில்துறைகளுக்கான அந்நிய தொழிலாளர்கள் பற்றாக்குறை விவகாரத்தை அரசு கவனத்தில் கொண்டு எங்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.

மேலும் 15ஆவது மலேசிய திட்டத்தில் அந்நிய தொழிலாளர்களை 10% குறைப்பதை நாங்கள் ஏற்கிறோம். ரோப்போடிக், ஏஐ போன்ற தொழில்நுட்ப வளர்ச்சியை எங்கள் தொழில் துறைகளில் அமல்படுத்த அரசு எங்களுக்கு உதவ வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கோலாலம்பூர், நவ.11-
பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்திய உருவாக்கப்பட்டு இந்த ஆண்டுடன் 15 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் காரா சாரம் உணவக உரிமையாளர் ஸ்ரீதரன் தலைமையில் அந்த பகுதியில் வியாபாரம் செய்யும் வர்த்தகர்கள் மாபெரும் கொண்டாட்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.

இந்த பகுதி இப்படி உருமாற்றம் பெற மிக பெரிய அளவில் காரணமாக இருந்த ம.இ.காவின் தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சொல்வேந்தர் டத்தோஸ்ரீ எம்.சரவணனை இந்த நிகழ்ச்சி தலைமை தாங்க அழைத்ததோடு அவருக்கும் மிக பெரிய வரவேற்புடன் , மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு
மாலைகள் விழ வேண்டும், ஒரு
மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும் என்ற பாடலுக்கு ஏற்ப இந்த பகுதி மக்களால் மரியாதை செய்யப்பட்டார் டத்தோஸ்ரீ எம். சரவணன்.

அதன் பின் சிறப்பு உரையாற்றிய டத்தோஸ்ரீ எம்.
சரவணன் இந்த லிட்டில் இந்திய உருவாக நான் மட்டும் காரணம் அல்ல முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் மற்றும் இங்கு உள்ள வர்தகர்களும் என்றார்.

டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் இங்கு வருகை புரியும் போது இங்குள்ள இந்த வர்த்தகர்களுக்கு என்ன தேவை என என்னிடம் கேட்டார். இந்த பகுதியில் அதிகமாக இந்தியர்கள் வர்த்தகம் செய்கிறார்கள். அதிகமான இந்தியர்களின் வருகையும் இங்கு அன்றாடம் உண்டும். ஆகவே சீனர்கள், மலாய்காரர்கள் அடையாளமாக பல பகுதி இருக்கிறது.

இந்த பகுதி லிட்டில் இந்தியவாக அழைக்கப் படவேண்டும் என தெரிவித்தேன்.

உடனே அன்றே செய்தியாளர்களிடம் இவ்விடம் லிட்டில் இந்தியாவாக உருவாக்கப்படும் என அறிவித்தார்.

அதன் அடிப்படையில் வெறும் பேச்சாக மட்டும் இல்லாமல் அன்றைய ஆண்டு 7ஆம் மாதம் வாக்கில் என்னை அழைத்து இந்திய பிரதமர் மலேசிய வருகிறார்.

பிரிக்பீல்ட்ஸ் பகுதியை 3 மாதத்தில் உருமாற்ற வேண்டும். நானும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களும் இதனை ஒரு சேர திறந்து வைக்க போகிறோம் என டத்தோஸ்ரீ நஜீப் தன்னிடம் கூறினார் என டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் 3 மாதத்தில் இரவு பகல் பாராமல் இந்த இடம் கலாச்சார வடிவத்தோடு புதுபிக்கப்பட்டது. இதற்கு எனக்கு பக்கபலமாக இருந்தவர்கள் இங்கு உள்ள வர்த்தகர்கள் என்றார் சரவணன்.

நான் பதவியில் இருந்தபோது எனக்கு எப்படி மரியாதை கொடுத்தார்களோ அதே மரியாதையை இங்கு உள்ள மக்கள் எனக்கு தொடர்ந்து கொடுத்து வருகிறார்கள்.

பதவியில் இல்லாத சரவணனின் படம் வருட வருடம் லிட்டில் இந்தியாவை அலங்கரித்து வருகிறது. நாங்கள் பதவியில் உள்ளோம் எங்களுக்கு அந்த மரியாதை கிடைக்கவில்லை என சிலர் புலம்பி வருகிறார்கள்.

பதவியில் இருக்கும் போது சமுதாயத்திற்கு ஏதாவது பயனுள்ளதை செய்துவிட்டு போங்கையா?
எதையும் செய்யாமல் மரியாதை வேண்டும் என்றால் எப்படி கிடைக்கும் .

முதலில் மக்களுடன் மக்களாக வாழுங்கள். அவர்கள் சேவை செய்யுங்கள்.

பதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் மரியாதை தானாக கிடைக்கும். மக்கள் மனதார மதிப்பார்கள் என டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

கோலாலம்பூர், நவ.11-
மலேசிய அஜித் ரசிகர் மன்றம் (Malaysia Ajith Fan Club) நடத்திய “Ajith Kumar Bikers Gathering” நிகழ்ச்சி 200-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள், 500-க்கும் அதிகமான பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சி, தல அஜித்தின் மோட்டார் சைக்கிள் பந்தய ஆர்வத்தையும், மனிதாபிமான மனப்பான்மையையும் வெளிப்படுத்தியது.

இந்நிகழ்ச்சியின் போது, சமூகப்பணியின் அடையாளமாக அமைப்பினர், மோட்டார் விபத்தில் பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்களுக்கு தலா வெ.500ஐ வழங்கினர்.

மேலும் ஆதரவற்ற இல்லம் ஒன்றுக்கு வெ.500, அதோடு ஒரு மாத உணவுப் பொருட்கள் (வெ.1000 மதிப்பில்) வழங்கினர்.

அஜித் குமார் எடுத்துச் சொல்வது போல, “தன்னம்பிக்கை, ஒழுக்கம், நற்பண்பு” ஆகிய மூன்றையும் இந்நிகழ்ச்சி வெளிப்படுத்தியது.

மலேசிய அஜித் ரசிகர்கள் கழகத்தின் ஏற்பாட்டில், ரசிகர்கள், மோட்டார் சைக்கிளோட்டிகள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவரும் இணைந்து ஒரு அர்த்தமுள்ள நாளை உருவாக்கினர்.

இது வெறும் ரசிகர் இயக்கம் அல்ல, நெஞ்சை தொடும் மனிதாபிமான குடும்பம் என ரசிகர் மன்றத்தின் தலைவர் டேவ் எனும் தேவேந்திரன் தெரிவித்தார்.

ஈப்போ, நவ.6-
தடி எடுத்தவரெல்லாம் தண்டல். பதவி இருக்கும் பொழுது எது வேண்டுமானாலும் பேசலாம் என பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அன்று அம்னோவை குறை கூறுவதை வேலையாக கொண்டிருந்த ஐயா சிவநேசன் இன்று காலத்திற்கும் வாய்ப்புக்கும் ஏற்ப அம்னோவின் நண்பனாகிவுள்ளார் என கோப்பிங் ம.இ.கா தொகுதி தலைவர் ஆர்.மகேந்திரன் தெரிவித்தார்.

ம.இ.கா எந்த கூட்டணியோடு சேருவதை பற்றி சிவநேசன் பேச வேண்டும். எங்களுக்கும் பேராக் மந்திரி புசாருக்கும் இருக்கும் பேச்சு வார்த்தையில் நீங்கள் பேச தேவையில்லை. இது கட்சியின் தனிப்பட்ட விவகாரம்.

இந்த விஷயத்தில் சிவநேசன் அரசியல் செய்ய வேண்டாம்.  நீங்கள் முதலில் மக்கள் ஆதரவை பெற முயற்சி செய்யுங்கள். பேராக் மக்கள் உங்களை புறக்கணிக்க தொடங்கி விட்டீர்கள்.

கடந்த தேர்தலில் சுங்காயில்  தட்டு தடுமாறி போட்டியிட்டது நினைவில்லையா?

இந்தியர்கள் அதிகமாக இருக்கும் தொகுதியில் வரும் தேர்தலில் போட்டியிட உங்களுக்கு தைரியம் உண்டா?

ம.இ.கா கட்சியின் மீது மக்களுக்கு நாளுக்கு நாள் நம்பிக்கை அதிகரித்து வருகிறதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என‌ நன்றாக தெரிகிறது.

போதும் உங்கள் அரசியல் நாடகம். ம.இ.கா வை சீண்டி இலாபம் தேட வேண்டாம் என அவர்  வலிறுத்தினார்.

கோலாலம்பூர், நவ.6-
மலேசியாவின் அதிகாரப்பூர்வ தளபதி விஜய் ரசிகர்கள் அமைப்பான Vijay Fans Official Squad சார்பில், மலேசியத் திரைப்படமான இறுதி ஸ்ட்ரைக் க்கு சிறப்பு திரையரங்க நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்றது.

மலேசியத் திரைப்படங்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி கடந்த திங்கட்கிழமை நடைப்பெற்றது. ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு திரையரங்கை முழுமையாக நிரப்பினர்.

திரைப்படத்தின் நடிகர்கள் மற்றும் படக்குழுவினரும் கலந்து கொண்டு மக்கள் உடன் சேர்ந்து திரைப்படத்தை பார்த்து ரசிகர்களுக்கு இனிய அனுபவம் வழங்கினர்.

இந்த முயற்சிக்கு Pekrawi எனும் சமூக சேவை அமைப்பு ஆதரவு வழங்கியது. சினிமா நட்பு மற்றும் ஒன்றுபட்ட உணர்வின் அடையாளமாக, இந்த நிகழ்வுக்கு மலேசிய அஜித் ரசிகர் மன்றம், மலேசிய சிவகார்த்திகேயன் ரசிகர் மன்றம், மலேசிய சூர்யா ரசிகர் மன்றம், Rahamaniac Malaysia மற்றும் Yuvanisms Malaysia ஆகிய ரசிகர்கள் மன்றங்களும் இணைந்து ஆதரவு வழங்கினர்.

“உள்ளூர் சினிமாவையும் நல்ல உள்ளடக்க படைப்புகளையும் தொடர்ந்து ஆதரிப்பதே எங்கள் நோக்கம். திரை உலக நாயகர்களை தாண்டி, நல்ல சினிமாவிற்காக ரசிகர்கள் ஒன்றுபடும் அழகான தருணம் இது,” என்று அமைப்பினர் தெரிவித்தனர்.

உள்ளூர் கலைஞர்களையும், தரமான படைப்புகளையும் உறுதியாக ஆதரிக்கும் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ளப் போவதாக Vijay Fans Official Squad அறிவித்துள்ளது.

கோலாலம்பூர், நவ.6-
பேராக் மாநில சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாநில அரசாங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு அ. சிவநேசன் அவர்கள் தமிழ் பத்திரிகை ஒன்றில், நவம்பர் 16, 2025 அன்று நடைபெறவுள்ள ம.இ.கா பொதுப் பேரவையில், தேசிய முன்னணி கூட்டணியில் தொடர்ந்து நீடிப்பதா அல்லது வெளியேறுவதா என்ற தமது அரசியல் திசையை ம.இ.கா தீர்மானிக்கும் வரை, பேராக் மாநில முதல்வர் டத்தோ ஸ்ரீ சாராணி மொஹமட் எந்தவொரு புதிய அரசியல் நியமனங்களையும் நிறுத்தி வைத்துள்ளார் என அறிக்கை விடுத்துள்ளார்.

இந்த அறிக்கையானது சிவநேசன் இப்போது தேசிய முன்னணியின் செய்தித் தொடர்பாளராக மாறிவிட்டாரா எனும் சந்தேகத்தினை ஏற்படுத்துகின்றது. ஏதேனும் அரசியல் நியமனங்கள் இருந்தால், அவை மாநில அரசாங்கத்தின் ஒரு அங்கமான தேசிய முன்னணியின் நிலைப்பாட்டின் மூலமே அமையும். அதை விடுத்து, தேசிய முன்னணி அல்லது ம.இ.கா-வின் உள்விவகாரங்களில் சிவநேசன் தலையிடத் தேவையில்லை. பதவிகள் அல்லது அங்கீகாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், ம.இ.கா தொடர்ந்து சமூகத்திற்காக சேவையாற்றும் என பேரா மாநில மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் தியாகேஷ் கணேசன் தெரிவித்தார்.

கடந்த பொதுத் தேர்தலில் ம.இ.கா-தேசிய முன்னணி வேட்பாளர்களின் தோல்வி குறித்தும், வாக்காளர்களின் ஆதரவை இழந்ததாகக் குறித்தும் சிவநேசன் குறிப்பிட்டிருந்தார்.

தேர்தலில் வெற்றி அல்லது தோல்வி என்பது இயல்புதான். வாக்காளர்களின் முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் வாக்காளர்கள் எவ்வாறு பலவிதமான குற்றச்சாட்டுகள், அவதூறுகள், பொய் வாக்குறுதிகள் போன்றவற்றால் குழப்பப்பட்டு, மக்களின் ஆதரவில் மாற்றம் ஏற்பட்டது என்பதை நாங்கள் மறக்கவில்லை.

2018ஆம் ஆண்டு நடைபெற்ற 14வது பொதுத் தேர்தலின் போது, டத்தோஸ்ரீ நஜிப் அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக, தங்களின் பலகால அரசியல் எதிரியான துன் டாக்டர் மகாதீரை ஜசெக ஆதரித்தது. 15வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு, அவர்கள் அம்னோ கட்சியைக் கட்டித் தழுவி அரசாங்கத்தை அமைக்கத் துணிந்தனர்.

முன்னர் திருடன், நாட்டின் கொள்ளையர் என்று அழைக்கப்பட்ட அம்னோ, திடீரென தூய்மையாகி விட்டது. ஜசெகவின் தேர்தல் பாடலான ‘ஹோய் யா ஹோய்’-ஐ மக்கள் எப்படி மறக்க முடியும்?

ஆகவே, கொள்கை மற்றும் போராட்ட வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட ம.இ.கா போன்ற பிற கட்சிகளை விமர்சிக்க சிவநேசன் போன்ற ஜசெக தலைவர்களுக்கு எந்தத் தகுதியும் இல்லை.

சிவநேசன் தன்னையும் தனது கட்சித் தலைவர்களையும் சுய மதிப்பீடு செய்ய வேண்டும். 300,000 இந்தியர்களின் குடியுரிமைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்த வாக்குறுதி எங்கே போனது? இந்திய மாணவர்களுக்கான 2,500 மெட்ரிகுலேஷன் இடங்களின் ஒதுக்கீட்டை ஜசெக மீட்டெடுத்ததா? டோல் கட்டண ஒழிப்பு, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை RM 1.50 போன்ற ஜசெக அரசியல் கூட்டணி அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது?

சிவநேசன் தன்னுடைய வேலையை மட்டும் பார்த்தாலே போதுமானது. ம.இ.கா கட்சியை அடிப்படையாகக் கொண்டு மலிவான விளம்பரங்களைத் தேடக்கூடாது என தியாகேஷ் கூறினார்.

கிள்ளான், நவ 1-
நாடு முழுவதும் உள்ள வீடுகளை ஒளியின் திருநாள் ஒளிரச் செய்யும் வேளையில், மெக்டொனால்ட்ஸ் மலேசியா (McDonald’s Malaysia) தனது மெக்டி தீபாவளி திறந்த இல்லத்தை 14 இடங்களில் ஒற்றுமையுடன் மகிழ்ச்சி உணர்வில் ஒன்றிணைத்தது. சீனப் புத்தாண்டு, ஹரி ராயா, கவாய் மற்றும் காமாடன் ஆகியவற்றிற்கான அதன் முந்தைய பண்டிகை திறந்த இல்லங்களின் வெற்றியைக் கட்டியெழுப்ப, இந்த நாடு தழுவிய முயற்சி, அனைத்து தரப்பு மலேசியர்களையும் கொண்டாட்டம் மற்றும் சமூக உணர்வில் ஒன்றிணைக்கும் பிராண்டின் (McDonald’s) பாரம்பரியத்தைத் தொடர்கிறது.

அக்டோபர் 24 அன்று கிள்ளான் பண்டார் புத்திரி கால்டெக்ஸ்லில் அமைந்துள்ள மெக்டொனால்ட்ஸ் (McDonald’s Caltex Bandar Puteri Klang Drive Thru) தொடங்கி, மெக்டொனால்ட்ஸ் பத்து கேவ்ஸ் (McDonald’s Batu Caves Drive Thru),  மெக்டொனால்ட்ஸ் கிரீன்லேன் (McDonald’s Greenlane Drive Thru), மற்றும் மெக்டொனால்ட்ஸ் ஜாலான் ரெக்கோ (McDonald’s Jalan Reko) ஆகியவற்றில் ஒரே நேரத்தில் திறந்த இல்லங்களுடன், பின்னர் நாடு முழுவதும் உள்ள மற்ற இடங்களிலும் நடைபெற்றது.

ஒவ்வொரு கொண்டாட்டத்திலும் பண்டிகை நடவடிக்கைகள், வேடிக்கை நிறைந்த விளையாட்டுகள் மற்றும் ஆப்பிள் பைஸ் (Apple Pies) மற்றும் ஒரு கோகோ கோலா கேனுடன் முழுமையான 1,500 ஸ்பைசி சிக்கன் (கார கோழி / Spicy Chicken) மெக்டீலக்ஸ் உணவுகள் விநியோகம் செய்யப்பட்டன. நாடு முழுவதும் 21,000 க்கும் மேற்பட்ட உணவுகள் பகிரப்பட்டன.

கிள்ளான் பண்டார் புத்திரி கால்டெக்ஸ் மெக்டொனால்ட்ஸ்  (McDonald’s Caltex Bandar Puteri Klang Drive Thru) நடைபெற்ற பிரமாண்டமான கொண்டாட்டம் முக்கிய நிகழ்வாக விளங்கியது. பாரம்பரிய மற்றும் நவீன கலாச்சார நிகழ்ச்சிகளின் அற்புதமான வரிசை மூலம் மலேசியாவின் வளமான பன்முகத்தன்மையை வெளிப்படுத்தியது.

மேலும் சாந்தேஷ், யோகி பி, பாலன் காஷ் மற்றும் அமோஸ் பால் போன்ற பிரபலமான உள்ளூர் கலைஞர்களின் கூட்டத்தை மகிழ்விக்கும் தோற்றங்களும் இதில் அடங்கும்.

"இந்த ஆண்டு எங்கள் திறந்த தீபாவளி கொண்டாட்டம் வெறும் ஒரு பண்டிகை மட்டுமல்ல – இது மலேசியாவை உண்மையிலேயே சிறப்பானதாக்குவதைக் கொண்டாடும் தருணத்தைப் பற்றியது: நமது பன்முகத்தன்மை, ஒருமைப்பாடு மற்றும் ஒருங்கிணைந்த ஆனந்தம்," என்று மெக்டொனால்ட்ஸ் மலேசியாவின் நிர்வாக இயக்குநரும் உள்ளூர் செயல்பாட்டு கூட்டாளருமான டத்தோ ஹாஜி அஸ்மிர் ஜாஃபர் கூறினார்.

"மலேசியர்களுடன் இணைந்து வளர்ந்த ஒரு பிராண்டாக, நம் தேசத்தை உருவாக்கும் ஒவ்வொரு கலாச்சாரத்தையும் சமூகத்தையும் கொண்டாடுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.

தீபாவளி என்பது ஒளி, கருணை மற்றும் ஒற்றுமை எவ்வாறு நம் அனைவரையும் ஒரே குடும்பமாக நெருக்கமாகக் கொண்டுவரும் என்பதற்கான ஒரு அற்புதமான நினைவூட்டலாகும்."

கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மெக்டொனால்ட்ஸ் மலேசியா மற்றும் ரொனால்ட் மெக்டொனால்ட்ஸ் ஹவுஸ் அறக்கட்டளைகள் (RMHC Malaysia) ஆகியவை நாடு முழுவதும் உள்ள 120 அனாதை இல்லங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு பிறந்தநாள் விழாக்களை நடத்துகின்றன, இது ஒவ்வொரு குழந்தையும் மகிழ்ச்சியும் சேர்ந்துணர்வும் கொண்ட ஒரு தருணத்திற்கு உரியவனென்பதற்கான நம்பிக்கையை வலுப்படுத்துகிறது.

