loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

ஷா ஆலாம், ஜூலை 29-
கிள்ளான் ராக்கெட் கிளப் (கேஆர்சி) துணைத் தலைவர் திரு.உமாகாந்தன், செயலாளர் திரு.தேன்மாறன், பொருளாளர் திரு.சரவணன், துணைப் பொருளாளர் திரு.திருநாவுக்கரசு, பொது உறவு அதிகாரி திரு.மகேந்திர குமார்,  திரு.செல்வராஜு (தளவாடங்கள் பிரிவு), திரு.முனுசாமி (விளம்பர பிரிவு) ஆகிய செயலவை உறுப்பினர்கள் அனைவரும் இந்த கிண்ண பூப்பந்து போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறோம். இன்று 2ஆவது நாளாகும். இது 2 நாள் நடத்தப்பட்ட போட்டியாகும் என்று அந்த கிளப்பின் தலைவர் திரு.செண்பகமாறன் சுப்ரமணியம் தெரிவித்தார்.
       இதை 3ஆவது ஆண்டாக நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம். எனினும், இந்த முறை இப்போட்டிக்கு மகத்தான ஆதரவளித்து இதில் 400 பேர் பங்கேற்றனர். நாடு முழுவதிலுமுள்ள அதாவது பெர்லிஸ் தொடங்கி ஜோகூர் வரை தீபகற்ப மலேசியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் போட்டியாளர்கள் கலந்து கொண்ட.னர்.
        உண்மையில் இந்த முறை நடைபெற்ற போட்டியில் மிகச் சிறப்பானதாகக் கருதப்படுவது கடந்த முறை நடத்தப்பட்ட போட்டியில் 1 வெளிநாட்டைச் சேர்ந்த போட்டியாளர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இப்போட்டியில் இந்தியர்களாக இருந்தால் அவர்களை நாங்கள் ஏற்றுக் கொள்வோம். இம்முறை இந்தோனேசியா, இலங்கையைச் சேர்ந்த இந்தியர்களும் கலந்து கொண்டதை நினைத்து நாங்கள் மிகவும் பெருமை கொள்கிறோம். இது அனைத்துலக இந்திய பூப்பந்து கிண்ண போட்டியாகவும் ஆகி விட்டது. அதனால் இனி வரும் காலங்களில் இப்போட்டியைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம்.
      இந்த முறை நடைபெற்ற போட்டியில் 15 பிரிவுகளை நாங்கள் வைத்திருந்தோம். அவற்றில் 8 பிரிவுகள் 18 வயதிற்குக் கீழ்ப்பட்ட சிறார்களுக்கான பிரிவுகளாகும். இதர 7 பிரிவுகளும் பெரியவர்கள் ஆண்-பெண் இருபாலருக்கும் கொடுக்கப்பட்டன. இதில் பகுதிநேர தொழில்முறை விளையாட்டாளர்களுக்கும் நாங்கள் வாய்ப்புகளை வழங்கினோம். இதன் மூலம் சிறார்கள், ஆண்கள், பெண்கள், கலப்பு இரட்டையர் என அனைத்துப் பிரிவினரையும் நாங்கள் உள்ளடக்கி விட்டோம். இதில் நாங்கள் பெருமையடைகிறோம்.
        அதே சமயத்தில் மாண்புமிகு சுரேஷ் சிங், எம்பிஐ காப்பரேஷன் நிறுவனமும் கடந்த 2 ஆண்டுகளாக எங்களுக்கு ஆதரவளித்து வருகின்றனர். இவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றியை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம். அதைத் தவிர நமது அரசு சார்ந்த நிறுவனத்தின் நிர்வாக ஆலோசகரும் இச்சங்கத்தின் துணைப் பொருளாளருமான திரு.திருநாவுக்கரசு அவர்கள் உட்பட இதர ஆதரவாளர்களும் இருக்கின்றனர். எங்களின் தேவைகளுக்கு அவர்கள் அனைவரும் பங்களிப்பு செய்தனர்.
         இப்போட்டி மிகச் சிறப்பாக நடைபெற்றதற்கு ஆதரவாளர்கள் மட்டுமின்றிச் செயலவை உறுப்பினர்களின் அயராத உழைப்பும் முக்கிய காரணமாக இருக்கின்றன. போட்டியாளர்களும் மிகுந்த ஊக்கத்துடன் வந்திருந்தனர். இதுபோன்ற போட்டிகளை நிறைய இடங்களில் ஏற்பாடு செய்ய வேண்டும். இந்தியர்களின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு உள்ளது.
         இப்போட்டி நடத்தப்படுவதன் நோக்கம் வெற்றியாளர்களை அடையாளம் காண்பதற்கு அல்ல, மாறாக மற்றவர்களைப் பார்த்து இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்கும் உற்சாகத்தைப் பார்ப்பவர்களுக்கும் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே அடிக்கடி இந்த போட்டியை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அனைத்து ஏற்பாட்டாளர்களையும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். இதற்கு வருகை தந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.
        இதில் சிறார் தொடங்கி பெரியவர்கள் வரை ஒட்டுமொத்தமாக 400 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் மிகக் குறைந்த வயதுடைய போட்டியாளராக 6 வயதுடைய சிறுவன் கிருஷ்ண கவினேஷ் கணேசன் கலந்து கொண்டு 10 வயது பிரிவில் விளையாடினார். பெண்களுக்கான பிரிவில் இரட்டையர் பங்கேற்கும் போட்டிகள் நடைபெற்றன. கலப்பு இரட்டையர்களுக்கான போட்டிகளும் நடைபெற்றன.
        பெண்களில் 35 வயதிற்கும் மேற்பட்டோர் விளையாடினார்கள். பெரியவர்களுக்கான பிரிவில் பகுதிநேர தொழில்முறை விளையாட்டாளர்கள், இளநிலை மூத்த விளையாட்டாளர்கள், முதுநிலை மூத்த விளையாட்டாளர்கள் விளையாடினார்கள். கடந்த 2 ஆண்டுகளில் பங்கேற்ற 300 பேரை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இவ்வாண்டு 400 பேர் பங்கேற்றனர். இது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
         இதில் முதலாவதாக வெற்றி பெற்ற அனைவருக்கும் யோனெக்ஸ் ராக்கெட்கள், ரொக்கம் ஆகியவை வழங்கப்பட்டன. 2ஆவதாக வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கம், யோனெக்ஸ் ராக்கெட்கள் வழங்கப்பட்டன. 3ஆவதாக வெற்றி பெற்றவர்களுக்கு பூப்பந்து சம்பந்தப்பட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன.

