loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

கோலாலம்பூர், டிச. 19-
சிங்கப்பூரில் வேலை செய்யும் 4 லட்சத்திற்கும் அதிகமான  மலேசியத் தொழிலாளர்களை பாதுகாக்க புதிய காப்புறுதி திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இன்று உறுதி அளித்தார்.

மனிதவள அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்ட அவர், இன்று சொக்சோ தலைமையகத்திற்கு அதிகாரப்பூர்வமாக மேற்கொண்ட வருகையின் போது இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

சொக்சோவின்கீழ் உள்ள நான்கு சட்டங்களை உள்ளடக்கிய அனைத்து சலுகை விண்ணப்பங்களையும் அடுத்த மாதம் முதல் முழுமையாக இணையத்தில் சமர்ப்பிக்கலாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த நடவடிக்கை பங்களிப்பாளர்களுக்கு விஷயங்களை எளிதாக்குவது மட்டுமல்லாமல், அவர்கள் இனி சொக்சோ அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டியதில்லை என்பதால் நேரத்தை மிச்சப்படுத்த முடியும்.

நாட்டில் உள்ள 10 மில்லியனுக்கும் அதிகமான முறையான, முறைசாரா துறை தொழிலாளர்களுக்கு சிறந்த சேவையை உறுதி செய்வதற்காக, அனைத்து சலுகை விண்ணப்பங்களையும் இணையத்தில் பதிவு செய்ய அனுமதிக்குமாறு சொக்சோவுக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன்.

இது ஊழியர்களின் சமூகப் பாதுகாப்புச் சட்டம் 1969 (சட்டம் 4), சுயதொழில் செய்பவர்களின் சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2017 (சட்டம் 789), வேலைவாய்ப்பு காப்பீட்டு அமைப்புச் சட்டம் 2017 (சட்டம் 800), இல்லத்தரசிகள் சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2022 (சட்டம் 838) ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

ஜொகூர் காஸ்வேயைக் கடக்கும் கிட்டத்தட்ட 400,000 உள்ளூர் தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்புப் பெறுவதில் இருந்து விடுபடாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, அடுத்த ஆண்டு முதல் ஒரு சாத்தியக்கூறு ஆய்வின் மூலம் முன்னோடியாக காப்புறுதித் திட்டத்தை செயல்படுத்துவ தாக அவர் சொன்னார்.

புதிய மனிதவள அமைச்சராக, தொழிலாளர்களின் நலனுக்காக 24 மணி நேர பாதுகாப்புத் திட்டம் தொடர்ச்சியாகவும், சுமூகமாகவும், திறம்படவும் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கும், வேலை நேரத்திற்கு வெளியே விபத்துகள் ஏற்பட்டால் அவர்களைப் பாதுகாப்பதற்கும் நான் உறுதி கொண்டுள்ளேன் என்றார்.

பெட்டாலிங் ஜெயா, டிச. 16-
தேசிய வகை எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளியின்   பசுமை மூலிகைப் பூங்கா கண்காட்சி  திட்டத்தில்  மூலிகைப் பூங்கா மற்றும் ஆய்வுக்கண்காட்சி மிகச் சிறப்பாக இன்று டிசம்பர் 16 ஆம் திகதி பள்ளியில்  நடைபெற்றது.

விழாவின் சிறப்பு வருகையாளராக பெட்டாலிங் உத்தாமா மாவட்டத்தின் இடைநிலை & படிவம் 6 க்கான உதவி அதிகாரியுமான மதிப்புமிகு குஹானிஸ் பிந்தி முகமட் சைன் அவர்கள் கலந்துக்கொண்டு நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

அனைத்து பள்ளிகளும் மூலிகைத் தாவரங்களின்  மகிமையைப் போற்றும்  நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
மாணவர்கள்  வகுப்பறைக் கற்றல் நடவடிக்கையில் மட்டும் ஈடுபட்டால் போதாது ,மாறாக வாழ்வியல் தொடர்பான பயனுள்ள நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தினார்.

ஆண்டு இறுதியில் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த எப்பிங்காம்  ஆசிரியர்கள் மேற்கொண்ட நடவடிக்கை மிகவும் பாராட்டுக்குறியது. அந்த வகையில் பள்ளியின் தலைமையாசிரியர் முனைவர்  வீ. சுகுணவதி அவர்கள் தமது சிறப்புரையில் ஆண்டு இறுதியில்  பள்ளி மாணவர்களின் வருகையை  அதிகரிக்கச் செய்ய இந்நடவடிக்கை எங்களுக்கு பெரிதும் துணை புரிந்தது என்றார்.

எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் மாணவர்களிடம் அதிக ஆற்றல் உள்ளது. அதனை வெளிக்கொணரவே  மூலிகைத் தாவரங்களின் மகிமையை ஒட்டி மாணவர்களுக்கு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. காய்கறிகள் சாப்பிடுவது என்றால் பிள்ளைகளுக்குப் பிடிக்காது. அதனை எவ்வாறு சத்துள்ள உணவாக மாற்றி உண்ணலாம் என்பதை இந்நிகழ்வின் வழி மாணவர்கள் அறிந்துக் கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வின் மற்றும் ஒரு சிறப்பு அம்சமாக மாணவர்கள் மூலிகைத் தாவரங்கள் அதில் உருவாக்கக் கூடிய மூலிகைப் பொருட்கள் தொடர்பான விளக்கங்களைப் பெற்றுக்கொண்டனர்.

