loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

 

உலு சிலாங்கூர், ஆகஸ்ட் 1 –
மலேசிய தினம் மற்றும் தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு நாட்டுப்பற்று, இன ஒற்றுமை மற்றும் நல்லிணக்க உணர்வை வலுப்படுத்தும் நோக்கில் உலு சிலாங்கூர் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் தலைமையில் சிறப்பு திரைப்படக் காட்சி நிகழ்ச்சி ரவாங்  ஏஇயோன் பேரங்காடி திரையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சுமார் 400 பேர் கலந்து கொண்டு குடும்பத்தினருடன் திரைப்படங்களை கண்டு மகிழ்ந்தனர். பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்கள் ஒரே இடத்தில் ஒன்றுகூடி "ஸ்பைடர்மேன்" மற்றும் "ஜனநாயகன்" திரைப்படங்களைப் பார்வையிட்டது நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக அமைந்தது.

திரைப்படம் தொடங்குவதற்கு முன்பு தேசியக் கொடியான ஜாலுர் கெமிலாங் திரையில் தோன்றியதுடன் ஜாலுர் ககெர்மிலாங் பாடல் ஒலிக்கப்பட்டது. அப்போது திரையரங்கில் இருந்த அனைத்து இன மக்களும் தன்னெழுச்சியுடன் எழுந்து நின்று, ஒரே குரலில் பாடிய காட்சி அங்கு நிலவிய தேசிய ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தியது. 

மொழி, மதம், இனம் என்ற வேறுபாடுகளைத் தாண்டி மலேசியர்கள் அனைவரும் ஒரே குடும்பம் என்ற உணர்வை அந்த தருணம் பிரதிபலித்தது.

இந்நிகழ்ச்சி குறித்து டாக்டர் சத்திய பிரகாஷ் கூறுகையில், மலேசிய தினம் மற்றும் தேசிய தினம் என்பது வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல; நாட்டின் சுதந்திரத்தையும், பல இன மக்களின் ஒற்றுமையையும் நினைவுகூரும் முக்கியமான தருணம் என்றும் தெரிவித்தார்.

மேலும், இன்று தொடங்கி ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை இதுபோன்ற பல்வேறு ஒற்றுமை மற்றும் நாட்டுப்பற்று சார்ந்த நிகழ்ச்சிகள் உலு சிலாங்கூர் பகுதியில் தொடர்ச்சியாக நடத்தப்படவுள்ளதாகவும், அனைத்து தரப்பு மக்களும் இதில் பங்கேற்று தேசிய உணர்வை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

தேசிய உணர்வை மக்களிடையே வேரூன்றச் செய்யும் வகையில் நடைபெற்ற இந்த திரைப்பட நிகழ்ச்சி, பொழுதுபோக்கை மட்டுமல்லாமல் ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் மலேசியர் என்ற பெருமிதத்தை அனைவரின் மனதிலும் மேலும் வலுப்படுத்திய நிகழ்வாக அமைந்தது.

 

செலாயாங், ஆக. 2- நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணியின் இந்திய வேட்பாளர்களின் வெற்றிக்காக மஇகா தொண்டர்கள் முழுமனதுடன் பாடுபட்ட போதிலும், அதே அர்ப்பணிப்பு மற்ற தரப்பினரிடமிருந்து கிடைக்கவில்லை என்ற வேதனையை மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ முருகையா வெளிப்படுத்தினார்.

செலயாங் மஇகா தொகுதியின் மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், "மற்றவர்களின் வெற்றிக்காக நாம் ஓடி ஓடி உழைத்தோம். ஆனால் நமது வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் மற்றவர்கள் செயல்படவில்லை. அதுதான் நெகிரி மாநிலத்தில் ஏற்பட்ட தோல்விக்கான மிகப்பெரிய வருத்தம்," என்று தெரிவித்தார்.

நெகிரி மாநிலத்தில் இந்திய சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்திய தேசிய முன்னணி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் மஇகா உறுப்பினர்கள் கடுமையாக உழைத்ததாகவும், ஆனால் அந்த அர்ப்பணிப்புக்கு இணையான ஒத்துழைப்பு கூட்டணியின் மற்ற தரப்புகளிடமிருந்து கிடைக்காதது ஏமாற்றமளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜொகூர் மாநிலத்தில் தேசிய முன்னணியிலுள்ள கட்சிகள் நமக்கு ஆதரவு அளித்ததுபோல் நெகிரி தேர்தலில் அந்த ஆதரவை வழங்கவில்லை. கூட்டணியை பிரதிநிதித்து நின்ற மற்ற வேட்பாளர்களுக்கு கூட்டணியிலுள்ள கட்சிகள் மஇகாவின் வேட்பாளர்களுக்கு அந்த அளவில் ஆதரவு தெரிவிக்கவில்லை என அவர் சொன்னார்.