“மெக்டொனால்ட்ஸ் மலேசியாவில், நாங்கள் வெறும் உணவகம் மட்டுமல்ல - மக்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களை இணைக்கும் இடமாக இருக்கிறோம்," என்று டத்தோ ஹாஜி அஸ்மிர் மேலும் கூறினார்.

"இந்த நாடு தழுவிய கொண்டாட்டத்தை பல குடும்பங்களுக்கு அர்த்தமுள்ளதாக மாற்றிய எங்கள் குழு உறுப்பினர்கள், கூட்டாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்."

அதன் தீபாவளி திறந்த இல்லத்தின் மூலம், மெக்டொனால்ட்ஸ் மலேசியா ஒரு சமூகத்தின் வளர்ச்சியில் பங்காற்றும் கூட்டாளராக அதன் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தியுள்ளது. மலேசியாவின் வளமான பன்முகத்தன்மையைக் கொண்டாடுகிறது மற்றும் அனைவருக்கும் அக்கறை மற்றும் இரக்கத்தை ஆதரிக்கிறது.

தீபாவளி பண்டிகையைத் தாண்டி, நாடு முழுவதும் உள்ள 370 க்கும் மேற்பட்ட உணவகங்களின் வலையமைப்பால் ஆண்டுதோறும் நடத்தப்படும் 10,000 க்கும் மேற்பட்ட சமூக நடவடிக்கைகள் மூலம் மெக்டொனால்ட்ஸ் மலேசியா ஒரு சமூக  பங்காளியாக தனது பங்கைத் தொடர்ந்து வெளிப்படுத்துகிறது. உள்ளூர் ஈடுபாடுகள் முதல் நலன்புரி இல்லங்கள், பள்ளிகள் மற்றும் அரசு நிறுவனங்களுடனான ஒத்துழைப்புகள் வரை, இந்த முயற்சிகள் மெக்டொனால்ட்ஸ் மலேசியாவின் அக்கறை, உள்ளடக்கம் மற்றும் சமூகப் பொறுப்பு ஆகியவற்றில் தொடர்ந்து கொண்டிருக்கும் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன.

சிகாமாட், அக்.30-
பத்து அன்னாம் பகுதியில் நடைபெற்ற சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியின் மடானி தீபாவளி பொது உபசரிப்பு நிகழ்ச்சியில் அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் யுனேஸ்வரன் உயர்க்கல்வியைத் தொடரவிற்கும் மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கினார்.

உள்ளூர் மக்களுடன் தீபாவளி பெருநாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடியது மட்டுமல்லாமல் உயர்க்கல்வி பயில நிதி உதவி தேவைப்படும் எஸ்பிஎம், எஸ்டிபிஎம் தேர்வுகளில் சிறந்த தேர்ச்சிப் பெற்ற சுமார் 12 மாணவர்களுக்கு யுனேஸ்வரன் நிதியுதவி வழங்கினார்.

கல்விக்குத் தான் எப்பொழுதும் முன்னுரிமை வழங்குவதாகவும் சமூக, இன வேறுபாடு இல்லாமல் அனைவரும் கல்வி கற்பது அவசியம் என்றும் அவர் கூறினார்.

இம்மாணவர்கள் தங்களது கல்வியில் தொடர்ந்து கவனம் செலுத்தி, பெற்றோர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் சிறந்த வெற்றிகளை அடைய வேண்டும் என்று தாம் மனமார வாழ்த்துவதாகவும்  அவர் நெகிழ்ச்சியுடன் தனது சமூக ஊடகப்பதிவில் தெரிவித்தார்.

கோலாலம்பூர், அக். 29-
47 ஆவது ஆசியான் உச்சிமாநாடு குறித்து பெரிகாத்தான் நேஷனல்  தலைவர்கள் விமர்சனங்கள் செய்து வெளியிட்டுள்ள பொறுப்பற்ற குற்றச்சாட்டு அறிக்கைகளை தாம் கண்டிப்பதாக பிரதமர் துறை அமைச்சரின் அரசியல் செயலாளரும், கெஅடிலான் கட்சியின் மத்திய தலைமைக் குழு உறுப்பினருமான சிவமலர் கனபதி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், அவர்கள் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் நமது நாட்டின் மரியாதையையும் மதிப்பையும் பாதிக்கும் வகையில் கூறப்பட்டவையாகும் என்றும், நாட்டின் நற்பெயரை களங்கம் செய்யும் அளவிற்கு குறுகிய அரசியல் நலனுக்காக விளையாடும் செயல் இதுவாகும் என்றும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.

இந்த மாநாடிற்கு அமெரிக்க ஜனாதிபதி உட்பட அனைத்து நாடுகளின்  தலைவர்களும் மலேசியாவிற்கு வருகை தந்தனர். அதனால்  நம் நாடு மற்ற தலைவர்களின் சிந்தனையை ஆதரித்து அடிபணிகிறது என்பதற்கு பொருளல்ல.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கீழ் செயல்படும் தலைமைத்துவம் திறமையான மற்றும் முதிர்ந்த அரசியல்தன்மையை வெளிப்படுத்துவதாக அமைகிறது என அவர் கூறினார்.

அந்த வகையில் சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவி வரும் நம் பிரதமர் அமெரிக்க அதிபருடன் நடனம் ஆடும் காணொளி  குறித்தும் சிவமலர்  விளக்கமளித்துள்ளார்.

அது வெறும் மலேசிய கலாச்சார விருந்தோம்பல் நிகழ்வின் ஒரு பகுதி எனவும், பிரதமர் நாட்டின் கலாச்சாரத்தையும் விருந்தோம்பலையும் உலகுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் குறித்த நிகழ்வில் குறுகிய நேரம் பங்கேற்கும் வகையில் அந்நிகழ்வு ஏற்ப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.

அந்த நிகழ்வு அவமானமானது என சித்தரிப்பது, மலேசிய மக்களுக்கே அவமரியாதை செய்வதற்கு சமம் எனவும், அந்த வகையில் நம்  நாட்டை பிரதிநிதித்துவப்படுத்திய கலைஞர்கள் மற்றும் கலாச்சார குழுவினரின் அர்ப்பணிப்பை மதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த முறை நடைபெற்ற 47ஆவது ஆசியான் உச்சிமாநாடு மலேசியாவின் பொருளாதார போட்டித்திறனை மேலும் வலுப்படுத்தியது, மற்றும் சமநிலை பொருளாதாரக் கொள்கைகளின் மூலம் நாட்டின் பல்வேறு துறைகளின் வளர்ச்சியை உறுதிப்படுத்தியது என்றார் அவர்.

இந்த மாநாட்டின் வழி மலேசியா தனது பொருளாதார இறையாண்மையை தியாகம் செய்தது என்ற பெரிகாத்தான் நேஷனல் தலைவர்கள் வைத்துள்ள குற்றச்சாட்டு முற்றிலும் அரசியல் பிரயோஜனத்துக்காக உருவாக்கப்பட்ட பொய்யான குற்றச்சாட்டு எனவும், அது மக்களிடையே பயத்தை உருவாக்கி முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்க முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அது மட்டுமின்றி ஆசியான் உச்சிமாநாடு மலேசியாவின் திறமை, பாதுகாப்பு, பங்கேற்பு மற்றும் சரியான ஒழுங்கமைப்பை வெளிப்படுத்திய சிறந்த சான்றாகும். இதுபோன்ற நிகழ்வுகளில் சிறிய தொழில்நுட்ப தவறுகளை அரசியல் ஆயுதமாக்கும் செயல்கள் அறிவில்லாத குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட செயல்கள் என்றார்.

இன்றைய அரசு மலேசியாவின் மரியாதைக்குரிய மற்றும் தார்மீகமான வெளிநாட்டு கொள்கை மரபை தொடர்ந்து பேணிக்காக்கும் அரசாகும். ஆனால் சிலர் தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக நாட்டின் இறையாண்மையை அவமதிக்கிறார்கள். இது மக்களுக்கு செய்யும் துரோகம் என்று அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

-காளிதாசன் இளங்கோவன்

கொல்லைக்குப் போனாலும் கூட்டு ஆகாதென்பார்கள்; இத்தகைய மூத்த மொழி, நம்பிக்கை-நாணயம்-உண்மை-ஓர்மை-நேர்மை உள்ளிட்ட பண்பு நலனைத் தொலைத்தவர்களை மையமாகக் கொண்டு உருவான அனுபவ மொழியாக இருக்கலாம்.

அதேவேளை, உயிர் கொடுப்பான் தோழன் என்னும் நட்புமொழிக்கு இலக்கணமாக இரு நண்பர்கள் விளங்குவதைப் பார்த்து, வியப்பாகத்தான் இருக்கிறது.

சிலாங்கூர் மாநிலத்தில், பத்துமலை-செலாயாங் வட்டாரத்தில் டத்தோஸ்ரீ அரி,  பாபு என்னும் இளைஞர்கள் இருவரும் பள்ளி நாட்கள் முதலே நண்பர்களாக அறிமுகமாகி, உறவுக்கும் மேலான அத்தகைய நட்பை தொடர்ந்து பேணிக் காத்து வந்துள்ளனர்.

காலவோட்டத்தில், இவ்விருவரும் வர்த்தகத்திலும் தங்களின் கலங்கமில்லா நட்பை நிலைநாட்டி உள்ளனர்.

செலாயாங் மருத்துவ மனைக்கு எதிரேவுள்ள ‘கெப்பிட்டல் செலாயாங் ஹால்’ என்னும்  வர்த்தக அரங்கத்தைப் பராமரிக்கும் ஹரி, Oh Yeah Banana Leaf’  என்னும் வாழை இலை உணவகத்தை நடத்திவரும் பாபு இருவரும் இணைந்து ‘Oh Yeah  Fressh Mart’  என்னும் பந்நோக்கு வர்த்தக மையத்தை கூட்டாக உருவாக்கி அதை வெற்றிகரமாகவும் நடத்தியும் வருகின்றனர்.

இந்தச் சுழலில், பாபுவின் பிறந்த நாளை முன்னிட்டு,  அவருக்குத் தெரியாமல் அவரின் அன்புத் தோழர் டத்தோஸ்ரீ அரி கமுக்கமாக பிறந்த நாள் விழாவை ஏற்பாடு செய்து, பெரிய கணையாழியையும் அணிவித்து, உற்ற தோழரை நட்பு வட்டத்தில் இன்ப வெள்ளத்தில் திளைக்க வைத்திருக்கிறார்.

இந்திய இளைய சமுதாயத்தில் நல்ல வண்ணம் வாழ்வதுடன் எத்தனையோ பேருக்கு வேலைவாய்ப்பும் அளித்து நட்பையும் சுற்றத்தையும் பேணிவரும் டத்தோஸ்ரீ அரியும் பாபுவும் கடின உழைப்புக்கும் தாழாத முனைப்புக்கும் அயராத உழைப்புக்கு சொந்தக்காரர்கள்;

இவற்றினும் மேலாக, கலங்கமில்லா நட்புக்கு இலக்கணமானவர்கள்!

கோலாலம்பூர்,அக்.27-
சினிமாவில் மட்டும் இன்றி கார் பந்தயத்திலும் அதே போல மோட்டார் சைக்கிள் பந்தயத்திலும் மிகவும் பேர் போனவர் நடிகர் அஜித் குமார். இவரின் பெயரால் குறிப்பாக இளைஞர்களுக்கு நற்செய்திகளை ஆற்றி வருகின்றது மலேசியாவின் முன்னணி அஜித் குமார் ரசிகர் மன்றம்.

அச்சேவையில் ஒன்றாக தான் வரும் நவம்பர் 8ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள அஜித் குமார் ரசிகர்கள் ஒன்று கூடும் மாபெரும் நிகழ்ச்சியை தாங்கள் ஏற்பாடு செய்திருப்பதாக கூறுகிறார் மலேசியா அஜித்குமார் ரசிகர் மன்றத்தின் தலைவர் தேவேந்திரன் பன்னீர்செல்வம்.

இந்த நிகழ்ச்சிக்கு அஜித்குமார் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் விழா என பெயரிடப்பட்டுள்ளது. 100 சிசி மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் இந்த நிகழ்ச்சியின் போது ஒன்று கூடுவர் என அவர் தெரிவித்தார்.

நடிகர் அஜித்குமார் போலவே மோட்டார் சைக்கிள் ஓட்டுவதில் நாட்டம் உள்ள பல இளைஞர்கள் இதில் பங்கேற்பார்கள் எனறார் அவர்.

இதன் முக்கிய நோக்கமே இம்மாதிரியான நிகழ்ச்சியின் வாயிலாக இளைஞர்களை சரியான பாதையில் கொண்டு செல்வதுதான். இது ஒரு நல்ல விஷயமாக கருதப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் உணவு விநியோகம் செயவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய நினைக்கின்றோம். அதே சமயம் மோட்டார் சைக்கிள் விபத்துகளில் உயிரிழந்த சில இளைஞர்களின் குடும்பத்தினருக்கு சிறிய உதவிகளை வழங்கவும் எண்ணம் கொண்டுள்ளோம் என டேவ் என்ற தேவேந்திரன் விளக்கம் அளித்தார்.

வரும் நவம்பர் 8ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் Gelanggang Petanque batu 1, Taman Mewah, Port Dickson, Negeri Sembilan இந்நிகழ்ச்சி நடைபெறும். விழாவில் பங்கேற்பதற்கு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் முன்பதிவு பதிவு செய்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் இலவசமாக நிகழ்ச்சியை கண்டு களிக்கலாம்.

மேல் விவரங்களுக்கு 012-3607648 என்ற எண்ணுடன் தொடர்புக் கொள்ளலாம்.

சிலாங்கூர், குவாங் பட்டணத்தில் உள்ள கம்போங்  பூங்கா ராயா குடியிருப்பில் வசிக்கும் மூதாட்டி திருமதி தங்கம்மாள், தன் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை தன் குடும்பத்தினர் புடைசூழ கோலாகலமாகக் கொண்டாடினார்.

மூன்று மகன்கள், 6 மகள்கள் என ஒன்பது மக்களைப் பெற்ற இந்த மகராசி, 35 பெயரப் பிள்ளைகள், 34 கொள்ளுப் பெயரப் பிள்ளைகள், உறவினர், நட்பினர் என பல நூற்றுக் கணக்கானோர் அணி திரள, தங்கம்மாள்  கொண்டாடிய விழா நேற்று செலாயாங் கெப்பிட்டல் வர்த்தக வளகத்தில் நடைப்பெற்றது.

தமிழ் நாடு, நாகப்பட்டிணத்தில் 1925, அக்டோபர் 25-ஆம் நாள் பிறந்த இவர், சிறுமியாக இருந்தபொழுது தன் தந்தை பெரியான் மற்றும் தாயாருடன் கப்பல் மூலம் அன்றைய மலாயாவிற்கு வந்துள்ளார்.

அப்பொழுது, சிங்கப்பூர் தனி நாடாக இல்லாத நிலையில், நேரடியாக சிங்கப்பூரில் கொஞ்ச காலம் வாழ்ந்த நிலையில், சின்னையா என்பவரை மணம் முடித்தபின், பத்தாங் பெர்சுந்தை சுங்கை ரம்பைத் தோட்டத்திற்கு வந்து இரப்பர்த் தோட்டத்தில் பணி புரிந்திருக்கிறார்.

இந்தக் காலக்கட்டத்தில் தன் பிள்ளைகள் ஒவ்வொருவராக திருமணம் செய்துவைத்து, அதன் அடிப்படையில் அதிகமான மறுமக்கள் ஏராளமான பேர-கொள்ளுப்பேரப் பிள்ளைகளுடன் சிறப்பாக வாழ்ந்து வருகிறார் தங்கம்மா.

இவரின் கணவர் சின்னையா, 34 ஆண்டுகளுக்கு முன்னரே காலமாகி விட்டார்.

தற்பொழுது, இரண்டாவது மகன் இராமன்-சாவித்திரி இணையரின் அரவணைப்பிலும் பாதுகாப்பிலும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்துவரும் தங்கம்மா, தனியாகக் குளித்து, தனியாக உடுத்தி, தானாக உண்ணும் ஆரோக்கிய நிலையுடன் உள்ளார்.

எந்த மருந்தும் சாப்பிடாத தங்கம்மாளுக்கு எப்போதும்  பிடித்த சுவை பானங்கள் நெஸ்கஃபே, மைலோ, தேநீர் போன்றவை ஆகும் என்று தங்கம்மாவின் ஐந்தாவது பிள்ளையும் இரண்டாவது மகளுமான சகுந்தலா மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.

இடையில் 95-ஆவது வயதில் தங்கம்மாவிற்கு குடல் அறுவைச் சிகிச்சை சுங்க பூலோ மருத்துவ மனையில் மேற்கொள்ளப்பட்டபோது, தங்களை கொஞ்சம் பயமுறுத்தி விட்டதாக, இந்த நூற்றாண்டு விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்த முகமது தேவா கூறினார்.

செர்டாங்கில் வசிக்கும் மூன்றாவது பிள்ளையும் முதல் மகளுமான சகுந்தராணியின் மகன்தான் இந்த தேவா.

உறுதியான பற்களைக் கொண்டிருக்கு நூற்றாண்டு மூதாட்டியான தங்கம்மாவிற்கு பிடித்த நிறம் நீல் வண்ணம் என்று சகுத்தலா தெரிவித்தார்.

பிரிக்பீல்ட்ஸ், அக் 27-
லிட்டில் இந்தியா பிரிக்பீல்ட்ஸ் தொடங்கி 15 ஆண்டுகள் ஆகின்றன. மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் அவர்கள் கூட்டரசுப் பிரதேச துணையமைச்சராக இருந்த பொழுது, 2010 அக்டோபர் 27ஆம் தேதி பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா கோலாகலமாகத் திறக்கப்பட்டது. நமது பாரம்பரியத்தின் அடையாளமாக
இந்த லிட்டில் இந்தியா  உருவாக்கப்பட்டது.

முன்னாள்  பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் அப்துல் ரசாக், அப்போதைய இந்தியப் பிரதமரும் பொருளாதார மேதையுமான மன்மோகன் சிங் ஆகியோரின் முன்னிலையில் லிட்டல் இந்தியா கோலாகலமாகத் திறக்கப்பட்டதை நாம் அறிவோம்.
இது மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான நல்லுறவின் அடையாளமாகவும் அமைந்தது.

இந்தியர்களுக்கென ஒரு தளம். சாலையின் இரு மருங்கிலும் நமது வணிக மையங்கள். இந்தியர்களின் கலையம்சங்களுடன், பிரதான நுழைவாயில், ஒவ்வொரு பக்கமும் நமது கலைகள் நிறைந்திருக்க வேண்டும் என்று பார்த்துப் பார்த்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டார் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் அவர்கள். இன்று 15 ஆண்டுகள் கடந்து விட்டன. எதிர்பார்த்ததைவிட மிக அற்புதமாக வளர்ந்து இந்தியர்களின் பிரதான வணிக மையமாக உருவாகியுள்ளது.

ஒரு மாமாங்கம் கடந்த பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா இந்தியர்களின் வணிக மையமாக உருவெடுத்திருப்பதில் நமக்கெல்லாம் பெருமையே. நூற்றுக்கணக்கான வியாபாரிகள் உருவெடுத்துள்ளதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.  வரலாற்று ரீதியாக, பிரிக்பீல்ட்ஸ் என்பது உழைப்பு, தைரியத்தால் வடிவமைக்கப்பட்ட ஒரு வர்த்தக நகரமாகும். எண்ணிலடங்கா உணவகங்கள், ஆடை, ஆபரணக் கடைகள், தங்கம் ஜொலிக்கும் நகைக்கடைகள், ஆலயங்களின் தரிசனம், கலாச்சார மையங்கள் என இந்தியர்களின் ஒட்டு மொத்த வாழ்க்கையைச் சித்தரிக்கும் மையமாக பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா நமக்கான தளமாக அமைந்துள்ளது.

டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் அவர்களின் முயற்சியில், திட்டத்தில் உருவான 'லிட்டில் இந்தியா பிரிக்பீல்ட்ஸ்' இன்று 15 வருடங்களைக் கடந்து கம்பீரமாகக் காட்சியளிப்பது நமக்கெல்லாம் பெருமையே.

