கோலாலம்பூர், டிச.16-
இந்திய சமுதாயத்திற்காக தைரியமாக குரல் கொடுப்பதற்கு மஇகாதான் இருக்கிறது என்பதை இந்திய மக்கள் உணர்ந்து விட்டனர் என மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
மஇகாவிற்கு அரசாங்கத்தில் எந்த பதவியும் இல்லாதபோதும் கட்சி முறையாக செயல்பட்டு வருகிறது. கட்சியை வலுப்படுத்தும் வகையில் பல சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் தற்போது மஇகா வலுவான கட்சியாக செயல்படுகிறது.
ஆகையால் கட்சியின் தொகுதி மற்றும் கிளைத் தலைவர்களும் செயலவை உறுப்பினர்களும் மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் அதிக நாட்டம் செலுத்த வேண்டுமென அவர் சொன்னார்.
இதற்கிடையில் கட்சியை வலுப்படுத்துவதற்கு தன்னுடன் இணைந்து தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணனும் அதிகம் பாடுபட்டு வருகிறார். ஆகையால் அவருக்கு நான் கடமை பட்டுள்ளதாக டான்ஸ்ரீ விக்கி தெரிவித்தார்.
கட்சியின் தேசியத் துணைத் தலைவர் ஏற்பாட்டில் இன்று நேதாஜி மண்டபத்தில் கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனின் 60ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாக நடைப்பெற்றது.
மற்ற கட்சிகளின் மாநாட்டில் கலந்து கொண்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையை காட்டிலும் இன்று டான்ஸ்ரீ-இன் பிறந்த நாள் விழாவில் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளதாக கூறிய டத்தோஸ்ரீ எம்.சரவணன், தெரிந்திருந்தால் தேசிய முன்னணியின் தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹிட்டை இந்த கூட்டத்திற்கு அழைத்து அரசியல் அறிவிப்பை செய்திருக்கலாம் என நகைச்சுவையாக கூறினார்.
டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தலைமையில் கட்சி சிறப்பாக செயல்பட்டு வருவதை இந்த கூட்டம் உணர்த்துவதாக அவர் சொன்னார்.
டான்ஸ்ரீ பிறந்தநாளை முன்னிட்டு இந்த நிகழ்ச்சியில் சிறப்பு பிரமுகராக கவிபேரரசு வைரமுத்து கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments