loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்


கோலாலம்பூர், மார்ச் 7-
பத்து கேவ்ஸில் உள்ள ஸ்ரீ பாலா இல்லம் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் ஒரு சிறுவன் மீது உடல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் நடந்ததாகக் கூறப்படும் புகாரை மஇகா பிரிகேட் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுவன் மன உளைச்சல், தூக்கக் குறைவு மற்றும் கல்வி பாதிப்பு போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக அவரின் தந்தை செய்த போலீஸ் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால், அது மிகக் கொடூரமானதும் மனிதநேயமற்ற செயலாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், போலீசார் உடனடி மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மஇகா பிரிகேட் தலைவர் எண்ட்ரு டேவிட் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், சமூக நலத்துறை நாடு முழுவதும் குழந்தைகள் இல்லங்களில் சோதனை நடத்த வேண்டும் என்றும் கோரியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி வழங்க தயாராக இருப்பதாகவும், அனைத்து குழந்தைகளுக்கும் பாதுகாப்பும் உளவியல் ஆதரவும் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோலாலம்பூர்,மார்ச்5-

இசைக் கலைஞர்கள் இணைந்து, அமரர் கலைஞர் நல்லதம்பி அவர்களுக்கு நினைவாக “நிநைவு அஞ்சலி” நிகழ்வை நடத்துகின்றனர்.

இந்த நிகழ்ச்சி வரும் 7 ஏப்ரல் 2026 அன்று மாலை 7.11 மணி அளவில், கோலாலம்பூரில் அமைந்துள்ள கே.ஆர்.சோமா அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் இசை நிகழ்ச்சிகள் மற்றும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று, கலைஞர் நல்லதம்பியின் கலைப்பணிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இசை கலைஞர்களுடன் இணைந்து அலை ஓசை அப்பு இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார். 

இசை ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும் தகவல்களுக்கு
T.M.S. சிவகுரு – 016-287 9615,
மாஸ்டர் டாக்டர் அப்பு – 012-666 4652,
அசோக் – 016-346 6916,
நிஷா – 010-251 1639 ஆகியோரை தொடர்புக் கொள்ளலாம்.

இந்நிகழ்வு கலைஞர்களின் ஒற்றுமையையும், மறைந்த கலைஞரின் நினைவையும் சிறப்பிக்கும் வகையில் நடைபெறுகிறது.

கோலாலம்பூர் ஏப்ரல்-4

இந்த நாட்டில் மிக பழைமை வாய்ந்த  இந்து சங்கத்தின் 60 ஆம் ஆண்டு  வைர விழா தலைநகர் கலா மண்டபத்தில் நடைப்பெற்றது.

நிகழ்ச்சி  மாலை 5.30 மணிக்கு  சரியாக ஆரம்பித்த நேரத்தில் , சுமார் கால் பகுதி இடமே நிரப்பப்பட்டது.

சிறிது நேரம் கழித்து கூட்டம் வர தொடங்கியது அப்போதும் சபையில் பாதி இடம் நிரப்பப்பட்டது.

தலைவரின் தலைமை உரை முடிந்து செய்தியாளர் சந்திப்பு நடக்கும் வரை  பாதி இடம் காலியாக இருந்தது.

மலேசிய முழுவதும் வட்டாரம் வைத்துள்ள ஒரு சங்கம்.  தனது 60 ஆண்டு வைர விழாவை கொண்டாடுகிறது. கூட்டம் இப்படியாகவா?  இருக்க வேண்டும் என கேள்வி எழுந்துள்ளது.

உறுப்பினர்களுக்கு தகவல் சென்றதா? அல்லது தலைவர் மீது உள்ள அதிருப்தியா? என தெரியவில்லை ஆனால் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பல உறுப்பினர்களின் முகம் வாடி புலம்ப தொடங்கியதை  தமிழ் லென்ஸ் கண்காணித்து.

அதோடு மட்டுமல்லாமல் ஆங்காங்கே உறுப்பினர்கள் புலனத்தின் வாயிலாக தங்களது அதிருப்தியை தெரிவித்து வருவதாகவும் நமக்கு கிடைத்துள்ளது.

சிலருக்கு முறையான அழைப்பும் கிடைக்கவில்லை எனவும் தகவல் தெரியவந்துள்ளது.

எது எப்படியோ இந்து சங்கம் ஒரு சமய அமைப்பு ,அது அரசியல் கட்சியல்ல ஆனால்   ஒரு பழமை வாய்ந்த சங்கத்தின் வைர விழா வெறிச்சோடி இருந்தது உறுப்பினர்களுக்கு மிக பெரிய வருத்தம் இது உண்மை.

சபை நிறைந்திருக்க வேண்டும்.

பதவி அரசியலில் ஒரு மாபெரும் இயக்கத்தின் விழா இப்படி பாதி சபை பாதி மனதோடு நிறைவுற்றது வருத்தம்.

இதை சம்பத்தப்பட்டவர் உணர வேண்டும் .

செய்தி : வெற்றி விக்டர்

கோலாலம்பூர் ஏப்ரல்-4

இன்று கலா மண்படத்தில்  நடைப்பெற்ற மலேசிய இந்து சங்கத்தின்  60 -ஆம் ஆண்டு வைரவிழா மிகச் சிறப்பாக நடைப்பெற்றது.

இந்த விழாவில் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள், வட்டார பொருப்பாளர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துக்கொண்டனர்.

ம.இ.காவின்  முன்னாள் தேசியத் தலைவர்  டான் ஸ்ரீ எஸ்.சுப்ரமணியம் சிறப்பு வருகை புரிந்தார்.

நிகழ்ச்சியின் பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்து சங்கத் தலைவர் தங்க கணேசன் பேசுகையில்,  தமிழ் நாட்டில் மேலோங்கி இருக்கும் சாதி கலாச்சாரம் மலேசியாவில் ஊடுருவி வருகிறது. இதை தடுத்து நிறுத்த இந்து சங்கம் போராடும் என்றார்.

மலேசியாவில் தமிழர், தெலுங்கர், மலையாளி என பல இனத்தை சார்ந்த இந்துகள் இருந்தாலும் எங்களை நாங்கள் இந்துகளாக அடையாள படுத்தி வருகின்றோம்.
மலேசிய இந்துகளுக்கு சாதி அடையாளம் தேவை இல்லை  என தங்க கணேசன் தெரிவித்தார்.

இந்த சாதி கலாச்சாரத்தை நிறுத்த இந்து சங்கம் போராடும் என தங்க கணேசன் திட்டமிட்டமாக தெரிவித்தார்.

செய்தி: வெற்றி விக்டர்

கோலாலம்பூர், மார்ச் 3-
பிபிபி கட்சிக்கு 8 நாடாளுமன்ற தொகுதிகள் கிடைக்கும் வரை நான் கட்சியின் தலைவர் என நான் கூறிக் கொள்ளமாட்டேன். கட்சியின் சேவகராரகதான் இதுப்பேன். இந்த நிலை கண்டிப்பாக மாறும் என்று அவர் சூளுரைத்தார்.

இதுவரை கட்சி சுமுகமாக செயல்பட்டு வருகிறது. ஆனால் எங்களின் கொள்கை நிறைவேறும் வரை நாங்கள் அனைவரும் உழைப்போம் என அவர் சொன்னார்.

8 தொகுதிகளை வென்றோம் என்றால் எங்களின் முழு சேவையை மக்களுக்கு வழங்குவோம். என்களின் எதிர்ப்பார்ப்பு ஒரு நாள் நடக்கும் என்று அவர் உறுதியுடன் கூறினார்.

அவரின் 60ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் இன்று பத்து கேவ்ஸ் செங்கா மண்டபத்தில் விமரிசையாக நடைப்பெற்றது.

நிகழ்ச்சியின்போது அவருக்கான AI வடிவத்தில் பாடல் ஒளிப்பரப்பட்டது. சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் சுரேந்திரன் தன் தலைவருக்காக இந்த முயற்சியை ஏடுத்திருந்தார்.

இந்த பாடல் காட்சி வந்திருந்தவர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டது. அதன் பின்னர் டத்தோ லோகா பாலவிற்கு சிலாங்கூர் பிபிபியினர் பெரிய அளவிலான மாலையை அணிவித்தனர்.

மாலை அணிவிக்கு பிறகு டத்தோ லோகா பாலா பேசுவையில், இந்த கொண்டாட்டத்தையும் மாலையையும் ஏற்பதற்கான காலம் இது கிடையாது. பிபிபி கட்சிக்கு 8 நாடாளுமன்ற தொகுதிகள் கிடைத்த பின்னர் நான் இந்த சிறப்பை ஏற்றுக் கொள்கிறேன் என அவர் சொன்னார்.