loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

ஈப்போ, செப் 2-

இங்குள்ள ஜாலான் பூரோங் பெலிபிஸ் (இந்தான் பிஸ்னஸ் செண்டர்) முன்னிலையில் கடந்தஆகஸ்ட் 23 ஆம் தேதியன்று  73 வயதுடைய லாம் சூங் வோங் வாகனம் ஒன்றினால்மோதப்பட்டதை தொடர்ந்து மரணம் அடைந்தார்.

 

அச்சம்பவம் இரவு  8.30 மணிக்கு நிகழ்ந்தது. 

 

அவருடைய  மரணம் தொடர்பாக அவரை மோதிச் சென்ற வாகனத்தை  தேடி வருகிறோம்.

 

இந்த சம்பவம் தொடர்பாக  காவல்  துறை விசாரணை செய்தால் பாதிப்பட்டகுடும்பத்தினருக்கு  உதவியாக இருக்கும் என‌ ஜெலாப்பாங் சட்டமன்ற உறுப்பினர் சியா பாவ்ஹியான் தெரிவித்தார்.

 

மேலும் , அங்குள்ள பகுதியில் ரகசிய கேமராக்கள் இருந்தால் யாரேனும் முன் வரலாம்என்றார்.

 

பொறுப்பில்லாத மோதி சென்ற வாகன ஓட்டுனர் அடையாளம் காணப்பட வேண்டும் என்றுகேட்டுக் கொண்டார்

ஈப்போ, செப் 2-

இங்குள்ள ஜாலான் பூரோங் பெலிபிஸ் (இந்தான் பிஸ்னஸ் செண்டர்) முன்னிலையில் கடந்தஆகஸ்ட் 23 ஆம் தேதியன்று  73 வயதுடைய லாம் சூங் வோங் வாகனம் ஒன்றினால்மோதப்பட்டதை தொடர்ந்து மரணம் அடைந்தார்.

 

அச்சம்பவம் இரவு  8.30 மணிக்கு நிகழ்ந்தது. 

 

அவருடைய  மரணம் தொடர்பாக அவரை மோதிச் சென்ற வாகனத்தை  தேடி வருகிறோம்.

 

இந்த சம்பவம் தொடர்பாக  காவல்  துறை விசாரணை செய்தால் பாதிப்பட்டகுடும்பத்தினருக்கு  உதவியாக இருக்கும் என‌ ஜெலாப்பாங் சட்டமன்ற உறுப்பினர் சியா பாவ்ஹியான் தெரிவித்தார்.

 

மேலும் , அங்குள்ள பகுதியில் ரகசிய கேமராக்கள் இருந்தால் யாரேனும் முன் வரலாம்என்றார்.

 

பொறுப்பில்லாத மோதி சென்ற வாகன ஓட்டுனர் அடையாளம் காணப்பட வேண்டும் என்றுகேட்டுக் கொண்டார்

ஈப்போ, செப்.2

பள்ளி பருவத்தில் இருக்கும் மாணவர்கள் விளையாட்டாக இருப்பது இயல்பானதாகஇருந்தாலும் நம்மிடம் இருக்கும் திறமையை வளர்த்து கொள்ள பள்ளி பருவமே சரியானதருணம் என்பதினை புந்தோங்கை சேர்ந்த பெட்ரிக் ஜெயராஜ்‌ மார்டின் நிரூபித்துள்ளார்.

 

அண்மையில் நடைபெற்ற சுக்மா போட்டியில் கராத்தே போட்டியில் பேராக் மாநிலத்திற்குபெட்ரிக் தங்கம் பெற்று தந்துள்ளார்.

 

அவருடைய வெற்றியை பாராட்டி தம்பூன் பி.கே.ஆர். தொகுதியின் துணைத் தலைவர்அ.கலைமுகிலன் நேரடியாக பெட்ரிக்கை சந்தித்தார்.

 

மேலும் தன்னால் இயன்ற சன்மானம் ஒன்றை வழங்கி அந்த விளையாட்டு வீரருக்குஉற்சாகம்‌ மூட்டினார்.

 

அன்று பேராக்கில் ஏராளமான திறமையான விளையாட்டாளர்கள் இருந்தனர். மீண்டும் அதேபோல் பேராக்கில் திறமையான,  விளையாட்டாளர்கள் உருவாக வேண்டும் எனகலைமுகிலன் கூறினார்.

 

 தொடர்ந்து , நம் இளைஞர்கள் சாதித்தால் நாம் அவர்களுக்கு அங்கீகாரம் வழங்குவதுமுக்கியம் என்றார்.

