loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்


ஜோகூர் பாரு, ஆக. 7 – 
ஜோகூர் மாநிலத்தின் முன்னேற்றம் அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடனும் இணக்கத்துடனும் செயல்படுவதன் மூலமே சாத்தியமாகும் என ஜோகூர் மந்திரி புசார் டத்தோ ஒன் ஹபிஸ் காசி வலியுறுத்தினார்.

'பங்சா ஜோகூர்' (Bangsa Johor) என்ற ஒற்றுமைக் கொள்கையின் அடிப்படையில், 2030ஆம் ஆண்டுக்குள் ஜோகூரை முன்னேறிய மாநிலமாக மாற்றும் இலக்கு சரியான பாதையில் முன்னேறி வருவதாக அவர் தெரிவித்தார்.

பொருளாதார வளர்ச்சி, உயர்ந்த வருமானம் தரும் வேலைவாய்ப்புகள் மற்றும் அனைத்து மக்களுக்கும் பயன் அளிக்கும் முழுமையான வளர்ச்சி ஆகியவை இதற்கு அடித்தளமாக இருக்கும் என்றும் கூறினார்.

ஜோகூர் மாநில இளைஞர்கள் வேறு மாநிலங்களுக்கோ வெளிநாடுகளுக்கோ வேலைக்காகச் செல்ல வேண்டிய அவசியமின்றி, தங்கள் சொந்த மாநிலத்திலேயே உயர்ந்த வருமானம் தரும் வேலைவாய்ப்புகளைப் பெற வேண்டும் என்பதில் மாநில அரசு உறுதியாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்காக தரமான கல்வி, மனிதவள மேம்பாடு மற்றும் பொருளாதார வாய்ப்புகளை விரிவுபடுத்தும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இன்று ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், அப்பள்ளி தொடங்கப்பட்டதிலிருந்து ஜோகூர் மாநில மந்திரி புசார் ஒருவர் அதிகாரப்பூர்வமாக வருகை தந்தது இதுவே முதல் முறை என்பது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும் என்றார்.

அனைத்து வகைப் பள்ளிகளின் கல்வி வளர்ச்சியிலும் மாநில அரசு சமமான அக்கறை செலுத்துவதை இந்த வருகை வெளிப்படுத்துவதாகவும் கூறினார்.

தமது உரையில், அப்பள்ளியின் முன்னாள் மாணவர்களில் ஒருவர் ஏர்ஏசியா விமானியாகவும், மற்றொருவர் 'ஓராங் மூடா ஜோகூர்' கல்வி உதவித்தொகை பெற்று இங்கிலாந்தின் இம்பீரியல் கல்லூரியில் உயர்கல்வி பயிலும் மாணவராகவும் சாதனை படைத்திருப்பதை சுட்டிக்காட்டினார். 

வாய்ப்பும் விடாமுயற்சியும் இருந்தால் ஜோகூர் மாணவர்கள் உலக அரங்கில் சாதிக்க முடியும் என்பதற்கு அவர்கள் எடுத்துக்காட்டாக உள்ளனர் என்றார்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாணவர்களுடன் நேரடி கலந்துரையாடல் மற்றும் கேள்வி–பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாணவர்கள் தலைவர்களை நேரில் சந்தித்து உரையாடும் வாய்ப்பைப் பெறுவது அவர்களின் கல்வி ஆர்வத்தையும் உயர்ந்த இலக்குகளை நோக்கிச் செல்லும் மனப்பாங்கையும் அதிகரிக்கும் என மந்திரி புசார் தெரிவித்தார்.

முன்னதாக துன் அமினா தமிழ்ப்பள்ளிக்கு மேற்கொண்ட வருகையின்போது வழங்கிய வாக்குறுதியின்படி அப்பள்ளியின் பயன்பாட்டு கட்டணப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதை நினைவுகூர்ந்த அவர், மாநில அரசு அளிக்கும் ஒவ்வொரு வாக்குறுதியும் தொடர்ந்து நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்.

இந்தச் சந்திப்பின் போது, ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளியின் வசதிகளை மேம்படுத்த வெ.200,000 சிறப்பு நிதியை ஜோகூர் மாநில அரசு ஒதுக்கியுள்ளதாக அவர் அறிவித்தார்.

பள்ளி நிர்வாகம் வெ.107,000 மட்டுமே கோரியிருந்தபோதிலும், பள்ளியின் நிலையை நேரில் பார்வையிட்டபின் கூடுதல் தேவைகள் இருப்பதை கருத்தில் கொண்டு ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டதாக அவர் விளக்கினார்.