கோலாலம்பூர்,அக். 26-
பள்ளி என்பது கல்வி மற்றும் நற்பண்புகளை வளர்க்கும் இடமாக இருக்க வேண்டும், மது, புகையிலை அல்லது வேப் போன்ற தீய பழக்கங்களின் விளம்பர மேடையாக இருக்கக்கூடாது என்று மஇகா பிரிகேட் தெரிவித்துள்ளது.

அமைச்சரவை சீனப் பள்ளி மண்டபங்களில் மது பரிமாற அனுமதிக்கும் தற்போதைய வழிகாட்டுதலைத் தொடர தீர்மானித்ததை  மஇகா பிரிகேட் கடுமையாக எதிர்த்து, அந்த முடிவு நாட்டின் சமூக மற்றும் ஒழுக்க மதிப்புகளுடன் பொருத்தமற்றது என தெரிவித்தது.

இளம் தலைமுறையை சிறு வயதிலிருந்தே நன்னெறி, ஒழுக்கம் மற்றும் நேர்மையுடன் வளர்க்க வேண்டியது மிக முக்கியம் என அது வலியுறுத்தியுள்ளது.

பள்ளிகள் என்பது குணநல வளர்ச்சியின் தூணாகும். அங்கு மது, புகையிலை, வேப் போன்றவற்றுடன் தொடர்புடைய எந்த நிகழ்வுகளும் அல்லது பிராண்டுகளும் இடம்பெறுவது கல்வி நிலையத்தின் மதிப்பை களங்கப்படுத்தும். நிகழ்வு பள்ளி நேரத்திற்கு வெளியே நடந்தாலும், அதன் தாக்கம் மாணவர்களின் மனநிலைக்கும், பள்ளியின் மரியாதைக்கும் கேடு விளைவிக்கும்.

“Corporate Social Responsibility (CSR)” என்ற பெயரில் மது நிறுவனங்களின் பங்களிப்புகளை ஏற்குவது ஒழுக்க ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அத்தகைய CSR உதவிகள், சமூக நலனுக்கே திசைதிருப்பப்பட வேண்டும் எனவும் தெரிவித்தது.

கல்வி நிறுவனங்கள் முழுமையாக “மது, புகை, வேப் ஆகியசை தடை செய்யப்பட்ட பகுதிகளாக தொடர வேண்டிய அவசியம் இருப்பதாகவும், கல்வி அமைச்சு தற்போதைய வழிகாட்டுதலை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அது வழியுறுத்தியது.

அமைப்பு மேலும் குற்றமற்ற தலைமுறை (Generasi Anti Jenayah) இயக்கத்தின் கீழ், பள்ளி நிர்வாகிகள், பெற்றோர்-ஆசிரியர் சங்கம் (PIBG), அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் மற்றும் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து இளைஞர்களை தீய வழக்கங்களிலிருந்து பாதுகாக்கச் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது.

ஒழுக்கமிக்க, சுத்தமான, உயர்ந்த மதிப்புகளைக் கொண்ட இளைஞர்களே நம் நாட்டின் எதிர்காலம்,” என்று மஇகா பிரிகேட்டின் தலைவர் எண்ட்ரு டேவிட் தனது அறிக்கையில் தெரிவித்து கொண்டார்.

கோலாலம்பூர்,அக்.24-
கெடாவில் சூராவ், பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி சத்தத்திற்கான புதிய விதிமுறைகளை மஇகா வரவேற்கிறது என்று மஇகா தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ ஏ.கே. ராமலிங்கம் கூறினார்.

கெடா மாநில இஸ்லாமிய மத விவகாரத் துறையின் பள்ளிவாசல், சூராவ் மேலாண்மை பிரிவு புதிய வழிக்காட்டலை வெளியிட்டுள்ளது.

அதாவது மாநிலத்தில் உள்ள பள்ளிவாசல்கள், சூராவ்களில் ஒலிபெருக்கியைப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதலை அப்பிரிவு வெளியிட்டுள்ளது.

சட்ட விதிமுறைகள், சமூகத் தேவைகளுக்கு இணங்க பள்ளிவாசல்கள், சூராவ் ஒலிபெருக்கிகளின் சத்தத்ததை, அதன் பயன்பாட்டை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இது சுற்றியுள்ள
குடியிருப்பாளர்களுக்கு தொந்தரவு ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கில் புதிய விதிமுறைகள் அமலுக்கு வரவுள்ளது.

மேலும் இஸ்லாமிய போதனைகள் ஞானத்துடன் தெரிவிக்கப்பட வேண்டும்.
மேலும் சுற்றியுள்ள சமூகத்திற்கு இடையூறு விளைவிக்கக் கூடாது. ஒலியின் அளவு பாதுகாப்பாக இருக்க வேண்டும்.  

வெளிப்புற ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவது தொழுகைக்கான அழைப்பு போன்ற முதன்மை மத நோக்கங்களுக்காக மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. பொது சொற்பொழிவுகளுக்கு அல்ல என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் இந்த விதிமுறை அமலுக்கு வரவுள்ளது.

கெடா மாநில இஸ்லாமிய மத விவகாரத் துறையின் பள்ளிவாசல், சூராவ் மேலாண்மை பிரிவின் இந்த வழிகாட்டுதல்களை மஇகா முழுமையாக மதிக்கிறது.

அதே வேளையில் மாநிலத்தில் வாழும் மற்ற இன மக்களையும் கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மற்ற இன மக்களின் உரிமையையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மஇகா கருதுகிறது.

ஆக பல்லின மக்களை கொண்டுள்ள மலேசியாவின் அனைவரும் அடுத்தவரின் இனம், மதம், கலை, கலாச்சாரத்திற்கு உரிய மதிப்புகளை வழங்க வேண்டும்.

இவ்வேளையில் கெடா மாநில அரசுக்கும் கெடா மாநில இஸ்லாமிய மத விவகாரத் துறையின் பள்ளிவாசல், சூராவ் மேலாண்மை பிரிவுக்கும் மஇகா நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது என்று டத்தோ ராமலிங்கம் கூறினார்.

கோலாலம்பூர், அக்.24-
நேற்று நாடாளுமன்றத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சீன பள்ளி மண்டபத்தில் மது விருந்துகளுக்கு அரசாங்கம் தடை விதிப்பதாக ஒரு அறிவிப்பை செய்தார்.

உடனே அந்த சமூகம் பொங்கி எழுந்து அவர்களது எதிர்ப்பை வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில்
டி.ஏ.பி - எம்.சி.ஏ  தங்களது எதிர்ப்பை கூறுயுள்ளனர்.

கல்வியை முன்னிறுத்தி  அந்த வடிவத்தில் டத்தோஸ்ரீ அன்வார் எங்கள் முறைகளில் அடக்குமுறை காட்ட நினைக்கிறார். பாஸ் கட்சியின் ஆட்சியின் போது கூட பாஸ் இப்படிப்பட்ட விதிகளை சீன பள்ளிகள் மீது கொண்டு வரவில்லை.

ஆனால் டத்தோஸ்ரீ அன்வாரின் இந்த  செயல் எப்படிப்பட்ட  பின் விளைவை கொடுக்கும்  என்பதை அன்வாரின் ஆட்சியை மிரட்டி பார்க்கும் விதமாக லிம் குவான் எங் ஒரு எச்சரிக்கையை விடுத்தார்.

அன்வாரின் இந்த முடிவு தேன் கூட்டில் கையை விடுவதற்கு சமம். செய்தால் விளைவு எப்படி இருக்கும் என அரசியல் ரீதியில் லிம் குவான் எங் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

டத்தோஸ்ரீ  அன்வாரின் இந்த ஆட்சிக்கு சீன சமுதாயம் பெரிய அளவில் பங்கு வகித்துள்ளது. இந்த பிரச்சினையில் அன்வார் அடம்பிடித்தால் சீன சமுதாயம் அவருக்கு எதிர்ப்பாக திரும்பும் காரணம் சீன மண்டபங்களின் வருமானம் பெரிய அளவில் அந்த சமுதாயத்தின் சமூக பணிக்கு பயன்படுத்தப் படுகிறது.

அடிமடியில் கையை வைத்தால் அது பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தும். அதனால் சீன சமூகமும் அரசியல் தலைவர்களும் ஆரம்ப கட்டத்திலேயே எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

இந்த அரசாங்கத்தில் மிக பெரிய அளவில் எம்.பிகளை வைத்துள்ள டி.ஏ.பி கட்சி,  தேன் கூட்டில் கையை விடாதே என லிம் குவான் எங்  மூலம் ஒரு ஓலையை அனுப்ப ஆடி போனது அன்வாரின் அமைச்சரவை.

இன்று தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஃபாமி ஃபட்சில் கொடுத்த அறிக்கையில் ,இன்று நடத்த அமைச்சரவை கூட்டத்தில் பழைய நடைமுறையை பயன்படுத்த அமைச்சரவை முடிவு செய்து உள்ளதாகவும்  அதன் அடிப்படையில் சீன பள்ளி மண்டபத்தில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் மது விநியோகத்திற்கு தடை இல்லை எனவும்  கூறியுள்ளார்.

நேற்று பிரதமர் அறிவித்து இன்று அந்த பதில் U-TURN செய்யப்பட்டதற்கு காரணம் லிம் கொடுத்த எச்சரிக்கையா? அல்லது சீன சமுதாயம் கொடுத்த அழுத்தமா?

எது எப்படியோ இன்றைய அமைச்சரவையில்  சீன சமுதாயம் தங்கள் மண்டபத்தில் விதிமுறை என்ற பெயரில் நடக்கவிருந்த திணிப்பை நிறுத்தியுள்ளனர் என சமுகவலைதள வாசிகள் வட்டாரத்தில் பேசிக் கொண்டு வருகின்றனர்.

அரசியலில் யார் குடிமி யார் கையில் என்பது சில பிரச்சினைகள் ஏற்படும்போதுதான் தெரிகிறது.

செய்தி : வெற்றி விக்டர்

கோலாலம்பூர், அக். 24:
வாங்சா மாஜு மற்றும் செத்தியாவாங்சா பொதுபணி நலச்சங்கம் சார்பில் டானாவ் கோத்தா பகுதியில் தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது.

கடந்த அக்டோபர் 18ஆம் தேதி பிற்பகல் 12 மணிக்கு பிலோக் E அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 100க்கும் மேற்ப்பட்ட ஆதரவற்ற குழந்தைகள், பார்வையற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் தீபாவளி அன்பளிப்புகளுடன் கூடிய சுவையான உணவு விருந்தும் வழங்கப்பட்டதோடு, மகிழ்ச்சியூட்டும் கலாச்சார நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன என பொதுபணி நலச்சங்கத் தலைவர் வின்சன்ட் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியின் நோக்கம், தீபாவளி பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்பதே. ஆதரவற்றோரும், மாற்றுத் திறனாளிகளும் மகிழ்ச்சியுடன் தீபாவளியை கொண்டாடி மகிழ்வதில் எந்த குறையும் இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது என்றார் அவர்.

மேலும், இனி வரும் காலங்களிலும் இதுபோன்ற நற்பணிகளை தொடர்ந்து செய்ய நாங்கள் உறுதியாக உள்ளோம். வாங்சா மாஜு மற்றும் செத்தியாவாங்சா பொதுபணி நலச்சங்கம் மக்களின் நலனுக்காக எப்போதும் செயலில் இருக்கும் என்றும் தலைவர் வின்சன்ட் கூறினார்.

இருப்பதை இல்லாதவர்களுடன் பகிர்ந்து தீபத் திருநாளை கொண்டாடுவோம்!!
-டத்தோ டி.மோகன்

கோலாலம்பூர், அக்.19-
இந்த தீபாவளியை நாம் அனைவரும் மகிழ்ச்சியாக வரவேற்று குடும்பத்தாருடனும் உற்றார் உறவினர்களுடன் கொண்டாட வேண்டும் என டத்தோ டி.மோகன் தெரிவித்தார்.

அதே நேரத்தில் பாதுகாப்பான முறையிலும் சிக்கனமான முறையிலும் இந்த தீபாவளியை நாம் கொண்டாட வேண்டும்.

நம்மிடம் இருப்பதை இல்லாதவர்களுடன் பகிர்ந்து, ஒருவருக்கொருவர் கைகோர்த்து இந்த தீபாவளியை கொண்டாடுவோம் என டத்தோ டி.மோகன் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

குடும்பத்துடன் ஒற்றுமையாக தீபத் திருநாளை கொண்டாடி மகிழ்வோம்!

கோலாலம்பூர்,அக்.19-
தீபத் திருநாளை வரவேற்கும் வகையில் நாம் அனைவரும் குடும்பத்தினருடன் ஒற்றுமையாக தீபத் திருநாளை கொண்டாட வேண்டும் என மிம்தா எனப்படும் உலோக மறுசுழற்சி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் முத்தப்பன் தெரிவித்தார்.

நம் வாழ்வில் கஷ்டங்கள் விலகி மகிழ்ச்சி பொங்க இந்த தீபத் திருநாள் வழிவகுக்கும். ஆகையால் நாம் அனைவரும் இந்த நாளை மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டும்.

மேலும் தீபத்திருநாளை நம் வசதிக்கேற்ப கொண்டாட வேண்டும். இருப்பவர்கள் இல்லாதவர்கள் உதவி புரிய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும் சொந்த ஊருக்கு திரும்புவர்கள் பாதுகாப்பாக செல்ல வேண்டும். உற்றார் உறவினர்களுடன் மகிழ்ச்சியுடன் இந்த தீபத் திருநாளை கொண்டாடி மகிழ வேண்டும் என்றும் அவர் தமது வாழ்த்து அறிக்கையில் கூறிக் கொண்டார்.

கோலாலம்பூர்,அக்.16-
சமீபத்தில் மாணவர்களைச் சார்ந்த பல வன்முறைச் சம்பவங்கள், அதில் கொலை, பாலியல் வன்முறை மற்றும் குற்றவியல் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவுவது ஆகியவை பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளதாக மஇகா பிரிகேட் தலைவர் எண்ட்ரு டேவிட் கூறினார்.

இத்தகைய வீடியோக்களைப் பதிவு செய்வது அல்லது பரப்புவது சட்ட விரோதமானது என்பதை அனைவரும் உணர வேண்டும். இச்செயல் இளைஞர்கள் மத்தியில் குற்ற உணர்வை சாதாரணமாக்கும் அபாயம் உண்டு எனவும் அவர் சொன்னார்.

குற்றச் செயல் விடியோக்களை பதிவு செய்வது செக்‌ஷன் 233 தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் கீகழ் குற்றமாகும். இச்சட்டத்தின் கீழ் அதிகபட்சம் வெ.50 ஆயிரம் அபராதம் அல்லது ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். கூடுதலாக இரண்டுமே விதிக்கப்படலாம்.

இதுபோன்ற காணொளிகளை பகிர்வதை அனைத்து வயதினரும் செய்கின்றனர். இது சமூக வளைத்தள் வாசிகள் மத்தியில் குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதை வெளிப்படுத்துகின்றன.

சமூகத்தின் ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் இருந்து, குற்றமற்ற தலைமுறையை உருவாக்க ஒன்றிணைய வேண்டும் என்று மஇகா பிரிகேட் சார்பில் அவர் வலியுறுத்தினார்.

கோலாலம்பூர்,அக்.15-
நாளுக்கு நாள் பள்ளிகளில் வன்முறை பரவத் தொடங்கி வருவதுடன், பெட்டாலிங் ஜெயா பண்டார் உத்தாமாவில் நடந்த மாணவி கத்திக் குத்து சம்பவத்தை தொடர்ந்து
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில் நாளுக்கு நாள் அதிகமான அச்சத்திலும் கவலையிலும் உள்ளனர் என
டிஎஸ்கே சமூக நல அமைப்பின் தலைவர் டத்தோ ந. சிவக்குமார் கூறினார்.

இன்றைய தலைமுறை மாணவர்களுக்கு என்ன நடந்தது? சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்களில் பரவுகின்ற எதிர்மறை உள்ளடக்கங்களின் தாக்கமா இது? அல்லது வீடு மற்றும் பள்ளியில் ஒழுக்கக் கல்வி தளர்வதால் இந்த நிலை உருவாகியுள்ளது?

பிள்ளைகளை அன்போடு வளர்ப்பதோடு, பொறுப்புணர்வு மற்றும் ஒழுக்கத்துடனும் வளர்த்திட வேண்டும் என்பதே கல்வியாளர்களின் வலியுறுத்தல் என அவர் தெரிவித்தார்.

முன்பு மாணவர்களிடையே நடந்த பகிடிவதை சம்பவங்கள் பெரும் பிரச்சினையாக இருந்த நிலையில், இப்போது அதைவிட ஆபத்தான நிலை உருவாகியுள்ளது. சமீபத்தில் பெட்டாலிங் ஜெயாவில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட வன்முறையில் ஒரு மாணவி உயிரிழந்ததுடன், மற்றொரு மாணவனின் எதிர்காலமும் கேள்விக்குறி ஆகியுள்ளது.

இதனை கட்டுப்படுத்த மலேசிய கல்வி அமைச்சு பல முயற்சிகளை மேற்கொண்டாலும், அவற்றின் விளைவு மீண்டும் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டியுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பையும் ஒழுக்கத்தையும் உறுதி செய்ய சிலர் பிரம்படி  முறையை மீண்டும் கொண்டு வர பரிந்துரைக்கின்றனர்.

அதேபோல் பள்ளிகளில் சோதனை நடவடிக்கைகள் வழக்கமாக மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும், இது மாணவர்கள் ஆயுதம், போதைப்பொருள், வேப் போன்றவற்றை பள்ளிக்குள் கொண்டு வருவதைத் தடுக்க உதவும் என சிவக்குமார் கூறினார்.

கோலாலம்பூர், அக்.14-
மஇகா இளைஞர் பிரிவு, பள்ளி மாணவர்களை உட்படுத்திய சமீபத்திய அதிர்ச்சியளிக்கும் சம்பவங்களால், குறிப்பாக பள்ளியில் பாலியல் வன்கொடுமை, எஸ்பிஎம் மாணவரின் தற்கொலை மற்றும் இன்று நடந்த கொலை சம்பவம் ஆகியவற்றால் பெருத்த கவலையும் ஏமாற்றமும் அடைந்துள்ளதாக மஇகா இளைஞர் பிரிவின் தலைவர் அர்விந்த் கிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்தச் சம்பவங்கள் அனைத்தும் பள்ளி வளாகத்திலும், பள்ளி நேரத்திலும் நடந்துள்ளது. மேலும் அதிர்ச்சியளிக்கின்றது. தீவிரமான சமூக மற்றும் நன்னெறி நெருக்கடியைப் பிரதிபலிக்கும் இந்த சூழ்நிலையினை உடனடியாகவும் முழுமையாகவும் தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.

பள்ளிகள் மாணவர்கள் கல்வி கற்கவும், எதிர்காலத்தை உருவாக்கவும் மிகவும் பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டும், மன உளைச்சலையோ அச்சத்தையோ ஏற்படுத்தும் இடமாக இருக்கக்கூடாது என அவர் சொன்னார்.

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் மனநலத்தினை முன்னுரிமையாக கருத வேண்டுமே தவிர, ஒரு சிறு பிரச்சினையாக அலட்சியப் படுத்தக் கூடாது.

ஆதலால், மஇகா இளைஞர் பிரிவு, மலேசிய கல்வி அமைச்சு மற்றும் அதன் தொடர்புடைய இலாகாக்கள் பின்வரும் உறுதியான நடவடிக்கைகளை செயல்படுத்த வலியுறுத்துகிறது:
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களைப் பாதுகாக்கும் கொள்கைகளை வலுப்படுத்துதல், முக்கியமாக பகடிவதை, தொந்தரவு மற்றும் அத்துமீறல் தொடர்பாக ரகசிய புகார் அளிக்கும் வழிகளை உருவாக்குதல்,
மாணவர்களுக்கு குறிப்பாக முக்கிய தேர்வுகளுக்கு முன்பு, மனநல பரிசோதனை மற்றும் கட்டாய வழிகாட்டி ஆலோசனைகளை செயல்படுத்துதல்,
மாணவர்களிடையே மன அழுத்தம் அல்லது தீய நடத்தைகளை ஆரம்பத்திலேயே  கண்டறிந்து களைய பள்ளிகள், பெற்றோர்கள் மற்றும் சமூக அமைப்புகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்,
மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த காவல் துறையுடன் இணைந்து பள்ளி வளாகங்களில் திடீர் ஆய்வு செய்தல் அவசியமாகும்.

