loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

கிள்ளான், நவ 1-
நாடு முழுவதும் உள்ள வீடுகளை ஒளியின் திருநாள் ஒளிரச் செய்யும் வேளையில், மெக்டொனால்ட்ஸ் மலேசியா (McDonald’s Malaysia) தனது மெக்டி தீபாவளி திறந்த இல்லத்தை 14 இடங்களில் ஒற்றுமையுடன் மகிழ்ச்சி உணர்வில் ஒன்றிணைத்தது. சீனப் புத்தாண்டு, ஹரி ராயா, கவாய் மற்றும் காமாடன் ஆகியவற்றிற்கான அதன் முந்தைய பண்டிகை திறந்த இல்லங்களின் வெற்றியைக் கட்டியெழுப்ப, இந்த நாடு தழுவிய முயற்சி, அனைத்து தரப்பு மலேசியர்களையும் கொண்டாட்டம் மற்றும் சமூக உணர்வில் ஒன்றிணைக்கும் பிராண்டின் (McDonald’s) பாரம்பரியத்தைத் தொடர்கிறது.

அக்டோபர் 24 அன்று கிள்ளான் பண்டார் புத்திரி கால்டெக்ஸ்லில் அமைந்துள்ள மெக்டொனால்ட்ஸ் (McDonald’s Caltex Bandar Puteri Klang Drive Thru) தொடங்கி, மெக்டொனால்ட்ஸ் பத்து கேவ்ஸ் (McDonald’s Batu Caves Drive Thru),  மெக்டொனால்ட்ஸ் கிரீன்லேன் (McDonald’s Greenlane Drive Thru), மற்றும் மெக்டொனால்ட்ஸ் ஜாலான் ரெக்கோ (McDonald’s Jalan Reko) ஆகியவற்றில் ஒரே நேரத்தில் திறந்த இல்லங்களுடன், பின்னர் நாடு முழுவதும் உள்ள மற்ற இடங்களிலும் நடைபெற்றது.

ஒவ்வொரு கொண்டாட்டத்திலும் பண்டிகை நடவடிக்கைகள், வேடிக்கை நிறைந்த விளையாட்டுகள் மற்றும் ஆப்பிள் பைஸ் (Apple Pies) மற்றும் ஒரு கோகோ கோலா கேனுடன் முழுமையான 1,500 ஸ்பைசி சிக்கன் (கார கோழி / Spicy Chicken) மெக்டீலக்ஸ் உணவுகள் விநியோகம் செய்யப்பட்டன. நாடு முழுவதும் 21,000 க்கும் மேற்பட்ட உணவுகள் பகிரப்பட்டன.

கிள்ளான் பண்டார் புத்திரி கால்டெக்ஸ் மெக்டொனால்ட்ஸ்  (McDonald’s Caltex Bandar Puteri Klang Drive Thru) நடைபெற்ற பிரமாண்டமான கொண்டாட்டம் முக்கிய நிகழ்வாக விளங்கியது. பாரம்பரிய மற்றும் நவீன கலாச்சார நிகழ்ச்சிகளின் அற்புதமான வரிசை மூலம் மலேசியாவின் வளமான பன்முகத்தன்மையை வெளிப்படுத்தியது.

மேலும் சாந்தேஷ், யோகி பி, பாலன் காஷ் மற்றும் அமோஸ் பால் போன்ற பிரபலமான உள்ளூர் கலைஞர்களின் கூட்டத்தை மகிழ்விக்கும் தோற்றங்களும் இதில் அடங்கும்.

"இந்த ஆண்டு எங்கள் திறந்த தீபாவளி கொண்டாட்டம் வெறும் ஒரு பண்டிகை மட்டுமல்ல – இது மலேசியாவை உண்மையிலேயே சிறப்பானதாக்குவதைக் கொண்டாடும் தருணத்தைப் பற்றியது: நமது பன்முகத்தன்மை, ஒருமைப்பாடு மற்றும் ஒருங்கிணைந்த ஆனந்தம்," என்று மெக்டொனால்ட்ஸ் மலேசியாவின் நிர்வாக இயக்குநரும் உள்ளூர் செயல்பாட்டு கூட்டாளருமான டத்தோ ஹாஜி அஸ்மிர் ஜாஃபர் கூறினார்.