இந்த நிதியின் மூலம் பள்ளி மண்டபம், கூரையுடன் கூடிய நடைபாதை, குளிர்சாதன வசதி, துருப்பிடித்த படிக்கட்டுகள், மின்சார சுவிட்ச் அமைப்பு, தண்ணீர் பம்பு, வேலி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளன.

பள்ளி நிர்வாகமும் பெற்றோர்–ஆசிரியர் சங்கமும் இந்த நிதியை முழுமையாகப் பயன்படுத்தி மாணவர்களுக்கு பாதுகாப்பான, வசதியான மற்றும் சிறந்த கல்விச் சூழலை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இறுதியாக, மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதோடு ஆசிரியர்களின் அர்ப்பணிப்பை மதித்து, எதிர்காலத்தில் வெற்றி பெற்ற பின்னர் ஜோகூர் மாநிலத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

இந்நிகழ்ச்சியில் கெமெலா சட்டமன்ற உறுப்பினரும் ஜோகூர் மாநில மஇகா தலைவருமான கே. ரேவன் குமார், காஹாங் சட்டமன்ற உறுப்பினரும் ஜோகூர் மாநில கல்வி மற்றும் தகவல் தொடர்புத் துறை துணை ஆட்சிக்குழுத் தலைவருமான வி. ருகிந்திரன், ஜோகூர் மாநில கல்வித் துறை அதிகாரி ரவீந்திரன், துணை கல்வி இயக்குநர் ஹாஜி கமால், பள்ளி நிர்வாக சபைத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ். கிருஷ்ணன், தலைமையாசிரியர் ப.குணாளன், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

பாசிர் கூடாங், ஆக. 5 – 
ஜொகூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாசிர் கூடாங் மருத்துவமனை நவீன மருத்துவ வசதிகள், அதிக நோயாளிகளை கையாளும் கொள்ளளவு மற்றும் பல்வேறு சிறப்பு மருத்துவப் பிரிவுகளுடன் உருவாக்கப்பட்டிருந்தாலும், கடுமையான பணியாளர் பற்றாக்குறை காரணமாக இன்னும் முழுத் திறனில் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ஜொகூர் மந்திரி புசார் டத்தோ ஓன் ஹபிஸ் காசி தெரிவித்ததாவது, மருத்துவமனைக்கு மொத்தமாக 2,271 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 1,079 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. இதனால், மேலும் 1,192 பணியிடங்கள் இன்னும் காலியாக உள்ளன என்றார்.

குறிப்பாக மருத்துவ நிபுணர்கள், தாதியர்கள் மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்களுக்கான பணியிடங்களே அதிகளவில் நிரப்பப்படாமல் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜொகூர் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த மருத்துவமனை, முழுமையாகப் பயன்பாட்டுக்கு வர வேண்டுமெனில் மனிதவளப் பற்றாக்குறையை உடனடியாக சரிசெய்வது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

நவீன உபகரணங்கள் மற்றும் உயர்தர மருத்துவ வசதிகள் இருந்தபோதிலும், போதிய பணியாளர்கள் இல்லாததால் மருத்துவமனை தனது முழு சேவைத் திறனை வெளிப்படுத்த முடியாமல் இருப்பதாகவும், இந்த நிலை நோயாளிகளுக்கான சேவையையும் பாதிக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

எனவே, காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்புவதற்கு சுகாதார அமைச்சு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அப்போதுதான் பாசிர் கூடாங் மருத்துவமனை அதன் முழுத் திறனுடன் மக்களுக்கு சேவையாற்ற முடியும் என்றும் ஓன் ஹபிஸ் வலியுறுத்தினார்.

 

கோலாலம்பூர், ஆக. 5- உலு சிலாங்கூரில் உள்ள கெர்லிங் தமிழ்ப்பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர் சுதா உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக மஇகா பிரிகேட் தேசியத் தலைவர் ஆண்ட்ரூ டேவிட் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, பணியிடத்தில் மிரட்டல், கொடுமைப்படுத்தல், அளவுக்கு மீறிய பணிச்சுமை, பாகுபாடு அல்லது தவறான அணுகுமுறை போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தால், அவற்றை அலட்சியமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

அதேவேளையில், முழுமையான விசாரணை நிறைவடையும் முன்பு எந்தவொரு தனிநபர் மீதும் குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதையோ, ஊகங்களின் அடிப்படையில் கருத்து தெரிவிப்பதையோ அனைவரும் தவிர்க்க வேண்டும் என்றார்.

