loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

கோலாலம்பூர், ஜூலை 6-
இளம் பெண்களும் பல்வேறு துறைகளில் சாதிக்க முடியும் என்பதை உலகிற்கு நிரூபித்துள்ளார் 15 வயதான கேப்டன் தனுஶ்ரீ அன்பரசன். தனது துடிப்பும் திறமையும் கொண்டு கால்பந்து அரங்கில் புதிய வரலாறு படைத்துள்ளார்.

கிளானா ஜெயா PKNS அரங்கில் ஜூன் 28 ஆம் நாள் நடைபெற்ற 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான FAM Liga Puteri Cup Final இறுதிப்போட்டியில், Penang Indian FC அணி வீரத்துடன் விளையாடி, Perlima United FC அணியை 3–2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் கிடைத்த வாய்ப்புகளைச் சரியாக பயன்படுத்திய பினாங்கு இந்தியன் FC, உறுதியான மனநிலையுடன் ஆட்டத்தின் போக்கையே தம் பக்கம் மாற்றிக்கொண்டது.

இதன் விளைவாக, வெற்றிக் கிண்ணத்துடன் 5,000 வெள்ளி ரொக்கப் பரிசும் அணிக்கு வழங்கப்பட்டது.

இந்தத் தொடரில் கேப்டன் தனுஶ்ரீ அன்பரசன் 7 போட்டிகளில் 15 கோல்கள் அடித்து, லீகாவின் சிறந்த கோல் வீராங்கனையாகத் திகழ்ந்தார்.

கெடா மாநிலம் கூலிம் பகுதியில் உள்ள கலாடி இடைநிலைப் பள்ளியில் கல்வி பயிலும் மாணவியாவார் இவர்.

அணித் தலைவர் ஸ்ரீ சங்கர் கூறுகையில், “இது நீண்ட கால உழைப்பின் பயனும் அர்ப்பணிப்பின் வெளிப்பாடும் ஆகும். தனுஶ்ரீ வெறும் கோல் அடிக்கும் வீராங்கனை அல்ல; முக்கிய தருணங்களில் ஆட்டத்தை மாற்றும் ஆற்றல் கொண்டவர்,” எனப் பெருமிதம் தெரிவித்தார்.

இவ்வாறு, தன் இளமைப் பருவத்திலேயே திறமையால் விளையாட்டு உலகில் முத்திரை பதித்து, பினாங்கு இந்தியன் FC அணிக்கு மகுடம் சூட்டியுள்ளார் கேப்டன் தனுஶ்ரீ அன்பரசன்.

கோலாலம்பூர், ஜூலை 6-
பகாங் மாநிலம், ரவூப்பில் அமைந்துள்ள ஸ்ரீ சிவ சுப்பிரமணியர் ஆலயத்தின் புதிதாகக் கட்டப்பட்டு புதுப்பொலிவு பெற்ற ராஜகோபுரத்தின் அஷ்டபந்தன பஞ்சகுண்ட மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் ஜூலை 12, 2026 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.45 மணி முதல் 10.45 மணி வரை சிறப்பாக நடைபெறவுள்ளது.

பல ஆண்டுகளாக பக்தர்களின் ஆதரவுடனும், ஆலய நிர்வாகத்தின் முயற்சியுடனும் எழுப்பப்பட்டுள்ள இந்த பிரமாண்டமான ராஜகோபுரம், ஆலயத்தின் ஆன்மிகப் பெருமையையும், திராவிடக் கோயில் கட்டிடக்கலையின் சிறப்பையும் பிரதிபலிக்கும் புதிய அடையாளமாக விளங்குகிறது.

இந்த ராஜகோபுர கும்பாபிஷேகம், ரவூப் மற்றும் சுற்றுவட்டார இந்து மக்களுக்கான முக்கிய ஆன்மிக நிகழ்வாகக் கருதப்படுகிறது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜூலை 11, 2026 (சனிக்கிழமை) இரவு 9.30 மணிக்கு, வாணவேடிக்கை மற்றும் வான ஒளிக்காட்சி (Sky Display) நடைபெறவுள்ளது.

குடும்பத்தினருடன் திரளாகக் கலந்து கொண்டு இந்த அரிய ஆன்மிக நிகழ்வைக் கண்டு இறையருள் பெறுமாறு ஆலய நிர்வாகம் பக்தர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மஇகாவின் தேசியத் தலைவர் டான் ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கலந்துகொள்ள உள்ளார். மேலும், கவுரவ விருந்தினராக மசீச தேசிய பொதுச் செயலாளரும் பகாங் மாநில மசீச தலைவருமான டத்தோக் சோங் சின் வூன் பங்கேற்கவுள்ளார்.

