loader
பத்துமலை மின்படிகட்டு விவகாரம்: இரு தரப்பும் தவறுகளை கூறுவதை நிறுத்துங்கள்: சுமுகமான பேச்சு வார்த்தையை நடத்துங்கள்! -டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன்

பத்துமலை மின்படிகட்டு விவகாரம்: இரு தரப்பும் தவறுகளை கூறுவதை நிறுத்துங்கள்: சுமுகமான பேச்சு வார்த்தையை நடத்துங்கள்! -டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன்

கோலாலம்பூர், ஜன.15-
பத்துமலையில் மின்படிகட்டு கட்டுமான அனுமதி தொடர்பில் ஆலய நிர்வாகமும் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பா ராயுடும் ஒருவருக்கொருவரு தவறுகளை சுட்டிக் காட்டுவதை நிறுத்திவிட்டு சுமுகமான பேச்சு வார்த்தை நடத்தி தைப்பூசத்தை சிறப்பாக கொண்டாட  வேண்டுமென மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் வலியுறுத்ததினார்.

இந்த விவகாரத்தில் இரு தரப்பும் மற்றவர்களின் தவறுகளைதான் கூறி வருகின்றனர். இதனால் ஒரு நல்லதும் நடக்க போவதில்லை.

மாநில அரசாங்கத்தின் கீழ் பாப்பா ராயுடு முடிவை அறிவிக்கும் பட்சத்தில் டான்ஸ்ரீ நடராஜா ஆலயம் ஏஜியின் கீழ்தான் செயல்படுவதை அழுத்தமாக கூறிவருகிறார்.

ஒட்டுமொத்தத்தில் பார்த்தால் நமக்கு பத்துமலையில் மின்படிகட்டுதான் வேண்டும். அதுதான் நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். ஆகையால் மாநில அரசியின் தேவைகளை பூர்த்தி செய்து மின்படிக்கட்டை கட்டுவதற்கான வேலைகளை முன்னெடுக்க வேண்டுமென மஇகா தலைமையகத்தின் அருகிலுள்ள ஆலயத்தில் நடந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்ட டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.

ஆகையால் ஆலயம் நிர்வாகம் மாநில முதல்வருடனும் ஆட்சிக்குழு உறுப்பினருடனும் நல்ல உறவை வைத்து கொண்டு பேச்சு வார்த்தை நடத்தி இந்த பிரச்சினைக்கு தீர்வுக்கான வேண்டும். மேலும் இந்த விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கும் தொடக்கப்பட்டுள்ளது. ஆகையால் நிதிமன்ற முடிவையும் இரு தரப்பும் ஏற்றுக் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

மஇகா தேசிய மகளிர் பிரிவினர் ஏற்பாடு செய்திருந்த இந்த பொங்கல் விழாவில் மஇகாவினரும் பொதுமக்களும் திரலாக கலந்து கொண்டனர்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

0 Comments

leave a reply

Recent News