"மலேசியர்களுடன் இணைந்து வளர்ந்த ஒரு பிராண்டாக, நம் தேசத்தை உருவாக்கும் ஒவ்வொரு கலாச்சாரத்தையும் சமூகத்தையும் கொண்டாடுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.

தீபாவளி என்பது ஒளி, கருணை மற்றும் ஒற்றுமை எவ்வாறு நம் அனைவரையும் ஒரே குடும்பமாக நெருக்கமாகக் கொண்டுவரும் என்பதற்கான ஒரு அற்புதமான நினைவூட்டலாகும்."

கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மெக்டொனால்ட்ஸ் மலேசியா மற்றும் ரொனால்ட் மெக்டொனால்ட்ஸ் ஹவுஸ் அறக்கட்டளைகள் (RMHC Malaysia) ஆகியவை நாடு முழுவதும் உள்ள 120 அனாதை இல்லங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு பிறந்தநாள் விழாக்களை நடத்துகின்றன, இது ஒவ்வொரு குழந்தையும் மகிழ்ச்சியும் சேர்ந்துணர்வும் கொண்ட ஒரு தருணத்திற்கு உரியவனென்பதற்கான நம்பிக்கையை வலுப்படுத்துகிறது.

“மெக்டொனால்ட்ஸ் மலேசியாவில், நாங்கள் வெறும் உணவகம் மட்டுமல்ல - மக்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களை இணைக்கும் இடமாக இருக்கிறோம்," என்று டத்தோ ஹாஜி அஸ்மிர் மேலும் கூறினார்.

"இந்த நாடு தழுவிய கொண்டாட்டத்தை பல குடும்பங்களுக்கு அர்த்தமுள்ளதாக மாற்றிய எங்கள் குழு உறுப்பினர்கள், கூட்டாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்."

அதன் தீபாவளி திறந்த இல்லத்தின் மூலம், மெக்டொனால்ட்ஸ் மலேசியா ஒரு சமூகத்தின் வளர்ச்சியில் பங்காற்றும் கூட்டாளராக அதன் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தியுள்ளது. மலேசியாவின் வளமான பன்முகத்தன்மையைக் கொண்டாடுகிறது மற்றும் அனைவருக்கும் அக்கறை மற்றும் இரக்கத்தை ஆதரிக்கிறது.

தீபாவளி பண்டிகையைத் தாண்டி, நாடு முழுவதும் உள்ள 370 க்கும் மேற்பட்ட உணவகங்களின் வலையமைப்பால் ஆண்டுதோறும் நடத்தப்படும் 10,000 க்கும் மேற்பட்ட சமூக நடவடிக்கைகள் மூலம் மெக்டொனால்ட்ஸ் மலேசியா ஒரு சமூக  பங்காளியாக தனது பங்கைத் தொடர்ந்து வெளிப்படுத்துகிறது. உள்ளூர் ஈடுபாடுகள் முதல் நலன்புரி இல்லங்கள், பள்ளிகள் மற்றும் அரசு நிறுவனங்களுடனான ஒத்துழைப்புகள் வரை, இந்த முயற்சிகள் மெக்டொனால்ட்ஸ் மலேசியாவின் அக்கறை, உள்ளடக்கம் மற்றும் சமூகப் பொறுப்பு ஆகியவற்றில் தொடர்ந்து கொண்டிருக்கும் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன.

சிகாமாட், அக்.30-
பத்து அன்னாம் பகுதியில் நடைபெற்ற சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியின் மடானி தீபாவளி பொது உபசரிப்பு நிகழ்ச்சியில் அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் யுனேஸ்வரன் உயர்க்கல்வியைத் தொடரவிற்கும் மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கினார்.