இந்த மகா கும்பாபிஷேக ஏற்பாடுகளை ஆலயத் தலைவர் டத்தோ கே. தமிழ்செல்வன் தலைமையில், ரவூப் இந்து ஆலய சபா  மற்றும் அதன் நிர்வாகக் குழுவினர் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த மகா கும்பாபிஷேகம், புதிய ராஜகோபுரத்தின் திருப்பணியை நிறைவு செய்யும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக மட்டுமன்றி, பக்தர்களின் ஒற்றுமையையும் இறைநம்பிக்கையையும் வெளிப்படுத்தும் ஆன்மிக விழாவாகவும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஜாசின், ஜூலை 6-

i-NEXTECH புத்தாக்க போட்டியில் எமரல்ட் தோட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இரு விருதுகளை வென்று சாதித்துள்ளனர்.

i-NEXTECH 2026 எனும் 3ஆவது அனைத்துலக அடுத்த தலைமுறை புத்தாக்க தொழில்நுட்பக் கண்காட்சி ஜாசினில் நடைபெற்றது.

மலேசியா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து மொத்தம் 239 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதில் எமரல்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் இருந்து ஸ்ரீ திருமுருகன் சக்தீஸ்வரன், திவ்யா தருமராஜ், தனுஸ்ரீ பிரவின் குமார் ஸ்ரீ தர்ஷன் சக்தீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தலைமையாசிரியர் அனுராதா, பொறுப்பாசிரியர் நிர்மலா ஆகியோர் தலைமையில் இம்மாணவர்கள்  இந்த போட்டியில் கலந்து கொண்டனர்.

கடும் சவால்கலுக்கு மத்தியில் எமரல்ட் தோட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்கள்
இரு விருதுகளை வென்றனர்.

ஜூனியர் கண்டுபிடிப்பாளர் பிரிவில் தங்கப் பதக்கம், சிறந்த விளக்கக் காணொளிக்கான சிறப்பு விருதும் அவர்கள் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலாலம்பூர், ஜூலை 6-
இந்திய சமுதாயத்தின் வாக்கை பெற்றுக்கொண்டு நம் சமுதாயத்தை மாய உலகத்தில் வைத்துக் கொண்டிருக்கும்   பிரதமரரும் பக்காத்தான் ஹாராப்பான் தலைவருமான அன்வாருக்கு  இந்திய சமுதாயம் பாடம் புகட்ட வேண்டும் என எம் .ஏ .பி கட்சியின் தலைவரான பொன். வேதமூர்த்தி தெரிவித்தார்.

இந்திய சமுதாயத்தின் மேம்பாடு  தொடர்பான எந்த திட்டத்தை கொண்டுச் சென்றாலும் அதற்கு அன்வார் கொடுக்கும் ஒரே பதில்  இது இன ரீதியான திட்டம் என அதை ஒதுக்கி வைத்து விடுவார்.

அது மட்டும் அல்ல  ஆலய விவகாரத்தில்  குழந்தையையும்  கில்லி விட்டு தொட்டிலையும்  ஆட்டிவிடும் வேலையை அன்வார் செய்து வருகிறார்.  இதை அவர் செய்தது அரசியலுக்காக.. இவரது வலையில்  இந்திய சமுதாயம் விழுந்து விட கூடாது, அம்னோ பாஸ் பெர்சத்து போன்ற கட்சிகள் அன்வார் விரித்த வலையில் சிக்க வேண்டாம் என நான்  கருத்தும் தெரிவித்தேன் கடிதமும் அனுப்புனேன்.

அதுமட்டுமின்றி அவர் ஆட்சி காலத்தில் பயன் படுத்திய சில வார்த்தைகள் இந்தியச் சமுதாயத்தை காயமும் படுத்தியது.

ஆனால் நம் மக்கள் தெளிவாக சில கருத்துகளை அமைதியாக கொடுத்தனர். எல்லா வினைக்கும் எதிர் வினையாக 16 ஆவது பொது தேர்தலில் விடை கிடைக்கும், பதில் கொடுப்போம் என மக்கள் தெரிவித்தனர்.