மேலும், தேர்தல் காலங்களில் பிறரின் வெற்றிக்காக மட்டும் உழைப்பதை விட, நமது சொந்த வேட்பாளர்களின் வெற்றியையே முதன்மையாகக் கருதி திட்டமிட்டு செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அவர் வலியுறுத்தினார்.

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் இரண்டு ஆட்சிக்குழு உறுப்பினர்  பதவிகளைப் பெறக்கூடிய வாய்ப்பை மஇகா இழந்துள்ளதாகவும், அது இந்திய சமூகத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கு பெரிய பின்னடைவாக அமைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், தேர்தலின் போது பிற இன வாக்காளர்களில் பலர் வாக்களிக்க வராததும் தேர்தல் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக அவர் சுட்டிக்காட்டினார்.

"தேசிய முன்னணி நெகிரி மாநிலத்தில் ஆட்சியை அமைத்திருந்தாலும், அதில் நமது சமூகத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லாதது வருத்தமளிக்கிறது. இது எதிர்காலத்தில் திருத்தப்பட வேண்டிய முக்கியமான விஷயமாகும்," என்றார்.

எதிர்காலத்தில் சிலாங்கூர் மாநிலத் தேர்தல் நடைபெறும்போது, கடந்த அனுபவங்களைப் பாடமாகக் கொண்டு, தேவையான அரசியல் நுணுக்கங்களையும் வியூகங்களையும் வகுத்து, மஇகா வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

இந்நிகழ்வில் மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவு விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்த செலயாங் முன்னாள் மஇகா தொகுதி தலைவர் எம்.பி. ராஜாவுக்கு டத்தோ முருகையா தனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்தார்.

விழாவில் சிறப்பு பிரமுகர்கள், தொகுதியின் முன்னணி நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், மஇகாவின் வரலாறும் அதன் சேவைகளும் நினைவுகூரப்பட்டன.

ரவாங், ஆக 1-

ரவாங்  தமிழ்ப்பள்ளிக்கு  புதிய கட்டடம் கட்ட அனுமதி கிடைத்துள்ள நிலையில் அது ஒருவரவேற்க கூடிய விஷயமாக இருந்தாலும் அந்த கட்டுமானத்திற்காக மாணவர்கள்விளையாட இருக்கும் திடலை பலி கொடுப்பது நியாமான செயல் இல்லை எனபெற்றோர்கள்  தமிழ் லென்ஸ்சிடம் தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.

 

இருக்கும் ஒரே திடலை தாரைவாத்து கொடுத்து விட்டு மாணவர் எங்கும் போய்விளையாடுவார்கள்? இருப்பதே ஒரு சிறிய திடல் அதையும் கூறுபோடுவது நியாயமா எனஅவர்கள் கேள்வி எழுப்பினர்.

 

திடலுக்கு அருகே பலகையில் ஒரு மோசமான சூழலில் இருக்கும் கட்டடத்தை உடைத்துஅங்கு 3 அல்லது 4 மாடியில் கட்டடத்தை கட்டுங்கள்.

 

அதை விடுத்து திடலில் கை வைப்பது ஏன் ? திடலை இழந்து மாணவர்கள் விளையாட,பயிற்சி எடுக்க எங்கே செல்வார்கள்? பக்கத்து பள்ளியில் கையேந்தி நிற்கும் சூழலை தயவுசெய்து உருவாக்கி விடாதீர்கள்.

 

கல்வி அமைச்சு மற்றும் பள்ளி நிர்வாகம்  இதனை மறு பரிசீலனை  செய்து திடல் மீது கைவைப்பதை உடனடியாக நிறுத்த வரும் ஞாயிற்றுக் கிழமை ஆகஸ்ட் 2 ஆம்  திகதிபெற்றோர்களும் அவ்வட்டார இந்திய மக்களும் ரவாங் தமிழ்ப்பள்ளி வளாகத்தில் காலை8.30 மணிக்கு  ஒன்று கூடி  தங்களது எதிர்ப்பை கல்வி அமைச்சுக்கும் பள்ளி நிர்வாகதிற்கும்தெரிவிக்கவுள்ளனர்.