காவல்துறையின் தகவலின்படி, ஆசிரியர் பள்ளியின் ஆசிரியர் அறையில் மயக்க நிலையில் கண்டெடுக்கப்பட்டு, பின்னர் கோலா குபு பாரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

 சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தத் துயரச் சம்பவம் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களின் மனநலம், உணர்வுப்பூர்வ அழுத்தம் மற்றும் பணியிடக் கொடுமை போன்ற பிரச்சினைகள் குறித்து உடனடி கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை மீண்டும் நினைவூட்டுவதாக ஆண்ட்ரூ டேவிட் குறிப்பிட்டார்.

எனவே, இந்தச் சம்பவத்தின் உண்மையான பின்னணியை வெளிக்கொணரும் வகையில், மலேசிய அரச காவல்துறை, கல்வி அமைச்சு மற்றும் சிலாங்கூர் மாநிலக் கல்வித் துறை ஆகியவை முழுமையான, வெளிப்படையான மற்றும் சுயாதீனமான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று மஇகா பிரிகேட் வலியுறுத்தியுள்ளது.

உயிரிழப்பு ஏற்பட்ட பிறகே நடவடிக்கை எடுக்கும் நிலை தொடரக்கூடாது. ஒவ்வொரு புகாரும் கவனமாக பரிசீலிக்கப்பட வேண்டும்; மனஅழுத்தத்தின் ஒவ்வொரு அறிகுறியும் உரிய முறையில் கையாளப்பட வேண்டும்; பாதிக்கப்படுபவர்கள் நிலைமை மோசமடைவதற்கு முன்பே பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்தவர்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்தினருக்கு துக்ககாலத்திலும் விசாரணை நடைபெறும் காலத்திலும் தேவையான தனியுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் மஇகா பிரிகேட் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், உண்மையை வெளிக்கொணரும் நேர்மையான விசாரணைக்காக மஇகா பிரிகேட் உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்துடன் உறுதுணையாக நிற்கும் என்றும், விசாரணையில் ஏதேனும் தவறுகள் அல்லது பொறுப்பின்மை உறுதி செய்யப்பட்டால், அதற்குப் பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஆண்ட்ரூ டேவிட் வலியுறுத்தினார்.

கோலாலம்பூர், ஆக. 4 – 

மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள 123 தொகுதிகளில் ஒரே நாளில் மாபெரும் பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளதாக மஇகாவின்தேசிய உதவித் தலைவர் டத்தோ முருகையா அறிவித்தார்.

 

இந்தப் போட்டி வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி காலை 9.00 மணிக்கு ஒரே நேரத்தில் அனைத்துதொகுதிகளிலும் நடைபெறவுள்ளது. கோலாலம்பூரில் உள்ள நேதாஜி மண்டபத்தில்நடைபெறும் நிகழ்வை மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்தொடக்கி வைக்கவுள்ளார்.

 

இதுகுறித்து டத்தோ முருகையா கூறுகையில், மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவு விழாவைமுன்னிட்டு ஏற்கனவே கூட்டு பிரார்த்தனை, குடும்ப தினம், விளையாட்டுப் போட்டிகள் மற்றும்நெடுந்தூர ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன.

 

அதன் தொடர்ச்சியாக, கல்வி மற்றும் பேச்சுத் திறனை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நாடுதழுவிய பேச்சுப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

இந்தப் போட்டியில் சுமார் 30 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும், ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தபட்சம் 50 போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள்என்றும் அவர் கூறினார்.

 

இந்த போட்டி தமிழ்ப்பள்ளி மாணவர்கள், இடைநிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுப்பிரிவு என மூன்று பிரிவுகளில் நடைபெறும். ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்காக ஐந்துதலைப்புகளும், இடைநிலைப்பள்ளி மற்றும் பொதுப் பிரிவினருக்காக தனித்தனியாக ஐந்துதலைப்புகளும் வழங்கப்படும் என்று அவர் விளக்கினார்.

 

இந்தப் போட்டி இந்தியர்களுக்கு மட்டும் அல்லாமல், மலாய் மற்றும் சீன சமூகத்தினருக்கும்திறந்ததாக இருக்கும். அவர்கள் மலாய் மொழியில் உரையாற்றி போட்டியில் பங்கேற்கலாம்என்றும் அவர் தெரிவித்தார்.

