loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணத்தை முன்னிட்டு, ADR Music நிறுவனம் சார்பில் “இசைத் தமிழ்கோர் மணிமகுடம்” எனும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கலை உணர்வுடன் கடந்த 50 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் அலை ஓசை டாக்டர் அப்புதலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி, வரும் 20ஆம் தேதிஞாயிற்றுக்கிழமை பெட்டாலிங் ஜெயா சிவிக் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

நிகழ்ச்சியில் சுமார் 300 இசைக் கலைஞர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். நண்பகல் 12 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை மதிய உணவு வழங்கப்படுவதுடன், பிற்பகல் 2 மணி முதல்மாலை 7 மணி வரை இசை நிகழ்ச்சி நடைபெறும்.

மலேசியாவைச் சேர்ந்த 60 உள்ளூர் பாடகர்கள் இளையராஜாவின் படைப்புகளைவழங்கவுள்ளதுடன், 18 இசைக் கருவிக் கலைஞர்களும் தங்களது பங்களிப்பைவழங்கவுள்ளனர். சுமார் 1,000 பேர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளஇந்நிகழ்ச்சி பொதுமக்களுக்கு இலவசமாக நடத்தப்படுகிறது.

நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ள பாடகர் எம்.எஸ். பிரிட்டோ கூறுகையில், இந்நிகழ்ச்சியில் பங்கேற்பது தமக்கு பெருமையாக இருப்பதாகத் தெரிவித்தார். கடந்த 50 ஆண்டுகளாக இளையராஜாவின் பாடல்களை பாடி வருவதாகக் குறிப்பிட்ட அவர், இந்தஅற்புதமான இசை நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் எனஅழைப்பு விடுத்தார்.

மேலும், மலேசியாவின் பல்வேறு உள்ளூர் கலைஞர்களை ஒரே மேடையில் காணவும், அவர்களின் குரல்களை கேட்டு ரசிக்கவும் இந்த நிகழ்ச்சி சிறந்த வாய்ப்பாக அமையும் என்றும்அவர் தெரிவித்தார்.

ஜெயதீஸ் குமார் கூறுகையில், இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணத்திற்குவழங்கப்படும் மரியாதையாகவே இந்த இசை நிகழ்ச்சியை தாம் கருதுவதாக தெரிவித்தார்.

SD Harmoni Restoran உரிமையாளர் ஷர்மிலா, இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராககலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார். அற்புதமானஇந்நிகழ்ச்சிக்கு தமது முழுமையான ஆதரவு இருப்பதாகவும், பொதுமக்கள் அனைவரும்திரளாக வந்து நிகழ்ச்சியை சிறப்பிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

சிந்து பைரவி இசைக்குழுவின் தலைவர் அசோகன் கூறுகையில், மலேசியஇசைத்துறையில் அலை ஓசை டாக்டர் அப்பு ஒரு முக்கியமான இசைக் கலைஞர் எனக்குறிப்பிட்டார். குறிப்பாக இளையராஜாவின் பாடல்களை மிகத் தெளிவாகவும் சிறப்பாகவும்இசைக்கக்கூடிய திறமை அப்புவுக்கு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இசையின் மீது அதிக ஈடுபாடு கொண்ட டாக்டர் அப்பு, இளையராஜாவின் இசைக்கருவிஅமைப்புகளின் நுணுக்கங்களை உள்வாங்கி, அவற்றை இந்த நிகழ்ச்சியிலும்பயன்படுத்தியுள்ளதாக அசோகன் தெரிவித்தார்.

இசைஞானி இளையராஜாவின் அரை நூற்றாண்டு இசைப் பயணத்தை கொண்டாடும்வகையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் இலவசமாக கலந்து கொண்டுஉள்ளூர் கலைஞர்களின் இசைப் படைப்புகளை ரசிக்கலாம்.

நிதி ஒதுக்கீடு இல்லை, அதனால் செய்ய முடியாது என்று காரணம்  கூற மாட்டேன் என்மக்கள் என் பொறுப்பு !

 

தாப்பாவில் விபத்து அதிகம் நடக்கும்  இடங்களில் சோலார் LED விளக்குகள்!

 

இப்போது 20 கட்டம் கட்டமாக 200 திட்டம் வகுத்துவிட்டேன்

- டத்தோ ஸ்ரீ சரவணன்

 

தாப்பா: தாப்பா நாடாளுமன்றத் தொகுதியில் விபத்துகள் அடிக்கடி நிகழும் பகுதியாகஅடையாளம் காணப்பட்டுள்ள சாங்சாட் பெத்தாய் முதல் தாப்பா சிறைச்சாலை வரையிலானசுமார் நான்கு கிலோமீட்டர் சாலைப் பகுதியில், அடுத்த மாத தொடக்கத்தில் 20 உயர் திறன்கொண்ட சோலார் LED மின்விளக்குகள் பொருத்தப்பட உள்ளன.

 

இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாததன் காரணமாக இந்தச் சாலைப் பகுதியில்அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.

