loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

நீலாய், செப்.7-

மலேசிய இந்திய வர்த்தக மற்றும் தொழில்முனைவோர் அமைப்பான மிம்கோய்னின் 5ஆம்ஆண்டு எஸ்எம்இ மாநாடு எதிர்வரும் நவம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அதன்தலைவர் டத்தோ பி.வி.அப்துல் அமிட் தெரிவித்தார்.

இந்த மாநாட்டிற்கு நாடு முழுவதிலும் இருந்து சுமார் 500 பேராளர்கள் கலந்து கொள்வார்கள்என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து அதே நாளில் இரவு ‘கோல்டன் டினார் அவார்ட்ஸ்’ எனும் சிறப்பு விருதுநிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. வர்த்தகத் துறையில் சிறப்பாகச் செயல்பட்டு சாதனைபடைத்தவர்களை அங்கீகரித்து கௌரவிக்கும் வகையில் இந்த விருது நிகழ்ச்சி ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

மிம்கோய்ன் ஏற்பாட்டில் இதற்கு முன்னர் நடைபெற்ற விருது நிகழ்ச்சிகளில் துணைப்பிரதமர், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், தமிழகத்தைச் சேர்ந்ததொழிலதிபர்கள் மற்றும் சிறப்பு பேச்சாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளதாக டத்தோஅமிட் தெரிவித்தார்.

முதல் ஆண்டிலிருந்தே வர்த்தகம் மற்றும் தொழில்துறையில் சிறப்பாகச் செயல்படும்தனிநபர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருவதாகவும், ஆரம்ப கட்டத்தில் சுமார் 35 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த இரண்டு தவணைகளில் சீன மற்றும் மலாய் சமூகத்தைச் சேர்ந்த வர்த்தகர்களுக்கும்தொழில்முனைவோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டதாகக் கூறிய அவர், இம்முறையும் இனவேறுபாடின்றி அனைத்து இனங்களையும் சேர்ந்த வர்த்தகர்கள் மற்றும்தொழில்முனைவோருக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.

மலேசியாவின் வர்த்தகச் சூழலில் பல்வேறு இனங்களைச் சேர்ந்த தொழில்முனைவோர்ஆற்றிவரும் பங்களிப்பை அங்கீகரிப்பதுடன், அவர்களின் வெற்றிக் கதைகளைமற்றவர்களுக்கும் எடுத்துக்காட்டாகக் கொண்டு செல்வதே இத்தகைய விருதுநிகழ்ச்சிகளின் முக்கிய நோக்கம் என்றும் அவர் கூறினார்.

இதனிடையே, மிம்கோய்ன் ஏற்பாடு செய்யும் எஸ்எம்இ மாநாட்டில் கலந்து கொள்ளவிரும்புவோர் இணையம் வழியாக தங்களது பதிவுகளை மேற்கொள்ளலாம் என்றும் டத்தோஅமிட் தெரிவித்தார்.

இதற்கிடையே, மிம்கோய்னின் ஆண்டுக் கூட்டம் எதிர்வரும் அக்டோபர் 28ஆம் தேதிநடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டு மிம்கோய்னுக்கு தேர்தல் ஆண்டாக இருப்பதால், அனைத்து உறுப்பினர்களும்ஆண்டுக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.

அமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள், உறுப்பினர்களின் பங்களிப்பு மற்றும் அடுத்த கட்டதிட்டங்கள் குறித்து ஆண்டுக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படவுள்ளதாகவும் அவர்கூறினார்.

மிம்கோய்னின் வளர்ச்சியிலும் எதிர்கால செயல்பாடுகளிலும் உறுப்பினர்களின் ஒற்றுமையும்பங்களிப்பும் மிகவும் முக்கியமானது என்பதால், அனைத்து உறுப்பினர்களும் தேர்தல்ஆண்டான இந்த ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கடமையை நிறைவேற்றவேண்டும் என டத்தோ அமிட் கேட்டுக்கொண்டார்.

கோலாலம்பூர், செப் 5-

Feather Entertainment Sdn. Bhd. தயாரிப்பில், தனேஷ்குமார் அவர்களின் கதை மற்றும் கதாபாத்திர உருவாக்கத்தில் உருவாகியுள்ள புதிய தமிழ் திரைப்படம் ‘பிளான்-தா’. திருமணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பாரம்பரிய சடங்குகளை வித்தியாசமான கண்ணோட்டத்தில் அணுகும் நகைச்சுவைத் திரைப்படமாக இது உருவாகியுள்ளது.

 

30 வயதுகளில் இருக்கும் ஒரு தம்பதியினரின் திருமண வாழ்க்கையை மையமாகக் கொண்டுள்ள இப்படத்தில், சமூகத்தில் வழக்கமாகப் பின்பற்றப்படும் திருமணச் சடங்குகளுக்குப் பின்னால் இருக்கும் காரணங்களை அவர்கள் கேள்விக்குள்ளாக்குகின்றனர். இதனால் ஏற்படும் எதிர்பாராத சம்பவங்கள், நகைச்சுவை மற்றும் சுவாரஸ்யமான திருப்பங்களுடன் கதை நகர்கிறது.

 

பல வண்ணமயமான கதாபாத்திரங்களும் எதிர்பாராத சூழ்நிலைகளும் இடம்பெறும் இப்படம், சிரிப்பு, அன்பு, குடும்ப உணர்வுகள் மற்றும் அனைவரும் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய தருணங்களை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டுள்ளது.