செய்தி : வெற்றி விக்டர்


ரவாங், ஆக.1-
ரவாங்  தமிழ்ப்பள்ளிக்கு  புதிய கட்டடம் கட்ட அனுமதி கிடைத்துள்ள நிலையில் அது ஒரு வரவேற்க கூடிய விஷயமாக இருந்தாலும் அந்த கட்டுமானத்திற்காக மாணவர்கள் விளையாட இருக்கும் திடலை பலி கொடுப்பது நியாமான செயல் இல்லை என பெற்றோர்கள்  தமிழ் லென்ஸ்சிடம் தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.

இருக்கும் ஒரே திடலை தாரைவாத்து கொடுத்து விட்டு மாணவர் எங்கும் போய் விளையாடுவார்கள்? இருப்பதே ஒரு சிறிய திடல் அதையும் கூறுபோடுவது நியாயமா என அவர்கள் கேள்வி எழுப்பினர்.

திடலுக்கு அருகே பலகையில் ஒரு மோசமான சூழலில் இருக்கும் கட்டடத்தை உடைத்து அங்கு 3 அல்லது 4 மாடியில் கட்டடத்தை கட்டுங்கள்.

அதை விடுத்து திடலில் கை வைப்பது ஏன் ? திடலை இழந்து மாணவர்கள் விளையாட ,பயிற்சி எடுக்க எங்கே செல்வார்கள்? பக்கத்து பள்ளியில் கையேந்தி நிற்கும் சூழலை தயவு செய்து உருவாக்கி விடாதீர்கள்.

கல்வி அமைச்சு மற்றும் பள்ளி நிர்வாகம்  இதனை மறு பரிசீலனை  செய்து திடல் மீது கை வைப்பதை உடனடியாக நிறுத்த வரும் ஞாயிற்றுக் கிழமை ஆகஸ்ட் 2 ஆம்  திகதி பெற்றோர்களும் அவ்வட்டார இந்திய மக்களும் ரவாங் தமிழ்ப்பள்ளி வளாகத்தில் காலை 8.30 மணிக்கு  ஒன்று கூடி  தங்களது எதிர்ப்பை கல்வி அமைச்சுக்கும் பள்ளி நிர்வாகதிற்கும் தெரிவிக்கவுள்ளனர்.

