loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

பகாங் மாநிலத்தில் புக்கிட் திங்கி பகுதியில் உள்ள மலைப்பாங்கான காட்டுப் பகுதியில்பிரம்மரிஷி ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் அமைந்துள்ள இடம் வனத் துறைக்குசொந்தமான நிலமோ அல்லது அரசாங்க நிலமோ, புறம்போக்கு நிலமோ கிடையாது.

 

தனியாருக்கு சொந்தமான நிலத்தில் எழுப்பப்பட்டுள்ளது. நில உரிமையாளரும் பிரிம்மரிஷிமலைக்கோயில் செயல்படுவதற்கு நல்லெண்ண அடிப்படையில் ஒப்புதல் வழங்கி உள்ளார்.

 

இந்த ஆலயம் சீராக இயங்கிவந்த நிலையில், கடந்த 15-ஆம் நாள்(ஆகஸ்ட்), அடையாளம்தெரியாத சிலர், சம்பந்தப்பட்ட ஆலய வளாகத்தில் நுழைந்து அங்குள்ள சாமி சிலைகளைஉடைத்து சேதம் ஏற்படுத்தி உள்ளனர்.

 

இதன்தொடர்பில், கோம்பாக் மாவட்ட தலைமைக் காவல் நிலையம், செந்தூல் மாவட்டதலைமைக் காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆலயத் தரப்பினர் சார்பில்அதிகமான புகார் செய்துள்ளனர்; ஆலயத்தில் அத்துமீறி நுழைந்து காலாடித்தனம் புரிந்தகருங்காலிகள்மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆலயப் பொறுப்பாளர்மகேந்திரன், தலைமை பூசாரி உள்ளிட்டோர் செய்தியாளர்கள் மூலம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

இவர்களுக்கு ஆதரவாக குரல்கொடுத்துவரும் சமூக ஆர்வலரும் மலேசியத் தமிழர்முன்னேற்றக் கழகத் தலைவருமான ஸ்ரீ ரமேஷ், நேற்றிரவு செந்தூல் மாவட்ட தலைமைக்காவல் நிலைய வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்..,

 

நாட்டில் நிலைநாட்டப்படும் நல்லிணக்கச் சூழலுக்கு ஏற்ப பகாங், புக்கிட் திங்கி வட்டாரமக்களும் ஒருமைப்பாட்டுடன் வாழ்கின்றனர். இந்த நிலையில், தனியார் நிலத்தில்அமைக்கப்பட்டுள்ள இந்து வழிபாட்டுத் தலத்தில் தீயநோக்குடன் நுழைந்து அங்குள்ள சாமிசிலைகளை உடைத்ததுடன் மேலும் பலசேதங்களை ஏற்படுத்திய தரப்பினரை அடையாளம்கண்டு, அவர்கள்மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்வதாகத் தெரிவித்தஸ்ரீ ரமேஷ், 15 நாட்கள்வரை எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டால்,  தேசிய போலீஸ் படைத்தலைவர்-ஐஜிபி-யிடம் கோரிக்கை மனு சமர்ப்பிக்கப்படும் என்றும் ஸ்ரீ ரமேஷ் மேலும்தெரிவித்தார்.

புத்ராஜெயா:  ஆகஸ்ட் 12* – 

முன்னாள் மக்கள் முற்போக்கு கட்சியின் (பிபிபி) தலைவர் எம். கேவியஸ், மறைந்த மேக்லின் டென்னிஸ் டி’குரூஸ் கட்சியின் முன்னாள் தலைவராகஅங்கீகரிக்கப்பட்டதை எதிர்த்து நீதித்துறை மறுஆய்வு நடவடிக்கைகளைத்தொடங்குவதற்கான அனுமதியைப் பெறும் முயற்சியில் தோல்வியடைந்தார்.

 

மூன்று நீதிபதிகள் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வு ஒருமனதாக அவரதுமேல்முறையீட்டை நிராகரித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

 

கடந்த 20 நவம்பர் 2023 அன்று, நீதித்துறை மறுஆய்வு நடவடிக்கைகளைத் தொடங்ககேவியஸ்ஸுக்கு அனுமதி மறுத்த உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக அவர் மேல்முறையீடுசெய்திருந்தார்.