ஒவ்வொரு மாணவரின் உயிரிழப்பும் வெறும் புள்ளிவிவரமல்ல. அவர்கள் நாட்டின் எதிர்காலமாக அமைய வேண்டியவர்கள், அவர்களின் இழப்பு குடும்பங்களையும் சமுதாயத்தையும் நிலைகுலையச் செய்துள்ளது. இனிமேலும் வெறும் அறிக்கைகளோ உறுதிமொழிகளோ இல்லாமல், தீவிரமான மற்றும் உறுதியான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டிய நேரம் இது.

மஇகா இளைஞர் பிரிவு, இந்நாட்டில் ஒவ்வொரு மாணவரும் பாதுகாப்பாகவும், பாதுகாக்கப்பட்டவர்களாகவும் உணர வேண்டும் என்பதை உறுதிப்படுத்த அரசாங்கம், அரசு சாரா இயக்கங்கள் மற்றும் கல்வி அமைப்புகளுடன் ஒத்துழைக்கத் தயாராக உள்ளதாகவும் அர்விந்த் கிருஷ்ணன் தெரிவித்தார்.

கோலாலம்பூர்,அக்.14-
பிரதமர் துறையின் கூட்டரசு அமைச்சரின் அரசியல் செயலாளராக வழக்கறிஞர் சிவமலர் கணபதி நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் முன்னிலையில் சிவமலர் கணபதி இன்று காலை பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

வழக்கறிஞரும் சமூகச் செயற்பாட்டாளருமான சிவமலர் கணபதி சுகாதார அமைச்சருக்கும், கூட்டரசு அமைச்சருக்கும் சிறப்பு அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார். அவரின் தொடர் சமூகநலன் நடவடிக்கைகளின் மூலமாக தற்போது கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ ஜலெவாவின் அரசியல் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

வரலாற்றில் அமைச்சரின் அரசியல் செயலாளராக நியமிக்கப்பட்ட முதல் இந்திய பெண் எனும் சாதனையையும் வழக்கறிஞர் சிவமலர் கணபதி நிகழ்த்தியுள்ளார். அண்மையில் தலைநகரில் இந்தியர்கள் தொடர்பான பல்வேறு சிக்கல்களுக்குத் தீர்வு காண சிவமலர் கணபதி முக்கிய பங்களித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெங்கில், அக். 11 —
மலேசிய இந்திய இளைஞர் மன்றம் (MIYC) மற்றும் மலேசிய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சுடன் இணைந்து, ரக்கான் மூடா ரக்கான் லித்தார் முயற்சியின் கீழ், முதல் முறையாக இந்திய பெண்களுக்கான கார் கண்காட்சி நடத்தப்படவுள்ளது.

இந்த நிகழ்ச்சி நாளை மறுநாள் அக்டோபர் 11ஆம் திகதி 2025 (சனிக்கிழமை) அன்று டெங்கிலிலுள்ள Tapak Lepark வளாகத்தில் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும்.

இந்நிகழ்வில் பல இந்திய பெண்கள் தங்களது தனிப்பட்ட கார்களுடன் கலந்து கொண்டு தங்கள் ஆர்வத்தையும் திறமையையும் அவர்கள் நவீன முறையில் அலங்கரித்த கார்களின் மூலமாக வெளிப்படுத்த உள்ளனர்.

அத்துடன், இந்த கார் கண்காட்சியில் அழகு படுத்தப்பட்ட பெண்களின்  கார்கள் மற்றும் அதி நவீன சூப்பர் பைக்குகள் போன்ற வாகனங்களும் காட்சிப்படுத்தப்படும் என இந்நிகழ்ச்சியின் திட்ட இயக்குநர் பவீத்தரன் இளங்கோவன் தெரிவித்தார்.

இது ஒரு சாதாரண கார் கண்காட்சி அல்ல; இளைஞர்களின் படைப்பாற்றல், தன்னம்பிக்கை மற்றும் ஆற்றலை வெளிப்படுத்தும் விழா என அவர் கூறினார்.

இந்நிகழ்வை மேலும் மெருகூட்டும் வகையில் பொதுமக்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் கலந்து கொண்டு கண்டு களிக்க அழைக்கப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு பவீத்தரன் இளங்கோவன் (தொலைபேசி: 010-396 1002 என்பவரை தொடர்பு கொள்ளலாம்.

கோலாலம்பூர், அக்.8-
சிலாங்கூர் மாநில ஸ்ரீ தர்ம சாஸ்தா அன்பு கரங்கள் இயக்கம் தீபாவளியை முன்னிட்டு செலாயாங் - பத்துமலை பகுதியை சேர்ந்த பி40 பிரிவை சேர்ந்த சுமார் 280 இந்திய குடும்பங்களுக்கு  தீபாவளி உதவி பொருட்களை வழங்கியது.

இந்த இயக்கத்தின் தலைவர் மருதைய்யா சுப்ரமணியம் பேசுகையில், கடந்த ஆண்டு சுமார் 180 மக்களுக்கு  இந்த உதவி வழங்கப்பட்ட நிலையில் இந்த முறை அது 280ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.

எங்களின் இயக்க உறுப்பினர்களின் ஒத்துழைப்பில் இந்த வட்டாரத்தில் உள்ள  பி 40 மக்கள் அடையாளம் காணப்பட்டனர். அதோடு எங்கள் முயற்சிக்கு சில நல்லுள்ளங்கள் உதவி கரம் நீட்டி உள்ளனர். அவர்களுக்கும் அவர் நன்றியை தெரிவித்து கொண்டார்.

கலை நிகழ்ச்சி ,கோலம் போட்டி  சுவையான விருந்துடன் மக்களுக்கு இந்த உதவி நிதி கொடுக்கப்பட்டது. அதே நேரத்தில் அங்கு வருகை தந்த சிறுவர்களுக்கு தீபாவளி அன்பளிப்பும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் டத்தோ ஹரி, டத்தோ பார்த்திபன், டத்தோ பாலமுருகன், டத்தோ பிரகாஷ், நகராண்மைக் கழக உறுப்பினர் தேவேந்திரன், சரவணன் ஆகியோர் சிறப்பு வருகை புரிந்தனர்.

அவர்கள் இந்த இயக்கத்திற்கு கொடுத்த வற்றாத ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இயக்க உறுப்பினர்கள் அவர்களுக்கு சிறப்பு செய்தனர்.

கோலாலம்பூர், அக்.8-
சிலாங்கூர் மாநில ஸ்ரீ தர்ம சாஸ்தா அன்பு கரங்கள் இயக்கம் தீபாவளியை முன்னிட்டு செலாயாங் - பத்துமலை பகுதியை சேர்ந்த பி40 பிரிவை சேர்ந்த சுமார் 280 இந்திய குடும்பங்களுக்கு  தீபாவளி உதவி பொருட்களை வழங்கியது.

இந்த இயக்கத்தின் தலைவர் மருதைய்யா சுப்ரமணியம் பேசுகையில், கடந்த ஆண்டு சுமார் 180 மக்களுக்கு  இந்த உதவி வழங்கப்பட்ட நிலையில் இந்த முறை அது 280ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.

எங்களின் இயக்க உறுப்பினர்களின் ஒத்துழைப்பில் இந்த வட்டாரத்தில் உள்ள  பி 40 மக்கள் அடையாளம் காணப்பட்டனர். அதோடு எங்கள் முயற்சிக்கு சில நல்லுள்ளங்கள் உதவி கரம் நீட்டி உள்ளனர். அவர்களுக்கும் அவர் நன்றியை தெரிவித்து கொண்டார்.

கலை நிகழ்ச்சி ,கோலம் போட்டி  சுவையான விருந்துடன் மக்களுக்கு இந்த உதவி நிதி கொடுக்கப்பட்டது. அதே நேரத்தில் அங்கு வருகை தந்த சிறுவர்களுக்கு தீபாவளி அன்பளிப்பும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் டத்தோ ஹரி, டத்தோ பார்த்திபன், டத்தோ பாலமுருகன், டத்தோ பிரகாஷ், நகராண்மைக் கழக உறுப்பினர் தேவேந்திரன், சரவணன் ஆகியோர் சிறப்பு வருகை புரிந்தனர்.

அவர்கள் இந்த இயக்கத்திற்கு கொடுத்த வற்றாத ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இயக்க உறுப்பினர்கள் அவர்களுக்கு சிறப்பு செய்தனர்.

கோலாலம்பூர், அக.8-
தொழில்நுட்ப மேம்பாட்டை கையாழ உணவக முதலாளிகளுக்கும் நிர்வாக பணியாளர்களுக்கும் சிறப்பு பயிற்சியை வழங்க இம்முறை அறிவிக்கப்படவுள்ள பட்ஜெட்டில் சிறப்பு மானியம் ஒதுக்கப்பட வேண்டும் என பிரிமாஸ் எனப்படும் இந்திய உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சுரேஸ் கூறினார்.

இன்றைய சூழலில் உணவக உரிமையாளர்கள் பல வகையான சவால்களை எதிர்கொள்கின்றனர். அதில் முதன்மையாக அந்நிய தொழிலாளர்கள் தேவை இருந்தாலும் அதை சரிகட்ட தொழில்நுட்ப பயன்பாடு பற்றிய புரிதல் அவர்களுக்கு தேவைப்படுகிறது. உதாரணத்திற்கு AI தொழில்நுட்ப வளர்ச்சியை பற்றிய விழிப்புணர்வு அவர்களுக்கு மிகவும் அவசியம் என அவர் சொன்னார்.

இதன் மூலம் தொழிலாளர் பிரட்சினையை அவர்கள் களையலாம். ஆகையால் அரசாங்க சிறப்பு நிதியை ஒதுக்கி அவர்களுக்கு பயிற்சியை வழங்க முன்வரவேண்டும் என சுரேஸ் கூறினார்.

இன்றைய நிலையில் இந்திய உணவக உரிமையாளர்களுக்கென சுமார் 8,000 அந்நிய தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். இதன் தொடர்பில் பல பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்ட பின்னர் gantian முறையை அரசு அமலுக்கு கொண்டு வந்தது. இருந்தாலும் தொழிலாளர் பிரச்சினை தீர்ந்தப்பாடில்லை என அவர் சொன்னார்.

இதற்கு மத்தியில் நாட்டில் விலைவாசி ஏற்றம் எங்களுக்கு மற்றொரு பெரும் பாரமாக அமைகிறது. அடிப்படை பொருட்களின் விலை ஏற்றம் காண்பது எங்களுக்கு பெரும் சவாலாக அமைகிறது. அடிப்படை பொருட்களின் விலை கட்டுப்பாட்டுக்குள் இருப்பது அவசியம். விலைவாசி ஏற்றம் தொடர்ந்தால் அதனை சரிகட்ட உணவு விலையை நாங்கள் ஏற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என அவர் சொன்னார்.

பிரிமாஸிசின் 25ஆவது வெள்ளி விழா நேற்று தலைநகரிலுள்ள பிரசித்திப் பெற்ற தங்குவிடுதியில் நடைப்பெற்றது. 25 ஆண்டுகள் என்பது சாதரண விடையம் அல்ல என சங்கத்தின் காப்பாளர் டத்தோ ரேனா ராமலிங்கம் தெரிவித்தார்.

உணவக துறையில் இந்திய இளைஞர்கள் அதிகமாக ஈடுபட வேண்டும். அங்காடி கடை வழி அவர்கள் இத்துறையில் கால் பதித்து குளிர்சாதண வசதி கொண்ட உணவகம் வரை உருவாக்கி அவர்கள் இத்துறையில் சாதனை படைக்க வேண்டும்.

இத்துறையில் தான் 40 ஆண்டுகள் உள்ளதாகவும் தொடக்க காலத்தில் பல இன்னல்கள் மத்தியில் இந்த தொழிலை ஆரம்பித்து விடமுயற்சியுடன் அயராத உழைப்பால் இன்று இந்நிலையை அடைந்துள்ளதாக அவர் சொன்னார்.

ஆகையால் முறையான பயிற்சியை பெற்று இளைஞர்கள் இத்துறையில் ஈடுபட வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

கோலாலம்பூர் அக் 7-
பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காலங்காலமாக வியாபாரம் செய்து வரும் சிறு வியாபாரிகள் இப்போது தத்தளிக்கிறார்கள்.

அவர்கள் வியாபாரம் செய்ய ஏன் முறையான ஏற்பாடுகள் செய்து கொடுக்கவில்லை என்று பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா கேள்வியை எழுப்பினார்.

இம்முறை பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா தீபாவளி கடை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா முக்கிய சாலைகளில் கடைகளை அமைத்தது ஏன்?

போக்குவரத்து நெரிசலில் மக்கள் தவிக்கும் வேளையில் இந்த கடைகளால் மேலும் மிக மோசமான  நெரிசல் ஏற்படும்.

அதிலும் இம்முறை ஏன் மாற்று திறனாலிகளுக்கு கடைகள் கொடுக்கப்படவில்லை என்றும் கேள்வி எழுந்துள்ளது.

மேலும் பல ஆண்டுகளாக இங்கு வியாபாரம் செய்து வரும் சிறு வியாபாரிகளுக்கும் கடைகள் கொடுக்கப்படவில்லை என்ற புகாரும் உள்ளது.

உள்ளூர் வியாபாரிகளை புறக்கணித்து மற்றவர்களுக்கு கடைகள் கொடுத்தது ஏன் என்று அவர் கேள்வியை முன் வைத்தார்.

விலாயா மாநில முன்னாள் துணை அமைச்சராக இருந்த டத்தோஸ்ரீ எம் சரவணன் மற்றும் என்னையும் அழைத்து  இது குறித்து ஆலோசனை கேட்டு இருக்கலாம்.
அதையும் செய்யவில்லை. ஒரு பகுதி ரோட்டை அடைத்து கடைகளை அமைத்தது முறையல்ல என்று அவர் சொன்னார்.

இன்னும் காலம் கடந்து விடவில்லை. அனைத்தையும் முறை படுத்துங்கள்.

முறையான ஏற்பாடுகளை செய்து கொடுத்திருந்தால் இவ்வளவு பிரச்சினை ஏற்பட வாய்ப்பில்லை என்று அவர் சொன்னார்.

விடுபட்டு போனவர்களுக்கு கடைகளை ஏற்படுத்தி கொடுங்குகள் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் தீபாவளி கடை விவகாரம் தொடர்பாக பிபிபி கட்சியின் தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா இன்று களம் இறங்கினார்.

விலாயா மாநில பிபிபி கட்சியின் தலைவர் சத்யா சுதாகரன், பிபிபி கட்சியின் செயலாளர் டத்தோ இண்டர்ஜிட், மகளிர் அணி தலைவி புனிதா முனிசாமி, தகவல் பிரிவு தலைவர் ஸ்டீபன், சிகாம்பூட் தொகுதி தலைவர் டத்தோ டாக்டர் வினோத் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

கோலாலம்பூர் அக் - 2
இஸ்ரேலியப் படைகளால் குளோபல் சுமுத் ஃபுளோட்டிலா இடைமறிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதற்கு  ம.இ.கா  கவலையை வெளிப்படுத்தியது மற்றும் கப்பலில் உள்ள அனைத்து மனிதாபிமான ஆர்வலர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என ம.இ.காவின் தேசியத் தலைவர் டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டார்.

அரசாங்கம் சர்வதேசத் தலைமையை பயன்படுத்தி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விரைவாகவும் நிபந்தனையின்றி விடுவிப்பதற்கு வாதிடுமாறு நாங்கள்  கேட்டுக்கொள்கிறோம்.

சர்வதேச கடல் பகுதியில் அமைதியான மனிதாபிமானப் பணியை இடைமறிப்பது சர்வதேச சட்டத்தின் மதிப்பை கேள்விக்குறி ஆக்குகிறது.

அதோடு காசா மக்களின் துன்பத்தைத் தணிப்பதற்கான உலகளாவிய முயற்சிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக பார்க்கப்படுகிறது.

அமைதி மற்றும் மனிதாபிமான நிவாரணத்திற்கான காரணத்தை மலேசியா நீண்ட காலமாகப் பாதுகாத்து வருகிறது. இது சம்பந்தமாக, தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து ஆர்வலர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், காசாவிற்கு மனிதாபிமான உதவி தடையின்றி வழங்குவதற்கும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) உள்ளிட்ட சர்வதேச அமைப்பின் தலையீட்டை தீவிரப்படுத்துமாறு  அரசாங்கத்தை  கேட்டுக்  கொள்வதாக டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கோலாலம்பூர், அக்.2-
கூடாரத்தை மாற்றுங்கள், விளக்குகளை பொருத்துங்கள், இங்கு அமைக்கப்பட்ட கூடாரம், நுழை வாசல் பதாகை பாதுகாப்பாக இல்லை என்ற பிரிக்பீல்ட்ஸ் வியாபாரிகளின் குமுறல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் காதுகளுக்கு எட்டாத பட்சத்தில் இயற்கையின் காதிற்கு எட்டியவாறு ஒவ்வொன்று நடந்து வருகிறது.

இரு நாட்களுக்கு முன்பு பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தையில் அமைக்கப்பட்டிருந்த நான்கு கூடாரங்கள் காற்றில் பறந்தன.

இன்று அங்கு நுழைவாசலில் அமைக்கப்பட்டிருந்த பதாகை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது விழுந்துள்ளது. நல்ல வேளை மக்கள் யாரும் இதில் பாதிக்கப்படவில்லை.

பார்க்கும் இடமெல்லாம் மடானி சின்னம். இது தீபாவளி சந்தையா அல்லது மடானி அரசாங்கத்தின் எக்ஸ்போ வா என்று தெரியவில்லை என பலர் பேசிவருகின்றனர்.

தீபாவளி வாழ்த்து என்ற சொல்லும் இல்லை தீபாவளி கொண்டாட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் அங்கு எந்த அழகாரங்களும் இல்லை. அதற்கும் மேல் விளக்குகள் இல்லாத நிலையில் இருள் சூழ்ந்த நிலையில் பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தை அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு பொருத்தப்பட்டுள்ள கூடாரங்கள் தீபாவளி வியாபாரத்திற்கு பொருத்தமாக இருக்காது, கூடாரங்களும் பாதுகாப்பாக இல்லை என மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கூறியிருந்தார். அதனை சம்பந்தப்பட்ட தரப்பினர் பொருட்படுத்தவில்லை.

நேற்று அங்குள்ள வியாபாரிகளும் இதையைதான் சொன்னார்கள். இரவுக்குள்ள பெரிய கூடாரங்கள் மாற்றப்படும் என ஒரு தரப்பு கூறியது. ஆனால் அதுவும் நடக்கவில்லை.

பாதுகாப்பற்ற நிலை கூடாரங்களும் பதாகையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலட்சிய போக்கு ஏன்?

பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தை அமைக்கும் விவகாரத்தில் அனுபவம் நிறைந்தவர்கள் பல கருத்துகளை கூறியும் சம்பந்தப்பட்ட அரசு தரப்பு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

இவ்வளவு நடந்த பின்னர் இன்று கூட்டரசுப் பிரதேச அமைச்சரின் சிறப்பு அதிகாரி சிவமலர் பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளார். 8x8 உள்ள கூடாரங்களை 10x10 என்ற அளவில் மாற்றி தருவதாக கூறியுள்ளார். கூடாரங்கள் கொஞ்சம் பெரிதாக மாற்றப்பட்டாலும் அதன் பாதுகாப்பு அம்சங்களை பற்றி அவர் விவரிக்கவில்லை. தீபாவளி அலங்காரம் இதன் பின் நடக்கும் என சிவமலர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டுகளில் கூடாரம் அமைப்பதிலும் பாதுகாப்பிலும் எந்த பிரச்சினையும் இல்லை. இம்முறை யார் எடுத்த முடிவு என்று தெரியவில்லை கூடாரங்கள் பிரதான சாலையில் பொருத்தப்பட்டுள்ளன. தீபாவளி காலத்தில் பிரிக்பீல்ட்ஸில் சாலை நெரிசல் கடுமையாக இருக்கும். ஆனால் இம்முறை இருந்த சாலையும் பாதி மூடப்பட்டுள்ளது. போக்குவரத்து நிலைமை எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.