உள்ளூர் மக்களுடன் தீபாவளி பெருநாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடியது மட்டுமல்லாமல் உயர்க்கல்வி பயில நிதி உதவி தேவைப்படும் எஸ்பிஎம், எஸ்டிபிஎம் தேர்வுகளில் சிறந்த தேர்ச்சிப் பெற்ற சுமார் 12 மாணவர்களுக்கு யுனேஸ்வரன் நிதியுதவி வழங்கினார்.

கல்விக்குத் தான் எப்பொழுதும் முன்னுரிமை வழங்குவதாகவும் சமூக, இன வேறுபாடு இல்லாமல் அனைவரும் கல்வி கற்பது அவசியம் என்றும் அவர் கூறினார்.

இம்மாணவர்கள் தங்களது கல்வியில் தொடர்ந்து கவனம் செலுத்தி, பெற்றோர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் சிறந்த வெற்றிகளை அடைய வேண்டும் என்று தாம் மனமார வாழ்த்துவதாகவும்  அவர் நெகிழ்ச்சியுடன் தனது சமூக ஊடகப்பதிவில் தெரிவித்தார்.

கோலாலம்பூர், அக். 29-
47 ஆவது ஆசியான் உச்சிமாநாடு குறித்து பெரிகாத்தான் நேஷனல்  தலைவர்கள் விமர்சனங்கள் செய்து வெளியிட்டுள்ள பொறுப்பற்ற குற்றச்சாட்டு அறிக்கைகளை தாம் கண்டிப்பதாக பிரதமர் துறை அமைச்சரின் அரசியல் செயலாளரும், கெஅடிலான் கட்சியின் மத்திய தலைமைக் குழு உறுப்பினருமான சிவமலர் கனபதி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், அவர்கள் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் நமது நாட்டின் மரியாதையையும் மதிப்பையும் பாதிக்கும் வகையில் கூறப்பட்டவையாகும் என்றும், நாட்டின் நற்பெயரை களங்கம் செய்யும் அளவிற்கு குறுகிய அரசியல் நலனுக்காக விளையாடும் செயல் இதுவாகும் என்றும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.

இந்த மாநாடிற்கு அமெரிக்க ஜனாதிபதி உட்பட அனைத்து நாடுகளின்  தலைவர்களும் மலேசியாவிற்கு வருகை தந்தனர். அதனால்  நம் நாடு மற்ற தலைவர்களின் சிந்தனையை ஆதரித்து அடிபணிகிறது என்பதற்கு பொருளல்ல.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கீழ் செயல்படும் தலைமைத்துவம் திறமையான மற்றும் முதிர்ந்த அரசியல்தன்மையை வெளிப்படுத்துவதாக அமைகிறது என அவர் கூறினார்.

அந்த வகையில் சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவி வரும் நம் பிரதமர் அமெரிக்க அதிபருடன் நடனம் ஆடும் காணொளி  குறித்தும் சிவமலர்  விளக்கமளித்துள்ளார்.

அது வெறும் மலேசிய கலாச்சார விருந்தோம்பல் நிகழ்வின் ஒரு பகுதி எனவும், பிரதமர் நாட்டின் கலாச்சாரத்தையும் விருந்தோம்பலையும் உலகுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் குறித்த நிகழ்வில் குறுகிய நேரம் பங்கேற்கும் வகையில் அந்நிகழ்வு ஏற்ப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.