 

கேவியஸ்யின் பிரதான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு அனுமதிவழங்குவதற்கு சட்டத்துறைத் தலைவர் தரப்பு எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

 

இந்த ஆண்டின் தொடக்கத்தில், டி’குரூஸிடமிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்சித்தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட ஜே. லோகா பாலா மோகன், கட்சியின் பொதுஅதிகாரி என்ற முறையில் கேவியஸ்யின் மேல்முறையீட்டில் தலையிடுவதற்குமேல்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

 

நீதித்துறை மறுஆய்வுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமெனில், விண்ணப்பதாரரின்வழக்கு தேவையான ஆரம்ப நிலையை பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்பதுடன், அதுஅற்பமான அல்லது ஆதாரமற்ற வழக்காக இருக்கக்கூடாது.

 

இந்த மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதிகள் லிம் சோங் ஃபோங், லிம் ஹொக் லெங்மற்றும் அஹ்மாட் ஷஹ்ரிர் சாலே ஆகியோர், லோகா பாலா மோகனுக்கும் சட்டத்துறைத்தலைவருக்கும் தலா RM30,000 வழக்குச் செலவாக கேவியஸ் செலுத்த வேண்டும் என்றும்உத்தரவிட்டனர்.

 

நீதிபதி லிம் ஹொக் லெங், நீதிமன்றத்தின் விரிவான க

நீதிபதி லிம் ஹொக் லெங், நீதிமன்றத்தின் விரிவான காரணங்களை வாசித்தபோது, இந்தவிவகாரம் ஒரு அரசியல் கட்சியின் உள்நிர்வாகம் தொடர்பானது என்றும், எனவே சங்கங்கள்சட்டம் 1966-ன் பிரிவு 18C-ன் கீழ் நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்படுத்த முடியாது என்றும்தெரிவித்தார்.

 

2023 ஏப்ரல் 11ஆம் தேதியிட்ட கடிதத்தின் மூலம் உள்துறை அமைச்சின் அதிகாரி ஒருவர்தெரிவித்த முடிவை ரத்து செய்யுமாறு கேவேஸ் கோரியிருந்தார். அந்தக் கடிதத்தில் மறைந்தமேக்லின் டென்னிஸ் டி’குரூஸ் பிபிபி தலைவராக முறையாக அங்கீகரிக்கப்பட்டதுடன், கட்சிதொடர்பான மேல்முறையீடும் அங்கீகரிக்கப்பட்டிருந்தது.

 

இதற்கு முன்னதாக பிபிபி-யின் பதிவு சங்கங்களின் பதிவாளர் (RoS) மூலம் ரத்துசெய்யப்பட்டிருந்தது.

 

கேவியஸ்சின் முக்கிய வாதங்களில் ஒன்று, அந்தக் கடிதத்தில் உள்துறை அமைச்சர்நேரடியாக கையெழுத்திடாமல், அமைச்சின் அதிகாரி ஒருவர் கையெழுத்திட்டிருந்தார்என்பதாகும்.

 

எனினும், அந்தக் கடிதத்தை முழுமையாகப் படிக்கும்போது, அதில் குறிப்பிடப்பட்டுள்ள முடிவுஉள்துறை அமைச்சரால் எடுக்கப்பட்டது என்பது தெளிவாக இருப்பதாக நீதிபதி ஹொக் லெங்தெரிவித்தார்.

 

கேவியஸ்சின் கட்சி உறுப்பினர் நிலை தொடர்பான வாதத்தையும் நீதிமன்றம் நிராகரித்தது.

 

கேவியஸ் இதுவரை விடுவிக்கப்படாத திவாலானவர் என்பதால், சங்கங்கள் சட்டத்தின் பிரிவு9A-ன் கீழ் அவர் எந்தப் பதவியையும் வகிக்க முடியாது என நீதிபதி ஹொக் லெங்தெரிவித்தார்.

 

மேலும், 2018ஆம் ஆண்டு கட்சியின் உச்ச மன்றம் ஒருமனதாக எடுத்த முடிவைத் தொடர்ந்துகேவியஸ் பிபிபி உறுப்பினர் பதவியிலிருந்து விலகியவர் என்ற வாதத்தையும் நீதிமன்றம்ஏற்றுக்கொண்டது.

 

பிபிபி-யின் கட்சி அரசியலமைப்புச் சட்டத்தின் 30.4ஆம் பிரிவையும் நீதிபதிகள்சுட்டிக்காட்டினர். அதன் கீழ், கட்சி தொடர்பான எந்தவொரு விவகாரத்தையும்நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லும் உறுப்பினர் தானாகவே கட்சி உறுப்பினர் பதவியைஇழப்பார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

கேவியஸ் தனது நடவடிக்கை பொதுநலன் மற்றும் அரசியலமைப்பு உரிமைகளைப்பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்டது எனக் கூறியிருந்தபோதிலும், அவர் கோரியநிவாரணங்கள், அதில் பிரகடனங்களும் அடங்கும், தனிப்பட்ட தன்மை கொண்டவை எனநீதிபதி ஹொக் லெங் தெரிவித்தார்.

 

“உறுப்பினர் அல்லாதவராகவும், இன்னும் விடுவிக்கப்படாத திவாலானவராகவும் இருக்கும்மேல்முறையீட்டாளருக்கு எந்தவொரு பதவியையும் வகிக்கும் உரிமை இல்லை,” என அவர்தெரிவித்தார்.

 

சங்கங்கள் சட்டத்தின் கீழ் mandamus எனப்படும் கட்டாய உத்தரவையும் பிறப்பிக்க முடியாதுஎன்ற வாதத்தையும் நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.

 

கேவியஸ் சார்பில் வழக்கறிஞர்கள் எம். மனோகரன் மற்றும் கணேந்திர மனோகரன்ஆஜராகினர். சட்டத்துறைத் தலைவர் சார்பில் மூத்த மத்திய அரசின் சட்ட ஆலோசகர்நூர்ஹஃபிஸ்ஸா அஸிஸான் மற்றும் மத்திய அரசின் சட்ட ஆலோசகர் முஹைரி நோஹ்ஆஜராகினர். லோகா பாலா மோகன் சார்பில் கவின் ஜெயபால் மற்றும் பர்வீனா கவுர்ஆகியோர் ஆஜராகினர்.

சென்னை, ஆக. 16:

மலேசியத் தமிழர் கலை, கலாச்சாரம் மற்றும் சமூகப் பணிகளில் ஆற்றிய சிறப்பான பங்களிப்பைப் பாராட்டி, எஸ்.பி. மணிவாசகத்திற்கு ‘பெருந்தமிழன் ராஜராஜன்’ உயரிய விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

 

மல்லை தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில், மல்லை சி.ஏ. சத்யா தலைமையில் சென்னையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில், மலேசியாவைச் சேர்ந்த கலைஞர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிறப்பு வருகையாளராக மலேசியாவைச் சேர்ந்த டத்தோ டாக்டர் கோபாலகிருஷ்ணன் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார்.

 

நிகழ்வில் பேசிய மல்லை சத்யா, “மணிவாசகம் எனக்கு பல ஆண்டுகளாகத் தெரிந்தவர். நல்ல மனிதராகவும், அனைவரிடமும் அன்புடன் பழகக்கூடியவராகவும் திகழ்கிறார். மலேசியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களை ஒன்றிணைக்கும் பணியில் முக்கிய பங்காற்றி வருகிறார்.

 

கலை மற்றும் கலாச்சாரத் துறையிலும் அவர் தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறார். குறிப்பாக, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் பெயரைப் போற்றும் வகையில் பல ஆண்டுகளாக நிகழ்ச்சிகளை நடத்தி வருவதுடன், மலேசியாவில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையும் சிறப்பாக நடத்தியுள்ளார்.

 

அவரது நீண்டகால சேவையைப் பாராட்டும் வகையில், மல்லை தமிழ் சங்கத்தின் சார்பில் இந்த உயரிய விருது வழங்கப்படுகிறது. அவரது புகழும் சேவையும் என்றும் நிலைத்திருக்க வேண்டும்” என்றார்.

 

மேலும், மலேசியாவில் இருந்து நிகழ்வில் கலந்து கொண்ட கலைஞர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு நன்றி தெரிவித்த மல்லை சத்யா, டத்தோ டாக்டர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட அனைவரின் வருகைக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

 

விருது பெற்ற எஸ்.பி. மணிவாசகம் பேசுகையில், “எனது முக்கிய நண்பராகவும், நல்ல மனிதராகவும் இருந்து வரும் அண்ணன் சத்யா அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது சேவையைப் பாராட்டி இந்த உயரிய விருதை வழங்கிய மல்லை தமிழ் சங்கத்திற்கும், அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

 

தமிழ் மொழி, கலை, கலாச்சாரம் மற்றும் சமூக ஒற்றுமைக்காக தொடர்ந்து பாடுபட்டு வரும் எஸ்.பி. மணிவாசகத்தின் பணியைப் பாராட்டும் வகையில் வழங்கப்பட்ட இந்த விருது, மலேசியத் தமிழர்களின் பங்களிப்பையும் சர்வதேச அளவில் எடுத்துக்காட்டுவதாக அமைந்தது.