 

பெட்ரிக் போல் நம்‌ பிள்ளைகளை சாதிக்க வேண்டும்‌ என‌ அவர்‌ கேட்டுக் கொண்டார்

கோர்ட்டுமலை பிள்ளையார் ஆலய கும்பாபிஷேகம் தொடர்பில் வெளியான அவதூறுகளுக்குஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா கடும் கண்டனம்!

 

பத்துகேவ்ஸ்,செப்.2-

கோலாலம்பூர் கோர்ட்டுமலை ஸ்ரீ பிள்ளையார் ஆலய கும்பாபிஷேகம் தொடர்பில் தம்மையும்ஆலய நிர்வாகத்தையும் குறிவைத்து பல்வேறு அவதூறான தகவல்கள் வெளியிடப்படுவதாக, கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜாதெரிவித்துள்ளார்.

 

கும்பாபிஷேகத்திற்காக வசூலிக்கப்பட்ட வெ.78 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக சிலதரப்பினர் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், ஆலயதிருப்பணிக்காக பெறப்பட்ட நன்கொடைகள் மற்றும் செலவுகள் தொடர்பான அனைத்துவிபரங்களும் ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

“வசூல் செய்யப்பட்ட தொகை, கும்பாபிஷேகத்திற்காக மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும்செலவுகள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் நாங்கள் தெளிவாக தெரிவித்துவிட்டோம். அப்படியிருக்கும்போது, மீண்டும் மீண்டும் ஏன் பொய்யான செய்திகளைவெளியிடுகிறார்கள்?” என அவர் கேள்வி எழுப்பினார்.

 

கும்பாபிஷேகம் என்பது ஆலயங்களில் வழக்கமாக நடைபெறும் ஒரு முக்கியமான சமயநிகழ்வு என்றும், பொதுவாக 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்படுவதுவழக்கம் என்றும் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா தெரிவித்தார்.

 

ஆலய திருப்பணிகள் மற்றும் கும்பாபிஷேக ஏற்பாடுகள் அனைத்தும் முறையானநடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.

 

அதேவேளை, தம்முடைய புகைப்படத்துடன் சிவக்குமாரின் புகைப்படத்தையும் இணைத்து, “அப்பா–மகன் மோசடி” என்ற வகையில் அவதூறுகளைப் பரப்புவது கண்டிக்கத்தக்கதுஎன்றும் அவர் கூறினார்.

 

ஆலய திருப்பணிக்கான நன்கொடையாக மொத்தம் வெ.5.8 மில்லியன் கிடைத்துள்ளதாகத்தெரிவித்த டான்ஸ்ரீ ஆர்.நடராஜா, இதில் வெ.4.8 மில்லியன் ரொக்கமாகவும், 1.75 கிலோதங்கமாகவும் கிடைத்ததாக விளக்கமளித்தார்.

 

இதுவரை ஆலய திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் தொடர்பான பணிகளுக்காக சுமார்வெ.3.4 மில்லியன் செலவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

எனினும், மண்டலாபிஷேகம் நிறைவடைந்த பின்னரே திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம்தொடர்பான முழுமையான வரவு–செலவு கணக்குகள் இறுதி செய்யப்படும் என்றும் அவர்கூறினார்.

 

அதன் பின்னர், ஆலயத்தின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் கணக்குகள் முறையாகபரிசீலிக்கப்பட்டு, தேவையான நகல்கள் ஆடிட்டர் ஜெனரல் (AG) அலுவலகத்திற்கும் அனுப்பிவைக்கப்படும் எனவும் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா தெரிவித்தார்.

 

ஆலய நிதியில் முறைகேடு அல்லது மோசடி நடைபெற்றுள்ளதாக யாரிடமும் ஆதாரம்இருந்தால், அதனை உரிய முறையில் நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் சவால் விடுத்தார்.

 

“மோசடி நடந்திருக்கிறது என்று கூறுபவர்கள், ஆதாரத்துடன் உறுதிப்படுத்தட்டும். உண்மையில் மோசடி நடைபெற்றிருப்பது நிரூபிக்கப்பட்டால், அன்றே நான் எனது பதவியைராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறேன்,” என டான்ஸ்ரீ ஆர்.நடராஜா திட்டவட்டமாகதெரிவித்தார்.

 

ஆலயத்தின் நிதி நிர்வாகம் மற்றும் திருப்பணிகள் தொடர்பில் வெளிப்படைத்தன்மையுடன்செயல்பட்டு வருவதாகவும், கணக்குகள் உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு சம்பந்தப்பட்டஅதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

 

எனவே, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் தனிநபர்களை குறிவைத்து வெளியிடப்படும்அவதூறுகளையும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

கோலாலம்பூர்:

 

நேபாளம் மற்றும் சீனா எல்லைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளம், மண்சரிவு உள்ளிட்டபேரிடரில் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள 91 மலேசியர்கக் கண்டறிய அனைத்துமுயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என தேசிய ஒருமைப்பாட்டுத் துணையமைச்சர்யுனேஸ்வரன் ராமராஜ் வலியுறுத்தினார்.