நகைச்சுவை நடிகர் வடிவேலு கூறி வசனம்தான் இப்பொழுது நினைவுக்கு வருகிறது. எதை செய்தாலும் பிலான் பன்னிதான் செய்யனும் என்ற வசனத்திற்கு ஏற்ப பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தை ஏற்பாடுகள் அமைந்துள்ளது என்றுதான் கூற வேண்டும்.

சாதரண மழை, காற்றிற்கே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அசம்பாவிதம் நடக்கிறது. கனத்த காற்று வீசினால் என்னதான் நடக்குமோ தெரியவில்லை.

முறையான பாதுகாப்பு இல்லாதது வாடிக்கையாளர்கள் மத்தியிலும் பயத்தை ஏற்படுத்தலாம். இதனால் அந்த பகுதியில் வியாபாரம் குறையவும் வாய்ப்பு உள்ளன. அதனால் சம்பந்தப்பட்ட தரப்பினர் சிந்தித்து செயல்பட வேண்டும்.

தீபாவளி என்றாலே அது ஒளியை பிரதிபலிக்கும். இதனை கருத்தில் கொண்டு தீபாவளி கொண்டாட்டத்தை போல பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தை பகுதியில் அலங்காரங்களும் விளக்குகளும் பொருத்தப்பட வேண்டியது அவசியமாகும்.

அதே நேரத்தில் இந்த முறை கலை நிகழ்ச்சி நடத்தபடாது எனவும்.. அதற்கு யாரும்  இது வரை விண்ணப்பம் செய்ய வில்லை என சிவமலர் தெரிவித்தார்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

கோலாலம்பூர், செப்.28-
சிறந்த கவிதைகளை படைப்பதற்கு நம் குரலிலுள்ள சக்தி விரலிலும் இருப்பது அவசியம் என மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

கவிதைகளை படைப்பதில் நாம் மொழியை கையாழும் விதம்தான் அதனை காலம் கடந்து வாழ வைக்கும் என இன்று மஇகா நேதாஜி மண்டபத்தில் நடைப்பெற்ற மனிதம் தேடும் மனிதன் நூல் வெளியீட்டு விழாவில் அவர் சொன்னார்.

தமிழகத்திலிருந்து பிழைப்பை தேடி இங்கு வந்து நாளிதழில் பல கவிதை படைப்புகளை எழுதி புகழ்பெற்ற கவிஞர் பெர்னாட்ஷாவின் கவிதை நூழை இன்று டத்தோஸ்ரீ எம்.சரவணன் வெளியிட்டார்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு இந்த நூலிலுள்ளா கவிதைகளை அவர் எழுதியுள்ளார். இந்த நூழை அன்றே வெளியிட எண்ணம் கொண்டபோது உடல் நல குறையால் கவிஞர் மீண்டும் தமிழகத்திற்கு சென்ற பின்னர் தற்போதுதான் அவரின் நூல் படைப்புகள் தற்போது நூல் வடிவில் வெளியிடப்பட்டுள்ளதாக டத்தோஸ்ரீ சரவணன் சொன்னார்.

இந்த நூலில் படைக்கப்பட்டுள்ள மரபுக் கவிதைகள் பொருள் சொல்லும் விதத்தில் மாறுப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அண்மையில் வெளியீடு கண்ட கவிதை நூல்களில் இந்த நூல் சிறந்த கவிதை நூலாக உள்ளாதாக அவர் சொன்னார்.

மேலும் அவர் கடந்து வந்த பாதையில் அவருக்கு உதவியவர்களுக்கும் மரியாதை செலுத்தும் வகையில் அந்த உதவிகளை பற்றி அவர் கவிதை வரியில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்க ஒன்றாகும் என டத்தோஸ்ரீ சரவணன் புகழாரம் சூட்டினார்.

இன்று நடந்த இந்த நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு பிரமுகர்களாக நிலநிதி கூட்டுறவுக் கழகத்தின் இயக்குநர் டத்தோ சகாதேவன், மலேசிய  தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆலோசகர் ராஜேந்திரன், வணக்கம் மலேசியா செய்தி இணைய தளத்தின் உரிமையாளர் தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஷா ஆலம், செப்.28-
பல ஆண்டு காலமாக சமூக சேவைகளில் ஈடுபட்டு தற்போது என் சமுதாயத்தின் தலையெழுத்தை மாற்ற அரசியலுக்கு வருவதாக சமூக சேவகரும் புரட்சி அமைப்பின் தோற்றுநருமான உமாகாந்தன் தெரிவித்தார்.

இந்நாட்டில் அன்று தொட்டு இன்று வரை இந்திய சமுதாயத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்தபாடில்லை.

சமுதாயத்தின் குரலாக இருப்பேன் என கூறி இன்று ஆட்சியில் அமர்ந்துள்ள பல இந்திய தலைவர்கள் இன்று மௌனம் சாதிக்கின்றனர். நம் சமுதாயத்தின் தேவைகளை பற்றிய கவலையும் அவர்களுக்கில்லை. வாய் பேச்சில் வீரனாக இருந்தவர்கள் இன்று எதையும் சாதிக்கவில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

அதனால் சமுதாயத்திற்காக எதையும் செய்யாத தலைவர்களை பற்றி பேசுவதை விடுத்து நாங்களே சமுதாயத்திற்கு சேவையாற்றவும் நம் சமுதாயத்தின் தேவைகளை கேட்டு பெறுவதற்கு முன் வந்துவிட்டதாக உமாகாந்தன் தெரிவித்தார்.

கடந்த பல ஆண்டுகளாக ஸ்ரீ மூடாவில் வெள்ளப் பிரச்சினை நிலவி வருகிறது. இதனால் அவரை அதற்கு தீர்வு கிடைத்ததில்லை. ஒரு பிரச்சினைக்கு மக்கள் கூடி குரல் கொடுத்தால் மட்டுமே தற்காலிக தீர்வு கிடைக்கிறது. மக்களின் பிரதிநிதிகளாக இருக்கும் தலைவர்கள் களத்தில் இறங்கி தீர்வு கிடைக்க போராடியதும் இல்லை. அதை பற்றி கவலையும் அவர்களுக்கு இல்லை. அதனால் இளைஞர்கள் நாங்கள் தற்போது மலேசிய இந்திய மக்கள் கட்சியில் (எம்ஐபிபி) இணைந்து அரசியல் களத்தில் கால் பதித்து எங்களின் பிரச்சினைகளை நாங்களே சரி செய்ய தயாராகிவிட்டோம் என அவர் சொன்னார்.

இதற்கிடையில் இன்று எம்ஐபிபி கட்சியின் கோத்தா ராஜா தொகுதியின் தொடக்க விழா நடந்தது. இந்த தொகுதியின் கீழ் 3 சட்டமன்றங்கள் அதாவது கோத்தா கெமுனிங், செந்தோசா, சுங்கை கண்டீஸ் ஆகியவை உருவாக்கப்பட்டன.

எம்ஐபிபி கட்சியின் தேசியத் தலைவர் புனிதன் தலைமையில் இந்த தொடக்க விழா நடைப்பெற்றதுடன் கோத்தா ராஜா தலைவராக உமாகாந்தன் அறிவிக்கப்பட்டார்.

தொடக்க விழாவில் இந்த தொகுதியிலுள்ள வெள்ளப் பிரச்சினை, வெளிநாட்டவர்களின் ஆதிக்கம், அடுத்த பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தை பெரிக்காத்தான் நேஷனல் கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகள் என 7 கோரிக்கைகளை உமாகாந்தன் முன்வைத்ததுடன் இத்தொகுதியின் கிழ் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் 10,000 உறுப்பினர்களை கட்சியில் சேர்ப்பதாகவும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

 

கோலாலம்பூர், செப்.25-
செந்தூல், ஜாலான் ஈப்போ அருகில் புதிதாக திறக்கப்பட்டுள்ள செந்தூல் ஸ்ரீ குமரன் சில்க்ஸ் ஜவுலிக்கடையை மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் இன்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

தற்போதைய சூழ்நிலை இந்திய இளைஞர் அதிகமாக வியாபாரத் துறையில் ஈடுபட்டு வருகின்றனர். உணவகம், முக ஒப்பனை நிலையங்கள், ஜவுலிக் கடைகள் என பல துறைகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

செந்தூல், ஜாலான் ஈப்போவில் மகாராஜா ஜவுலிக்கடைக்கு அருகில் தற்போது செந்தூல் ஸ்ரீ குமரன் சில்க்ஸ் ஜவுலிக்கடை திறக்கப்பட்டுள்ளது.

ஒரு இடத்தில் பல ஜவுலிக்கடைகள் இருந்தால்தான் பெண்களுக்கு பிடிக்கும். அவர்களுக்கு தேவையானவற்றை அவர்கள் ஒரே இடத்தில் வாங்கிக் கொள்ள முடியும்.

இதே போன்றுதான் பல காலமாக சீனர்கள் வியாபாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். நம் இனத்தவர்களும் இதேபோன்று ஒற்றுமையாக ஒரே இடத்தில் பல வியாபாரங்களை மேற்கொள்வதை வரவேற்பதாக ஜவுலிக்கடை திறப்பு விழாவின் போது அவர் சொன்னார்.

தீபாவளியை முன்னிட்டு இன்று செந்தூல் ஸ்ரீ குமரன் திறக்கப்பட்டுள்ளது. பட்டு சேலைகள், பஞ்சாபி சூட், சிறுவர்களுக்கான பாரம்பரிய உடைகள் என புதிய டிசைன்களில் பல வகை உடைகள் செந்தூல் ஸ்ரீ குமரன் ஜவுலிக்கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆகையால் பொதுமக்கள் திரளாக வந்து இந்த கடையில் வாங்கிக் கொள்ளலாம்.

கோலாலம்பூர், செப்.23-
நிலையில்லா அரசியல் சவால்களை மஇகா இன்னும் வலுவாக எதிர்கொள்ள வேண்டும் என டேசா பண்டான் மஇகா கிளைத் தலைவர் எம். செல்வேந்திரன் என்ற செல்வன் கூறினார்.

மஇகா நேற்று திடீரென முளைத்த கட்சி அல்ல. சுதந்திரத்திற்கு முன்பே தொடங்கப்பட்டு இந்நாட்டின் இந்திய சமுதாயத்திற்காக உரிய சேவைகளை செய்து வரும் மகத்தான கட்சி.

மஇகா என்ன செய்தது என்று கேள்வி எழுப்பிய பல பேர் இன்று ஊமையாகி விட்டனர்.

இதற்கு ஆட்சியிலும் அரசாங்கத்திலும் மஇகா இருந்த போது செய்தததை இப்போது எந்த கட்சியினாலும் செய்ய முடியவில்லை.இதனை பலர் இப்போது தான் உணர்கின்றனர்.

ஆக எதிர்கால அரசியலில் மஇகா நிலையான இடத்தை பிடிக்க வேண்டும். அதற்கு கட்சியின் உள்ள அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்.

கட்சி உறுப்பினர்களுக்கு இடையே ஒற்றுமை வலுப்பெற வேண்டும்.
குறிப்பாக இந்திய சமுதாயம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

அவ்வகையில் டேசா பண்டான் மஇகா கிளை கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் ஆகியோர் எடுக்கும் முடிவுகளுக்கு ஆதரவு வழங்கும்.

அவர்கள் காட்டும் வழியில் பயணிக்கும் என்று செல்வேந்திரன் கூறினார்.

டேசா பாண்டான் மஇகா கிளையின் அமைப்புக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

கூட்டரசுப் பிரதேச மஇகா தலைவர் டத்தோ ராஜா சைமன் இக்கூட்டத்திற்கு தலைமையேற்றார்.

இக்கூட்டத்தில் ஆர்.டி. சுந்தரம், அரசு உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

செரண்டா, செப்.23-
நம் சமுதாயம் நிலைத்திருக்க நமது மொழி, கலாச்சாரம், பண்பாட்டை நாம் காப்பது அவசியமாகும் என உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியின்  ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்தியபிரகாஷ் தெரிவித்தார்.

தமிழ்மொழியை கற்பதனால் நமக்கு பல வகையில் நன்மை உண்டு. அதனை கற்க தவறியவர்களுக்குதான் அதன் அருமை புரியும் என அவர் சொன்னார்.

மேலும் நாம் குறிக்கோளை முன்வைத்து அதாவது நமது எதிர்கால ஆசையை உறுதி செய்து விட்டுதான் அதற்கான மேற்கல்வியை நாம் தொடர வேண்டுமென என அவர் எஸ்பிஎம் தேர்வில் தமிழ்மொழி தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு நினைவுறுத்தினார்.

நம் வாழ்க்கையில் எந்த நிலைக்கு சென்றாலும் நம்முடையை பெற்றோர்களை போற்ற வேண்டியது நமது கடமையாகும். அவர்கள் நமக்காக செய்த தியாகங்களை நினைவில் வைத்து நாம் செயல்பட வேண்டுமென அவர் சொன்னார்.

இதற்கிடையில் இன்று அந்தாரா காப்பியிலுள்ள எஸ்பி கேர் தலைமையக மண்டபத்தில் எஸ்பிஎம் தேர்வில் தமிழ்மொழி எழுதவுள்ள மாணவர்களுக்கு பயிலரங்கு நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றும்போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சிலங்கூர் மாநில கல்வி இலாகாவின்  தமிழ்மொழி பிரிவின் உதவி இயக்குநர் செங்குட்டுவன், உலு சிலாங்கூர் கவுன்சிலர் ப.புவனேஸ்வரன், எழுத்தாளர் சிவலெனின் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

செரண்டா, செப். 23-
உலுசிலாங்கூர் மாவட்டத்தைச் சேர்ந்த
107 இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கு எஸ் பி.எம். தமிழ்மொழி பயிற்சி பட்டறை இன்று அந்தாரா காபி விஸ்மா எஸ்பி கேர் மண்டபத்தில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

இரண்டாம் ஆண்டாக நடைபெறும் இந்த பயிற்சி பட்டறை க்கான இடம் மற்றும் உணவு செலவுகளை உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்த பயிற்சி பட்டறையை சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் தமிழ் மொழிப் பிரிவு உதவி இயக்குநர் செங்குட்டுவன் வீரன் மற்றும் ஆசிரியர்கள் வெற்றிகரமாக நடத்தினர்.

உலு சிலாங்கூர் மாவட்ட தமிழ் மொழி  கற்றல் கற்பித்தல் குழு , உலு சிலாங்கூர் மாவட்ட கல்வி இலாகா ஆகியவற்றுடன் இணைந்து இந்த பயிற்சி பட்டறையை ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் உலு சிலாங்கூர் கவுன்சிலர் புவனேஸ்வரன் பச்சைமுத்து, கிராமத் தலைவர் முரளி, பேராக் மாநில தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் சிவலெனின் ஆகியோர் சிறப்பு பிரமுகர்களாக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் சிவலெனின் மலாயா கணபதி வாழ்வும் போராட்டாமும் புத்தகம் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டது.

கோலாலம்பூர், செப்.20-
பொழுது போக்குகாக ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளில் பயணத்தை தொடர்ந்த  ஷேடோபெக் மோட்டார் சைக்கிள் குழுவின் தோற்றுநர் டத்தோ ஆனந்த் இன்று அந்த பொழுது போக்கை சாதனையாக்கியதுடன் மலேசிய சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளார்.

இந்தியாவில் நீண்ட தூரம் ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த மலேசியர் என்ற பெருமையையும் உலகின் உயர்ந்த எல்லையான உம்லிங் லா பாஸைக்கை ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளில் கடந்த முதலாவது மலேசியர் என்ற இரட்டைச் சாதனையை படித்தை மலேசிய சாதனை புத்தகத்தில் அவர் இடம் பிடித்தார்.

அதுபோன்ற கரடு முரடான பாதையில் ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளில் கடக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டுவதற்காக அவர் இந்த சாதனையை மேற்கொண்டு இன்று சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளார்.

அவரை பாராட்டும் வகையில் நேற்று தலைநகரிலுள்ள ரோட் 77 ஹார்லி டேவிட்சன் மையத்தில் விருந்து நிகழ்ச்சியுடன் கூடிய பாராட்டு நிகழ்ச்சி நடைப்பெற்றது. மலேசிய சாதனை  புத்தக விருதை அவரிடம் அதிகாரிகள் வழங்கிச் சென்றனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக செனட்டர் டத்தோ சிவராஜ் சந்திரன் கலந்து கொண்டார்.

கோலாலம்பூர் செப்- 12
கடந்த இரண்டு ஆண்டுகளாக. கருஞ்சட்டை  இளைஞர் படை தந்தை  பெரியார் பன்னாட்டு இளைஞர் பகுத்தறிவு கருத்தரங்கை வெற்றிகரமாக நடத்தினர்.

தந்தை பெரியாரின் 147 ஆவது   பிறந்தநாளை முன்னிட்டு வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி பன்னாட்டு  இளைஞர் பகுத்தறிவு கருத்தரங்கு தலைநகர்  Chinese assembly hall மண்டபத்தில் காலை 10 முதல் மாலை 4 மணி வரை நடைப்பெறவுள்ளது.

இதற்கு முன் எதிர்வரும் செப்டெம்பர்  17 ஆம் திகதி இயங்கலை நிகழ்ச்சி  நடைப்பெறவுள்ளது.

இரவு 8.30 மணிக்கு my periyaar முகநூல் அகப்பக்கத்தில் மலேசிய ,இலங்கை, அஸ்திரேலியா  தமிழ் நாடு என பல பேச்சாளர்கள்  கலந்து கொண்டுள்ளனர்.

இதில்  தமிழக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி  சிறப்புறை வழங்க இருக்கிறார்.

அதே நேரத்தில் 21 ஆம் திகதி சீன அசெம்பளி மண்டபத்தில்  நடைப்பெறும் கருத்தரங்கு 2 பிரிவாக நடைப்பெறவுள்ளது.

காலை 10 மணி முதல்  மதியம் 12 மணி வரை மலாய் அமர்வும், மதியம் 2 மணி  முதல் 4  மணி வரை  தமிழ் அமர்வு நடைப்பெறும் என  ஏற்பாட்டாளர் நாகேன்  தெரிவித்தார்.

கருஞ்சட்டை இளைஞர் படை குழு கடந்த இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்திய பன்னாட்டு இளைஞர் பகுத்தறிவு கருத்தரங்கு, இவ்வாண்டும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

தன்னார்வ ஆய்வாளர் சாமிநாதன், ஊடகவியலாளர் இளவெனில் மற்றும் களப் பணியாளர் - கவிஞர் கெளசல்யா ஆகியோர் இதில் உரையாற்றுவார் கள்.

திராவிட மற்றும் பெரியார் சிந்தனையின் தேவை மலேசிய சமுதாயத்தில் அதிகரித்து வரும் நிலையில், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்படுகிறது என்று ஏற்பாட்டுக் குழு  தோழர் நாகேன் தெரிவித்தார்.

கருத்தரங்கில்
மலேசியர்களிடயே வலுத்துள்ள மத இன நல்லிணக்க பிரச்சனைகளை மாற்று சிந்தனையின் வழி எவ்வாறு கையாளலாம் என்று கலந்துரையாடப்படவுள்ளது.

இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள விரும்புவோர்
தோழர் நாகேன் :
016-5910564 
தோழர் யோகி : 016-5432572
தோழர் கௌசல்யா : 011-36321725 ஆகியோருடன் தொடர்பு கொள்ளலாம்.

பெட்டாலிங் ஜெயா, செப்.9-
இசைத்துறையில் அதிலும் இந்திய இளைஞர்கள் மத்தியில் பல திறமையான DJ-க்கள் உள்ளனர். அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் தேசிய அளவிலான பீட் தலைவன் போட்டி நடைப்பெறவுள்ளது.

இந்த போட்டியை செந்தோசா சட்டமன்ற தொகுதி, அஜெண்டா சூரியா, ரியல் ஜோக்கி, திரினித்தி சொலுஷன் நிறுவனம், செஜாத்ரா செந்தோசா சிலாங்கூர் அமைப்பு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த போட்டியில் சுமார் 50 போட்டியாளர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வெ.12 ஆயிரம் மதிப்பிலான பரிசுகள் காத்து கொண்டிருக்கிறது.

