loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

ரவாங், ஆக.14– ரவாங் தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சிக்குத் தேவையான புதிய கட்டடம்அமைக்கப்படுவதுடன், மாணவர்களின் புறப்பாட நடவடிக்கைகளுக்கான பள்ளித் திடலும்பாதுகாக்கப்பட வேண்டும் என்று பள்ளியின் முன்னாள் வாரியக்குழுத் தலைவர் டத்தோசுரேஷ் ராவ் வலியுறுத்தினார்.

 

ரவாங் தமிழ்ப்பள்ளியில் 900க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வரும் நிலையில், பள்ளியின் எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு கட்டட வசதிகள் மேம்படுத்தப்படவேண்டும். அதேவேளையில், மாணவர்களின் விளையாட்டு மற்றும் புறப்பாடநடவடிக்கைகளுக்கு அத்தியாவசியமான பள்ளித் திடலை இழக்கும் வகையில் எந்தவொருகட்டுமானத் திட்டமும் அமையக்கூடாது என்று அவர் தெரிவித்தார்.

 

புதிய கட்டடம் அமைப்பதில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டால், தற்போது உள்ள சிஎஃப் (CF) அனுமதி இல்லாத பழைய கட்டடத்தை இடித்துவிட்டு, அதே இடத்தில் புதிய கட்டடத்தைநிர்மாணிக்கலாம் என்று அவர் ஆலோசனை முன்வைத்தார்.

 

மேலும், அந்தப் பழைய கட்டடத்தை இடிப்பதற்கான செலவை பெற்றோர்கள்ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் டத்தோ சுரேஷ் ராவ் கூறினார்.

 

“பள்ளிக்கு கட்டடம் அவசியம். அதேபோன்று மாணவர்களுக்கான திடலும் அவசியம். இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்படக்கூடாது. பள்ளியின்வளர்ச்சிக்குத் தேவையான கட்டடத்தை அமைக்க வேண்டும்; அதே நேரத்தில் மாணவர்களின்புறப்பாட நடவடிக்கைகள் பாதிக்கப்படாத வகையில் திடலும் பாதுகாக்கப்பட வேண்டும்,” என்றார்.

 

திடல் இல்லாத நிலை ஏற்பட்டால், மாணவர்களின் விளையாட்டு, உடற்கல்வி மற்றும் இதரபுறப்பாட நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

900க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் பள்ளியில், பக்கத்து பள்ளியின் திடலைப்பயன்படுத்துவது நீண்டகாலத் தீர்வாக அமையாது என்றும் டத்தோ சுரேஷ் ராவ் குறிப்பிட்டார்.

 

“பக்கத்து பள்ளியின் திடலைப் பயன்படுத்துவது நடைமுறைக்கு ஏற்றதாக இருக்காது. எங்களது மாணவர்களுக்குத் தேவையான வசதிகள் சொந்தப் பள்ளி வளாகத்திலேயேஇருக்க வேண்டும். குறிப்பாக, மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்நிலையில், அவர்களின் கல்வி மற்றும் புறப்பாட நடவடிக்கைகளுக்குத் தேவையானஇடவசதி உறுதி செய்யப்பட வேண்டும்,” என்றார்.

 

இதனிடையே, இவ்விவகாரம் தொடர்பில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராயுடு இன்று ரவாங் தமிழ்ப்பள்ளிக்கு நேரில் வருகை தந்து நிலைமையை கேட்டறிந்ததாகடத்தோ சுரேஷ் ராவ் தெரிவித்தார்.

 

பள்ளி நிர்வாகம், பெற்றோர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவலைகளை கேட்டறிந்தபாப்பா ராயுடு, இப்பிரச்சினையை சுமுகமான முறையில் தீர்த்து வைப்பதற்கானநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், பள்ளியின் திடலுக்கு எந்தவித பாதிப்பும்ஏற்படாது என்றும் உறுதியளித்துச் சென்றதாக அவர் கூறினார்.

 

இதற்கு நன்றி தெரிவித்த டத்தோ சுரேஷ் ராவ், பள்ளியின் தேவைகள், மாணவர்களின்நலன் மற்றும் பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளை கருத்தில் கொண்டு இவ்விவகாரத்துக்குநல்லதொரு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார்.

 

ரவாங் தமிழ்ப்பள்ளியின் எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான கட்டட வசதிகளும், மாணவர்களின் முழுமையான கல்வி மற்றும் புறப்பாட வளர்ச்சிக்குத் தேவையான திடலும்இணைந்தே பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே பெற்றோர்கள் மற்றும் பள்ளி சமூகத்தின்எதிர்பார்ப்பாக உள்ளது.