 

ஆகஸ்ட் 26-ஆம் தேதி நேபாளத்தின் ராசுவா மற்றும் திபெத்தின் கியிரோங் அல்லது கெருங்பகுதிகளைத் தாக்கிய இந்தப் பேரிடரில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

விஸ்மா புத்ராவின் ஆகஸ்ட் 29ஆம் தேதி இரவு 8 மணி நிலவரப்படி, நேபாளத்தில் 55 மலேசியர்களும், சீனாவில் 36 மலேசியர்களும் இன்னும் தொடர்பு கொள்ள முடியாதநிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

 

தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளவர்களில் சுற்றுலாப் பயணிகள், மலையேறுபவர்கள், கைலாயமலைக்குச் சென்ற சமய யாத்திரிகர்கள் மற்றும் மலேசிய தீயணைப்பு, மீட்புத் துறையைச்சேர்ந்த இரு அதிகாரிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஒவ்வொருவரும் அவர்களது குடும்பங்களுக்கு முக்கியமானவர்கள் என்பதால், அவர்களின்குடும்பத்தினருக்கு தகவல்கள் நேரடியாகவும், சீரான இடைவெளியிலும், தொடர்ந்துவழங்கப்படுவதை விஸ்மா புத்ரா உறுதி செய்ய வேண்டும் என யுனேஸ்வரன் தெரிவித்தார்.

 

குடும்பங்களுக்காக 24 மணி நேர தொலைபேசி சேவையுடன் கூடிய சிறப்பு ஒருங்கிணைப்புமையம் அமைத்தல், ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனிப்பட்ட தொடர்பு அதிகாரியைநியமித்தல் மற்றும் தினசரி குறிப்பிட்ட நேரத்தில் தகவல் விளக்கங்களை வழங்குதல்உள்ளிட்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்வலியுறுத்தினார்.

 

மேலும், விஸ்மா புத்ரா, தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (NADMA), மலேசியதீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM), நேபாளம் மற்றும் சீன அதிகாரிகள், சுற்றுலாநிறுவனங்கள் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இடையிலானஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

 

மலேசியாவின் சிறப்பு மீட்புக் குழுவான STORM-ஐ அனுப்புவதற்கான அனைத்துஏற்பாடுகளையும் முன்கூட்டியே தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும், அதிகாரப்பூர்வகோரிக்கை மற்றும் அனுமதி கிடைத்தவுடன் தாமதமின்றி குழுவை அனுப்பக்கூடியவகையில் தேவையான ஏற்பாடுகளை முடிக்க வேண்டும் என்றும் யுனேஸ்வரன்தெரிவித்தார்.

 

அதேவேளை, காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு உளவியல் மற்றும் சமூக ஆதரவுவழங்குவதுடன், தேவையான குடும்ப உறுப்பினர்கள் நேபாளம் அல்லது சீனாவுக்குச்செல்வதற்கான ஆவணங்கள், பயணம் மற்றும் தளவாட உதவிகளையும் அரசாங்கம் வழங்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

 

சரிபார்க்கப்படாத எண்ணிக்கைகள், புகைப்படங்கள் அல்லது தகவல்களை சமூகஊடகங்களில் பரப்ப வேண்டாம் என பொதுமக்களையும் ஊடகங்களையும் கேட்டுக்கொண்டயுனேஸ்வரன், இதுபோன்ற நேரத்தில் குடும்பங்களுக்கு மேலும் வேதனையைஏற்படுத்தக்கூடிய ஊகத் தகவல்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

 

“இந்த நேரத்தில் இனம், மதம் அல்லது அரசியல் வேறுபாடுகள் இல்லை. தங்களதுஅன்புக்குரியவர்களின் பாதுகாப்பான வருகைக்காகக் காத்திருக்கும் மலேசியர்கள் மட்டுமேஉள்ளனர்,” என்று அவர் குறிப்பிட்டார்.

 

தொடர்பு கொள்ள முடியாதுள்ள அனைத்து மலேசியர்களும் பாதுகாப்பாகக்கண்டுபிடிக்கப்பட வேண்டும் என பிரார்த்திப்பதாகவும், உயிரிழந்தவர்களின்குடும்பங்களுக்கும் பேரிடரால் பாதிக்கப்பட்ட நேபாளம் மற்றும் திபெத் மக்களுக்கும் ஆழ்ந்தஅனுதாபத்தைத் தெரிவிப்பதாகவும் யுனேஸ்வரன் ராமராஜ் கூறினார்.