அனைவரும் எதிர்வரும் காலங்களில் மேலும் அதிக தன்முனைப்போடு  இந்நடவடிக்கையில் ஈடுபட்டு பள்ளிக்கு பெருமை சேர்ப்பர் என்று எதிர்பார்ப்பதாகக் நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுத் தலைவரான குமாரி கார்த்தினா ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஒவ்வொரு ஆண்டுக்கும் இரண்டு வகை மூலிகைத் தாவரங்கள் கொடுக்கப்பட்டது.
ஏறக்குறைய 4 மாதங்கள் மூலிகை தாவரம் உருவாக்கவும் மூலிகைப் பொருட்கள் தயாரிக்க மாணவரைத் தயார் படுத்தவும் எடுத்துக் கொள்ளப்பட்டது.பாலர் பள்ளி முதல் ஆண்டு 6 வரையிலான மாணவர்கள்  மூலிகைத் தாவரத்தில் பொருட்கள் செய்யும் நடவடிக்கையில் கலந்துக் கொண்டனர். நிகழ்வில் மாணவரின் பார்வைக்காக பிராணிகளின் கண்காட்சி இடம்பெற்றது மிகவும் சிறப்பாக அமைந்தது. கற்பித்தல் மூலம் வடிவமைப்பு (KmR), திட்ட அடிப்படையிலான கற்றல் (PBL), TS25 திட்டத்தில்  மூலிகைப் பூங்கா மற்றும் ஆய்வுக்கண்காட்சியும் மிகச் சிறப்பாக   நடந்தது.

அனைவரும் எதிர்வரும் காலங்களில் மேலும் அதிக தன்முனைப்போடு  இந்நடவடிக்கையில் ஈடுபட்டு பள்ளிக்கு பெருமை சேர்ப்பர் என்று எதிர்பார்ப்பதாகக் கூறினார். ஒவ்வொரு ஆண்டுக்கும் இரண்டு வகை மூலிகைத் தாவரங்கள் கொடுக்கப்பட்டது.
ஏறக்குறைய 4 மாதங்கள் மூலிகை தாவரம் உருவாக்கவும் மூலிகைப் பொருட்கள் தயாரிக்க மாணவரைத் தயார் படுத்தவும் எடுத்துக் கொள்ளப்பட்டது.பாலர் பள்ளி முதல் ஆண்டு 6 வரையிலான மாணவர்கள்  மூலிகைத் தாவரத்தில் பொருட்கள் செய்யும் நடவடிக்கையில் கலந்துக் கொண்டனர். நிகழ்வில் மாணவரின் பார்வைக்காக பிராணிகளின் கண்காட்சி இடம்பெற்றது மிகவும் சிறப்பாக அமைந்தது.

புதிய அமைச்சரவையின் மாற்றத்தை பிரதமர் அறிவித்துள்ளார். இதில் சில அமைச்சர் மற்றும் துணையமைச்சர் பதவிகள் மாற்றப்பட்டன.

அந்த வகையில் இந்திய அமைச்சர்கள் கைவசம் இருந்த மனிதள அமைச்சு இதற்கு முன்னர் மாற்றம் கண்டது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய அறிவிப்பில் அந்த பதவி மீண்டும் இந்தியரின் கைவசம் திரும்பியது.

இதற்கு முன்னர் தொழில்முனைவோர்  மேம்பாட்டு மற்றும் கூட்டுறவு துணை அமைச்சராக பதவி வகித்த டத்தோஸ்ரீ ரமணன் தற்போது மனிதவள அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் இந்த அமைச்சர் பதவியை ஜசெகவை சேர்ந்த ஸ்டீவன் சிம் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலாலம்பூர், டிச.16-
இந்திய சமுதாயத்திற்காக தைரியமாக குரல் கொடுப்பதற்கு மஇகாதான் இருக்கிறது என்பதை இந்திய மக்கள் உணர்ந்து விட்டனர் என மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

மஇகாவிற்கு அரசாங்கத்தில் எந்த பதவியும் இல்லாதபோதும் கட்சி முறையாக செயல்பட்டு வருகிறது. கட்சியை வலுப்படுத்தும் வகையில் பல சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் தற்போது மஇகா வலுவான கட்சியாக செயல்படுகிறது.

ஆகையால் கட்சியின் தொகுதி மற்றும் கிளைத் தலைவர்களும் செயலவை உறுப்பினர்களும் மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் அதிக நாட்டம் செலுத்த வேண்டுமென அவர் சொன்னார்.

இதற்கிடையில் கட்சியை வலுப்படுத்துவதற்கு தன்னுடன் இணைந்து தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணனும் அதிகம் பாடுபட்டு வருகிறார். ஆகையால் அவருக்கு நான் கடமை பட்டுள்ளதாக டான்ஸ்ரீ விக்கி தெரிவித்தார்.

கட்சியின் தேசியத் துணைத் தலைவர் ஏற்பாட்டில் இன்று நேதாஜி மண்டபத்தில் கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனின் 60ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாக நடைப்பெற்றது.

மற்ற கட்சிகளின் மாநாட்டில் கலந்து கொண்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையை காட்டிலும் இன்று டான்ஸ்ரீ-இன் பிறந்த நாள் விழாவில் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளதாக கூறிய டத்தோஸ்ரீ எம்.சரவணன், தெரிந்திருந்தால் தேசிய முன்னணியின் தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹிட்டை இந்த கூட்டத்திற்கு அழைத்து அரசியல் அறிவிப்பை செய்திருக்கலாம் என நகைச்சுவையாக கூறினார்.

டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தலைமையில் கட்சி சிறப்பாக செயல்பட்டு வருவதை இந்த கூட்டம் உணர்த்துவதாக அவர் சொன்னார்.

டான்ஸ்ரீ பிறந்தநாளை முன்னிட்டு இந்த நிகழ்ச்சியில் சிறப்பு பிரமுகராக கவிபேரரசு வைரமுத்து கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.