ரவாங், ஆக.14– ரவாங் தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சிக்குத் தேவையான புதிய கட்டடம்அமைக்கப்படுவதுடன், மாணவர்களின் புறப்பாட நடவடிக்கைகளுக்கான பள்ளித் திடலும்பாதுகாக்கப்பட வேண்டும் என்று பள்ளியின் முன்னாள் வாரியக்குழுத் தலைவர் டத்தோசுரேஷ் ராவ் வலியுறுத்தினார்.

 

ரவாங் தமிழ்ப்பள்ளியில் 900க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வரும் நிலையில், பள்ளியின் எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு கட்டட வசதிகள் மேம்படுத்தப்படவேண்டும். அதேவேளையில், மாணவர்களின் விளையாட்டு மற்றும் புறப்பாடநடவடிக்கைகளுக்கு அத்தியாவசியமான பள்ளித் திடலை இழக்கும் வகையில் எந்தவொருகட்டுமானத் திட்டமும் அமையக்கூடாது என்று அவர் தெரிவித்தார்.

 

புதிய கட்டடம் அமைப்பதில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டால், தற்போது உள்ள சிஎஃப் (CF) அனுமதி இல்லாத பழைய கட்டடத்தை இடித்துவிட்டு, அதே இடத்தில் புதிய கட்டடத்தைநிர்மாணிக்கலாம் என்று அவர் ஆலோசனை முன்வைத்தார்.

 

மேலும், அந்தப் பழைய கட்டடத்தை இடிப்பதற்கான செலவை பெற்றோர்கள்ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் டத்தோ சுரேஷ் ராவ் கூறினார்.

 

“பள்ளிக்கு கட்டடம் அவசியம். அதேபோன்று மாணவர்களுக்கான திடலும் அவசியம். இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்படக்கூடாது. பள்ளியின்வளர்ச்சிக்குத் தேவையான கட்டடத்தை அமைக்க வேண்டும்; அதே நேரத்தில் மாணவர்களின்புறப்பாட நடவடிக்கைகள் பாதிக்கப்படாத வகையில் திடலும் பாதுகாக்கப்பட வேண்டும்,” என்றார்.

 

திடல் இல்லாத நிலை ஏற்பட்டால், மாணவர்களின் விளையாட்டு, உடற்கல்வி மற்றும் இதரபுறப்பாட நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

900க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் பள்ளியில், பக்கத்து பள்ளியின் திடலைப்பயன்படுத்துவது நீண்டகாலத் தீர்வாக அமையாது என்றும் டத்தோ சுரேஷ் ராவ் குறிப்பிட்டார்.

 

“பக்கத்து பள்ளியின் திடலைப் பயன்படுத்துவது நடைமுறைக்கு ஏற்றதாக இருக்காது. எங்களது மாணவர்களுக்குத் தேவையான வசதிகள் சொந்தப் பள்ளி வளாகத்திலேயேஇருக்க வேண்டும். குறிப்பாக, மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்நிலையில், அவர்களின் கல்வி மற்றும் புறப்பாட நடவடிக்கைகளுக்குத் தேவையானஇடவசதி உறுதி செய்யப்பட வேண்டும்,” என்றார்.

 

இதனிடையே, இவ்விவகாரம் தொடர்பில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராயுடு இன்று ரவாங் தமிழ்ப்பள்ளிக்கு நேரில் வருகை தந்து நிலைமையை கேட்டறிந்ததாகடத்தோ சுரேஷ் ராவ் தெரிவித்தார்.

 

பள்ளி நிர்வாகம், பெற்றோர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவலைகளை கேட்டறிந்தபாப்பா ராயுடு, இப்பிரச்சினையை சுமுகமான முறையில் தீர்த்து வைப்பதற்கானநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், பள்ளியின் திடலுக்கு எந்தவித பாதிப்பும்ஏற்படாது என்றும் உறுதியளித்துச் சென்றதாக அவர் கூறினார்.

 

இதற்கு நன்றி தெரிவித்த டத்தோ சுரேஷ் ராவ், பள்ளியின் தேவைகள், மாணவர்களின்நலன் மற்றும் பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளை கருத்தில் கொண்டு இவ்விவகாரத்துக்குநல்லதொரு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார்.

 

ரவாங் தமிழ்ப்பள்ளியின் எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான கட்டட வசதிகளும், மாணவர்களின் முழுமையான கல்வி மற்றும் புறப்பாட வளர்ச்சிக்குத் தேவையான திடலும்இணைந்தே பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே பெற்றோர்கள் மற்றும் பள்ளி சமூகத்தின்எதிர்பார்ப்பாக உள்ளது.

ரவாங்: ரவாங் தமிழ்ப்பள்ளியில் புதிய கட்டடம் அமைப்பதற்காக பள்ளியின் விளையாட்டுத்திடலை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் விளையாட்டுதிடலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு காணப்படும் எனசிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பா ராயுடு உறுதியளித்துள்ளார்.

 

ரவாங் தமிழ்ப்பள்ளியில் சுமார் வெ.1.5 மில்லியன் செலவில் ஆறு வகுப்பறைகளைக்கொண்ட புதிய கட்டடம் கட்டுவதற்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதற்காகபள்ளியின் தற்போதைய விளையாட்டுத் திடலின் ஒரு பகுதியை பயன்படுத்த வேண்டியசூழ்நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

 

இதற்கு பெற்றோர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளதுடன், மாணவர்களின் கல்விவளர்ச்சிக்கு இணையாக அவர்களின் விளையாட்டு மற்றும் உடற்கல்விநடவடிக்கைகளுக்கும் பள்ளி திடல் அவசியம் என்பதால், திடலுக்கு எந்தவித பாதிப்பும்ஏற்படக்கூடாது என்பதே பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

இதுகுறித்து கருத்து தெரிவித்த பாப்பா ராயுடு, வரும் திங்கட்கிழமை இது தொடர்பானபரிந்துரையை முன்வைக்கவுள்ளதாகவும், கல்வி அமைச்சு மற்றும் வீடமைப்பு, ஊராட்சிஅமைச்சு ஆகியவற்றுக்கு கடிதம் வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

பள்ளியின் தற்போதைய பழைய கட்டடத்தை இடித்து, அதே இடத்தில் புதிய கட்டடத்தைஅமைக்கும் திட்டத்தை தாம் வரவேற்பதாக குறிப்பிட்ட அவர், புதிய கட்டடம் அமைப்பதற்காகமாணவர்களின் விளையாட்டுத் திடலை இழக்கும் நிலை ஏற்படுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றார்.

 

“பழைய கட்டடத்தை இடித்து, அந்த இடத்திலேயே புதிய கட்டடத்தை கட்டுவதை நான்வரவேற்கிறேன். ஆனால் பள்ளியின் விளையாட்டுத் திடலுக்கு எந்தவித பாதிப்பும்ஏற்படக்கூடாது. பெற்றோர்களின் பக்கம் நான் நின்று இந்தப் பிரச்சினைக்கு சுமுகமானதீர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பேன்,” என்று அவர் உறுதியளித்தார்.

 

புதிய கட்டடம் கட்டப்படுவது மாணவர்களின் கற்றல் சூழலை மேம்படுத்துவதற்கான நல்லநடவடிக்கையாக இருந்தாலும், அதற்காக மாணவர்களுக்கு ஏற்கனவே உள்ள விளையாட்டுவசதியை இழக்கச் செய்வது சரியான தீர்வாக இருக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

மேலும், ரவாங் தமிழ்ப்பள்ளியின் தேவைகளுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வருவதாகதெரிவித்த பாப்பா ராயுடு, கடந்த ஆண்டு பள்ளிக்கு வெ.80,000 மானியம்வழங்கப்பட்டதாகவும், இம்முறையும் அதே தொகையான வெ.80,000 வழங்கப்படுவதாகவும்தெரிவித்தார்.

 

இந்த மானியத்தை மாணவர்களின் கற்பித்தல் மற்றும் கற்றல் நடவடிக்கைகளுக்குபயனுள்ள வகையில் பயன்படுத்துமாறு பள்ளி நிர்வாகத்தையும் அவர் கேட்டுக்கொண்டார்.

 

ரவாங் தமிழ்ப்பள்ளியின் கட்டடத் தேவையும் மாணவர்களின் விளையாட்டு வசதிகளும்இரண்டும் முக்கியமானவை என்பதால், இரு தரப்புக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்றுத்தீர்வை கண்டறிவதே தமது நோக்கம் என்றும் பாப்பா ராயுடு தெரிவித்தார்.

 

பெற்றோர்கள், பள்ளி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுடன் கலந்துரையாடி, மாணவர்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த விவகாரத்துக்குவிரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.