loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

மலேசியாவின் புகழ்பெற்ற பாடகியாக வலம் வரும் லாவண்யா, தனது இனிமையான குரல் வளத்தால் பழைய மற்றும் புதிய திரைப்படப் பாடல்களைப் பாடி ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தைப் பெற்றுள்ளார்.

 

மலேசியா மட்டுமின்றி தமிழகம் மற்றும் பல்வேறு வெளிநாடுகளில் நடைபெறும் இசைக் கச்சேரிகளிலும் தொடர்ந்து பங்கேற்று தனது இசைத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

 

இந்நிலையில், சமீபத்தில் தமிழகம் சென்றிருந்த பாடகி லாவண்யா, தமிழக அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்தார். அப்போது, அமைச்சரின் முன்னிலையில் ‘குமரிப் பெண்ணின் உள்ளத்திலே’ என்ற பாடலை இனிமையாகப் பாடினார்.

 

லாவண்யாவின் குரல் வளத்தையும் பாடும் திறமையையும் பாராட்டிய அமைச்சர் செங்கோட்டையன், “உங்களுக்கு சிறந்த குரல் வளம் உள்ளது” எனப் பாராட்டினார்.

 

தமிழக அமைச்சரிடம் இருந்து கிடைத்த இந்தப் பாராட்டு, பாடகி லாவண்யாவின் இசைப் பயணத்தில் கிடைத்துள்ள மிகப் பெரிய அங்கீகாரமாக அமைந்துள்ளது.

 

தொடர்ந்து பல்வேறு இசை மேடைகளில் தனது திறமையை வெளிப்படுத்தி வரும் லாவண்யா, இசைத்துறையில் மேலும் பல சாதனைகளையும் சிறப்புகளையும் பெற வாழ்த்துகள்.

திருப்பத்தூர் பூமாயி அம்மன் கோவிலில் நடைபெற்ற திருமணத்தைத் தொடர்ந்து, வைரவன்பட்டியில் உள்ள சிவராமன் கல்லூரி வளாகத்தில் மணமக்களின் திருமண விருந்து விமரிசையாக நடைபெற்றது.

 

அருள்மாமணி ஆறுமுகம் பிள்ளை அவர்களின் கொள்ளுப் பேத்தியும், தங்கவேலு–தங்கமணி அவர்களின் பேத்தியும், பாலசுப்பிரமணி–புவனா தம்பதியரின் மகளுமான தங்கமணி MBA அவர்களுக்கும், திருப்பத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அமரர் இராமசிவராமன்–தனலட்சுமி தம்பதியரின் மகன் சிவ வெங்கட்ராமன் BE அவர்களுக்கும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் திருப்பத்தூர் பூமாயி அம்மன் கோவிலில் திருமணம் நடைபெற்றது.

 

இதனைத் தொடர்ந்து, திருப்பத்தூர்–காரைக்குடி சாலையில் பிள்ளையார்பட்டி அருகே வைரவன்பட்டியில் அமைந்துள்ள சிவராமன் கல்லூரி வளாகத்தில் திருமண விருந்து சிறப்பாக நடைபெற்றது.

 

நிகழ்வில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச சேதுபதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெரியகருப்பன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, திருமயம் சட்டமன்ற உறுப்பினர் ரகுபதி உள்ளிட்ட முன்னாள், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்துக் கட்சி நிர்வாகிகள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திருப்பத்தூர் பகுதி பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

 

மேலும், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அனுப்பிய வாழ்த்து மடலை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெரியகருப்பன் வாசித்து, மணமக்களிடம் வழங்கினார்.

 

விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் திருமண விருந்து சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கோலாலம்பூர் ஆக 21-

ஒருவரை இகழ்ந்து பேசுதல் விளையாட்டாகச் செய்யும் சிரிப்பிலும் கூடத் துன்பத்தைஉண்டுபண்ணும். உலகப் பண்பை அறிந்து நடக்கும் நல்லவர்கள், தனக்குப் பகைவர்இடத்திலும் அன்புப் பண்பைக் காட்டுவர்.

 

பள்ளிகளில் உண்மையிலேயே கேலிவதை (Buli) பிரச்சனை உள்ளதா? 