செய்தி : வெற்றி விக்டர்

ஷா ஆலாம், ஜூலை 29-
கிள்ளான் ராக்கெட் கிளப் (கேஆர்சி) துணைத் தலைவர் திரு.உமாகாந்தன், செயலாளர் திரு.தேன்மாறன், பொருளாளர் திரு.சரவணன், துணைப் பொருளாளர் திரு.திருநாவுக்கரசு, பொது உறவு அதிகாரி திரு.மகேந்திர குமார்,  திரு.செல்வராஜு (தளவாடங்கள் பிரிவு), திரு.முனுசாமி (விளம்பர பிரிவு) ஆகிய செயலவை உறுப்பினர்கள் அனைவரும் இந்த கிண்ண பூப்பந்து போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறோம். இன்று 2ஆவது நாளாகும். இது 2 நாள் நடத்தப்பட்ட போட்டியாகும் என்று அந்த கிளப்பின் தலைவர் திரு.செண்பகமாறன் சுப்ரமணியம் தெரிவித்தார்.
       இதை 3ஆவது ஆண்டாக நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம். எனினும், இந்த முறை இப்போட்டிக்கு மகத்தான ஆதரவளித்து இதில் 400 பேர் பங்கேற்றனர். நாடு முழுவதிலுமுள்ள அதாவது பெர்லிஸ் தொடங்கி ஜோகூர் வரை தீபகற்ப மலேசியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் போட்டியாளர்கள் கலந்து கொண்ட.னர்.
        உண்மையில் இந்த முறை நடைபெற்ற போட்டியில் மிகச் சிறப்பானதாகக் கருதப்படுவது கடந்த முறை நடத்தப்பட்ட போட்டியில் 1 வெளிநாட்டைச் சேர்ந்த போட்டியாளர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இப்போட்டியில் இந்தியர்களாக இருந்தால் அவர்களை நாங்கள் ஏற்றுக் கொள்வோம். இம்முறை இந்தோனேசியா, இலங்கையைச் சேர்ந்த இந்தியர்களும் கலந்து கொண்டதை நினைத்து நாங்கள் மிகவும் பெருமை கொள்கிறோம். இது அனைத்துலக இந்திய பூப்பந்து கிண்ண போட்டியாகவும் ஆகி விட்டது. அதனால் இனி வரும் காலங்களில் இப்போட்டியைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம்.
      இந்த முறை நடைபெற்ற போட்டியில் 15 பிரிவுகளை நாங்கள் வைத்திருந்தோம். அவற்றில் 8 பிரிவுகள் 18 வயதிற்குக் கீழ்ப்பட்ட சிறார்களுக்கான பிரிவுகளாகும். இதர 7 பிரிவுகளும் பெரியவர்கள் ஆண்-பெண் இருபாலருக்கும் கொடுக்கப்பட்டன. இதில் பகுதிநேர தொழில்முறை விளையாட்டாளர்களுக்கும் நாங்கள் வாய்ப்புகளை வழங்கினோம். இதன் மூலம் சிறார்கள், ஆண்கள், பெண்கள், கலப்பு இரட்டையர் என அனைத்துப் பிரிவினரையும் நாங்கள் உள்ளடக்கி விட்டோம். இதில் நாங்கள் பெருமையடைகிறோம்.
        அதே சமயத்தில் மாண்புமிகு சுரேஷ் சிங், எம்பிஐ காப்பரேஷன் நிறுவனமும் கடந்த 2 ஆண்டுகளாக எங்களுக்கு ஆதரவளித்து வருகின்றனர். இவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றியை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம். அதைத் தவிர நமது அரசு சார்ந்த நிறுவனத்தின் நிர்வாக ஆலோசகரும் இச்சங்கத்தின் துணைப் பொருளாளருமான திரு.திருநாவுக்கரசு அவர்கள் உட்பட இதர ஆதரவாளர்களும் இருக்கின்றனர். எங்களின் தேவைகளுக்கு அவர்கள் அனைவரும் பங்களிப்பு செய்தனர்.
         இப்போட்டி மிகச் சிறப்பாக நடைபெற்றதற்கு ஆதரவாளர்கள் மட்டுமின்றிச் செயலவை உறுப்பினர்களின் அயராத உழைப்பும் முக்கிய காரணமாக இருக்கின்றன. போட்டியாளர்களும் மிகுந்த ஊக்கத்துடன் வந்திருந்தனர். இதுபோன்ற போட்டிகளை நிறைய இடங்களில் ஏற்பாடு செய்ய வேண்டும். இந்தியர்களின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு உள்ளது.
         இப்போட்டி நடத்தப்படுவதன் நோக்கம் வெற்றியாளர்களை அடையாளம் காண்பதற்கு அல்ல, மாறாக மற்றவர்களைப் பார்த்து இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்கும் உற்சாகத்தைப் பார்ப்பவர்களுக்கும் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே அடிக்கடி இந்த போட்டியை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அனைத்து ஏற்பாட்டாளர்களையும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். இதற்கு வருகை தந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.
        இதில் சிறார் தொடங்கி பெரியவர்கள் வரை ஒட்டுமொத்தமாக 400 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் மிகக் குறைந்த வயதுடைய போட்டியாளராக 6 வயதுடைய சிறுவன் கிருஷ்ண கவினேஷ் கணேசன் கலந்து கொண்டு 10 வயது பிரிவில் விளையாடினார். பெண்களுக்கான பிரிவில் இரட்டையர் பங்கேற்கும் போட்டிகள் நடைபெற்றன. கலப்பு இரட்டையர்களுக்கான போட்டிகளும் நடைபெற்றன.
        பெண்களில் 35 வயதிற்கும் மேற்பட்டோர் விளையாடினார்கள். பெரியவர்களுக்கான பிரிவில் பகுதிநேர தொழில்முறை விளையாட்டாளர்கள், இளநிலை மூத்த விளையாட்டாளர்கள், முதுநிலை மூத்த விளையாட்டாளர்கள் விளையாடினார்கள். கடந்த 2 ஆண்டுகளில் பங்கேற்ற 300 பேரை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இவ்வாண்டு 400 பேர் பங்கேற்றனர். இது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
         இதில் முதலாவதாக வெற்றி பெற்ற அனைவருக்கும் யோனெக்ஸ் ராக்கெட்கள், ரொக்கம் ஆகியவை வழங்கப்பட்டன. 2ஆவதாக வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கம், யோனெக்ஸ் ராக்கெட்கள் வழங்கப்பட்டன. 3ஆவதாக வெற்றி பெற்றவர்களுக்கு பூப்பந்து சம்பந்தப்பட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன.