loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

கோலாலம்பூர், ஏப்.26-

இந்தியச் சமுதாயம் கல்வியில் முன்னேற  வேண்டும் என்ற தூரநோக்கு சிந்தனையுடன் எம்.ஐ.இ.டி கல்வி கடன் திட்டம், ஏய்ம்ஸ்ட் பல்கலைகழகம், டேஃவ்  கல்லூரி  என பல ஆக்க்கபூர்வமான நடவடிக்கைகளை இந்தியச் சமுதாயத்திற்கு விட்டுச் சென்ற துன் சாமிவேலு நன்றி, அவரின் இந்த சாதனையை நாம் நினைவு கூற வேண்டும் என  இன்று எம்.ஐ.இ.டி  கல்விக் காசோலை வழங்கும் விழாவை தலைமையேற்ற  பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்  இப்ராஹிம் தெரிவித்தார்.

ம.இ.கா,  கல்விக்கு முக்கியதுவம் கொடுத்து செய்து வரும் இந்த நடவடிக்கைக்கு  அரசாங்கம் நல்ல ஒத்துழைப்பை கொடுக்கும்.  அதே நேரத்தில் சமுதாய தலைவர்கள் ம.இ.கா தலைவர்  டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் பாணியில் சமுதாய பிரச்சினைகளை கையாள வேண்டும் என அன்வார் தெரிவித்தார்.

வெளியில் குறையை மட்டும் பேசுவதை நிறுத்தி விட்டு, சமுதாயத்தில் இருக்கும் பிரச்சினைகளை களைய டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் போல், என் நேரடி பார்வைக்கு கொண்டு வந்து கலந்து பேசி என்ன நடவடிக்கை எடுக்கலாம் என ஒத்துழைத்து பேசுவதுதான் நல்ல அணுகுமுறை என அன்வார் தெரிவித்தார்.

இவ்வேளையில் டேஃப் கல்லூரியில் டிவேட் கல்வி திட்டம் மேம்பாட்டிக்கு அரசாங்கம் 2 மில்லியன் நிதி வழங்கும் என தெரிவித்த டத்தோஸ்ரீ அன்வார், இதன் வாயிலாக பல இந்திய மாணவர்கள் தொழில் திறன் பயிற்சி பெற அது உதவியாக இருக்கும் என்றார்.

செய்தி : வெற்றி விக்டர்

கோலாலம்பூர் ஏப்ரல் 26-

கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இந்தியர்கள் வாக்களிக்க வேண்டாம் என்று சிலர்  சொல்வதை பொருட்படுத்த வேண்டாம் என்று செந்தோசா சட்டமன்ற  உறுப்பினர் டாக்டர் ஜோர்ஜ் குணராஜ் கேட்டுக் கொண்டார்.

சமூக வலைத்தளங்களில் இது போன்ற சர்ச்சையை ஏற்படுத்தி வரும் இவர்கள் கோலகுபு பாரு வாக்காளர்கள் இல்லை. ஆகவே இவர்களை புறக்கணித்து விட்டு 

 மே 11 -ஆம் தேதி வாக்களிக்க கோலகுபு பாரு இந்தியர்கள் முன் வர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

தற்போதைய அரசாங்கம் இந்தியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை, ஆகவே கோலகுபு  தேர்தலில் பாக்காத்தான் ஹரப்பானுக்கு பாடம் புகட்டும் வகையில் இந்தியர்கள் அவர்களுக்கு வாக்களிக்க கூடாது என்று சிலர் கூறி வருகின்றனர்.

இது புதிய அரசாங்கம். இப்போதுதான் ஒன்றரை ஆண்டுகள். இன்னும் மூன்று ஆண்டுகளில் ஓற்றுமை அரசாங்கம் இந்தியர்களுக்கு நிறைவான வகையில் சேவையாற்றும் என்று அவர் சொன்னார்.

கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு இன்று உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் தலைமையில்  நடைபெற்ற கூட்டத்தில் பி.கே.ஆர் தொகுதி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் சிலாங்கூர் மாநில அரசு இந்தியர்களுக்கு அதிக அளவில் உதவிகளை வழங்கி இருப்பதாக கூறினார்.

2008 ஆம் ஆண்டு முதல் இதுநாள் வரை சிலாங்கூர் மாநில அரசு தமிழ்ப்பள்ளிகள், ஆலயங்கள், இந்தியர் அமைப்புக்கள், இந்திய மாணவர்கள், தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு அதிக அளவில் மானியம் வழங்கி பேருதவி புரிந்துள்ளது.

ஆகவே கோலகுபு பாரு இந்தியர்கள் பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளருக்கு முழு ஆதரவை வழங்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

கோலாலம்பூர், ஏப்.26-

எங்களின் தேவைகளை தீர்த்து வைப்பதை உறுதி செய்யும் வகையில் உத்தரவாத உடன்படிக்கையில் கையெழுத்திட்டால் மட்டுமே எங்களின் வாக்குகள் உங்களுக்கு கிடைக்கும் என கோல குபு பாருவிலுள்ள 5 தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் கூறியுள்ளனர்.

இதுவரை அரசியல்வாதிகளின் பேச்சை கேட்டு ஏமாந்தது போதும். இனியும் ஏமாற நாங்கள் தயாராக இல்லை. ஆகையால் கோல குபு பாரு இடைத்தேர்தலில் எங்களின் பலத்தை காட்டும் நேரம் வந்துவிட்டது என குடியிருப்பாளர் சங்கத்தின் பிரதிநிதி வாசுதேவன் ராஜமாணிக்கம் தெரிவித்தார்.

ஆகையால் இம்முறை இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளருக்கு எங்களின் வாக்குகள் வேண்டுமென்றால் அவர் எங்களுடனான உத்தரவாத உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டும். சுமார் 500க்கும் மேற்பட்ட வாக்குகளை நாங்கள் கொண்டுள்ளோம் என அவர் சொன்னார்.

சுற்றுவட்டாரத்திலுள்ள நிகழ் கார்டன் தோட்டம், புக்கிட் தாகார் தோட்டம், மிஞ்ஞா தோட்டம், மேரி தோட்டம், சுங்கை திங்கி தோட்ட மக்கள் அனைவரும் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

இந்த உத்தரவாத உடன்படிக்கையில் உள்ள தேவைகள் மக்களால் தயாரிக்கப்பட்டது அல்ல. மாறாக இதற்கு முன்னர் இங்கு போட்டியிட்ட அரசியல்வாதிகளின் வாக்குறுதிகள் ஆகும். ஆகையால் அந்த வாக்குறுதிகள் அனைத்தும் இம்முறை செயல்படுத்தப்பட வேண்டும். 

இந்த தோட்டங்களிலுள்ள 245 தோட்டத் தொழிலாளிகளுக்கு 20 ஏக்கர் நிலத்தில் வீடுகள் கட்டித்தரப்பட வேண்டும். அதற்கான நிலத்தை கடந்த 2019ஆம் ஆண்டு பெர்ஜாயா கோப் நிறுவனம் வழங்கிவிட்டது. இந்த வீடுகள் கட்டித்தரப்படும் வரையில் தற்போதைய வீட்டை காலி செய்ய வேண்டுமென எந்த ஒரு வர்புறுத்தலையும் தோட்ட மக்களுக்கு கொடுக்க கூடாது என இன்னும் சில விஷயங்கள் அந்த உத்தரவாத உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிரம்பான், ஏப்.20-

4 நாடுகள் பங்கேற்ற ஆசிய வெட்ரன் கால்பந்துப் போட்டியை இன்று மஇகா துணைத் தலைவரும்,தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து சிறப்பித்தார்.

விளையாட்டுப் போட்டிகளின் வாயிலாகவே இனங்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்த முடியும்.

மலேசியாவை தவிர்த்து இந்தியா, இந்தோனேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் இருந்து வெட்ரன் விளையாட்டாளர்கள் இங்கு ஒன்றுக்கூடி உள்ளனர்.

இந்த ஆசிய வெட்ரன் கால்பந்துப் போட்டியை வெற்றிகரமாக ஏற்பாடு செய்திருக்கும் 2020 கால்பந்து குழுவிற்கு எனது வாழ்த்துகள் என அவர் தெரிவித்தார்.

2ஆவது ஆசிய வெட்ரன் கால்பந்துப் போட்டியை மலேசியா ஏற்று நடத்துகிறது.