 

2 மணி நேரம் 10 நிமிடங்கள் ஓடும் இப்படம், அனைத்து வயதினரும் குடும்பத்துடன் அமர்ந்து பார்த்து ரசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

 

“சில நேரங்களில் சிறந்த திட்டங்கள், திட்டமிட்டபடி நடக்காதவையே” என்ற கருத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

 

தமது கனவை திரைப்படமாக உருவாக்குவதற்கு உறுதுணையாக இருந்த திரு. கதிர் ஜீ உள்ளிட்ட படக்குழுவினர், கலைஞர்கள், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு இயக்குநர் தனேஷ்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.

 

ஒரு திரைப்படம் ஒரு இயக்குநரின் பெயரைத் தாங்கியிருந்தாலும், அது ஒருவரால் மட்டும் உருவாக்கப்படுவதில்லை. பலரின் உழைப்பு, அன்பு மற்றும் ஆதரவின் வெளிப்பாடாகவே திரைப்படம் உருவாகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

‘பிளான்-தா’ குடும்பத்துடன் இணைந்து சிரித்து ரசிக்கக்கூடிய எளிமையான, பொழுதுபோக்கு நிறைந்த திரைப்பட அனுபவத்தை வழங்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

திருப்பத்தூர், செப். 5:

திருப்பத்தூர் தென்மாப்பட்டு கே.எம். ரோடு பகுதியைச் சேர்ந்தவரும், மறைந்த என்.டி.எஸ். ஆறுமுகம் பிள்ளை – சீதையம்மாள் தம்பதியின் மருமகனும், திருமதி தங்க நாச்சியார் அம்மாளின் கணவரும், 7சி.எஸ். எண்டர்டெய்மண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகியுமான ம. பழனிகுமார் பிள்ளை காலமானார். அவருக்கு வயது 76.

மறைந்த மாணிக்கம் பிள்ளை – மனோன்மணி அம்மாள் தம்பதியின் மூத்த மகனான இவர், திரு. மாணிக்ககுமார் மற்றும் திரு. ஆறுமுககுமார் ஆகியோரின் தந்தையாவார்.

உடல்நலக் குறைவின்றி இயற்கை எய்திய அவரது இறுதிச்சடங்கு நேற்று (செப். 4) மாலை 4 மணியளவில் திண்டுக்கல் ரோடு, காரையூர் தோட்டத்தில் நடைபெற்றது.

அவரது மறைவுக்கு உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நெருங்கியவர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

 

-பி.மலையாண்டி

திருப்பத்தூர், செப். 5:

திருப்பத்தூர் தென்மாப்பட்டு கே.எம். ரோடு பகுதியைச் சேர்ந்தவரும், மறைந்த என்.டி.எஸ். ஆறுமுகம் பிள்ளை – சீதையம்மாள் தம்பதியின் மருமகனும், திருமதி தங்க நாச்சியார் அம்மாளின் கணவரும், 7சி.எஸ். எண்டர்டெய்மண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகியுமான ம. பழனிகுமார் பிள்ளை காலமானார். அவருக்கு வயது 76.

மறைந்த மாணிக்கம் பிள்ளை – மனோன்மணி அம்மாள் தம்பதியின் மூத்த மகனான இவர், திரு. மாணிக்ககுமார் மற்றும் திரு. ஆறுமுககுமார் ஆகியோரின் தந்தையாவார்.

உடல்நலக் குறைவின்றி இயற்கை எய்திய அவரது இறுதிச்சடங்கு நேற்று (செப். 4) மாலை 4 மணியளவில் திண்டுக்கல் ரோடு, காரையூர் தோட்டத்தில் நடைபெற்றது.

அவரது மறைவுக்கு உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நெருங்கியவர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

 

-பி.மலையாண்டி

ஈப்போ, செப் 2-

இங்குள்ள ஜாலான் பூரோங் பெலிபிஸ் (இந்தான் பிஸ்னஸ் செண்டர்) முன்னிலையில் கடந்தஆகஸ்ட் 23 ஆம் தேதியன்று  73 வயதுடைய லாம் சூங் வோங் வாகனம் ஒன்றினால்மோதப்பட்டதை தொடர்ந்து மரணம் அடைந்தார்.

 

அச்சம்பவம் இரவு  8.30 மணிக்கு நிகழ்ந்தது. 

 

அவருடைய  மரணம் தொடர்பாக அவரை மோதிச் சென்ற வாகனத்தை  தேடி வருகிறோம்.

 

இந்த சம்பவம் தொடர்பாக  காவல்  துறை விசாரணை செய்தால் பாதிப்பட்டகுடும்பத்தினருக்கு  உதவியாக இருக்கும் என‌ ஜெலாப்பாங் சட்டமன்ற உறுப்பினர் சியா பாவ்ஹியான் தெரிவித்தார்.

 

மேலும் , அங்குள்ள பகுதியில் ரகசிய கேமராக்கள் இருந்தால் யாரேனும் முன் வரலாம்என்றார்.

 

பொறுப்பில்லாத மோதி சென்ற வாகன ஓட்டுனர் அடையாளம் காணப்பட வேண்டும் என்றுகேட்டுக் கொண்டார்