இந்த போட்டிக்கான பதிவு நாளை 10ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி முடிவடையும். அதனை தொடர்ந்து இம்மாதம் 26ஆம் தேதி முதல் கட்ட தேர்வு நடைப்பெறும். அதனை தொடர்ந்து அடுத்த மாதம் 5ஆம் தேதி இப்போட்டிக்கான அரையிறுதி சுற்று நடைப்பெறும். அடுத்ததாக தீபாவளி கொண்டாட்டம் கலந்து இந்த போட்டியின் இறுதிச் சுற்று 15ஆம் தேதி புக்கிட் ஜாலில் அரங்கத்தில் நடைப்பெறவுள்ளது.

இசைத்துறையில் இந்திய இளைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையிலும் அவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகளையும் கூடுதல் வருமானத்தை பெற்றுத் தர இந்த போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக செந்தோசா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் தெரிவித்தார்.

மேல் விவரங்களுக்கு 012-5803605 (மணி போய்), 017-3149462 (ஹார்டி பி) ஆகியோரை தொடர்புக் கொள்ளலாம்.

 

கோலாலம்பூர், செப்.9-
சிலம்பம் போட்டி சுக்மாவில் இடம் பெறவில்லை என்றதும் பல தரப்பினர் இதன் தொடர்பில் குரல் கொடுத்தனர். அதன் பின்னர் சுக்மாவில் சிலம்பம் போட்டி இணைக்கப்பட்டது.

இந்த நிலையை நாம் மாற்ற வேண்டும் என்றால் நாம் நம் தற்காப்பு கலையான சிலம்பத்தை காக்க நாம் இணைந்து இந்த கலையை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென மஇகா விளையாட்டுப் பிரிவுத் தலைவர் எண்ரூ டேவிட் தெரிவித்தார்.

அந்த வகையில் மலேசிய சிலம்ப கழகத்துடன் இணைந்து மஇகா விளையாட்டுப் பிரிவு டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன் சிலம்ப கிண்ணத்தை இம்மாதம் 13 முதல் 15ஆம் தேதி வரை கெடா லுனாஸ், ஸ்ரீ கருமாரியம்மன் ஆலய மண்டபத்தில் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த போட்டியில் நாடு தழுவிய அளவில் 300 போட்டியாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த போட்டி 30 பிரிவுகளாக நடக்கவுள்ள வேளையில்,12 குழுக்கள் கலந்து கொள்ளவர். 

இந்த போட்டிக்கான பதிவு நடந்து முடிந்து விட்டது. மாணவர்கள் உட்பட இளைஞர்கள் மத்தியில் சிலம்பத்திற்கு அதிக வரவேற்பு இருப்பது இந்த போட்டியில் பதிவு செய்துள்ள போட்டியாளர்களின் எண்ணிக்கை நமக்கு எடுத்து காட்டுகிறது.

நமது பாரம்பரிய கலைகள், தற்காப்பு கலை ஆகியவற்றை வளர்ப்பதற்கும் பாதுகாக்கவும் மஇகா தொடர்ந்து இதுபோன்ற போட்டிகளை நடத்தும் என எண்ரூ டேவிட் தெரிவித்தார்.

இந்த சிலம்ப போட்டியின் அதிகாரப்பூர்வ தொடக்க விழா 14ஆம் தேதி நடைப்பெறவுள்ளதாகவும் அதனை அதிகாரப்பூர்வமாக மஇகாவின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தொடக்கி வைப்பார் என எண்ரூ தெரிவித்தார்.

இந்த போட்டி தொடர்பான செய்தியாளர் சந்திப்புக் கூட்டம் இன்று செராஸில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் மலேசிய சிலம்ப கழகத்தின் தலைவர் டாக்டர் சுரேஷ்வுடன் கழக பொருப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

கோலாலம்பூர், செப்.9-
மலேசிய மக்கள் சக்தி கட்சியில் கடந்த 16 ஆண்டுகள் உழைத்து ஓடாய் தேய்ந்து போனதுதான் மிட்சம் என கூறிய அக்கட்சியின் உதவித் தலைவரான மணிவண்ணன், இன்றுடன் அதிகாரப்பூர்வமாக அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

கட்சி தலைமைத்துவம் முறையான காரணமின்றி என்னை கட்சியிலிருந்து 3 ஆண்டுகள் இடை நீக்கம் செய்துள்ளது. என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கூறவும் வாய்ப்பு வழங்கவில்லை.

என் மீது குற்றம் சாட்டப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான விளக்கத்தை வழங்க காரணம் கோரும் கடிதத்தையும் கட்சி கேட்கவில்லை. மேலும் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவினரும் என்னிடம் பேசவில்லை என பேரா மாநில  மலேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவருமான அவர் கூறினார்.

எனக்கு துரோகம் செய்யப்பட்டுள்ளது. ஆகையால் என்னோடு இணைந்து என் தொகுதியான லுமூட் கிளை உறுப்பினர்களான 1,500 பேர் கட்சியை விட்டு விலகுவதாக முடிவு எடுத்துள்ளனர் என இன்று செந்தூல் மெட்ராஸ் காபே உணவகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் மணிவண்ணன் கூறினார்.

என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கான விளக்கம் மற்றும் மலேசிய மக்கள் சக்தி கட்சியில் எனது சேவைகள் அடங்கிய முழு விவரங்களை புத்தகம் வடிவில் தயாரித்து கட்சி தலைமையிடம் நான் வழங்கியுள்ளேன். ஆனால் இதுவரை அதன் தொடர்பில் எந்த பதிலும் கிடைக்கவில்லை.

மேலும் என்னை இடைநீக்கம் செய்தது தொடர்பில் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ சம்ரியின் சிறப்பு அதிகாரியிடமும் புகார் கூறினேன், ஆனால் அவர்களும் அதனை கண்டுக் கொள்ளவில்லை என அவர் வருத்தத்துடன் கூறினார்.

ஆகையால் மலேசிய மக்கள் சக்தி கட்சியிலிருந்து தான் அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அவர் அறிவித்ததுடன் தனது அரசியல் பயணம் இத்துடன் முடிந்து விடாது, அது தொடரும் என்றார்.

கோலாலம்பூர், செப் 6-
உள்ளடக்க கண்காணிப்பாளர்களை நியமிக்க தவறினால் டிக் டாக்  தடை செய்யப்பட வேண்டும். இதற்கான அழுத்தத்தை அரசு கொடுக்க வேண்டும் என மஹிமா தலைவர் டத்தோ ந. சிவக்குமார் கூறினார்.

சமீபத்தில் தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் கூறியதாவது;
தொடர்ந்து அதிகரித்து வரும் இணையப் பகடிவதைப் பிரச்சினையை களைவது குறித்து டிக்-டாக் தளம் போதிய முக்கியத்துவம் அளிக்கவில்லை.
குறிப்பாக தமிழ் சமூகத்திற்கு எதிரானதை கையாளத் தவறியதற்காகவும், முன்னர் வாக்குறுதியளித்தபடி கூடுதல் கண்காணிப்பாளர்களை நியமிக்காததையும் அதை பற்றிய விவரங்கள் இதுவரை வழங்கப்படாததையும் அவர் கடுமையாக கண்டித்து பேசியுள்ளார்.

மேலும் மறைந்த ஈஷா மீதான கொடுமைப்படுத்துதல் வழக்கு போன்ற சம்பவங்கள் உட்பட இந்தப் பிரச்சினையைத் தீர்க்க டிக் டாக் தவறியது சட்ட நடவடிக்கைக்கு வழிவகுக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஈஷாவின் மரணத்தின் போது இதே பிரச்சினையை நான் முன்பு எழுப்பினேன். ஒருவரின் உயிரைப் பறித்த இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதில் செயற்கை நுண்ணறிவு புதுமையான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்று நான் கண்டித்தேன்.

இருப்பினும் டிக் டாக் போன்ற சமூக ஊடக தள வழங்குநர்கள் மொழியை தானாக அங்கீகரிப்பது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியது விந்தையானது.

தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில், மொழி சரிபார்ப்பு, ஆபாசமான மொழி, ஊடக தளத்தால் தானாகவே கண்டறியப்பட்டு, பதிவு செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இன்றைய காலகட்டத்தில் எதுவும் சாத்தியமற்றது அல்ல.

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி ஆபாசமான, வன்முறையான மொழியைக் கண்டறிவதற்கான வழிகளை தள வழங்குநர்கள் அடையாளம் காண வேண்டும். 

இந்த நடவடிக்கையின் மூலம், பாதி பிரச்சனை தீர்க்கப்படும் என்று அவர் கூறினார்.

சமூகத்தில் இப்போது பேசப்படும் இணைய பகடிவத  உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் என்பதை அனைத்து தரப்பினரும் அறிந்திருக்க வேண்டும். 

வன்முறை, ஆபாசமான, முரட்டுத்தனமான  கருத்துக்களை இடுகையிடுவதன் விளைவாக எழும் பிரச்சினைகளை தடுக்க வேண்டும்.

இருந்தாலும் டிக் டாக் இன்னமும் விதிமுறைகளை பின்பற்றாமல் உள்ளது. ஆக அதற்கான அழுத்தத்தை அரசு டிக் டாக்கிற்கு தொடர்ந்து கொடுக்க வேண்டும்.

பல நாடுகளில்  டிக் டாக்கைப் பயன்படுத்துவதைத் தடை செய்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

கோலாலம்பூர்,செப்.5-
தி்ருஓணம் பண்டிகையை  மகிழ்ச்சியோடு கொண்டாடும் மலேசிய மலையாளிகள் அனைவருக்கும் ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன்  தமது இனிய ஓணம் பண்டிகை நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இந்த ஓணம் பண்டிகை நன்னாளில் அனைவரும் மகிழ்ச்சியாக, உறவுகளோடு இணைந்து  கொண்டாட வாழ்த்துவோம்.

ஓணம் பண்டிகையின் பின்னணியாக பல இதிகாசங்களும். புராணக் கதைகளும் இருந்தாலும்,  இத்திருநாளை கொண்டாடும் வகையில் நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் என்று நம் முன்னோர்கள் ஏற்படுத்திய அத்தனை விஷயங்களும் நமது வாழ்வியலோடு இரண்டரக் கலந்தவை என்றும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வீட்டைச் சுத்தம் செய்வது முதல் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, புத்தாடை அணிவது, பெரியோரை வணங்குவது, ஆலயத்திற்குச் செல்வது  என ஒவ்வொரு செயலுக்கும் ஆழந்த அர்த்தங்கள் உண்டு. அவற்றை நாமும் தெரிந்து கொண்டு பிறருக்கும் புரியும்படி கொண்டாட வேண்டும். இந்த கொண்டாட்டத்தில் ஓணம் பெண் பண்டகை திருநாள் பெருமையையும் பிறர் உணரச் செய்வோம். 

மனித நேயத்தையும், ஒருமைப்பாட்டையும் நமது வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழ்வதற்கு பண்டிகைகள் துணைபுரிகின்றன. வருடத்திற்கு ஒரு முறைதான் என ஆடம்பரம் இல்லாமல், சிக்கனமாகச் செலவு செய்வோம். பல இன மக்கள் வாழும் மலேசியாவில், அனைவரும் ஒன்றிணைந்து வேற்றுமையில் ஒற்றுமை என்ற தாரக மந்திரத்தோடு திருஓணம் பண்டிகையை கொண்டாடுவோம்என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

பண்டிகைகள், கொண்டாட்டங்களின் தத்துவமே பண்பாடுகளைப் பேணிக்காத்து ஒற்றுமையாக, மகிழ்ச்சியாக இருப்பதே. இறைவழிபாடு பெரியோரை வணங்குதல் என ஒவ்வொரு செயலுக்கும் ஆழந்த அர்த்தங்கள் உண்டு. அவற்றை நாமும் தெரிந்து கொண்டு பிறருக்கும் புரியும்படி கொண்டாட வேண்டும். இந்த ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில்  பெருமையையும் பிறர் உணரச் செய்வோம் என்று திருஓணம் பண்டிகை வாழ்த்து செய்தியில் டான்ஸ்ரீ  விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

கேரளாவின் பாரம்பரிய சிறப்புமிக்க ஓணம் பண்டிகையைக் கொண்டாடும் அனைத்து மலையாள சமூகத்தினருக்கும் ஓணம் பண்டிகை நல்வாழ்த்துகள் என மஇகாவின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்துக் கொண்டார்.

மலையாள மக்களின் அறுவடைத் திருவிழா என்றும் அழைக்கப்படும் ஓணம், மலேசியாவில் பெருமளவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகவும் விளங்குகிறது. இயற்கை வளம், விவசாயம், உடல் உழைப்பு, வளமான வாழ்க்கைக்கு நன்றி செலுத்துதல், சமூக ஒற்றுமை என நல்ல எண்ணங்களையும், நலமிக்க செயல்களையும் சிறியோர் பெரியோரிடையே விதைக்கும் முக்கிய பங்காக ஓணம் பண்டிகைக் கொண்டாட்டம் விளங்குகிறது.

வாசலில் கோலமிட்டு, வீட்டை அலங்கரித்து, விதவிதமாக உணவு சமைத்து நண்பர்கள், உறவினர்களை அழைத்து விருந்து வைத்து கொண்டாடப்படும் இந்த பண்டிகை மலேசியர்களின் ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் திருநாளாகவும் விளங்குகிறது என அவர் சொன்னார்.

குடும்ப பாசமும் உறவுமுறை அன்பும் வலுப்படும் தருணம் இது. வெவ்வேறு கலாச்சாரமும், பழக்க வழக்கமும் நம் வாழ்க்கையை இன்னும் வண்ணமயமாக்குகிறது என்றால் அது மிகையாகாது.

தொடர்ச்சியான கொண்டாட்டங்களும் மகிழ்ச்சியான தருணங்களும்  இருந்து கொண்டே இருக்கும்.

மீண்டும் இனிய ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள்.
உங்கள் வாழ்க்கை அமைதியும், ஆனந்தமும் நிறைந்த வளமான வாழ்க்கையாக இருக்க மனமார்ந்த வாழ்த்துகள் என டத்தோஸ்ரீ சரவணன் அவரின் வாழ்த்து அறிக்கையில் கூறியிருந்தார்.

பத்துகேவ்ஸ், செப் 3-
துவான்கு பைனுன் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி (MPTB) சார்பில், கடந்த ஆகஸ்ட் 30 ஆம் திகதி அன்று பத்து கேவ்ஸ், செங்ஹா மண்டபத்தில் நடைபெற்ற ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்களின் மாபெரும் சந்திப்பு நிகழ்ச்சி, வெற்றிகரமாக நிறைவடைந்தது என தலைவர் முனைவர் விக்டர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சி, கடந்த 1992 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் பயின்ற பயிற்சி ஆசிரியர்கள், தங்கள் கல்லூரிக் கால நினைவுகளைப் புதுப்பித்துக்கொள்ள ஒரு பொன்னான வாய்ப்பாக அமைந்தது. பள்ளிப் பருவத்தைப் போல, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி நாட்களும் வாழ்வில் மறக்க முடியாத அத்தியாயம். கல்வி, விளையாட்டு, கலை எனப் பல அனுபவங்கள், நட்பின் ஆழத்தை உணர்த்திய நாட்கள். அந்த அரிய நினைவுகள் மீண்டும் உயிர் பெற்றது.

இந்தச் சந்திப்பில், ஆசிரியர்களுடன், அவர்களுக்குப் பாடம் கற்பித்த விரிவுரையாளர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இது, ஆசிரியர் மற்றும் மாணவர்களின் உறவைப் புதுப்பிக்கும் ஒரு நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது. வாழ்வின் வெவ்வேறு திசைகளில் பிரிந்து சென்றவர்கள், மீண்டும் ஒரே கூரையின் கீழ் ஒன்று கூடி, தங்கள் நினைவுகளை மீட்டெடுத்த தருணம் பல கண்களைக் குளமாக்கியது என அவர் கூறினார்.

மேலும், தப்பா நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான மாண்புமிகு டத்தோஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, இந்த நிகழ்விற்கு மேலும் பெருமை சேர்த்தார்.

இந்த மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்ச்சிக்கு முக்கியக் காரணகர்த்தாவாக இருந்து அயராது உழைத்த ஆசிரியர் மற்றும் முனைவர் விக்டர் ஆசீர்வாதம் அவர்களின் ஏற்பாடுகள் மிகவும் பாராட்டிற்குரியது. அவரது செயற்குழுவினரின் அர்ப்பணிப்பு, நிகழ்வின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அவரது விடாமுயற்சி இல்லையெனில், இந்த அழகான ஒன்றுகூடல் சாத்தியமாகியிருக்காது.

ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, பலரின் வாழ்வில் ஒரு புதிய பாதையை வகுத்தது. அந்தப் பாதையில் பயணித்தவர்கள், மீண்டும் சந்தித்து தங்கள் பயணத்தின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டது, ஒரு காலப் பயணத்தைப் போன்றது. இந்த நிகழ்ச்சி, முன்னாள் மாணவர்களின் வாழ்வில் ஒரு மறக்க முடியாத அத்தியாயமாக அமைந்தது. மீண்டும் ஒருமுறை அனைவரையும் ஒன்றிணைத்து, இனிமையான நினைவுகளை மீட்டெடுக்க உதவிய அனைவருக்கும் பாராட்டுகளும், நன்றிகளும்
சமர்பணம் என தலைவர் முனைவர் விக்டர் கூறினார்.

கோலாலம்பூர், செப்.2-
பெஸ்தாரி ஜெயா, லாடாங் புக்கிட் பாடோங்கிலுள்ள ஆலயம் ஒன்றில் திருவிழாவில் வானை நோக்கி மூன்று முறை துப்பாக்கியால் சுட்ட ஆசாமியை போலீசார் விசாரணைக்காக கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் தொடர்பில் நேற்று மாலை 3.50 மணிக்கு கிடைத்த புகாரை தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆசாமியை இரவு 8 மணிக்கு பெட்டாலிங் ஜெயாவில் கைது செய்ததாக கோல சிலாங்கூர் போலீஸ் படைத் தலைவர் அஸாஹருடின் தஜுடின் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட நபர் மேல் விசாரணைக்காக இம்மாதம் 4ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

கோல சிலாங்கூர், செப்.2-
சிலாங்கூர் மாநிலத்தில் பத்து மலை முருகன் ஆலயத்தை அடுத்து பிரசித்திப் பெற்ற ஆலயமாக விளங்கும் கோல சிலாங்கூர் ஸ்ரீ சுப்பிரமணியம் ஆலயம் தொடர்பில் சில நாட்களாக பல சர்ச்சைகள் சமூக வலைத்தளத்தில் பரப்பி வரப்பட்டு வந்தது.

ஆலய உறுப்பியத்தில் பிரச்சினை இருந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் ஆலய செயலாளரை கண்டு பேசி அல்லது கடிதம் அனுப்பி பிரச்சினைக்கு தீர்வுக் கண்டிருக்கலாம். ஆனால் அதனை செய்யாமல் சமூக வலைத்தளத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தியது ஆலயத்திற்குதான் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளதாகவும் இந்த பிரச்சினை தீர்ந்தாலும் ஆலயத்திற்கு ஏற்பட்ட கலங்கத்தை மாற்ற முடியுமா என ஆலயத் தலைவர் கண்ணதாசன் பரசிவன் கேள்வி எழுப்பினார்.

ஆலயத்தின் உறுப்பிய சந்தா செலுத்துவதற்கு இறுதி நாள் ஜனவரி 31 ஆகும். ஆனால் இதுநாள் வரை இன்னும் சிலரை அந்த தொகையை செலுத்தாமல் உள்ளனர். ஆலய உறுப்பிய சந்தாவை செலுத்தாதவர்களை அரவனைத்து செல்ல நாங்கள் தயாராக உள்ளோம். ஆகையால் இந்த பிரச்சினையை களைய அவர்கள் செயலாளருடன் இணைந்து பேசி கட்டணத்தை செலுத்தும் படி அவர் கேட்டுக் கொண்டார்.

ஆலயம் என்றால் அதன் நிர்வாகத்தில் சில தவறுகள் இருக்கதான் செய்யும். ஆகையால் வருங்கால சவால்களை எதிர்கொள்ள ஆலயம் முறைப்படுத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.

மேலும் ஆலயத்தின் நிர்வாகத்தின் கீழ் கட்டப்படவுள்ள மின்சுடலை கட்டுமானத்திற்கு அரசு மானியம் வழங்கியுள்ளதாகவும் அவர் சொன்னார்.

ஆலயத்தின் 60ஆவது பொதுக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை ஆலய மண்டபத்தில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்திற்கு வருகையளித்திருந்த உறுப்பினர்கள் அவர்களின் கருத்துகளையும் குறைகளையும் முன் வைத்தனர். உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு ஆலய தலைவர் முறையான பதிலை அளித்தார்.

68ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு  பினாங்கு மாநில ம.இ.கா இளைஞர் பிரிவினர்  நான்கு தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களுடன் சுதந்திர தினத்தை கொண்டாடினர் என ம.இ.கா பினாங்கு இளைஞர் பிரிவு தலைவர் ரூபராஜ் தாமோதிரன் தெரிவித்தார்.

மேஃபிஸ்ட் தோட்ட தமிழ்ப்பள்ளி, மலாக்கோஃப் தோட்ட தமிழ்ப்பள்ளிகளில்  ரூபராஜ் தாமோதிரன்  பள்ளி வாளகத்தை ஜோடித்து கொடுத்தது மட்டும் அல்லாமல்  அங்குள்ள மாணவர்களுக்கு தேசிய கொடிகளை வழங்கி அவர்களுடன்  சேர்ந்து  கொண்டாடினார்.

பினாங்கு மாநில இளைஞர் பிரிவு துணைத் தலைவர்  ருக்குமாறன்  பாயான் லேபாஸ் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு கொடிகளை வழங்கி அவர்களுடன் கொண்டாடினார்.

அதே நேரத்தில்  பினாங்கு மாநில ம.இ.கா இளைஞர் பிரிவு செயலாளர்
மகாதேவன்  பழனியாண்டி தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு தேசியக் கொடிகளை வழங்கி அவர்களுடன் கொண்டாடினார்.

தேசப்பற்றை வளர்ப்பது நமது கடமை. நம் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி உயிரை விட்ட நமது முன்னோர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் அடுத்த தலைமுறைக்கு அதனை நாம் கொண்டு சேர்க்க வேண்டும் என ரூபராஜ் தெரிவித்தார்.

கோலாலம்பூர்,  ஆக.28-
மலேசியாவில் தமிழ் கல்வியின் முன்னேற்றம்,  மற்றும் இடைநிலைப்பள்ளியில் அதிகமான மாணவர்கள் தமிழ் மொழியை  பாடத்திட்டமாக எடுக்க ஒரு கொள்கை ரிதீயான மாற்றம் அவசியம் என ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் இயக்குநர் சுரேன் காந்தா  தெரிவித்தார்.

கடந்த ஆண்டு  எஸ்.பி.எம் தேர்வில் சுமார் 29.6% விழுக்காடு  மாணவர்கள் ஏ பெற்ற நிலையில், 63 விழுக்காடு மாணவர்கள் ஏ பெறவில்லை. அதோடு 6 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்பது நிதிர்சன உண்மை.

தமிழ் மொழியில் ஏ பெரும் மாணவர்களின் தேர்ச்சியை 80 விழுக்காட உயர்த்தும் நோக்கத்தில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் மலேசிய தமிழ்ப் பத்திரிக்கையாளர் சங்கம், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம், தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் சங்கம், தமிழ் சார்ந்த கல்வி மான்களுடன் இப்போது ஒரு குழுவை உருவாக்கி 3 திட்டத்தை வகுத்து உள்ளது.

முதல் திட்டமாக இந்த ஆண்டு எஸ்.பி.எம் - எஸ்.டி.பி.எம் தேர்வில் தமிழ் மொழியை தேர்ச்சி பாடமாக எடுத்துள்ள மாணவர்களுக்கு ஒரு சிறப்பு கருத்தரங்கை அக்டோபர் 5 திகதி மலாயா பல்கலைக்கழக மண்டபத்தில் ஏற்பாடு செய்ய உள்ளது.

இதில் மாணவர்களுக்கு பாடம் தொடர்பான சில நுணுக்கம்,  சில வழிகாட்டு முறையை வழங்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி  தமிழ்ப்பள்ளி படித்து இடைநிலை பள்ளியில் படிக்கும் மாணவர்களில் சுமார் 60 விழுக்காடு மாணவர்கள் தான் எஸ்.பி.எம் தேர்வில் தமிழ்ப் பாடத்தை தேர்வு பாடமாக எடுக்கின்றனர். 40 விழுக்காடு மாணவர்கள் அதனை தவிர்த்து வருகின்றனர். இதற்கு பல காரணங்கள் உள்ளது. அது ஆராய பட்டு அதற்கும் கொள்கை ரீதியான  தீர்வை எடுக்க இந்த குழு முயற்சி எடுக்கவுள்ளது.

மாணவர்களின் கட்டுரை எழுதும் தரத்தை மேம்படுத்த 2ஆவது திட்டமாக தேசிய ரீதியில் கட்டுரை எழுதும் போட்டி  மலேசிய  தமிழ் எழுத்தாளர்  சங்கத்தின் ஆதரவோடு வரும் செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரை நடத்தப்படும் என்றார் சுரேன்.

இந்த போட்டி மூன்று பிரிவாக வகுக்கப்பட்ட நிலையில் 4,5,6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான போட்டி ஒரு பிரிவும், படிவம் 1,2,3 மாணவர்களுக்கான போட்டி ஒரு பிரிவும், படிவம் 4,5,6 மாணவர்களுக்கான போட்டி  என மூன்று பிரிவாக நடத்தப்படும் என்றார்.

மிக முக்கியமான மூன்றாவது திட்டம் இது வரை நாட்டிலும் உலக ரீதியிலும் யாரும் செய்யாத ஒரு மாநாடாக அமைய போகிறது.
உலக ரீதியில் உள்ள தமிழ் கல்விமான்களை கொண்டு  மிகபெரிய தமிழ் கல்வி மாநாடு நடத்தப்படவுள்ளது.

தமிழ் கல்வி, அதன் முன்னேற்றம் மற்றும் மாற்றங்கள் தொடர்பான மாநாடாக இது அமையும். மலேசிய கல்வி முறையில் தமிழ் மொழி முன்னேற்றம் அடைந்து,  மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க கொள்கை ரீதியான மாற்றம் அவசியம். கல்வி அமைச்சு சார்ந்த அதிகாரிகள் உட்பட கல்வி அமைச்சரையும் இந்த மாநாட்டிற்கு அழைத்து, விளக்கம் கொடுத்து, கொள்கை ரீதியான  மாற்றங்கள் தொடர்பான திட்டங்களும் அதன் மூலமாக நிகழப்போகும் மாற்றங்கள் தொடர்பாக விளக்கமும் கொடுக்க உள்ளோம். இப்போது உள்ள சூழலில் தமிழ் மொழி பாடத்திற்கு கொள்கை ரீதியான மாற்றம் அவசியம்.  அந்த மாற்றத்தின் அரங்கமாக அந்த மாநாடு அமையும். அதற்காக  தமிழ் சார்ந்த அனைத்து  இயக்கமும் கைகோர்த்து ஒற்றுமையாக இந்த முயற்சியை முன் எடுத்துள்ளோம் என  சுரேன் காந்தா தெரிவித்தார்.


கோலாலம்பூர், ஆக.28-
பிபிஆர் கம்போங் முஹிபா குடியிருப்பிலுள்ள சில வீடுகளில் டிபிகேஎல் நீர் விநியோகத்தை துண்டித்ததால் மக்கள் இன்னலுக்குள்ளாகியுள்ளதாக பிபிபி கட்சியின் செயலாளர் சத்தியா தெரிவித்தார்.

நீர் சேவைக்கான கட்டனத்தை அங்குள்ள சில மக்கள் முறையாக செலுத்தாததால் இந்த முடிவை டிபிகேஎல் எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மீது டிபிகேஎல் கருணை காட்ட வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

நீர் துண்டிக்கப்பட்டதால் அந்த குடியிருப்பிலுள்ள அதிகமான தனித்து வாழும் தாய்மார்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு போதுமான மாத வருமானம் இல்லை. அதனால் அவர்களால் முறையாக கட்டணத்தை செலுத்த முடியவில்லை என தன்னிடம் முறையிட்டதாக அவர்   சென்னார்.

நீர் சேவை இல்லாததால் அந்த குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளால் பள்ளிக்கு செல்லவில்லை. மேலும் நீர் இல்லாமல் குழந்தைகளுக்கு உணவுகளை தயாரிக்க முடியவில்லை என பாதிக்கப்பட்ட பெண்கள் கூறினர்.

பாதிக்கப்பட்ட மக்கள் இன்று டிபிகேஎல் தலைமையகத்தில் கூடினர். அவர்களுக்கு உதவும் பொருட்டு பிபிபி கட்சியினர் அங்கு கூடியிருந்தனர்.

அவர்களின் சார்பில் கோரிக்கைகளை முன்வைத்து சத்தியா, டத்தோ பண்டாரிடமும் கூட்டரசுப் பிரதேச அமைச்சரிடமும் மகஜரை வழங்கினார். இரு தரப்பின் பிரதிநிதிகள் அந்த மகஜரை பெற்றுக் கொண்டனர்.

முறையான வருமானமின்றி தவிக்கும் இந்த தனித்து வாழும் தாய்மார்களுக்கு சமூக நல உதவிகள் பிரிவின் கீழ் மித்ரா உதவ முன்வர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மேலும் இந்த மக்கள் நீர் சேவை கட்டணத்தை கட்டவே முடியாது என கூறவில்லை. தவணைக் காலம் கொடுங்கள் கொசஞ்சம் கொஞ்சமாக கட்டுவதாகதான் கூறுகிறார்கள். ஆகையால் அவர்கள் உதவ டிபிகேஎல் முன்வர வேண்டும் என்று சத்தியா வலியுறுத்தினார்.

புத்ராஜெயா, ஆக.28-
தொடர் பருவமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் பலர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, வட இந்தியாவில் சிக்கித் தவிக்கும் தனது குடிமக்களை விரைவில் விமானங்கள் மூலம் வெளியேற்ற மலேசியா ஏற்பாடு செய்து வருகிறது.

ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட வட இந்தியாவின் பல மாநிலங்களில் ஏற்பட்ட பெரும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்குப் பிறகு, புது டில்லியில் உள்ள மலேசிய தூதரகம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜம்மு மற்றும் லே, லடாக்கில் சிக்கித் தவிக்கும் மலேசிய குடிமக்கள் குறித்த தகவல்கள் தூதரகத்திற்கு கிடைத்துள்ளன. அவர்களை வெற்றிகரமாகத் தொடர்பு கொண்டு, விரைவில் கிடைக்கக்கூடிய விமானங்களில் அவர்கள் திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நிலைமை மோசமடைந்து வருவதால், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்க மலேசியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோலாலம்பூர், ஆக.28-
மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழக (UTM) கேடட் சம்சூல் ஹாரிஸ் ஷம்சுதீனின் உடல் வரும் வெள்ளிக்கிழமை காலை தோண்டி எடுக்கப்படும் என்று குடும்ப வழக்கறிஞர் நரான் சிங் தெரிவித்தார்.

செமெனியில் உள்ள கம்போங் ரிஞ்சிங் உலு இஸ்லாமிய கல்லறையில் அந்த இளைஞனின் தாயார் உம்மு ஹம்மான், தடயவியல் நிபுணர் டாக்டர் பூபிந்தர் சிங், அதிகாரிகள் மற்றும் சிலாங்கூர் இஸ்லாமிய மதத் துறையினர் முன்னிலையில் இது நடைபெறும் என்று அவர் கூறினார்.

பின்னர் உடல் உடனடியாக இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக கோலாலம்பூர் பெரிய மருத்துவமனை (HKL) தடயவியல் துறைக்கு கொண்டு செல்லப்படும்.

சம்சூல் ஹாரிஸின் மரணத்தை விசாரிக்க ஒரு சிறப்பு குழுவை அமைப்பதில் விரைவான நடவடிக்கை எடுத்ததற்காக புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறையை, குறிப்பாக அதன் இயக்குநர் எம். குமாரை நரான் சிங் பாராட்டினார்.

உமு ஹம்மான் பீயின் விண்ணப்பத்தை நீதித்துறை ஆணையர் பூபிந்தர் சிங் குர்சஹான் சிங் நேற்று ஷா ஆலம் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து அவரின் சடலம் நாளை 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை தோண்டி எடுக்கப்படும் என உத்தரவிடப்பட்டது.

தோண்டி எடுக்கும் பணியை மேற்பார்வையிடவும், தோண்டி எடுக்கும் நாளில் இரண்டாவது பிரேத பரிசோதனை நடத்தவும் காவல் துறைத் தலைவர் அல்லது அவரது அதிகாரிக்கு  உத்தரவிடப்பட்டுள்ளது.

தோண்டி எடுக்கும் பணியை மேற்பார்வையிடவும், தடயவியல் நோயியல் நிபுணரின் அறிக்கையை நியாயமான காலத்திற்குள் சமர்ப்பிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த ஜுலை 29ஆம் தேதி சம்சூல் ஹாரிஸ் மரணமுற்றதை தொடர்ந்து அவரின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி இரண்டாவது பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என அவரின் தாயார் இம்மாதம் 14ஆம் தேதி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததை தொடர்ந்து தற்போது இரண்டாவது பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

 

கோலாலம்பூர், ஆக.27-
விநாயக சதுர்த்தியை முன்னிட்டு இன்று புடு, கோர்ட்டுமலை பிள்ளையார் ஆலயத்தில் சிறப்பு பூஜை நடைப்பெற்றது.

அதிகாலை 4 மணிக்கு சிறப்பு பூஜை நடைப்பெற்றது தொடர்ந்து பக்தர்கள் அதிகமாக வர தொடங்கினர்.

அதனை தொடர்ந்து பக்தர்கள் வரிசையில் நின்று பிள்ளையாரை வணக்கிச் சென்றனர். 

இதற்கிடையில் ஆலயத்திற்கு வந்த பக்தர்களின் பசியை ஆற்றும் வகையில் தொழிலதிபர் டத்தோஸ்ரீ ஜெயந்திரன் அன்னதானத்தை வழங்கினார். 

ஒவ்வொரு ஆண்டும் விநாயக சதுர்தி அன்று கோர்ட்மலை பிள்ளையார் ஆலயத்தில் அன்னதானத்தை வழங்குவதை இவர் வழக்கமாக கொண்டுள்ளார். இம்முறை 5,000 பக்தர்களுக்கு அன்னதானம் தயார் செய்யப்பட்டு பரிமாரப்பட்டது.

இன்று காலை நடைப்பெற்ற சிறப்பு பூஜையில் புக்கிட் அமான் குற்றவியல் பிரிவின் தலைமை இயக்குநர் டத்தோ குமார், இந்திய உலோகம் மறுசுழற்ச்சி உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் முத்தப்பன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நேற்று மாலை ஆலயத்தின் ரதம் ஊர்வலம் நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

ஷா ஆலம், ஆக.25-
ஷா ஆலம் செக்‌ஷன் 24இல் உள்ள கார் பட்டறையில் நேற்று ஏற்பட்ட தீச்சம்பவத்தில் 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீப்பற்றி சேதமடைந்தன.

இந்த தீச்சம்பவத்தில் அந்த பட்டறையில் வேலை செய்து வந்த 30 வயதுடைய உள்ளூர்வாசி தீக்காயங்களுக்குள்ளானதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மீட்புப் படையின் அமலாக்கப் பிரிவின் துணை இயக்குநர் அகமட் முக்லிஸ் தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து இரவு 11.31 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்தவுடன் ஷா ஆலம் மற்றும் புக்கிட் ஜெலுத்தோங் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்தனர். தீச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட பட்டறை 90 விழுக்காடு சேதமடைந்தது. மேலும் அந்த பட்டறையிலிருந்து 37 கார்களும் 7 மோட்டார் சைக்கிள்களும் தீயில் சேதமடைந்ததாக அவர் சொன்னார்.

நள்ளிரவு 12.26 மணிக்கு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பின்னர் அதிகாலை 2.31 தீயணைப்பு பணிகள் முடிவடைந்ததாக அவர் சொன்னார்.

 

கோலாலம்பூர், ஆக.25-

பாலஸ்தீன மக்களுக்கு, குறிப்பாக காசாவில் உள்ளவர்களுக்கு உதவுவதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்றிரவு கூடுதலாக வெ.100 மில்லியன் மானியத்தை அறிவித்தார்.

 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசாங்கம் அறிவித்த வெ.100 மில்லியன் நிதிக்கு கூடுதலாக இந்த ஒதுக்கீடு இருப்பதாக அன்வார் கூறினார்.

 

தான் எங்கு சென்றாலும்  பாலஸ்தீன சகோதரர்களை  ஒருபோதும் விட்டுச் செல்ல மாட்டேன். அவர்களுக்கு உதவுவேன் என அவர் மேடையில் கூறினார்.

 

மடானி அரசாங்கத்தின் சார்பாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெ.100 மில்லியன் நிதியை அரசு அங்கீகரித்தது.

 

நிதியின் தொடக்கமாக மலேசிய அரசாங்கம் வெ.100 மில்லியனை வழங்கும் என்று நேற்றிரவு அவர்  டத்தாரான் மெர்டேகாவில் நடந்த மலேசியாகு பெர்சாமா காசா ஒன்றுகூடல் மற்றும் பிரார்த்தனையில் கூறினார்.

 

மேலும் நாட்டிலுள்ள கோப்ராட் நிறுவனங்களும் காசா மக்களுக்கு உதவ முன்வர வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.


கோலாலம்பூர், ஆக.23-
செந்தூலிலுள்ள தம்புசாமி பிள்ளை தமிழ்ப்பள்ளியின் 81ஆம் ஆண்டு பள்ளிப் போட்டி விளையாட்டு இன்று நடைப்பெற்றது.

இந்த போட்டியில் சிவப்பு, நீலம், பச்சை என மூன்று அணிகளில் மாணவர்கள் இடம் பெற்று போட்டி விளையாட்டுகளில் கலந்து கொண்டனர்.

இம்முறை விளையாட்டு போட்டியின் இல்லங்கள் பழங்களை அடிப்படையாக கொண்டு அலங்காரம் செய்யப்பட்டதுடன் மாணவர்களும் கண்கவரும் வண்ணங்களில் உடை அணிந்து அணிவகுத்து சென்றனர்.

ஆரோக்கியமாக வாழ பழங்களை உண்பது அவசியம் எனும் கருப்பொருளில் சிவப்பு இல்லம் ஸ்ட்ராபெர்ரி பழத்தையும் நீல இல்லம் புலுபெர்ரி பழத்தையும் பச்சை இல்லம் அவகாடோ பழத்தையும் முன்னிரித்தி அலங்காரங்களை செய்திருந்தனர்.

மேலும் பள்ளியின் பாலர்ப்பள்ளி மாணவர்களும் அணிவகுப்பில் கலந்து கொண்டது சிறப்பாக இருந்தது.

பள்ளிகளில் நடக்கும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் கூட அதில் பெற்றோர்களின் பங்களிப்பு இருந்தால் மட்டுமே அது வெற்றிப்பெறும். மேலும் விளையாட்டு பற்றிய விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்தவும் அவர்கள் ஆரோக்கியமாக வாழ இதுபோன்ற போட்டி விளையாட்டுகள் நடத்தப்படுவதாக பள்ளியின் தலைமையாசிரியர் திரேசா அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

பெட்டலிங் ஜெயா, ஆக.21-
உலகமே டிஜிட்டல் உலக நோக்கி பயணிக்கும்போதும் நம் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அதிலிருந்து பின் தங்கிவிடக்கூடாது என்ற நோக்கத்தில் பெட்டாலிங் ஜெயாவிலுள்ள பிஜேஎஸ்1 தமிழ்ப்பள்ளிக்கு டத்தோ டி.மோகன் ஸ்மார்ட் டிஜிட்டல் பலகையை அன்பளிப்பாக வழங்கினார்.

நாட்டின் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் காலத்தில் கட்டப்பட்ட  6 புதிய தமிழ்ப்பள்ளிகளில் இந்த பள்ளியும் ஒன்றாகும். அந்த வகையில் அவருக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாக டத்தோ டி.மோகன் கூறினார்.

இந்த பள்ளிக்கு மேலும் 6 வகுப்பறைகளுக்கு ஸ்மார்ட் டிஜிட்டல் பலகைகள் தேவைப்படுகிறது. ஆகையால் நல்லுள்ளங்கள் இந்த தமிழ்ப்பள்ளிக்கு உதவ முன்வர வேண்டுமென அவர் கூறினார்.

டிஜிட்டல் உலகில் நாம் பயணிக்கும் நிலையில் தமிழ்ப்பள்ளிகளுக்கு இதுபோன்ற உதவிகளை மித்ரா (இந்தியர் உறுமாற்றம் திட்டம்) வழி செய்யலாமே என்ற கேள்விக்கு, இதனை முழுமையாக வரவேற்பதாக அவர் கூறியதுடன் பயன்படுத்தி முடிக்க முடியாத மித்ரா மானியங்கள் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என அவர் வலியுறுத்தினார்.

வரும் காலங்களில் டிஜிட்டல் முறையில்தான் கற்றல் கற்பித்தல் முறை நடத்தப்படும். புத்தகங்களின் பயன்பாடு குறைந்து விடும். ஆகையால் நம் மாணவர்கள் இந்த வளர்ச்சியில் ஒருபோதும் பின் தங்கிவிடக் கூடாது.

மேலும் இந்த பள்ளியில் அனைத்து அடிப்படை தேவைகள் செய்து தரப்பட்டுள்ளது. இருந்தபோதும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகதான் உள்ளது. ஆகையால் சுற்றுவட்டாரத்திலுள்ள மக்கள் நம் பிள்ளைகளை இந்த தமிழ்ப்பள்ளியில் சேர்க்கும்படியும் தமிழ்ப்பள்ளிகளுக்கு பெற்றோர்கள் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் டத்தோ டி.மோகன் கேட்டுக் கொண்டார்.

சிரம்பான் ஆகஸ்ட் - 17
இன்று நடைபெற்ற நெகரி செம்பிலான்  மாநில ம.இ.கா மாநாட்டில் சிறப்புரை ஆற்றிய ம.இ.காவின் தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன்
எதிரிகளின் கூச்சலை விட உறுப்பினர்களின் மவுனமே ஆபத்தானது  என தெரிவித்தார்.

ஆறுவது ஆண்டு காலம் ம.இ.கா என்ன செய்தது என நண்டு சிண்டு எல்லாம் பேசுகிறார்கள்.  "கிளை தொகுதி மாநில தலைவர்களே" ! குறை சொன்னவர்கள் இன்று தான்  மத்திய அரசாங்கத்தில் உள்ளனர் ,அதோடு 2008-க்கு  பிறகு தான் சிலாங்கூர் மற்றும் பினாங்கில் மாநிலத்தில்  ஆட்சியில் இருந்தனர்.

இனி தொகுதி மாநில ரீதியில் பட்டியலை எடுங்கள்  எடுத்து போடுங்கள்
ம .இ.கா என்ன என்ன செய்தது என்பதை பார்கட்டும்  சமுதாயம்.

எதிரிகளின் கூச்சலை விட உறுப்பினர்களின் மவுனமே ஆபத்தானது ! ஆகையால் இனியும் மவுனம் வேண்டாம்  பட்டியலை போடுங்கள் என்றார்.

தோட்ட புரத்தில் இருந்து வெளியே வந்த  இந்தியர்களுக்கு கைகொடுக்க TAFE கல்லூரி அதன் வாயிலாக வேலை வாய்ப்பு ,  மருத்துவத்திற்காக AIMST பல்கலைக்கழகம் அதன் மூலம் வேலை வாய்ப்பு, வசதி குறைந்த மாணவர்களுக்கு கல்வி கடன் உதவி , அதன் வாயிலாக உருவான பட்டதாரிகள் பல்லாயிரம்.

அதுமட்டுமா! ஆலயம், தமிழ் பள்ளி சீரமைப்பு ,மாணவர்களுக்கு கல்வி உதவி, இந்தியர்களுக்கு சமூகநல உதவி , என வட்டார ரீதியில்  ம.இ.கா செய்ததை பட்டியல் எடுங்கள் என்றார் டத்தோ ஸ்ரீ சரவணன்.

இதுவரை 240 மில்லியன் கல்வி கடன் உதவி செய்த நாங்களா திருடர்கள் ?  ஒன்றுமே செய்யாமல் குறையை மட்டும்  சொல்லி ஆட்சிக்கு வந்த இவர்களை பட்டியல் போட சொல்லுங்கள் என்றார் சரவணன்.

இது ம.இ.காவின் 40 ஆண்டு கால கல்வி புரட்சி  !

இனியும் மவுனம் வேண்டாம்,
எதிரிகளின் கூச்சலை விட உறுப்பினர்களின் மவுனமே ஆபத்தானது !

அவர்களின்  வாயை அடைக்கும் வகையில் பட்டியலை திரட்டுங்கள் என்றார் டத்தோ ஸ்ரீ சரவணன்.

செய்தி ; வெற்றி விக்டர்/ காளிதாசன் இளங்கோவன்

சிரம்பான் ஆகஸ்ட்-17
ம.இ.காவின் நெகரி செம்பிலான் மாநிலத்தின் 79 பேராளர் மாநாட்டை ம.இ.காவின் தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் இன்று தொடக்கி வைத்தார்.

சிறப்புரை ஆற்றிய அவர் பேசுகையில்
இந்த ஒற்றுமை அரசாங்கத்தை  அமைக்கும் போது ம.இ.காவின் தலைவர் டான் ஸ்ரீ.விக்னேஸ்வரன் ம.இ.காவுக்கு எத்தனை பதவி வேண்டும் என்று  அழுத்தம் கொடுக்கவில்லை கோரவில்லை.

ஆனால் இந்திய சமுதாயத்தை பிரதிநிதிக்கும் கட்சி என்ற முறையில் ம.இ.காவிற்கு அவர்கள் அமைச்சரவை பதவி கொடுத்திருக்க வேண்டும். அந்த கடமை அவர்களுக்கு இருந்திருக்க வேண்டும் என்றார்.

அந்த வகையில் ம.இ.கா  பொருமை காத்து இந்த அரசுக்கு ஆதரவு கொடுத்தது. அதன் பின் மாநில தேர்தல் நடந்த போது  கண் துடைப்புக்கு ம.இ.கா எத்தனை இடத்தில் போட்டியிட விரும்புவதாக கடமைக்கு ஒரு பெயர் பட்டியலை கேட்டு ,ரமணா படத்தில் வருவது போல் பரபரப்பை காட்டி இறுதியாக  அவர்களே ஒரு முடிவை எடுத்துக்கொண்டனர். பிறகு இந்த முடிவுக்கு வருந்துகிறோம் என சொல்லி ம.இ.கா வெற்றிப்பெற்ற ஒரு சட்ட மன்றத்தில் மட்டுமே  போட்டியிட சொன்னார்கள் அதுவும் இறுதி நேரத்தில்.

அப்போது ம.இ.கா அந்த தேர்தலை புறக்கணித்தது , உடனே ம.இ.கா அலுவலகத்தை தேடி வந்தார் பிரதமர் , இந்த தேர்தலில் உங்கள் ஒத்துழைப்பு தேவை எனக்கு தெரியும் என்ன செய்ய வேண்டும் என்று  பிரதமர்  ம.இ.கா உறுப்பினர்கள் மத்தியில்  சொன்னார்.

தேர்தல் முடிந்த பின் அவரும் அமைதியானார், ஒரு அமைச்சரவை மாற்றம்  அதிலிலும் ம.இ.கா அங்கம் வகிக்க வில்லை.

அதன் பின் ம.இ.காவின் கட்டிட அடிகள் நாட்டு விழாவிற்கு தேசிய முன்னணியின் தலைவரும் துணை பிரதமருமான டத்தோ ஸ்ரீ ஷாஹிட் ஹமிடி வருகை தந்தார். அப்போதும் இந்தியர்கள் விவகாரங்களை பேச அமைச்சரவையில்  இந்திய பிரதிநிதி இருக்க வேண்டும்  என்ற கோரிக்கையை முன் வைத்தோம்.

அவரும் சொன்னார் கவலை வேண்டாம் எனக்கு தெரியும் என்ன செய்யனும் என்று. அப்போது இவர்கள் இருவரும்   " செய்யனும்" என்று சொன்ன வார்த்தைக்கு இப்போது தான் அர்த்தமே புரிந்தது.
நல்லா செய்தார்கள் என்றார் டத்தோ ஸ்ரீ சரவணன்.

ம.இ.கா அதன் அரசியல் எதிர்காலத்தை   அடுத்த நிலைக்கு எடுத்து செல்லவேண்டிய கட்டாயத்தை  இவர்கள் உருவாக்கி விட்டனர்.

விரைவில் ம.இ.கா அதன் அடுத்த அரசியல் பயணத்திற்கான முடிவை எடுக்கும் என டத்தோ ஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.

செய்தி :வெற்றி விக்டர் / காளிதாசன் இளங்கோவன்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 17-
நாட்டில் தொடர்ந்து நடைபெறும் பகிடிவதை சம்பவங்களால் அதிகமான உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகின்றன.

இதைத் தடுக்கும் வகையில் அரசு உடனடியாக துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதி போராட்டம்  நடத்தப்படும் என மலேசிய பெர்சத்து ஒருங்கிணைப்பு நிர்வாகக் குழுவின் செலாயாங் தொகுதி ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் ரீஜன் குமார் ரத்ணம் தெரிவித்தார்.

அண்மையில் மட்டும், இந்த பகிடிவதையால் இரண்டு உயிரிழப்புகள் உட்பட பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், ரவாங் பகுதியில் தனது தலைமையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கோரி அமைதி போராட்டம் நடத்தியதாக ரீஜன் தெரிவித்தார்.

மேலும், பகிடிவதையில் உயிரிழந்த தவனேஷ்வரிக்கு ஆதரவாக சமூக சேவகர் ஜனா தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அவரது போராட்டம் நியாயமானதாகும்; அவருடன் இணைந்து நாங்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை குரல் கொடுப்போம் என ரீஜன் உறுதியளித்தார்.

இந்த வகையான சம்பவங்கள் இன, மத பேதமின்றி அனைவரையும் பாதிக்கக்கூடியது என்பதால் அரசு உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சமூகத்தில் ஏற்படும் பகிடிவதை மற்றும் துன்புறுத்தலை ஒழிக்க சட்ட அமலாக்கத்தை வலுப்படுத்துவதும் அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களுக்கு பகிடிவதை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

அத்துடன், சமூக ஊடகங்கள் மூலமாகவும் பல பகிடிவதைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இணையப் பகிடிவதையால் கூட உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன என்பது கவலைக்குரியது. நாளுக்கு நாள் இந்த பிரச்சினை சமூகத்தை தீவிரமாகப் பாதித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

-காளிதாசன் இளங்கோவன்


கோலாலம்பூர், ஆக.15-

POP எண்டர்டெயின்மென்ட் ஏற்பாட்டில் பிரபல திரைப்பட பாடகி சின்மயி ஸ்ரீபாதா தலைமையில் முத்த மழை  எனும்  இசை நிகழ்ச்சி இம்மாதம் ஆகஸ்ட் 30ஆம் தேதி கோலாலம்பூரில் உள்ள Zepp அரங்கத்தில்  நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பாடகர்கள் அஜய் கிருஷ்ணா மற்றும் ஸ்ரீகாந்த் ஹரிஹரன் இணைந்து பாடவுள்ளனர். மாலை 7 மணிக்கு இந்த இசை நிகழ்ச்சி தொடங்கப்படும்.
இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள ஆர்வமுள்ள பொதுமக்கள்  Great Ticket அகபக்கத்தின் மூலம் டிக்கேட்டுகளை வாங்கிக்கொள்ளலாம். 

மேலும் கூடுதல் தகவல் பெறுவதற்கு வாட்ஸ் ஆப் ஹாட்லைன் 017-308 9994  என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

கோலாலம்பூர், ஆக. 11-

பகிடிவதையால் நாட்டில் தொடர்ந்து ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில் அரசாங்கம் துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலேசிய பெர்சத்து ஒருங்கிணைப்பு நிர்வாக குழுவின்
செலாயாங் தொகுதி ஒருங்கிணைப்பு  குழுத் தலைவர் ரீஜன் குமார் ரத்ணம் வலியுறுத்தினார்.

அண்மையில் இணையத் துன்புறுத்தலின் விளைவாக இரண்டு உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. அதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தவனேஷ்வரி மற்றும் ஜாரா கைரினா மகாதீர்  ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

இத்தகைய சம்பவங்கள் இன, மத பேதமின்றி அனைவரையும் பாதிக்கக்கூடியது என்பதால் அரசாங்கம் உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

அத்துடன், சமூகத்தில் ஏற்படும் பகிடிவதை மற்றும் துன்புறுத்தலை ஒழிக்க சட்ட அமலாக்கத்தை வலுப்படுத்துவதும் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

தற்பொழுது பகிடிவதை அதிகமாக ஏற்படும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் மத்தியில் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டங்களை அரசு அமல்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் சமூக ஊடகங்களின் வழியாகவும் நிறைய பகடிவதைகள் நிகழ்ந்து வருகிறது. இதற்கு முன்னதாக இணைய பகடிவதையாளும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்ப்பட்டுள்ளது. ஆகவே நாளுக்கு நாள் இதன் தாக்கம் நமது சமுதாயத்தை பெரிதளவில் பாதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கோலாலம்பூர், ஆக.11-

தமிழகத்திலிருந்து புத்தகங்களை தருவித்து இங்கு விற்பனை செய்து வரும் முதன்மை நிறுவனமான ஜெயபக்தி நிறுவனம், தற்போது மும்மொழியில் திருக்குறள் நூலை வெளியீடு செய்யவுள்ளது.

இந்த புத்தகத்தை வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தில் ஜெயபக்தி நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக இந்த முயற்சியை முன்னெடுத்து தற்போது மும்மொழியில் திருக்குறள் நூலை வெளியிடவுள்ளது.

இந்த புத்தகம் முழு வண்ணத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுதான் நாட்டில் முதல் மும்மொழி திருக்குறள் நூல் இதுவாகும் என்றும் இந்த நூல் அறிமுக விழா கூடிய விரைவில் நடத்தப்படும் என்றும் ஜெயபக்தி நிறுவனத்தின் தோற்றுநர் கு.செல்வராஜூ தெரிவித்தார்.

இந்த புத்தகத்தில் திருக்குறள் தமிழ், ஆங்கிலம், மலாய் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மூன்று மொழிகளில் தனித் தனி நூல்கள் வெளியிடப்படவுள்ளது.

ஆகையால் வாழ்வியலை நமக்கு சொல்லித் தரும் இந்த அருமையான புத்தகம் ஒவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டும் என அவர் சொன்னார்.

இதற்கிடையில், நாட்டில் பல சிறு வணிகர்கள் புத்தக விற்பனையை செய்து வருகின்றனர். வெளிநாட்டிலிருந்து புத்தகங்களை தருவிப்பதில் அவர்கள் பல இன்னல்களை எதிர்கொள்கின்றனர். அவர்களுக்கு உதவியாகவும் உறுதுணையாக இருக்கும் பட்சத்தில் அடுத்த மாதம் முதல் ஜெயபக்தியில் மொத்த விற்பனையில் புத்தகங்கள் விற்கப்படவுள்ளதாகவும் டத்தோ கு.செல்வராஜூ தெரிவித்தார்.

மேலும் ஆடி மாத இறுதி வெள்ளியான இம்மாதம் 15ஆம் தேதி ஜாலான் ஈப்போ, ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் 108 சங்காபிஷேகமும் சண்முகார்ச்சனையும் நடைப்பெறவுள்ளதால் பக்தர்கள் திரளாக வந்து கலந்து கொள்ளும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.


ஷா ஆலம், ஆக.10-
இளம் சாதனையாளர்களை கௌரவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கோல்டன் எம்பாயர் மீடியா ஏற்பாட்டில் 60 இளம் சாதனையாளர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இளம் சாதனையாளர்களுக்கு ஊக்குவிப்பு அளிக்கும் வகையில் இந்த விருது விழாவை ஏற்பாடு செய்ததாக கோல்டன் எம்பாயர் மீடியா நிறுவனத்தின் தோற்றுநர் மகேந்திரன் தெரிவித்தார்.

இந்த விருது விழாவில் கல்வி, விளையாட்டு, கலைத் துறைகளில் சாதனைப்படைத்த இளம் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த விருது விழாவிற்கு பல நல்லுள்ளங்கள் பலர் தனக்கு உதவி கரம் நீட்டியதாகவும் விருது பெற்ற பிள்ளைகளின் பெற்றோரும் முழு ஆதரவு வழங்கியதாக மகேந்திரன் தெரிவித்தார்.

இளம் வயதில் சாதனை படைத்துள்ள இந்த சிறுவர்களை தொடர்ந்து நாம் அங்கீகரிக்க வேண்டும். இந்த அங்கீகாரம் அவர்களை எதிர்காலத்திலும் பல சாதனைகளை புரிய வழிவகுக்கும் என அவர் சொன்னார்.  

இந்த நிறுவனத்தின் ஏற்பாட்டில் இதற்கு முன்பு பெண்களை கௌரவிக்கும் வகையில் சாதனை பெண்கள் விருதுகள் வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த விருது விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டத்தோ சூரியா பிரகாஷ் கோல்டன் எம்பாயர் மீடியா செண். பெர்ஹாட் நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.


ஷா ஆலம், ஆக.10-
இந்திய திருமண ஏற்பாடுகளை செய்யும் தொழில் துறையில் உள்ள அணைவரையும் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைக்கும் முயற்சியில் WPAM அமைப்பு அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்று  அதன் தலைவர் வேதகுமார் ராஜகோபால் தெரிவித்தார்.

இந்த அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று இரண்டாம் ஆண்டாக ஷா ஆலம் டிஎஸ்ஆர் மாநாட்டு மண்டபத்தில் மாபெரும் ஒன்றுக்கூடல் விருந்து உபசரிப்பு  சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இந்த தொழில் துறையை சார்ந்த 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார் அவர்.

இந்திய திருமண தொழில் துறையை சார்ந்தவர்களின் நலனை காக்க இந்த அமைப்பு முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ளது.

புகைப்படக் கலைஞர்கள், திட்டமிடுபவர்கள், அலங்கார நிபுணர்கள், உணவு பரிமாறுபவர்கள், வடிவமைப்பாளர்கள், கலைஞர்கள், ஒப்பனையாளர்கள் உள்ளிட்ட திருமணத் துறையில் ஈடுபட்டுள்ள அனைவரையும் இந்த அமைப்பு ஒன்றிணைக்கிறது.

இந்த துறையை சார்ந்தவர்கள் எதிர்க்கொள்ளும் சவால்கள், பிரச்சினைகள் ஆகியவற்றை கலந்து பேசிய அதனை களைவதே இந்த அமைப்பின் முதல் நோக்கமாகும்.

மேலும் எங்களின் தேவைகளை அரசாங்கத்திடம் கேட்டு பெருவதற்கும் இந்த அமைப்பு உறுதுணையாக இருக்கும்.


அனைவரின் நலனை காக்க இந்த அமைப்பு பாடுபடும் என்று அவர் தெரிவித்தார்.

மேம்பாட்டு தொழில் முனைவோர் அமைச்சு மூலம் பல நல்ல திட்டங்களை முன்னெடுக்க இந்த அமைப்பு பாடுபடும்.

மேலும் தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு  துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் மற்றும் அவரின் தனி சிறப்பு அதிகாரி டத்தோ அன்புமணி பாலன் ஆகியோரின் உதவியுடன் உறுப்பினர்களுக்கு தெங்குன் கடனுதவி பெற்று தர ஏற்பாடுகளை செய்வோம் என்றார் அவர்.

திருமண ஏற்பாட்டுக்கான விலை கட்டுப்பாடு மற்றும் சுற்றுலா வீசாவில் வந்த இங்கு திருமண தொழில்துறையில் சம்பாதிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பது போன்ற பல தரப்பட்ட விஷசங்களை முன்னெடுக்கவுள்ளாதாக அவர் கூறினார்.

Recent News