இருப்பதை இல்லாதவர்களுடன் பகிர்ந்து தீபத் திருநாளை கொண்டாடுவோம்!!
-டத்தோ டி.மோகன்
கோலாலம்பூர், அக்.19-
இந்த தீபாவளியை நாம் அனைவரும் மகிழ்ச்சியாக வரவேற்று குடும்பத்தாருடனும் உற்றார் உறவினர்களுடன் கொண்டாட வேண்டும் என டத்தோ டி.மோகன் தெரிவித்தார்.
அதே நேரத்தில் பாதுகாப்பான முறையிலும் சிக்கனமான முறையிலும் இந்த தீபாவளியை நாம் கொண்டாட வேண்டும்.
நம்மிடம் இருப்பதை இல்லாதவர்களுடன் பகிர்ந்து, ஒருவருக்கொருவர் கைகோர்த்து இந்த தீபாவளியை கொண்டாடுவோம் என டத்தோ டி.மோகன் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments