loader
லுசிந்தரா பிள்ளை சட்டத் துறையில் சிறந்த தேர்ச்சியோடு முதுகலை பட்டம் பெற்றார்

லுசிந்தரா பிள்ளை சட்டத் துறையில் சிறந்த தேர்ச்சியோடு முதுகலை பட்டம் பெற்றார்

கோலாலம்பூர், டிச 9-
ஜோகூர், மூவார் பகுதியை பூர்வீகமாக கொண்ட பேராக் மாநில சொக்சோ துறை அதிகாரி உமாதாஸ் பிள்ளை மற்றும் சரஸ்வதி தேவி தம்பதியரின் புதல்வி லுசிந்தரா பிள்ளை அண்மையில் மலாயா பல்கலைகழத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறந்த தேர்ச்சியோடு சட்டத் துறையில் முதுகலை பட்டம் பெற்றார்.

அவர் நேரத்தை சிறப்பாக நிர்வாகித்து படித்து முதுகலை கல்வியை அவர் நிறைவு செய்துள்ளார்.

அதே வேளை, லுசிந்திரா பிள்ளை வழக்கறிஞராகவும் பணிபுரித்து வருகிறார்.

அடுத்து, சட்டத்துறையில் முனைவர் பட்டப் படிப்பையும் தொடரவிருப்பதாக கூறினார்.

மேலும் தன்னுடைய குடும்பத்தினரின் ஊக்குவிப்பினால் தாம் முதுகலை படிப்பை நிறைவு செய்துள்ளதை தொடர்ந்து இறைவனுக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும், அவருடைய முதுகலை பட்டப் படிப்பு சுமூகமாக நிறைவுப் பெற விரிவுரையாளர்களும் நண்பர்களும் உறுத்துணையாக இருந்தாக அவர் குறிப்பிட்டார்.

0 Comments

leave a reply

Recent News