loader
மலேசிய அஜித்குமார் ரசிகர் மன்றத்தின் ஏற்பாட்டில் நவ.8ஆம் தேதி போர்ட்டிக்சனில் அஜித்குமார் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் விழா!

மலேசிய அஜித்குமார் ரசிகர் மன்றத்தின் ஏற்பாட்டில் நவ.8ஆம் தேதி போர்ட்டிக்சனில் அஜித்குமார் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் விழா!

கோலாலம்பூர்,அக்.27-
சினிமாவில் மட்டும் இன்றி கார் பந்தயத்திலும் அதே போல மோட்டார் சைக்கிள் பந்தயத்திலும் மிகவும் பேர் போனவர் நடிகர் அஜித் குமார். இவரின் பெயரால் குறிப்பாக இளைஞர்களுக்கு நற்செய்திகளை ஆற்றி வருகின்றது மலேசியாவின் முன்னணி அஜித் குமார் ரசிகர் மன்றம்.

அச்சேவையில் ஒன்றாக தான் வரும் நவம்பர் 8ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள அஜித் குமார் ரசிகர்கள் ஒன்று கூடும் மாபெரும் நிகழ்ச்சியை தாங்கள் ஏற்பாடு செய்திருப்பதாக கூறுகிறார் மலேசியா அஜித்குமார் ரசிகர் மன்றத்தின் தலைவர் தேவேந்திரன் பன்னீர்செல்வம்.

இந்த நிகழ்ச்சிக்கு அஜித்குமார் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் விழா என பெயரிடப்பட்டுள்ளது. 100 சிசி மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் இந்த நிகழ்ச்சியின் போது ஒன்று கூடுவர் என அவர் தெரிவித்தார்.

நடிகர் அஜித்குமார் போலவே மோட்டார் சைக்கிள் ஓட்டுவதில் நாட்டம் உள்ள பல இளைஞர்கள் இதில் பங்கேற்பார்கள் எனறார் அவர்.

இதன் முக்கிய நோக்கமே இம்மாதிரியான நிகழ்ச்சியின் வாயிலாக இளைஞர்களை சரியான பாதையில் கொண்டு செல்வதுதான். இது ஒரு நல்ல விஷயமாக கருதப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் உணவு விநியோகம் செயவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய நினைக்கின்றோம். அதே சமயம் மோட்டார் சைக்கிள் விபத்துகளில் உயிரிழந்த சில இளைஞர்களின் குடும்பத்தினருக்கு சிறிய உதவிகளை வழங்கவும் எண்ணம் கொண்டுள்ளோம் என டேவ் என்ற தேவேந்திரன் விளக்கம் அளித்தார்.

வரும் நவம்பர் 8ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் Gelanggang Petanque batu 1, Taman Mewah, Port Dickson, Negeri Sembilan இந்நிகழ்ச்சி நடைபெறும். விழாவில் பங்கேற்பதற்கு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் முன்பதிவு பதிவு செய்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் இலவசமாக நிகழ்ச்சியை கண்டு களிக்கலாம்.

மேல் விவரங்களுக்கு 012-3607648 என்ற எண்ணுடன் தொடர்புக் கொள்ளலாம்.

0 Comments

leave a reply

Recent News