loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

பூச்சோங், பிப்.7-

புத்ராஜெயா கபடி சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று பூச்சோங்கிலுள்ள சுபாங் ஜெயா நகராண்மைக்கழக மண்டபத்தில் நடைபெற்ற 23 வயதிற்கு கீழ்பட்ட ஆண்களுக்கான போட்டியில் 8 அணிகள் பங்குக் கொண்டன.

காலை முதல் நடைப்பெற்ற இந்த போட்டியில் 112 இந்திய இளம் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியின் இறுதிச் சுற்றில் Red Giant மற்றும் BL KL அணிகள் களம் கண்டன. இரு அணிகளின் விளையாட்டாளர்கள் அபார விளையாட்டை வெளிப்படுத்தினர்.

இறுதியில் இந்த போட்டியின் வெற்றிக் கிண்ணத்தையும் ரொக்கப் பரிசையும் Red Giant அணி வென்றது.

இதற்கிடையில் இரண்டாவது நிலையில் BL KL அணி இரண்டாவது நிலையில் வென்றது. மூன்றாவது இடத்தில் இரு அணிகள் UNITEN மற்றும் Black Panter வெற்றிப் பெற்றன.

இந்த போட்டியின் சிறந்த முன்படை வீரராக Red Giant அணியின் விளையாட்டாளர் ஐசெக் வென்ற வேளையில் சிறந்த தற்காப்பு வீரருக்கான கோப்பையை BL KL அணியின் விளையாட்டாளர் ரவிந்திரன் வென்றார்.

புத்ராஜெயா கபடி சங்கத்தின் செயல்பாட்டிற்கு தேசிய சங்கத்தினர் பல தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர். எங்களின் வாய்ப்புகளை பறிப்பதால் எங்களின் புத்ராஜெயா கபடி சங்கம் மூடு விழா காணும் நிலை ஏற்படும் என அதன் தலைவர் அரசு சண்முகம் தன் மனக்குமுறலை வெளிப்படுத்தினார்.

கோலாலம்பூர், பிப்.7-
பிறப்பு சான்றிதழில் இந்தியர் என குறிப்பிடப்பட்டுள்ளதை தமிழராக மாற்ற வேண்டும் என்பதற்காக தமிழர் தேசிய பேரவை இன அடையாள மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.

நமது பிறப்பு சான்றிதழில் இனம் தமிழர் என்று குறிப்பிடப்பட வேண்டும் என்பதை குறிக்கோலாக கொண்டு இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பேரவையின் தலைவர் தமிழ்திரன் தெரிவித்தார்.

நமது முன்னோர்களின் பிறப்பு சான்றிதழில் தமிழர் என குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் ஆவணங்கள் கணினிமயமாக மாற்றப்பட்டபோது அது இந்தியராக மாற்றப்பட்டுள்ளது. ஆகையால் இதனை நாங்கள் மீட்டெடுக்கதான் பாடுபடுகிறோம்.

இந்த விவகாரம் குறித்து பதிவிலாகா அதிகாரியை நாங்கள் சந்தித்து உள்ளோம். பிரதமரின் உத்தரவின் அடிப்படையில்தான் இது மாற்றப்பட முடியும் என்று கூறப்பட்டதால் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளோம்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்பவர்கள் முன்னிலையில் இந்த கோரிக்கையை முன்னெடுக்கப்பட்டு பின்னர் இந்த கோரிக்கையை நாங்கள் பிரதமரிடம் முன்னெடுத்து செல்வோம் என அவர் சொன்னார்.

எங்களின் இந்த நிலைப்பாட்டில் மலேசிய தெலுங்கு சங்கமும் அதன் ஆதரவை தெரிவித்துள்ளது.

இந்த மாநாடு வரும் மே மாதம் 17ஆம் தேதி காலை 9 மணி முதல் 4.30 மணி வரை ஷா ஆலம், இலத்தானிய மண்டபத்தில் நடைப்பெறவுள்ளது.

கோலாலம்பூர், பிப்.7-
பிறப்பு சான்றிதழில் இந்தியர் என குறிப்பிடப்பட்டுள்ளதை தமிழராக மாற்ற வேண்டும் என்பதற்காக தமிழர் தேசிய பேரவை இன அடையாள மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.

நமது பிறப்பு சான்றிதழில் இனம் தமிழர் என்று குறிப்பிடப்பட வேண்டும் என்பதை குறிக்கோலாக கொண்டு இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பேரவையின் தலைவர் தமிழ்திரன் தெரிவித்தார்.

நமது முன்னோர்களின் பிறப்பு சான்றிதழில் தமிழர் என குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் ஆவணங்கள் கணினிமயமாக மாற்றப்பட்டபோது அது இந்தியராக மாற்றப்பட்டுள்ளது. ஆகையால் இதனை நாங்கள் மீட்டெடுக்கதான் பாடுபடுகிறோம்.

இந்த விவகாரம் குறித்து பதிவிலாகா அதிகாரியை நாங்கள் சந்தித்து உள்ளோம். பிரதமரின் உத்தரவின் அடிப்படையில்தான் இது மாற்றப்பட முடியும் என்று கூறப்பட்டதால் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளோம்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்பவர்கள் முன்னிலையில் இந்த கோரிக்கையை முன்னெடுக்கப்பட்டு பின்னர் இந்த கோரிக்கையை நாங்கள் பிரதமரிடம் முன்னெடுத்து செல்வோம் என அவர் சொன்னார்.

எங்களின் இந்த நிலைப்பாட்டில் மலேசிய தெலுங்கு சங்கமும் அதன் ஆதரவை தெரிவித்துள்ளது.

