கோலாலம்பூர்,அக்.24-
கெடாவில் சூராவ், பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி சத்தத்திற்கான புதிய விதிமுறைகளை மஇகா வரவேற்கிறது என்று மஇகா தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ ஏ.கே. ராமலிங்கம் கூறினார்.
கெடா மாநில இஸ்லாமிய மத விவகாரத் துறையின் பள்ளிவாசல், சூராவ் மேலாண்மை பிரிவு புதிய வழிக்காட்டலை வெளியிட்டுள்ளது.
அதாவது மாநிலத்தில் உள்ள பள்ளிவாசல்கள், சூராவ்களில் ஒலிபெருக்கியைப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதலை அப்பிரிவு வெளியிட்டுள்ளது.
சட்ட விதிமுறைகள், சமூகத் தேவைகளுக்கு இணங்க பள்ளிவாசல்கள், சூராவ் ஒலிபெருக்கிகளின் சத்தத்ததை, அதன் பயன்பாட்டை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இது சுற்றியுள்ள
குடியிருப்பாளர்களுக்கு தொந்தரவு ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கில் புதிய விதிமுறைகள் அமலுக்கு வரவுள்ளது.
மேலும் இஸ்லாமிய போதனைகள் ஞானத்துடன் தெரிவிக்கப்பட வேண்டும்.
மேலும் சுற்றியுள்ள சமூகத்திற்கு இடையூறு விளைவிக்கக் கூடாது. ஒலியின் அளவு பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
வெளிப்புற ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவது தொழுகைக்கான அழைப்பு போன்ற முதன்மை மத நோக்கங்களுக்காக மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. பொது சொற்பொழிவுகளுக்கு அல்ல என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் இந்த விதிமுறை அமலுக்கு வரவுள்ளது.
கெடா மாநில இஸ்லாமிய மத விவகாரத் துறையின் பள்ளிவாசல், சூராவ் மேலாண்மை பிரிவின் இந்த வழிகாட்டுதல்களை மஇகா முழுமையாக மதிக்கிறது.
அதே வேளையில் மாநிலத்தில் வாழும் மற்ற இன மக்களையும் கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மற்ற இன மக்களின் உரிமையையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மஇகா கருதுகிறது.
ஆக பல்லின மக்களை கொண்டுள்ள மலேசியாவின் அனைவரும் அடுத்தவரின் இனம், மதம், கலை, கலாச்சாரத்திற்கு உரிய மதிப்புகளை வழங்க வேண்டும்.
இவ்வேளையில் கெடா மாநில அரசுக்கும் கெடா மாநில இஸ்லாமிய மத விவகாரத் துறையின் பள்ளிவாசல், சூராவ் மேலாண்மை பிரிவுக்கும் மஇகா நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது என்று டத்தோ ராமலிங்கம் கூறினார்.
0 Comments