ரவாங்: ரவாங் தமிழ்ப்பள்ளியில் புதிய கட்டடம் அமைப்பதற்காக பள்ளியின் விளையாட்டுத்திடலை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் விளையாட்டுதிடலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு காணப்படும் எனசிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பா ராயுடு உறுதியளித்துள்ளார்.

 

ரவாங் தமிழ்ப்பள்ளியில் சுமார் வெ.1.5 மில்லியன் செலவில் ஆறு வகுப்பறைகளைக்கொண்ட புதிய கட்டடம் கட்டுவதற்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதற்காகபள்ளியின் தற்போதைய விளையாட்டுத் திடலின் ஒரு பகுதியை பயன்படுத்த வேண்டியசூழ்நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

 

இதற்கு பெற்றோர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளதுடன், மாணவர்களின் கல்விவளர்ச்சிக்கு இணையாக அவர்களின் விளையாட்டு மற்றும் உடற்கல்விநடவடிக்கைகளுக்கும் பள்ளி திடல் அவசியம் என்பதால், திடலுக்கு எந்தவித பாதிப்பும்ஏற்படக்கூடாது என்பதே பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

இதுகுறித்து கருத்து தெரிவித்த பாப்பா ராயுடு, வரும் திங்கட்கிழமை இது தொடர்பானபரிந்துரையை முன்வைக்கவுள்ளதாகவும், கல்வி அமைச்சு மற்றும் வீடமைப்பு, ஊராட்சிஅமைச்சு ஆகியவற்றுக்கு கடிதம் வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

பள்ளியின் தற்போதைய பழைய கட்டடத்தை இடித்து, அதே இடத்தில் புதிய கட்டடத்தைஅமைக்கும் திட்டத்தை தாம் வரவேற்பதாக குறிப்பிட்ட அவர், புதிய கட்டடம் அமைப்பதற்காகமாணவர்களின் விளையாட்டுத் திடலை இழக்கும் நிலை ஏற்படுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றார்.

 

“பழைய கட்டடத்தை இடித்து, அந்த இடத்திலேயே புதிய கட்டடத்தை கட்டுவதை நான்வரவேற்கிறேன். ஆனால் பள்ளியின் விளையாட்டுத் திடலுக்கு எந்தவித பாதிப்பும்ஏற்படக்கூடாது. பெற்றோர்களின் பக்கம் நான் நின்று இந்தப் பிரச்சினைக்கு சுமுகமானதீர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பேன்,” என்று அவர் உறுதியளித்தார்.

 

புதிய கட்டடம் கட்டப்படுவது மாணவர்களின் கற்றல் சூழலை மேம்படுத்துவதற்கான நல்லநடவடிக்கையாக இருந்தாலும், அதற்காக மாணவர்களுக்கு ஏற்கனவே உள்ள விளையாட்டுவசதியை இழக்கச் செய்வது சரியான தீர்வாக இருக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

மேலும், ரவாங் தமிழ்ப்பள்ளியின் தேவைகளுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வருவதாகதெரிவித்த பாப்பா ராயுடு, கடந்த ஆண்டு பள்ளிக்கு வெ.80,000 மானியம்வழங்கப்பட்டதாகவும், இம்முறையும் அதே தொகையான வெ.80,000 வழங்கப்படுவதாகவும்தெரிவித்தார்.

 

இந்த மானியத்தை மாணவர்களின் கற்பித்தல் மற்றும் கற்றல் நடவடிக்கைகளுக்குபயனுள்ள வகையில் பயன்படுத்துமாறு பள்ளி நிர்வாகத்தையும் அவர் கேட்டுக்கொண்டார்.

 

ரவாங் தமிழ்ப்பள்ளியின் கட்டடத் தேவையும் மாணவர்களின் விளையாட்டு வசதிகளும்இரண்டும் முக்கியமானவை என்பதால், இரு தரப்புக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்றுத்தீர்வை கண்டறிவதே தமது நோக்கம் என்றும் பாப்பா ராயுடு தெரிவித்தார்.

 

பெற்றோர்கள், பள்ளி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுடன் கலந்துரையாடி, மாணவர்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த விவகாரத்துக்குவிரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கோலாலம்பூர், ஆக 13-

யாரோ ஒருவர் செய்யும் தவறு நாட்டில் உள்ள ஒட்டுமொத்த இந்திய உலோக பொருள்வியாபாரிகளை பெரிதும் பாதிக்கிறது.ஆகவே உலோக பொருள் மறுசுழற்சி தொழிலில் ஈடுபட்டுள்ள இந்தியர்கள் சட்டத்தை மதித்துநடக்க வேண்டும் என்று மிம்தா எனப்படும் மலேசிய இந்திய உலோக பொருள் மறுசுழற்சிசங்கத்தின் தலைவர் டத்தோஸ்ரீ தீபா ஆறுமுகம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இரும்பு கடையில் வேலை செய்த தமிழக வேதாரண்யத்தை சேர்ந்த இந்திய தொழிலாளிமுத்துகுமார் அடித்து கொலை செய்யப்பட்டதாக கூறி அவரின் மனைவி புகார் செய்துள்ளார்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீதுமலேசிய காவல் துறை நடவடிக்கை எடுக்கும்.இருப்பினும் இதுபோன்ற கொடூர செயல்களை மிம்தா வன்மையாக கண்டிக்கிறது.

தமிழக தொழிலாளி தவறு செய்திருந்தால்  காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.இந்த விவகாரத்தில் நீங்களே சட்டத்தை எடுத்து கொண்டு தண்டனை வழங்க முடியாது.

இது போன்ற செயல்கள் ஒட்டுமொத்த இந்திய உலோக பொருள் மறுசுழற்சி துறையைபெரிதும் பாதிக்கிறது.போதுமான அந்நியத் தொழிலாளர்கள் இல்லாததால் நமது வியாபாரிகள் பெரும் பாதிப்பைஎதிர் நோக்கி வருகிறார்கள்.

இவர்களுக்கு அந்நியத் தொழிலாளர்களை பெற்றுத் தர மிம்தா அரசிடம் பேச்சு வார்த்தைநடத்தி போராடி வருகிறது.ஆனால் அந்நியத் தொழிலாளர் தாக்கப்பட்டு மரணம் அடைந்தார் என்று கூறப்படும்சம்பவத்தை ஏற்றுக் கொள்ள முடியாதது ஒன்று.

ஆகவே இந்த துறையில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் சட்டத்தை மதிக்க நடக்க வேண்டும்என்று டத்தோஸ்ரீ தீபா ஆறுமுகம் கேட்டுக் கொண்டார்.

சென்னை, ஆக. 13-

 மலேசிய தமிழர் சமூக பண்பாடு மற்றும் நட்புறவு பயணத்தின் ஏற்பாட்டாளர் மணிவாசகம் தலைமையில், மலேசியாவைச் சேர்ந்த கலைஞர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் குறுகியகால பயணமாக தமிழகம் வந்துள்ளனர்.

இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக புதுச்சேரி முதல்வரையும், தமிழக முதல்வரையும் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக டத்தோ கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், மலேசியக் கலைஞர்களும் தமிழகக் கலைஞர்களும் இணைந்து ‘பொன்னந்தி மாலைப்பொழுது’ என்ற இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், புதுச்சேரி முதல்வரை சந்திப்பதுடன், தமிழக முதல்வரை சந்திப்பதற்கும் வாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும், தமிழக அமைச்சர்களையும் சந்திக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

மலேசியா மற்றும் தமிழகம் இடையிலான கலை, பண்பாடு மற்றும் சமூக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்தப் பயணம் அமையும் என்றும், இரு தரப்பினருக்கும் இடையே நல்லுறவுக்கான பாலத்தை ஏற்படுத்த இது வழிவகுக்கும் என்றும் டத்தோ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழகத்திற்கு இன்று வருகை தந்த அவர், இருநாட்டு கலைஞர்கள் மற்றும் சமூகப் பிரமுகர்களின் இந்தச் சந்திப்புகள் எதிர்காலத்தில் மேலும் பல்வேறு ஒத்துழைப்புகளுக்கு வழிவகுக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

-முருகன்

கோலாலம்பூர்,ஆக.12-

அந்நிய தொழிலாளர்களை தருவிப்பதற்கான புதிய நடைமுறைகள் தொடர்பில் மலேசியதுணை குத்தகையாளர் சங்கம் ஏற்பாடு செய்த விளக்கக்கூட்டத்தில் நாடு முழுவதிலும்இருந்து சுமார் 100 உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

வர்த்தகர்கள் அந்நிய தொழிலாளர்களை விண்ணப்பிப்பது, தேவையான ஆவணங்களைச்சமர்ப்பிப்பது மற்றும் FWCMS இணையதளம் வழியாகப் பதிவு செய்வது தொடர்பானநடைமுறைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவான விளக்கம் வழங்கப்பட்டது.

மலேசிய துணை குத்தகையாளர் சங்கத்தின் ஆலோசகர் மோகனா கூறுகையில், தொழில்துறைகளில் அந்நிய தொழிலாளர்களை தருவிப்பது தொடர்பான நடைமுறைகளைவர்த்தகர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இந்த விளக்கக்கூட்டம்ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

அவர் கூறுகையில், அனைத்து வர்த்தகர்களும் FWCMS இணையதளம் வழியாகப் பதிவுசெய்ய வேண்டும் என்றும், இன்றைய கூட்டத்தில் FWCMS துறையைச் சேர்ந்த அதிகாரிநேரடியாக கலந்து கொண்டு பதிவு மற்றும் விண்ணப்ப நடைமுறைகள் குறித்துவிளக்கமளித்ததாகவும் தெரிவித்தார்.

“உள்நாட்டவர்களுக்கு வேலைவாய்ப்பில் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதில்மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் சில தொழில் துறைகளில் உள்நாட்டவர்கள் வேலைசெய்ய முன்வருவதில்லை. இதனால் அந்தத் துறைகளின் தொழிலாளர் தேவையை பூர்த்திசெய்ய அந்நிய தொழிலாளர்களின் தேவை ஏற்படுகிறது,” என்றார்.

மேலும், தங்களது சங்கத்தின் வாயிலாக உறுப்பினர்களுக்கு பல்வேறு வர்த்தக வாய்ப்புகள்மற்றும் தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் மோகனா குறிப்பிட்டார்.

“இந்த விளக்கக்கூட்டத்தில் நாடு முழுவதிலும் இருந்து வர்த்தகர்கள் கலந்துகொண்டுள்ளனர். ஒவ்வொரு தொழில் துறைக்கும் ஏற்றவாறு விண்ணப்ப நடைமுறைகள்மாறுபடக்கூடும். அதற்கேற்ப தேவையான அந்நிய தொழிலாளர்களை பெற்றுக்கொள்ளும்வாய்ப்பும் உள்ளது. விண்ணப்பதாரர்கள் தேவையான ஆவணங்களை முறையாகச்சமர்ப்பித்தால், புதிய நடைமுறையின் மூலம் விண்ணப்ப செயல்முறையை எளிதாக முடிக்கமுடியும்,” என்றும் அவர் கூறினார்.

மலேசிய துணை குத்தகையாளர் சங்கத்தின் தலைவராக சந்திரா எல். ராம் பிரகாஷ்செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

முடிதிருத்தும் நிலைய உரிமையாளர் கண்ணன் பழனிச்சாமி கூறுகையில், அந்நியதொழிலாளர்களை தருவிப்பதற்கு அரசு வழங்கியுள்ள இந்த வாய்ப்பை வரவேற்பதாகதெரிவித்தார்.

“FWCMS இணையதளம் வழியாக எவ்வாறு பதிவு செய்வது என்பது குறித்து பலர்கேள்விகளை எழுப்பி வந்தனர். இந்த விளக்கக்கூட்டம் அதற்கான தெளிவான பதிலைவழங்கியுள்ளது. குறிப்பாக இணையப் பதிவு செய்வது தொடர்பான விரிவான விளக்கம்எங்களுக்கு இந்தக் கூட்டத்தின் மூலம் கிடைத்துள்ளது,” என்றார்.

பாதுகாவலர் துறையைச் சேர்ந்த இராஷினி கூறுகையில், இந்தக் கூட்டத்தின் மூலம் பலபுதிய தகவல்களை அறிந்துகொள்ள முடிந்ததாக தெரிவித்தார்.

“இதற்கு முன்னர் முறையான விண்ணப்ப நடைமுறை இல்லாததால் பல்வேறுபிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளபுதிய முறை எளிதாகவும் தெளிவாகவும் உள்ளது. இதன் மூலம் அன்னிய தொழிலாளர்களைவிண்ணப்பிப்பதில் உள்ள சிரமங்கள் குறையும் என எதிர்பார்க்கிறோம்,” என்றார்.

அந்நிய தொழிலாளர்களை தருவிப்பது தொடர்பான நடைமுறைகளை எளிதாக்குவதுடன், தொழில் துறைகளின் உண்மையான தொழிலாளர் தேவையை கருத்தில் கொண்டுவிண்ணப்பங்களைச் செய்வதற்கும் இந்த விளக்கக்கூட்டம் வர்த்தகர்களுக்கு பயனுள்ளதாகஅமைந்தது.