இந்த மாநாடு வரும் மே மாதம் 17ஆம் தேதி காலை 9 மணி முதல் 4.30 மணி வரை ஷா ஆலம், இலத்தானிய மண்டபத்தில் நடைப்பெறவுள்ளது.

 

கோலாலம்பூர், பிப்.5-
உலகின் முதல் ஃபின்டெக் சக்தியூட்டப்பட்ட தங்க ATM தொழில்நுட்பத்தை உருவாக்கிய மலேசிய நிறுவனமான பப்ளிக் கோல்ட் ATM, துபாயைச் சேர்ந்த MAH Gold and Jewellery LLC மற்றும் ComTech Gold ஆகிய நிறுவனங்களுடன் மூலோபாய கூட்டாண்மையை ஏற்படுத்தி, உலகளவில் தங்க ATM-களை பெருமளவில் நிறுவும் திட்டத்தை தொடங்கியுள்ளது.

இந்த ஒப்பந்தங்கள் கோலாலம்பூரில் உள்ள மேனாரா பப்ளிக் கோல்டில் கையெழுத்திடப்பட்டன. 24 மணி நேரமும் செயல்படும் தங்க ATM மூலம் இ-வாலட், கிரெடிட் கார்டு வழியாக தங்கம் வாங்குதல், டிஜிட்டல் தங்க மீட்பு, கிரிப்டோவை தங்கமாக மாற்றுதல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.

2023ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பப்ளிக் கோல்ட் ATM, இதுவரை மலேசியா, இந்தோனேசியா மற்றும் துபாயில் 155 தங்க ATM-களை நிறுவி, “அதிக எண்ணிக்கையிலான தங்க ATM நிறுவல்கள்” என்ற பிரிவில் GUINNESS WORLD RECORDS™ சாதனையை பெற்றுள்ளது.

இந்த புதிய கூட்டாண்மை, துபாய், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் பப்ளிக் கோல்ட் ATM நிறுவனத்தின் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாயைத் தலைமையிடமாகக் கொண்ட ComTech Gold நிறுவனத்துடன் பப்ளிக் கோல்ட் ஏடிஎம் இணைந்து செயல்படுவது, அதன் முதல் டிஜிட்டல் தங்க ஒருங்கிணைப்பு ஆகும். இதன் மூலம் காம்‌டெக் வாடிக்கையாளர்கள் தங்களுடைய டிஜிட்டல் தங்கத்தை, பப்ளிக் கோல்ட் ஏடிஎம் வழியாக உடல் தங்கமாக மீட்டெடுக்க முடியும்.

பப்ளிக் கோல்ட் குழுமத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாகத் தலைவர் டத்தோ ஸ்ரீ லூயிஸ் எங், இந்த கூட்டாண்மை உலகளாவிய நிதி மற்றும் மதிப்புமிக்க உலோகத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என தெரிவித்தார்.

இந்த ஒத்துழைப்புகள், நிதி உட்சேர்க்கையை மேம்படுத்தி, நாடுகளின் தங்க சூழலை வலுப்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இதன் மூலம் மலேசியா, டிஜிட்டல்–உடல் தங்க தொழில்நுட்பத்தில் உலகளாவிய முன்னணியில் தன்னை நிலைநிறுத்துகிறது.
ஒழுங்குமுறை அனுமதி கிடைத்தவுடன், இந்த ஆண்டு ஏடிஎம் நிறுவல் தொடங்கப்படும்.

 2026ஆம் ஆண்டில் 5 ஏடிஎம்கள், அடுத்த ஆண்டில் 50 ஏடிஎம்கள் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது என அவர் சொன்னார்.

பத்துமலை, பிப் 4-
பத்துமலை முருகன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூசத் திருவிழாவின் போது, பல ஆண்டுகளாக இடைவிடாது தன்னார்வ சேவையில் ஈடுபட்டு வரும் 5 பேருக்கு திருக்கோயில் நிர்வாகம் சார்பில் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

அவர்களில், நீண்ட காலமாக அர்ப்பணிப்புடன் சேவை செய்து வரும் திருமதி பரிமளா கிருஷ்ணா அவர்களின் பங்களிப்பை பாராட்டும் வகையில், சிறப்பு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்தப் பாராட்டை ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தின் தலைவர் டத்தோ சுரேஷ் மற்றும் டத்தோஸ்ரீ நடராஜா ஆகியோர் வழங்கினர்.

ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழாவின் போது பத்துமலையில் திரளாக கூடும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு வழிகாட்டுதல், உதவி மற்றும் சேவை வழங்குவதில் திருமதி பரிமளா கிருஷ்ணா முக்கிய பங்காற்றி வருகிறார். பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட அவரது தன்னார்வ சேவை, சமூக சேவையின் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய திருமதி பரிமளா கிருஷ்ணா,
“பக்தர்களுக்கு சேவை செய்வதே எனக்கு கிடைக்கும் மிகப் பெரிய பலன். இருப்பினும், இந்த பாராட்டு என் சேவைக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக உள்ளது” என தனது நன்றியை தெரிவித்தார்.

தைப்பூசம் போன்ற மகத்தான சமய விழாக்களில் தன்னார்வலர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்றும், திருமதி பரிமளா கிருஷ்ணா போன்ற சேவை மனப்பான்மை கொண்டவர்கள் சமுதாயத்திற்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள் என்றும் நிகழ்வில் கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.

இந்தப் பாராட்டைப் பெற்றவர்களில்,
கோலாலம்பூரைச் சேர்ந்த திருமதி பத்மாவதி,
பிரீக்ஃபீல்ட்ஸைச் சேர்ந்த திருமதி எம்.எஸ். ராணி,
திரு. மகேந்திரன்
மற்றும் திரு. கோவிந்தன் ஆகியோரும் இடம்பெற்றனர்.