சிகாமாட், அக்.30-
பத்து அன்னாம் பகுதியில் நடைபெற்ற சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியின் மடானி தீபாவளி பொது உபசரிப்பு நிகழ்ச்சியில் அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் யுனேஸ்வரன் உயர்க்கல்வியைத் தொடரவிற்கும் மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கினார்.
உள்ளூர் மக்களுடன் தீபாவளி பெருநாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடியது மட்டுமல்லாமல் உயர்க்கல்வி பயில நிதி உதவி தேவைப்படும் எஸ்பிஎம், எஸ்டிபிஎம் தேர்வுகளில் சிறந்த தேர்ச்சிப் பெற்ற சுமார் 12 மாணவர்களுக்கு யுனேஸ்வரன் நிதியுதவி வழங்கினார்.
கல்விக்குத் தான் எப்பொழுதும் முன்னுரிமை வழங்குவதாகவும் சமூக, இன வேறுபாடு இல்லாமல் அனைவரும் கல்வி கற்பது அவசியம் என்றும் அவர் கூறினார்.
இம்மாணவர்கள் தங்களது கல்வியில் தொடர்ந்து கவனம் செலுத்தி, பெற்றோர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் சிறந்த வெற்றிகளை அடைய வேண்டும் என்று தாம் மனமார வாழ்த்துவதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் தனது சமூக ஊடகப்பதிவில் தெரிவித்தார்.
0 Comments