loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

கோலாலம்பூர்,மார்ச் 29-

கோலாலம்பூர்-காரக் நெடுஞ்சாலை கிலோமீட்டர் 51.4 இல்  16 பயணிகளை ஏற்றிச்சென்ற விரைவுப் பேருந்து விபத்துக்குள்ளானது.

காலை 7.50 மணியளவில் புக்கிட் திங்கியிலிருந்து லென்டாங் நோக்கிச் செல்லும் வழியில் உள்ள ஓய்வெடுக்கும் இடத்திற்கு அருகே இந்த சம்பவம் நிகழ்ந்ததால் கிழக்கை நோக்கி செல்லும் வழியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக பெந்தோங் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் கமாண்டர் பாட்ருல் இஷாம் சாரி தெரிவித்தார்.

விரைவு பேருந்து விபத்து தொடர்பாக தகவல் அறிந்ததும்  சுமார் 19 தீயணைப்பு வீரர்கள்  கொண்ட குழு சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் பயணிகளை மீட்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு விபத்தில் கடும் காயம் அடைந்த மூவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும் இந்த விபத்தினால் சுமார் 4.7 கிலோமீட்டர் தூரம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும், அதனை குறைப்பதற்கு விறைவாக அப்புறப்படுத்தும்  பணி மேற்கொண்டு வருவதாக  மலேசிய நெடுஞ்சாலை இலாகா தனது முகநூலின் வழி தெரிவித்தது.

கோலாலம்பூர், மார்ச் 27-


ம.இ.காவையும் , அந்த கட்சியை சார்ந்த தலைவர்களை குறைச் சொல்லியே அரசியல் நடத்திய  ஒற்றுமை துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, இப்போது  தனது சொந்த கட்சி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை குறை சொல்ல தொடங்கிவிட்டார். 

அதன் விளைவு இப்போது ஒட்டுமொத்த இந்திய  நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்  செனட்டர்களின் அம்பு அவர் மீது பாய்ந்துள்ளது.

அண்மையில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள், செனட்டர்கள் அனைவரும் ஒற்றுமை துறை அமைச்சர் அரோன் அகோ மற்றும் துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமியுடன் ஒரு  சந்திப்பை நடத்தினர்.

இந்த சந்திப்பில் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்  பி.பிரபாகரனுக்கு பொறுப்பு வழங்கப்பட்டு மித்ராவை அவர் கவனிக்க  வாய்ப்பு கொடுங்கள்.. அதன் கீழ் ஆலோசனை குழு அமைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை வையுங்கள் என கேட்டதற்கு , ஒற்றுமை துறை அமைச்சர் அப்படி எல்லாம் செய்ய முடியாது. அது என் பொறுப்பில் தான் இருக்கும் , உங்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் பிரதமரை சென்று சந்தியுங்கள் என வெளிநடப்பு செய்தார்.

அதன் பின் நம்ம துணை அமைச்சர்  கடந்த காலத்தில்...... என வரலாறு வகுப்பு எடுக்க தொடங்கி  பிரதமர் துறையில்  ரமணன்  தலைமையில்  மித்ரா சரியாக செய்யவில்லை என சொல்ல கலந்துரையாடல் வாய் வாக்குவாதமானது.

பக்காத்தான் தலைவர்கள் வெளிநடப்பு செய்து. இப்போது பிரதமரை சந்திக்க முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.

இந்நிலை ஒரே கட்சியில் இருக்கும் துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி  மற்றும் துணை அமைச்சர் டத்தோ  ரமணனுக்கு இடையில் இப்போது கருத்து மோதல் தொடங்கி விட்டது.

ரமணன் வெளிப்படையாக சரஸ்வதி கந்தசாமிக்கு குறை மட்டும் தான் சொல்ல தெரியும், அவரிடம் செயலாக்கம் இல்லை என பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

மித்ரா இவர்களின் பிடிவாதத்தால்  ஒரு செயல்பாடும் இல்லாமல் கிடப்பில் கிடக்கிறது. அனைவரும் எனக்கு அழைத்து விசாரிக்கிறார்கள். இதில் பாலர் பள்ளி ஆசிரியர்களும் அடங்குவர் என டத்தோ ரமணன் தெரிவித்தார்.

இதனிடையே  ஒட்டு மொத்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்து யாரிடமும் ஒத்து போகாத சரஸ்வதி கந்தசாமி பதவி விலகும் படி கூறவுள்ளதாகவும் அதோடு மித்ரா மீண்டும் பிரதமர் துறையின் கீழ் சென்று ஆலோசனை குழு உருவாக்கபட வேண்டும் என பேச்சு வார்த்தை நடத்தவிருப்பதாக தகவல்  வெளியாகி உள்ளது.

இதன் வாயிலாக பாக்காத்தான் இந்திய தலைவர்களின் அம்பு சரஸ்வதி கந்தசாமி மீது பாய்ந்துள்ளது.

செய்தி : வெற்றி விக்டர்

கோலாலம்பூர், மார்ச் 27-

தேசிய முன்னணியை முன் உதாரணமாக வைத்துக்கொண்டு  நடப்பு அரசாங்கம் இந்திய சமுதாயத்திற்கு 2,200 மெட்ரிகுலேசன் சீட்டை ஒதுக்க வேண்டும் என முன்னாள் செடிக் இயக்குநர் டத்தோ  என்.எஸ் ராஜேந்திரன் ஓர் ஆங்கில இணைய தளத்திற்கு கொடுத்த பேட்டியை தொடர்ந்து,

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்  அவர்களின் அதிகாரபூர்வ facebook பக்கத்தில் ஒரு பதிவு போடப்பட்டுள்ளது.

அந்த பதிவில் டத்தோ என்.எஸ். ராஜேந்திரன் கருத்தை பதிவு செய்ததோடு ஆண்டுக்கு  2,200 சீட் தானே அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லையே  என  பதிவிடப்பட்டுள்ளது.

இந்தியர்களுக்கு அது வழங்கப்பட வேண்டிய ஒரு நியாமான விஷயம், அதோடு கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில், அதிகமான இந்தியர்கள் தேசிய முன்னணியை புறக்கணித்தற்கு காரணம் சிலரின் பொய்யான பிரச்சாரம் என பதிவு செய்யப்பட்டுள்ளது.

செய்தி : வெற்றி விக்டர்

கோலாலம்பூர்,மார்ச் 27-

காலுறை விவகாரம் தொடர்புடைய கேகே மார்ட் விவகாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஏன் அமைதியாக இருக்கிறார் என முன்னாள் அமைச்சரான கைரி ஜமாலுடின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த பிரிவினைவாத சர்ச்சைக்கு மத்தியில் மலேசியர்களை ஒன்றிணைக்கும் பொருப்பை அவர் முறையாக செய்ய வேண்டும்.

பல இன மக்கள் வாழும் இந்நாட்டில் பிரிவினை சர்ச்சைகள் எழுந்தால் அதனை முறையாக கையாழ தெரிந்த தலைவராக இருப்பது அவசியம். இதனை கையாழ்வது கடினம் என்பதை நான் உணர்கிறேன். ஆனால் சரியான முடிவை எடுக்கும் தருணத்தில் பிரதமர் உள்ளார். அதனை அவர் செய்வார் என்று நம்புகிறேன்.

இதுவரை கேகே மார்ட் விவகாரத்தில் பிரதமர் இருமுறை மட்டும்தான் வாயை திறந்துள்ளார். கடந்த 20ஆம் தேதி பேசிய அவர், விசாரணை தொடர வேண்டும் என்றும் தகுந்த தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

அதன் பின்னர் நேற்று முன்தினம் மதம்  சார்ந்த விவகாரத்தில் அதிலும் இஸ்லாத்தை இழிப்படுத்தினால் விட்டு கொடுக்கும் போக்கு இருக்காது என பிரதமர் கூறியிருந்தார்.

கேகே மார்ட் விவகாரத்தில் நாம் குரல் எழுப்பிவிட்டோம். விசாரணைக்கு பின்னர் வழக்கு நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டது. இனியும் இந்த விவகாரத்தை பெரிது படுத்தி தேவையற்ற அசம்பாவிதங்களை ஏற்படுத்த வேண்டாம் என கைரி தெரிவித்தார்.

கோலாலம்பூர் மார்ச்- 26

நாளை  ம.இ.காவின் தேசியத் தலைவர் பதவிற்கான வேட்புமனு தாக்கல் நடைப்பெறும் நிலையில் நடப்பு தலைவர் டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையை  தான் ம.இ.கா இளைஞர் பிரிவு விரும்புவதாக  ம.இ.கா  தேசிய இளைஞர் பிரிவு உச்சமன்ற உறுப்பினர்  லெட்சு மாறன் தெரிவித்தார்.

டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் - டத்தோ ஸ்ரீ சரவணன் ஆகியோர் தலைமைக்கு வந்த பிறகு  குழுக்களாக பிரிந்து கிடந்த  விவகாரம் ஒழித்து கட்டப்பட்டது. இருவரும் இணைந்து ம.இ.காவிற்கு  புதிய தோற்றம் கொடுத்து, உரிமைகளை கேட்க தொடங்கினர்.

அதோடு மட்டுமல்ல ம.இ.காவின் புதிய கட்டடத்தை கட்டும் இவர்களின் முயற்சி காலத்திற்கும் பேசப்படும் என லெட்சு தெரிவித்தார்.

இப்போது தலைவர் பதவிக்கான வேட்பு மனு  தாக்கல் நடைப்பெறவுள்ளது. அதே போல் துணை தலைவர் பதவிக்கான தேர்தலும் விரைவில் நடைப்பெறும்  நிலையில் தலைவருக்கு பக்கபலமாக  இருக்கவேண்டிய அந்த பொறுப்புக்கு டத்தோ ஸ்ரீ சரவணன்  சரியானவர்.

கடந்த காலங்களில் இந்த இரு முக்கிய பதவிகளினால் ம.இ.கா பிளவு படுத்தியது. அதை சரி செய்தவர்கள் இந்த இருவர்களே.

எங்களை போன்ற இளைஞர்களுக்கு இப்படிப்பட்ட தலைவர்கள் மட்டுமே வழிகாட்ட முடியும் என லெட்சு தெரிவித்தார்.