அந்த நிகழ்வு அவமானமானது என சித்தரிப்பது, மலேசிய மக்களுக்கே அவமரியாதை செய்வதற்கு சமம் எனவும், அந்த வகையில் நம்  நாட்டை பிரதிநிதித்துவப்படுத்திய கலைஞர்கள் மற்றும் கலாச்சார குழுவினரின் அர்ப்பணிப்பை மதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த முறை நடைபெற்ற 47ஆவது ஆசியான் உச்சிமாநாடு மலேசியாவின் பொருளாதார போட்டித்திறனை மேலும் வலுப்படுத்தியது, மற்றும் சமநிலை பொருளாதாரக் கொள்கைகளின் மூலம் நாட்டின் பல்வேறு துறைகளின் வளர்ச்சியை உறுதிப்படுத்தியது என்றார் அவர்.

இந்த மாநாட்டின் வழி மலேசியா தனது பொருளாதார இறையாண்மையை தியாகம் செய்தது என்ற பெரிகாத்தான் நேஷனல் தலைவர்கள் வைத்துள்ள குற்றச்சாட்டு முற்றிலும் அரசியல் பிரயோஜனத்துக்காக உருவாக்கப்பட்ட பொய்யான குற்றச்சாட்டு எனவும், அது மக்களிடையே பயத்தை உருவாக்கி முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்க முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அது மட்டுமின்றி ஆசியான் உச்சிமாநாடு மலேசியாவின் திறமை, பாதுகாப்பு, பங்கேற்பு மற்றும் சரியான ஒழுங்கமைப்பை வெளிப்படுத்திய சிறந்த சான்றாகும். இதுபோன்ற நிகழ்வுகளில் சிறிய தொழில்நுட்ப தவறுகளை அரசியல் ஆயுதமாக்கும் செயல்கள் அறிவில்லாத குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட செயல்கள் என்றார்.

இன்றைய அரசு மலேசியாவின் மரியாதைக்குரிய மற்றும் தார்மீகமான வெளிநாட்டு கொள்கை மரபை தொடர்ந்து பேணிக்காக்கும் அரசாகும். ஆனால் சிலர் தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக நாட்டின் இறையாண்மையை அவமதிக்கிறார்கள். இது மக்களுக்கு செய்யும் துரோகம் என்று அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

-காளிதாசன் இளங்கோவன்

கொல்லைக்குப் போனாலும் கூட்டு ஆகாதென்பார்கள்; இத்தகைய மூத்த மொழி, நம்பிக்கை-நாணயம்-உண்மை-ஓர்மை-நேர்மை உள்ளிட்ட பண்பு நலனைத் தொலைத்தவர்களை மையமாகக் கொண்டு உருவான அனுபவ மொழியாக இருக்கலாம்.

அதேவேளை, உயிர் கொடுப்பான் தோழன் என்னும் நட்புமொழிக்கு இலக்கணமாக இரு நண்பர்கள் விளங்குவதைப் பார்த்து, வியப்பாகத்தான் இருக்கிறது.

சிலாங்கூர் மாநிலத்தில், பத்துமலை-செலாயாங் வட்டாரத்தில் டத்தோஸ்ரீ அரி,  பாபு என்னும் இளைஞர்கள் இருவரும் பள்ளி நாட்கள் முதலே நண்பர்களாக அறிமுகமாகி, உறவுக்கும் மேலான அத்தகைய நட்பை தொடர்ந்து பேணிக் காத்து வந்துள்ளனர்.

காலவோட்டத்தில், இவ்விருவரும் வர்த்தகத்திலும் தங்களின் கலங்கமில்லா நட்பை நிலைநாட்டி உள்ளனர்.

செலாயாங் மருத்துவ மனைக்கு எதிரேவுள்ள ‘கெப்பிட்டல் செலாயாங் ஹால்’ என்னும்  வர்த்தக அரங்கத்தைப் பராமரிக்கும் ஹரி, Oh Yeah Banana Leaf’  என்னும் வாழை இலை உணவகத்தை நடத்திவரும் பாபு இருவரும் இணைந்து ‘Oh Yeah  Fressh Mart’  என்னும் பந்நோக்கு வர்த்தக மையத்தை கூட்டாக உருவாக்கி அதை வெற்றிகரமாகவும் நடத்தியும் வருகின்றனர்.

இந்தச் சுழலில், பாபுவின் பிறந்த நாளை முன்னிட்டு,  அவருக்குத் தெரியாமல் அவரின் அன்புத் தோழர் டத்தோஸ்ரீ அரி கமுக்கமாக பிறந்த நாள் விழாவை ஏற்பாடு செய்து, பெரிய கணையாழியையும் அணிவித்து, உற்ற தோழரை நட்பு வட்டத்தில் இன்ப வெள்ளத்தில் திளைக்க வைத்திருக்கிறார்.

இந்திய இளைய சமுதாயத்தில் நல்ல வண்ணம் வாழ்வதுடன் எத்தனையோ பேருக்கு வேலைவாய்ப்பும் அளித்து நட்பையும் சுற்றத்தையும் பேணிவரும் டத்தோஸ்ரீ அரியும் பாபுவும் கடின உழைப்புக்கும் தாழாத முனைப்புக்கும் அயராத உழைப்புக்கு சொந்தக்காரர்கள்;

இவற்றினும் மேலாக, கலங்கமில்லா நட்புக்கு இலக்கணமானவர்கள்!

கோலாலம்பூர்,அக்.27-
சினிமாவில் மட்டும் இன்றி கார் பந்தயத்திலும் அதே போல மோட்டார் சைக்கிள் பந்தயத்திலும் மிகவும் பேர் போனவர் நடிகர் அஜித் குமார். இவரின் பெயரால் குறிப்பாக இளைஞர்களுக்கு நற்செய்திகளை ஆற்றி வருகின்றது மலேசியாவின் முன்னணி அஜித் குமார் ரசிகர் மன்றம்.

அச்சேவையில் ஒன்றாக தான் வரும் நவம்பர் 8ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள அஜித் குமார் ரசிகர்கள் ஒன்று கூடும் மாபெரும் நிகழ்ச்சியை தாங்கள் ஏற்பாடு செய்திருப்பதாக கூறுகிறார் மலேசியா அஜித்குமார் ரசிகர் மன்றத்தின் தலைவர் தேவேந்திரன் பன்னீர்செல்வம்.

இந்த நிகழ்ச்சிக்கு அஜித்குமார் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் விழா என பெயரிடப்பட்டுள்ளது. 100 சிசி மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் இந்த நிகழ்ச்சியின் போது ஒன்று கூடுவர் என அவர் தெரிவித்தார்.

நடிகர் அஜித்குமார் போலவே மோட்டார் சைக்கிள் ஓட்டுவதில் நாட்டம் உள்ள பல இளைஞர்கள் இதில் பங்கேற்பார்கள் எனறார் அவர்.

இதன் முக்கிய நோக்கமே இம்மாதிரியான நிகழ்ச்சியின் வாயிலாக இளைஞர்களை சரியான பாதையில் கொண்டு செல்வதுதான். இது ஒரு நல்ல விஷயமாக கருதப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் உணவு விநியோகம் செயவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய நினைக்கின்றோம். அதே சமயம் மோட்டார் சைக்கிள் விபத்துகளில் உயிரிழந்த சில இளைஞர்களின் குடும்பத்தினருக்கு சிறிய உதவிகளை வழங்கவும் எண்ணம் கொண்டுள்ளோம் என டேவ் என்ற தேவேந்திரன் விளக்கம் அளித்தார்.

வரும் நவம்பர் 8ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் Gelanggang Petanque batu 1, Taman Mewah, Port Dickson, Negeri Sembilan இந்நிகழ்ச்சி நடைபெறும். விழாவில் பங்கேற்பதற்கு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் முன்பதிவு பதிவு செய்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் இலவசமாக நிகழ்ச்சியை கண்டு களிக்கலாம்.

மேல் விவரங்களுக்கு 012-3607648 என்ற எண்ணுடன் தொடர்புக் கொள்ளலாம்.