 

போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். அவைபள்ளிகளில் வழங்கப்படும் இணைப் பாட நடவடிக்கைகளுக்கான (Co-curricular) மதிப்பெண்களுக்கு பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

போட்டிக்கான நடுவர் குழுவில் தமிழ்ப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளி ஆசிரியர்கள்இடம்பெறவுள்ளனர். வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும்வழங்கி கௌரவிக்கப்படும்.

 

இந்த பேச்சுப் போட்டியில் பங்கேற்க விரும்புவோர் வரும் வெள்ளிக்கிழமைக்குள் தங்களதுபெயர்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு டத்தோ முருகையா கேட்டுக் கொண்டார். 

 

மஇகாவின் 80ஆம் ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் நாடு முழுவதும் நடைபெறும்இந்தப் பேச்சுப் போட்டி, இளைஞர்களின் பேச்சாற்றலை வளர்ப்பதோடு பல இனமக்களிடையே ஒற்றுமையையும் வலுப்படுத்தும் நிகழ்வாக அமையும் என அவர் நம்பிக்கைதெரிவித்தார்.

கோலாலம்பூர், ஆக. 4 – 

மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள 123 தொகுதிகளில் ஒரே நாளில் மாபெரும் பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளதாக மஇகாவின்தேசிய உதவித் தலைவர் டத்தோ முருகையா அறிவித்தார்.

 

இந்தப் போட்டி வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி காலை 9.00 மணிக்கு ஒரே நேரத்தில் அனைத்துதொகுதிகளிலும் நடைபெறவுள்ளது. கோலாலம்பூரில் உள்ள நேதாஜி மண்டபத்தில்நடைபெறும் நிகழ்வை மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்தொடக்கி வைக்கவுள்ளார்.

 

இதுகுறித்து டத்தோ முருகையா கூறுகையில், மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவு விழாவைமுன்னிட்டு ஏற்கனவே கூட்டு பிரார்த்தனை, குடும்ப தினம், விளையாட்டுப் போட்டிகள் மற்றும்நெடுந்தூர ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன.

 

அதன் தொடர்ச்சியாக, கல்வி மற்றும் பேச்சுத் திறனை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நாடுதழுவிய பேச்சுப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

இந்தப் போட்டியில் சுமார் 30 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும், ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தபட்சம் 50 போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள்என்றும் அவர் கூறினார்.

 

இந்த போட்டி தமிழ்ப்பள்ளி மாணவர்கள், இடைநிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுப்பிரிவு என மூன்று பிரிவுகளில் நடைபெறும். ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்காக ஐந்துதலைப்புகளும், இடைநிலைப்பள்ளி மற்றும் பொதுப் பிரிவினருக்காக தனித்தனியாக ஐந்துதலைப்புகளும் வழங்கப்படும் என்று அவர் விளக்கினார்.

 

இந்தப் போட்டி இந்தியர்களுக்கு மட்டும் அல்லாமல், மலாய் மற்றும் சீன சமூகத்தினருக்கும்திறந்ததாக இருக்கும். அவர்கள் மலாய் மொழியில் உரையாற்றி போட்டியில் பங்கேற்கலாம்என்றும் அவர் தெரிவித்தார்.

 

போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். அவைபள்ளிகளில் வழங்கப்படும் இணைப் பாட நடவடிக்கைகளுக்கான (Co-curricular) மதிப்பெண்களுக்கு பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

போட்டிக்கான நடுவர் குழுவில் தமிழ்ப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளி ஆசிரியர்கள்இடம்பெறவுள்ளனர். வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும்வழங்கி கௌரவிக்கப்படும்.

 

இந்த பேச்சுப் போட்டியில் பங்கேற்க விரும்புவோர் வரும் வெள்ளிக்கிழமைக்குள் தங்களதுபெயர்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு டத்தோ முருகையா கேட்டுக் கொண்டார். 

 

மஇகாவின் 80ஆம் ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் நாடு முழுவதும் நடைபெறும்இந்தப் பேச்சுப் போட்டி, இளைஞர்களின் பேச்சாற்றலை வளர்ப்பதோடு பல இனமக்களிடையே ஒற்றுமையையும் வலுப்படுத்தும் நிகழ்வாக அமையும் என அவர் நம்பிக்கைதெரிவித்தார்.