 

சிரம்பான், ஜூலை 29 – 
இந்திய சமூகத்தின் கல்வி, பொருளாதாரம், மொழி, கலாசாரம் மற்றும் சமூக மேம்பாட்டில் மடானி அரசு தொடர்ந்து உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கெஅடிலான் துணைப் பொதுச் செயலாளர் சிவமலர் கணபதி  தெரிவித்தார்.

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசு, 2023 முதல் இந்திய சமூகத்தின் பல்வேறு முன்னேற்றத் திட்டங்களுக்காக வெ.597.5 மில்லியன் ஒதுக்கியுள்ளதாக கூறினார்.

அதில், மித்ரா அமைப்பின் மூலம் கல்வி, தொழில்முனைவு மற்றும் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்காக வெ.450 மில்லியன், MIED அமைப்புக்கு வெ.101 மில்லியன் மற்றும் நாடு முழுவதும் 344 இந்து ஆலயங்களின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டிற்காக வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சின் வழியாக வெ.46.5 மில்லியன் வழங்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.

கல்வித் துறையில் மட்டும் வெ.182 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஆறு தமிழ்ப்பள்ளிகளில் கூடுதல் கட்டடங்கள் அமைப்பதற்கு வெ.30 மில்லியனும், 2023 முதல் 2026 வரை தமிழ்ப்பள்ளிகளின் பராமரிப்புக்காக வெ.130 மில்லியனும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், TAFE கல்லூரிக்கு 2026ஆம் ஆண்டில் வெ.22 மில்லியன் வழங்கப்பட்டிருப்பது, 2024ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட வெ.2 மில்லியனை ஒப்பிடுகையில் பத்து மடங்குக்கும் அதிகமான உயர்வாகும் என்றார்.

சமூக வசதிகள் மற்றும் மின் தகன மேடைகள் அமைப்பதற்கு வெ.20 மில்லியனும், தமிழ்மொழி மற்றும் கலாசாரத்தை வலுப்படுத்த இந்திய சமூகத் தமிழ் மாநாடு, மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை மற்றும் தமிழ்மொழிக் கற்றல்-கற்பித்தல் உபகரணங்களுக்காக வெ.5 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்திய சமூகத்தின் பொருளாதார வலிமையை உயர்த்தும் நோக்கில் AIM-இன் PENN திட்டம், தெக்குனின் SPUMI திட்டம், பேங்க் ராக்யாட்டின் BRIEF-i திட்டம், SME வங்கி மற்றும் மடானி VETI திட்டம் உள்ளிட்ட முயற்சிகளின் மூலம் மொத்தம் வெ.555.6 மில்லியன் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்திய சமூக மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட வெ.597.5 மில்லியனும், பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கான வெ.555.6 மில்லியனும் சேர்த்து, மடானி அரசு இந்திய சமூகத்திற்கு வெ.1.1531 பில்லியன் மதிப்பிலான ஆதரவை வழங்கியுள்ளதாக சிவமலர் கணபதி  கூறினார்.

இந்நிதியில் STR, SARA, BUDI MADANI, குறைந்தபட்ச சம்பள உயர்வு, பள்ளி உதவித்தொகைகள் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் வழங்கப்படும் பொதுநலத் திட்டங்கள் சேர்க்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் பொருளாதார முன்னேற்றமும் இந்திய சமூகத்திற்கு பயனளித்துள்ளதாகக் கூறிய அவர், வேலையின்மை விகிதம் 2023ஆம் ஆண்டின் 3.4 விழுக்காட்டிலிருந்து 2025ஆம் ஆண்டில் 2.9 விழுக்காடாகக் குறைந்ததுடன், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 5.2 விழுக்காடாக உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.

அதேவேளை, நாட்டின் முதலீட்டு மதிப்பு வெ.329.5 பில்லியனிலிருந்து வெ.426.7 பில்லியனாக அதிகரித்திருப்பது வேலைவாய்ப்புகளையும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் உயர்த்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறவுள்ள நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில், குறிப்பாக இந்திய வாக்காளர்கள் அரசியல் வாக்குறுதிகளை விட அரசின் செயல்பாடுகளையும் சாதனைகளையும் மதிப்பீடு செய்து வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், டத்தோஸ்ரீ அமினுடின் ஹருன் தலைமையிலான நெகிரி செம்பிலான் மடானி அரசுக்கும் பக்காத்தான் ஹராப்பானுக்கும் மீண்டும் ஆதரவு வழங்கினால், இந்திய சமூகத்தின் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, மொழி மற்றும் கலாசார மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்தக் கூட்டறிக்கையை கெஅடிலான் துணைப் பொதுச் செயலாளர் சிவமலர் கணபதி  மற்றும் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.

 

சிரம்பான்,ஜூலை 29 – 
தற்போதைய மத்திய அரசு பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் மட்டுமல்ல; பல கட்சிகள் இணைந்து அமைத்துள்ள கூட்டணி அரசாகும் என்பதால், எந்தவொரு குற்றச்சாட்டையும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மீது மட்டும் சுமத்துவது சரியான அணுகுமுறை அல்ல என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் தெரிவித்தார்.

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், நாட்டின் நிர்வாகத்தை முழுமையாக முன்னெடுத்து செல்ல பிரதமருக்கு போதுமான காலமும் வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும் என்றார்.

ஆலயங்கள் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கும் அவர் விளக்கம் அளித்தார். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையிலான ஆட்சிக் காலத்தில் எந்த இந்து ஆலயமும் இடிக்கப்பட்டதில்லை என்று குறிப்பிட்ட அவர், இடமாற்றம் செய்யப்பட்ட ஆலயங்களுக்கு புதிய நிலம் வழங்கப்பட்டதோடு, அவற்றின் பிரதமருக்கு முழுமையாக செயல்பட வாய்ப்பு வழங்க வேண்டும்; நெகிரியில் பக்காத்தானுக்கு ஆதரவு அளிக்குங்கள் – குணராஜ் ஜோர்ஜ்

செந்தோசா, ஜூலை 29 – தற்போதைய மத்திய அரசு பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் மட்டுமல்ல; பல கட்சிகள் இணைந்து அமைத்துள்ள கூட்டணி அரசாகும் என்பதால், எந்தவொரு குற்றச்சாட்டையும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மீது மட்டும் சுமத்துவது சரியான அணுகுமுறை அல்ல என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் தெரிவித்தார்.

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், நாட்டின் நிர்வாகத்தை முழுமையாக முன்னெடுத்து செல்ல பிரதமருக்கு போதுமான காலமும் வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும் என்றார்.

ஆலயங்கள் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கும் அவர் விளக்கம் அளித்தார். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையிலான ஆட்சிக் காலத்தில் எந்த இந்து ஆலயமும் இடிக்கப்பட்டதில்லை என்று குறிப்பிட்ட அவர், இடமாற்றம் செய்யப்பட்ட ஆலயங்களுக்கு புதிய நிலம் வழங்கப்பட்டதோடு, அவற்றின் வளர்ச்சிக்காக அரசாங்க மானியமும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், இந்திய சமூகத்தின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை அரசாங்கத்திடம் சரியான முறையில் எடுத்துச் சென்றால், அவற்றை பரிசீலித்து நிறைவேற்றுவதில் அரசாங்கம் உறுதியுடன் செயல்படும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

வரவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் ஹராப்பானுக்கு இந்திய வாக்காளர்கள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், தற்போதைய மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருன் மாநிலத்தின் வளர்ச்சிக்காக பல புதிய மேம்பாட்டுத் திட்டங்களைத் திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

அவற்றில், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் படகுத் துறையை அமைக்கும் திட்டமும் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனில், பக்காத்தான் ஹராப்பான் மீண்டும் ஆட்சியை அமைப்பது அவசியம் என்றும் அதற்காக நெகிரி மாநில இந்திய வாக்காளர்கள் ஒருமித்த ஆதரவை வழங்க வேண்டும் என்றும் குணராஜ் ஜோர்ஜ் வலியுறுத்தினார். வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், இந்திய சமூகத்தின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை அரசாங்கத்திடம் சரியான முறையில் எடுத்துச் சென்றால், அவற்றை பரிசீலித்து நிறைவேற்றுவதில் அரசாங்கம் உறுதியுடன் செயல்படும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

வரவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு இந்திய வாக்காளர்கள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், தற்போதைய மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருன் மாநிலத்தின் வளர்ச்சிக்காக பல புதிய மேம்பாட்டுத் திட்டங்களைத் திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

அவற்றில், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் படகுத் துறையை அமைக்கும் திட்டமும் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனில், பக்காத்தான் ஹராப்பான் மீண்டும் ஆட்சியை அமைப்பது அவசியம் என்றும் அதற்காக நெகிரி மாநில இந்திய வாக்காளர்கள் ஒருமித்த ஆதரவை வழங்க வேண்டும் என்றும் குணராஜ் ஜோர்ஜ் வலியுறுத்தினார்.

செண்டாயான், ஜூலை 27 –
இந்திய சமூகத்தின் ஆதரவு மீண்டும் தேசிய முன்னணி பக்கம் வலுவாக திரும்பி வருவதாகவும், கடந்த காலத்தில் சில தரப்பினர் அளித்த பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை இந்திய மக்கள் தற்போது தெளிவாக உணர்ந்துள்ளதாகவும் ரந்தாவ் சட்டமன்றத் தொகுதி தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் தெரிவித்தார்.

ரந்தாவ் தொகுதியில் நடைபெற்ற மக்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், ஜொகூர் மாநிலத் தேர்தல் முடிவுகள் இந்திய மக்களின் அரசியல் மனநிலையில் ஏற்பட்ட மாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.

"இந்திய மக்கள் பாரம்பரியமாக தேசிய முன்னணிக்கு ஆதரவளித்து வந்தவர்கள். சில அரசியல் கட்சிகள் அளித்த பொய்யான வாக்குறுதிகளையும், தேசிய முன்னணி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளையும் நம்பி ஒரு கட்டத்தில் அவர்கள் வேறு விதமாக வாக்களித்தது உண்மை. ஆனால் அந்த முடிவு அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்பதை இன்று அவர்கள் தெளிவாக உணர்ந்துள்ளனர். அதனால் மீண்டும் தேசிய முன்னணிக்கு ஆதரவு பெருகி வருகிறது," என்று அவர் கூறினார்.

ரந்தாவ் தொகுதியில் இந்திய சமூகத்துடன் தனக்கு நீண்டகால நெருக்கமான உறவு இருப்பதாகக் கூறிய முகமட் ஹசான், "இந்த தொகுதியில் உள்ள இந்திய மக்கள் என்னை ஒரு அரசியல்வாதியாக மட்டுமல்ல, தங்கள் குடும்ப உறுப்பினராகவே பார்க்கிறார்கள். அவர்களின் குடும்பத்தில் நானும் ஒருவன் என்ற அளவுக்கு எங்களுக்குள் நெருக்கமான உறவு உள்ளது. அது தேர்தல் காலத்திற்காக உருவாக்கப்பட்ட உறவு அல்ல; பல ஆண்டுகளாக வளர்ந்த நம்பிக்கையின் வெளிப்பாடு," என்றார்.

தான் ரந்தாவ் தொகுதியில் பிறந்து வளர்ந்தவர் என்பதால், அப்பகுதி மக்களின் வாழ்க்கை, தேவைகள் மற்றும் சவால்களை நன்கு அறிந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

"நான் இங்கே பிறந்தவன். இங்குள்ள மக்களோடு வளர்ந்தவன். எனவே, இந்த மண்ணின் தேவைகளும், மக்களின் எதிர்பார்ப்புகளும் எனக்கு நன்றாக தெரியும். அதனால்தான் மக்கள் எந்த நேரத்திலும் என்னை நேரடியாக அணுகி தங்களது பிரச்சினைகளை பகிர்ந்து கொள்கிறார்கள்," என்று அவர் தெரிவித்தார்.

தொகுதியில் நீண்டகாலமாக நிலவி வந்த பல நில உரிமைப் பிரச்சினைகளுக்கு தேசிய முன்னணி ஆட்சிக் காலத்தில் தீர்வு காணப்பட்டதாகவும் அவர் நினைவூட்டினார்.

அதேபோல், நாட்டின் மிக நவீன வசதிகளைக் கொண்ட தமிழ்ப்பள்ளிகளில் ஒன்றாக திகழும் செண்டாயான் தமிழ்ப்பள்ளி தேசிய முன்னணி ஆட்சிக் காலத்திலேயே கட்டப்பட்டதாக அவர் கூறினார்.

"இந்த தொகுதியில் வாழும் இந்திய மக்களின் குழந்தைகள் தரமான கல்வியைப் பெற வேண்டும் என்பதே எங்களின் நோக்கமாக இருந்தது. அதற்காக அனைத்து வசதிகளும் கொண்ட புதிய தமிழ்ப்பள்ளி கட்டும் முயற்சியை முன்னெடுத்தோம். இன்று அந்தப் பள்ளி நாட்டிலேயே முன்னுதாரணமாக திகழ்கிறது," என்றார்.

மேலும், பண்டார் செண்டாயான் பகுதி கடந்த சில ஆண்டுகளில் வேகமான வளர்ச்சியை கண்டுள்ளதாகவும், பல புதிய குடியிருப்புத் திட்டங்கள், வர்த்தக வளாகங்கள் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடுகள் அங்கு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

"பண்டார் செண்டாயான் தற்போது மிகவும் வேகமாக வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. தலைநகர் கோலாலம்பூரில் வசிக்கும் பலரும் இங்கு வீடுகளை வாங்கி குடியேறி வருகின்றனர். இது இப்பகுதியின் வளர்ச்சிக்கும் எதிர்கால பொருளாதார வாய்ப்புகளுக்கும் சான்றாகும்," என்று அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், தேசிய முன்னணி தலைவர் அறிவித்தபடி மஇகா சார்பில் போட்டியிடும் இரு வேட்பாளர்களும் வெற்றி பெற்றால் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பதவிகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தற்போதைய முக்கிய இலக்கு தேர்தல் வெற்றிதான் எனக் குறிப்பிட்டார்.

"இப்போது எங்களின் முழு கவனமும் தேர்தலில் வெற்றி பெறுவதில்தான் உள்ளது. முதலில் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் தேசிய முன்னணி ஆட்சியை அமைக்க வேண்டும். அதன் பின்னர் அனைத்து இன மக்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் மாநில நிர்வாகத்தில் தகுதியானவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும். இந்திய சமூகத்தின் பங்களிப்பும் உரிய முறையில் மதிக்கப்படும்," என்று டத்தோஸ்ரீ முகமட் ஹசான் தெரிவித்தார்.

சிரம்பான், ஜூலை 27-
சிரம்பான் ஜெயா சட்டமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி வெற்றிபெற்று ஆட்சியை அமைக்கும் சூழல் உருவாகி வருவதாக மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் தெரிவித்தார்.

சிரம்பான் ஜெயா தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ ஆர். தினாளனுக்கு ஆதரவாக மலேசிய மக்கள் சக்தி கட்சி ஏற்பாடு செய்திருந்த மக்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், இத்தேர்தல் மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியமானதாகும் என்றார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பக்காத்தான் ஹராப்பான் அரசு, குறிப்பாக சிரம்பான் ஜெயா மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் குறிப்பிடத்தக்க சாதனைகளை செய்யவில்லை என அவர் குற்றம்சாட்டினார்.

"மக்கள் தற்போது மாற்றத்தை விரும்புகின்றனர். அந்த மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய திறனும் அனுபவமும் தேசிய முன்னணியிடம் உள்ளது. எனவே இந்தத் தேர்தலில் தேசிய முன்னணிக்கு மக்கள் வலுவான ஆதரவை வழங்க வேண்டும்," என்று அவர் கேட்டுக்கொண்டார்.

சிரம்பான் ஜெயாவில் நீண்டகாலமாக நிலவி வரும் அடிப்படை வசதி குறைபாடுகளையும் அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, இவ்வளவு பெரிய மக்கள் தொகையைக் கொண்ட சிரம்பான் ஜெயா பகுதியில் இதுவரை ஒரு போலீஸ் நிலையம் கூட இல்லாதது வருத்தமளிப்பதாகவும், இந்த பிரச்சினையை தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ ஆர். தினாளன் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்வைத்திருப்பது மக்களின் உண்மையான தேவைகளை பிரதிபலிப்பதாகவும் கூறினார்.

மேலும், பொதுமக்களின் பிரச்சினைகளை விரைவாக அறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும் நோக்கில் டத்தோ ஆர். தினாளன் உருவாக்கியுள்ள செயலியை அவர் பாராட்டினார்.

அந்த செயலி மூலம் மக்கள் தங்களது குறைகள், தேவைகள் மற்றும் உதவிக்கான கோரிக்கைகளை நேரடியாக பதிவு செய்ய முடியும் என்றும், அதனடிப்படையில் தினாளன் சம்பந்தப்பட்ட மக்களை நேரில் சந்தித்து பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் செயல்படுவது பாராட்டத்தக்க மக்கள் சேவையாகும் என்றும் தனேந்திரன் குறிப்பிட்டார்.

இறுதியாக, அண்மையில் ஜொகூர் மாநிலத்தில் தேசிய முன்னணிக்கு கிடைத்த மகத்தான மக்கள் ஆதரவைப் போலவே, நெகிரி செம்பிலான் மாநிலத்திலும் "நீல அலை" எழுச்சி உருவாக வேண்டும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மக்கள் நல்லாட்சி, வளர்ச்சி மற்றும் பயனுள்ள சேவையை கருத்தில் கொண்டு தேசிய முன்னணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும், அதன் மூலம் சிரம்பான் ஜெயாவில் புதிய மாற்றத்தை உருவாக்க முடியும் என்றும் டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் வலியுறுத்தினார்.