இப்போட்டி இன்றும் நாளையும் சிரம்பான் பண்டார் ஶ்ரீ  செண்டாயான் ஐஆர்சி அரங்கில் நடைபெறுகிறது.

இந்தியாவில் இருந்து 4 அணிகள், சிங்கப்பூர், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இருந்து தலா 1 அணிகளும் கலந்துக்  கொண்டுள்ளன.

மலேசியாவை பிரதிநிதித்து 2020 கிளப் என மொத்தம் 7 அணிகள் கலந்துக் கொண்டுள்ளன என்று அக்கிளப்பின் தலைவர் ஏஎஸ்பி ராஜன் கூறினார்.

இப்போட்டி வெற்றிகரமாக நடைபெற பல நிறுவனங்கள், நல்லுள்ளங்கள் முழு ஆதரவை வழங்கியுள்ளன.

இவ்வேளையில் ஆதரவு தந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது நன்றி என்று ராஜன் கூறினார்.

முன்னதாக இந்த கால்பந்துப் போட்டியை மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் இன்று தொடக்கி வைத்தார்.

அதே வேளையில் போட்டியை ஏற்பாடு செய்த 2020 கால்பந்து கிளப்பிற்கும் போட்டியில் கலந்துக் கொண்ட போட்டியாளர்களுக்கும் அவர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

கோலாலம்பூர்  ஏப்ரல் - 20

நாட்டில்  புதிய அரசியல் ஜோதிடர் உருவாகி 1 மாதம் கூட நிறைவு பெறாத நிலையில்  அந்த அரசியல் ஜோதிடர் கணித்த கணிப்பு சொதப்பலாகி, இந்த புதிய தொழிலை கைவிடும் அளவில் அந்த ஜோதிடர் இருக்கிறார்.

நான் சொன்னால் எல்லாம் நடக்கும் என பத்திரிக்கையில் விளம்பரம் செய்த அந்த ஜோதிடர்  , யார் பிரதமர், யார் அமைச்சர், யார் கட்சி தலைவர் என அவர் சொன்னால் எல்லாம் நடக்கும்   என்றார்.  இவர் கட்டம்  தான் பார்த்து ஜோதிடம் சொல்கிறாரா ? இல்லை குறுக்கு புத்தி திட்டம் போட்டு ஜோதிடம் சொல்கிறாரா என  தெரியவில்லை , ஆனால் இந்த முறை அவர் சொன்ன ஜோதிடத்தில் மிக பெரிய சொதப்பல் நடந்துள்ளது.

ஜோதிடர் பற்றிய புதிய தகவலும் இப்போது  நமக்கு கிடைத்துள்ளது. நம்ம ஜோசியம் இன்னும் கீழே இறங்கி யார் கவுன்சிலராக வரவேண்டும் என்று எல்லாம் கட்டம் பார்க்கிறாராம்.

தனக்கு கீழே இருந்த பசங்க... அரசியலில் வளர்ச்சி அடைந்து கவுன்சிலர் ஆனதை கூட பொறுத்து கொள்ள முடியாத நம்ம ஜோசியர் , இப்போது அவர்கள் ஜாதகத்தை மாற்ற  திட்டம் - கட்டம் உருட்டுகிறார். ஆனால் எல்லாம் சொதப்பல்.

அடுத்து அடுத்து   இவரது கணிப்பு எல்லாம் சொதப்பல் ஆன நிலையில் இந்த ஜோதிடரின் ஜோசியத்தில் பலருக்கு நம்பிக்கை இல்லாமல் போனது , பெரிய பெரியவர்களிடன்  இந்த ஜோதிடர் போட்ட கட்டம்  பலிக்கவில்லை, அவர்கள் இவரை கண்டுகொள்ளவே இல்லை .

அதோடு ஜோதிடர் போட்ட ஒரு கட்டத்தில் அல்லது திட்டத்தில் பாதிப்பு அடைந்த  ஏதோ ஓர் அப்பாவி நம்ம ஜோதிடர்  மீது வழக்கு தொடுத்து  உள்ளதாக தகவல் வருகிறது.  அந்த வழக்கின் முடிவு ஜோதிடரின் தலை எழுத்தை நிர்ணயிக்கும் என்கிறார்கள்  .இதனால் மிகுந்த மன  உளைச்சலில் நம்ம  அரசியல் ஜோதிடர்  இருக்கிறார்.