அந்த வகையில் இந்திய மக்கள் ஜொகூர் தேர்தலில்" ASALKAN BUKAN PH "  என்ற நிலைப்பாட்டில்  PN அல்லது BN கட்சிக்கு ஆதரவு கொடுத்து  அன்வாருக்கு பாடம் புகட்ட வேண்டும் என பொன் வேதமூர்த்தி தெரிவித்தார்.

அதே போல் இந்திய மக்கள் வரும் பொது தேர்தலில் பக்காத்தான் ஹாரப்பானை அடியோடு புறக்கணித்து  இந்திய சமுதாயத்திற்கு ஆதரவும் கொடுக்க தெரியும், எங்களை துச்சமாக நினைத்தால் தூக்கி எறியவும் தெரியும் என்பதை அன்வாருக்கும் பாக்காத்தான் ஹாராப்பானுக்கும்  பாடம் புகட்ட வேண்டும் என பொன் வேதமூர்த்தி தெரிவித்தார்.

தொடங்கட்டும் முழக்கம் " ASALKAN BUKAN PH " என்றார் அவர்.

செய்தி : வெற்றி விக்டர் - காளிதாசன் இளங்கோவன்

கோலாலம்பூர், ஜூலை 6-
இந்திய சமுதாயத்தின் வாக்கை பெற்றுக்கொண்டு நம் சமுதாயத்தை மாய உலகத்தில் வைத்துக் கொண்டிருக்கும்   பிரதமரரும் பக்காத்தான் ஹாராப்பான் தலைவருமான அன்வாருக்கு  இந்திய சமுதாயம் பாடம் புகட்ட வேண்டும் என எம் .ஏ .பி கட்சியின் தலைவரான பொன். வேதமூர்த்தி தெரிவித்தார்.

இந்திய சமுதாயத்தின் மேம்பாடு  தொடர்பான எந்த திட்டத்தை கொண்டுச் சென்றாலும் அதற்கு அன்வார் கொடுக்கும் ஒரே பதில்  இது இன ரீதியான திட்டம் என அதை ஒதுக்கி வைத்து விடுவார்.

அது மட்டும் அல்ல  ஆலய விவகாரத்தில்  குழந்தையையும்  கில்லி விட்டு தொட்டிலையும்  ஆட்டிவிடும் வேலையை அன்வார் செய்து வருகிறார்.  இதை அவர் செய்தது அரசியலுக்காக.. இவரது வலையில்  இந்திய சமுதாயம் விழுந்து விட கூடாது, அம்னோ பாஸ் பெர்சத்து போன்ற கட்சிகள் அன்வார் விரித்த வலையில் சிக்க வேண்டாம் என நான்  கருத்தும் தெரிவித்தேன் கடிதமும் அனுப்புனேன்.

அதுமட்டுமின்றி அவர் ஆட்சி காலத்தில் பயன் படுத்திய சில வார்த்தைகள் இந்தியச் சமுதாயத்தை காயமும் படுத்தியது.

ஆனால் நம் மக்கள் தெளிவாக சில கருத்துகளை அமைதியாக கொடுத்தனர். எல்லா வினைக்கும் எதிர் வினையாக 16 ஆவது பொது தேர்தலில் விடை கிடைக்கும், பதில் கொடுப்போம் என மக்கள் தெரிவித்தனர்.

அந்த வகையில் இந்திய மக்கள் ஜொகூர் தேர்தலில்" ASALKAN BUKAN PH "  என்ற நிலைப்பாட்டில்  PN அல்லது BN கட்சிக்கு ஆதரவு கொடுத்து  அன்வாருக்கு பாடம் புகட்ட வேண்டும் என பொன் வேதமூர்த்தி தெரிவித்தார்.

அதே போல் இந்திய மக்கள் வரும் பொது தேர்தலில் பக்காத்தான் ஹாரப்பானை அடியோடு புறக்கணித்து  இந்திய சமுதாயத்திற்கு ஆதரவும் கொடுக்க தெரியும், எங்களை துச்சமாக நினைத்தால் தூக்கி எறியவும் தெரியும் என்பதை அன்வாருக்கும் பாக்காத்தான் ஹாராப்பானுக்கும்  பாடம் புகட்ட வேண்டும் என பொன் வேதமூர்த்தி தெரிவித்தார்.

தொடங்கட்டும் முழக்கம் " ASALKAN BUKAN PH " என்றார் அவர்.

செய்தி : வெற்றி விக்டர் - காளிதாசன் இளங்கோவன்