 

SMK டானாவ் கோத்தா படிவம் 2 மாணவியின் மரணம்: சிறப்பு விசாரணைக் குழுவைஅமைக்க மஇகா  பணிப்படை  (Briged MIC) கோரிக்கை விடுத்துள்ளது 

 

அவசர முடிவெடுக்காமல் முழுமையான, வெளிப்படையான விசாரணை நடத்தப்படவேண்டும்!

அலட்சியமாக இருக்காதீர்கள்! இந்தச் சிக்கலுக்கு உடனடியாகத் தீர்வு காணுங்கள்!

 

 

 இந்த விவகாரத்தை எதிர்த்துப் போராட  மஇகா  பணிப்படை முழு ஒத்துழைப்பு நல்கத்தயாராக உள்ளது என்று அதன் தலைவர் ஆண்ட்ரூ டேவிட் தெரிவித்தார்.

 

 

அத்துடன், காலஞ்சென்ற மாணவி கெஸியா நிஷா (Keziah Nisha) அவர்களின்குடும்பத்தினருக்கு இலவச சட்ட உதவியை (Free Legal Aid) வழங்கவும் தயாராகஇருக்கிறோம்.

 

 SMK டானாவ் கோட்டா பள்ளியின் படிவம் 2 மாணவியின் மரணத்தை மஇகா  பணிப்படைமிகவும் தீவிரமாகக் கருதுவதோடு, ஈடுசெய்ய முடியாத இழப்பைச் சந்தித்துள்ள அவரதுகுடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது.

 

 

மாணவியின் மரணம் தொடர்பான வழக்கு மிகவும் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட வேண்டும். கேலிவதை, இன ரீதியிலான அவதூறுகள், பள்ளியின் சூழல் மற்றும் இதர தொடர்புடையகாரணிகள் குறித்த அனைத்துத் தகவல்களும் முழுமையாக எந்தவொரு முன்முடிவும் இன்றிவிசாரிக்கப்பட வேண்டும். 

 

 

பெறப்பட்ட தகவல்களின்படி, தனக்கு எதிராக வகுப்பறை மாணவர் ஒருவர் இன ரீதியிலானசொற்கள் உட்பட அவதூறான வார்த்தைகளைப் பேசியது குறித்து சம்பந்தப்பட்ட மாணவிஏற்கனவே பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார். 

 

பள்ளி நிர்வாகம் இது தொடர்பாக உள்முறை விசாரணை நடத்தியபோதிலும், போதுமானசான்றுகள் இல்லை எனக் கூறி, அது கேலிவதை சம்பவமாக உறுதி செய்யப்படவில்லைஎனக் கூறப்படுகிறது. 

 

 

பள்ளியின்  விசாரணையில் புகார் உறுதி செய்யப்படவில்லை என்பதற்காக, அப்படி ஒருசம்பவமே நடக்கவில்லை என்று தானாக முடிவெடுத்துவிட முடியாது என மஇகா  பணிப்படை  வலியுறுத்துகிறது. 

 

இந்த மரணத்திற்குப் பிறகு, சாட்சிகளின் வாக்குமூலங்கள், புகார்கள் தொடர்பான பதிவுகள், பள்ளி எடுத்த நடவடிக்கைகள் மற்றும் விசாரணைக்கு உதவக்கூடிய பிற ஆதாரங்களைக்கொண்டு, அதிகாரிகள்  உண்மையில் நடந்தது என்ன என்று தீவிரமாக விசாரிக்க வேண்டும்என்று  ம இ கா  பணிப்படை கேட்டுக் கொள்கிறது.

 

 

பள்ளி நிர்வாகம் எடுத்த இந்த முடிவு காவல்துறையினருக்கும் கல்வி அமைச்சுக்கும் (KPM) தெரிவிக்கப்பட்டுள்ளதா? ஓர் ஆசிரியரின் விசாரணை மட்டுமே இறுதி முடிவைதீர்மானித்துவிட முடியுமா?

 

கல்வி அமைச்சு பதிலளிக்க வேண்டும்: முந்தைய வழக்குகளின் நிலை என்ன?

கடந்த மாதம் கூட, ஒரு ஆசிரியர் தனது சக ஊழியர்களின் கேலிவதை அல்லது மனஅழுத்தத்திற்கு ஆளானதாகக் கூறப்பட்டு மரணமடைந்த சம்பவம் நாட்டையேஅதிர்ச்சிக்குள்ளாக்கியதை மஇகா  பணிப்படை நினைவூட்டுகிறது. 

 

14 வயதே நிரம்பிய ஒரு மாணவி தற்கொலை செய்துகொள்ளும் சோகத்தை நாம் மீண்டும்எதிர்கொள்கிறோம். மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் சம்பந்தப்பட்ட இதுபோன்றசம்பவங்கள் எங்களை மிகுந்த கவலையடையச் செய்கின்றன.

 

 பள்ளிகள் இனி பாதுகாப்பான இடமாக மாற வேண்டும்.

நாங்கள் உண்மையையும் வெளிப்படைத்தன்மையையும் விரும்புகிறோம்! கேலிவதை, பாகுபாடு, அலட்சியம் அல்லது நிலையான செயல்பாட்டு நடைமுறை (SOP) மீறல்கள்கண்டறியப்பட்டால், சட்டத்தின் அடிப்படையிலும் ஆதாரங்களின் அடிப்படையிலும் உரியநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

 

 இதுபோன்ற சிக்கல்களைக் கையாள அரசாங்கம் ஒரு சிறப்பு விசாரணைக் குழுவைஅமைக்க வேண்டும் என்றும், எதிர்கால சந்ததியினருக்குப் பள்ளிச் சூழல் பாதுகாப்பானதாகஇருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். 

 

 

காவல்துறை தலைமை ஆணையர் இந்தச் சிறப்பு விசாரணைக் குழுவிற்குத் தலைமைதாங்கி, பள்ளிகளில் - குறிப்பாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே - இதுபோன்றசம்பவங்கள் நடப்பதற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய வேண்டும் என்றும்; பள்ளிகள் பாதுகாப்பான இடம் என்ற நம்பிக்கையைப் பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும்ஆசிரியர்களுக்கு மீண்டும் வழங்க வேண்டும் என்றும்  மஇகா  பணிப்படை பரிந்துரைக்கிறதுஎன்று 

ஆண்ட்ரூ டேவிட் (Andrew David) 

தேசிய மஇகா  பணிப்படை தலைவர் சுட்டிக் காட்டினார்.

கோலாலம்பூர்:

 

14 வயதான கெசியா நிஷா என்ற மாணவியின் மரணம் தொடர்பான சம்பவத்தில்எழுந்துள்ள துன்புறுத்தல் மற்றும் இனவாதக் குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையானவிசாரணை நடத்தப்பட வேண்டும் என தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சர்யுனேஸ்வரன் ராமராஜ் வலியுறுத்தியுள்ளார்.

 

இவ்விவகாரம் தொடர்பாக முன்கூட்டியே எந்த முடிவுக்கும் வர விரும்பவில்லை என்றும், உண்மையில் என்ன நடந்தது என்பதைத் தீர்மானிக்க அரச மலேசியக் காவல்துறை (PDRM) பாரபட்சமின்றி முழுமையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்தெரிவித்துள்ளார்.

 

துன்புறுத்தல், அவமதிப்பு அல்லது இனவாதக் கூறுகள் தொடர்பாக முன்வைக்கப்படும்ஒவ்வொரு குற்றச்சாட்டும் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும், குற்றம்நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கல்வி அமைச்சு கடுமையானநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 

“துன்புறுத்தல் வேடிக்கை அல்ல. இனவாதமும் வேடிக்கை அல்ல. எந்தவொரு குழந்தையும்தனது பெயர், நிறம், மொழி, மதம் அல்லது இனப் பின்னணி காரணமாகஅவமதிக்கப்படவோ, துன்புறுத்தப்படவோ கூடாது,” என்று அவர் குறிப்பிட்டார்.

 

குழந்தைகள் இனவாதத்தைக் கொண்டு பிறப்பதில்லை என்றும், அவர்கள்பெரியவர்களிடமிருந்து கேட்டு, பார்த்து, அதனைப் பின்பற்றுகின்றனர் என்றும் கூறியயுனேஸ்வரன், பெற்றோர், குடும்பத்தினர், ஆசிரியர்கள், சமூகத்தினர், அரசியல் தலைவர்கள்மற்றும் உள்ளடக்கப் படைப்பாளர்கள் என அனைவரும் இவ்விடயத்தில் பொறுப்புடன்செயல்பட வேண்டும் என்றார்.

 

பள்ளிகள் கல்வியை வழங்கும் இடமாக மட்டுமின்றி, தேசிய ஒற்றுமையை உருவாக்கும்முதல் தளமாகவும் இருக்க வேண்டும் என்றும், மாணவர்கள் அச்சமின்றி தங்களதுபிரச்சனைகளைத் தெரிவிக்கவும், துன்புறுத்தல் குறித்து புகார் அளிக்கவும் பாதுகாப்பானசூழல் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

“விசாரணையின் முழுமையான உண்மை இன்னும் தெரியாமல் இருக்கலாம். ஆனால் ஒருவிடயத்தில் நாம் அனைவரும் உடன்பட முடியும்; எந்தவொரு குழந்தையும் தான் யார்என்பதற்காக பள்ளிக்குச் செல்ல அஞ்சக்கூடாது,” என்று யுனேஸ்வரன் ராமராஜ்வலியுறுத்தினார்.

 

மறைந்த கெசியா நிஷாவின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்த அவர், பள்ளிகள் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும், குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும், துன்புறுத்தல் தடுக்கப்பட வேண்டும் என்றும், குழந்தைகளின் வாழ்க்கையில்இனவாதத்திற்கு இடமளிக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டார்.

கோலாலம்பூர், ஆக.19 — 

கோலாலம்பூர் கோர்ட்டுமலை ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் கீழ் அமைந்துள்ளகோர்ட்டுமலை பிள்ளையார் ஆலயத்தின் கும்பாபிஷேகம் வரும் 23ஆம் தேதிஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெறவுள்ளது.

 

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆலயத்தில் யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு சமயநிகழ்வுகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், கும்பாபிஷேக நாளில் அதிகளவிலானபக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

கடந்த காலங்களில் நடைபெற்ற கும்பாபிஷேகங்களைக் காட்டிலும் இம்முறை பக்தர்களின்வருகை அதிகமாக இருக்கும் என்று டான்ஸ்ரீ ஆர். நடராஜா தெரிவித்தார்.

 

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும்சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

 

குறிப்பாக, கும்பாபிஷேக நாளில் சுமார் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு வாழை இலையில் உணவும், தேவைக்கேற்பபொட்டல உணவுகளும் வழங்கப்படவுள்ளன.

 

அன்னதானத்திற்காக தயாரிக்கப்படும் உணவுகள் அனைத்தும் ஆலய வளாகத்திலேயேசுகாதாரமான முறையில் தயாரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கானபணிகளில் ஏற்பாட்டுக் குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இதனிடையே, கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள வரும் பக்தர்கள் ஆலயத்தின்புனிதத்தையும் தூய்மையையும் பாதுகாக்கும் வகையில், ஆலய வளாகத்தை சுத்தமாகவைத்துக்கொள்ள வேண்டும் என டான்ஸ்ரீ ஆர். நடராஜா கேட்டுக்கொண்டார்.

 

பக்தர்கள் அதிகளவில் கூடும் என்பதால், உணவு மற்றும் குடிநீர் பொட்டலங்கள், பயன்படுத்தப்பட்ட பொருட்கள் உள்ளிட்டவற்றை கண்ட இடங்களில் வீசாமல், அதற்கெனஏற்பாடு செய்யப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் போட்டு ஆலய வளாகத்தின் தூய்மையைப்பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 

இதற்கிடையில், ஸ்கோன்ஸ் செனாய், அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில்கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

 

அந்த அமைப்பின் தலைவர் நாஜாராஜு கூறுகையில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும்வாய்ப்பு தங்களுக்கு கிடைத்திருப்பது பெரும் பாக்கியம் என்றார்.

 

“நாங்கள் வழங்கும் அன்னதானத்தை பக்தர்கள் வந்து சாப்பிட்டு செல்ல வேண்டும். பக்தர்களுக்கு உணவு வழங்குவது எங்களுக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறோம். அனைவரும் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு இறையருளைப் பெற வேண்டும்,” என்றார்.

 

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆலயத்தில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ள நிலையில், பக்தர்கள் ஒழுங்கையும் ஆலயத்தின் தூய்மையையும்கடைப்பிடித்து, சமய நிகழ்வுகளில் பக்தியுடன் கலந்து கொள்ள வேண்டும் எனஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.