 

மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருக்கானஒதுக்கீட்டைப் பயன்படுத்தி இந்தப் பகுதிகளை வெளிச்சமயமாக்கும் நடவடிக்கைமுன்னெடுக்கப்படுவதாக அவர் கூறினார்.

 

“இது மூன்று ஆண்டுகளுக்கான திட்டமாகும்  நிதி ஒதுக்கீடு இல்லை, அதனால் செய்யமுடியாது என்று காரணம் கூற விரும்பவில்லை.

 

“தாப்பாவை வெளிச்சமயமாக்குவதற்காக மக்கள் பிரதிநிதிக்கான ஒதுக்கீட்டைப்பயன்படுத்துகிறேன். இந்தச் சாலையின் பல பகுதிகள் இரவு நேரங்களில் இருளாகஇருப்பதுடன், அடிக்கடி விபத்துகளும் நிகழ்கின்றன. மக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமைஅளிக்கப்பட வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.

 

தாப்பா மகாத்மா காந்தி மண்டபத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் பேசிய டத்தோஸ்ரீசரவணன், தாப்பா நாடாளுமன்றத் தொகுதி முழுவதும் அடுத்த மூன்று ஆண்டுகளில் கட்டம்கட்டமாக 200 சோலார் LED மின்விளக்குகள் பொருத்தப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.

 

இந்த நடவடிக்கை தாப்பா நாடாளுமன்றத் தொகுதி அழகுபடுத்தல் மற்றும்வெளிச்சமயமாக்கல் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது.

 

மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் சாலைகள் மற்றும் இரவு நேரங்களில் வெளிச்சம்குறைவாக காணப்படும் பகுதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, மின்விளக்குகள் கட்டம்கட்டமாக பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதனிடையே, தாப்பா நாடாளுமன்றத் தொகுதி அளவில் நடைபெற்ற 2026ஆம்ஆண்டுக்கான இயந்திரங்கள், உபகரணங்கள், இறுதிச்சடங்கு நல உதவி மற்றும் அரசு சாராஅமைப்புகளுக்கான (NGO) நன்கொடை வழங்கும் நிகழ்ச்சியில், டத்தோஸ்ரீ எம். சரவணன்மொத்தம் RM151,000 மதிப்பிலான நிதி மற்றும் உபகரணங்களை வழங்கினார்.

 

மக்களின் அன்றாட தேவைகள், சமூக நலன் மற்றும் பாதுகாப்பு சார்ந்த திட்டங்களுக்குதொடர்ந்து முக்கியத்துவம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பினாங்கு, செப்15-

பினாங்கு மாநில இந்திய‌‌ முஸ்லிம் வர்ககத்தினர்களுக்கு பல்வேறு சேவைகளை‌ நீட்டிக்காலமாக‌ ஆற்றி வரும் பினாங்கு லீகா முஸ்லிம் சங்கத்திற்கு  26 ஆண்டுகளுக்கு பின்னர்நேற்று புதிய தலைவராக டத்தோ டாக்டர்  சாஹூல்  ஹாமிட்  போட்டியின்றி வெற்றி பெற்றார்.

கடந்த‌ 26 ஆண்டுகள் டத்தோஶ்ரீ ஹாஜா நஜ்முடின்  சிறப்பாக வழிநடத்தினார்.

அவரின் துணைத் தலைவராக டத்தோ  சாஹில் ஹாபிட் தேர்வு செய்யப்பட்டதை தொடர்த்து  தொழிலதிபர் டாக்டர் நோர்‌ முகமட் எஸ்.பி.கே. முகமட் அப்துல்லா துணைத் தலைராகபோட்டியின்றி வெற்றி‌ பெற்றார்.

அதையடுத்து,  முதல் உதவித் தலைவர்களாக் டத்தோ முகமட் மீரா சாஹிப், ராயிஸ் அகமட், கேப்டன்  ஜாமில்  நியமிக்கப்பட்டனர்.

தொடர்ந்து  செயலாளராகஜ டாக்டர் சைட் நீசாம் , துணைத் செயலாளர்களாக  ஹாஸ்வினி, முகமட் பிலால் நியமிக்கப்பட்டனர்.

மேலும், உமார்‌ பாருக் பொருளாளராக தேர்வு செய்யப்பட்டார்.தொடர்ந்து பினாங்கு லீகா‌‌ முஸ்லிம் சங்கத்தின்‌ இளைஞர் அணி தலைவராக நோர்ஹிஷாமுடின் நோர்‌ஸமுகமட்,  மகளிர்  அணி தலைவராக சக்கினா மோனா முகமட் வெற்றிபெற்றனர்.

பினாங்கு லீகா முஸ்லிம் சங்கத்தின் 66 ஆண்டுக் கூட்டத்தில் புதிய செய்தவைஉறுப்பினர்கள்‌ தேர்வு‌ செய்யப்பட்டனர். பினாங்கு மாநில அரசாங்கத்தின்‌ முழு ஆதரவோடு பினாங்கு லீகா முஸ்லிம் சங்கத்தின்மேலும்‌ வெற்றி நடை‌ போடும் என‌ தலைவர்‌ டத்தோ சாஹூல் ஹாமிட் கூறினார்.

இந்த ஆண்டுக் கூட்டத்தை பினாங்கு  மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஶ்ரீ சுந்தரராஜூதொடக்கி வைத்தார்.

கோலாலம்பூர், செப்.11-

 கடலோர மீனவ மக்களின் வாழ்க்கை, பாரம்பரிய பாய்மரப் படகுப் போட்டி, நட்பு, காதல்மற்றும் பழிவாங்குதல் என பல்வேறு அம்சங்களை ஒன்றிணைத்து உருவாகியுள்ள புதியதிரைப்படம் ‘மண்டாடி’.

நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். சத்யராஜ், மகிமா நம்பியார், சுஹாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில்நடித்துள்ளனர்.

ராமநாதபுரம் அருகிலுள்ள கடலோர மீனவ கிராமத்தைப் பின்னணியாகக் கொண்டஇப்படத்தின் கதையில், அக்கிராம மக்களின் பாரம்பரிய அடையாளமாக விளங்கும் பாய்மரப்படகுப் போட்டி முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

படகுப் போட்டியில் சிறந்து விளங்கும் முத்துக்காளி என்ற காளி கதாபாத்திரத்தில் சூரிநடித்துள்ளார். கடந்த காலத்தில் ஏற்பட்ட சில பிரச்சினைகளால் சொந்த ஊரை விட்டுசென்னை செல்லும் காளி, அங்கு புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறார்.

இந்நிலையில், சொந்த ஊரில் பழைய பகை காரணமாக உருவாகும் பிரச்சினை ஒன்றால் பலஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தனது கிராமத்திற்குத் திரும்ப வேண்டிய சூழல்அவருக்கு ஏற்படுகிறது.

கிராமத்திற்குத் திரும்பிய காளி, பழைய நண்பர்கள், கடந்த கால காதல் மற்றும் படகுப்போட்டி என தனது வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்த பல சம்பவங்களை மீண்டும்எதிர்கொள்கிறார்.

ஒருகாலத்தில் சிறந்த படகுப் போட்டி வீரராக விளங்கிய காளி, மீண்டும் போட்டிக் களத்தில்இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. குறிப்பாக, சுஹாஸ் ஏற்றுள்ளகதாபாத்திரத்துடனான பழைய நட்பு, மோதல் மற்றும் போட்டி ஆகியவை கதையைஅடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்துகின்றன.

கடலில் நடைபெறும் பரபரப்பான பாய்மரப் படகுப் போட்டிக் காட்சிகளுடன், மீனவ மக்களின்அன்றாட வாழ்க்கைப் போராட்டம், தனிப்பட்ட பகை, நட்பு மற்றும் காதல் ஆகியவை கதையில்ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.

சூரியின் நடிப்பு படத்தின் முக்கிய பலமாக அமைந்துள்ளது. கடலோர கிராமத்து மனிதராகஅவரது உடல்மொழியும் கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்த விதமும் கவனத்தைஈர்க்கின்றன.

கடலோர மக்களின் வாழ்வியலையும் அவர்களின் பாரம்பரியத்தையும் திரையில் பதிவுசெய்யும் வகையில் ‘மண்டாடி’ தனக்கென ஒரு இடத்தைப் பெறுகிறது.

உலகம் முழுவதும் நேற்று வெளியான இப்படம், மலேசியாவிலும் டாமான்சாரா பெவிலியன்வளாகத்தில் உள்ள திரையரங்கில் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.

மலேசியாவில் இப்படத்தின் விநியோகப் பணிகளை 3 Dot Movie நிறுவனமும், சந்தைப்படுத்தல் பணிகளை DAK Evolution Trading நிறுவனமும் மேற்கொள்கின்றனஎன்பது குறிப்பிடத்தக்கது.

கோலாலம்பூர்,செப்.11-

 சிறுவயது முதலே பேக்கரி மற்றும் கேக் தயாரிப்பில் கொண்டிருந்த ஆர்வத்தை விடாமல்தொடர்ந்து வளர்த்து, இன்று அதே துறையில் சொந்த தொழிலை உருவாக்கியுள்ளார்விக்னேஸ்வரி நாராஜா.

அவரது முயற்சியின் அடுத்த கட்டமாக ‘பென்சி அக்கடாமி’ என்ற பெயரில் பேக்கரி பயிற்சிநிலையம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. OUG Parklane பகுதியில் அமைந்துள்ள இந்தஅக்கடாமி, பேக்கரி துறையில் ஆர்வம் கொண்டவர்களுக்கு தங்களது திறமைகளைவளர்த்துக் கொள்ளும் வாய்ப்பை வழங்கும் நோக்கத்துடன் செயல்படத் தொடங்கியுள்ளது.

தனது பயணம் குறித்து விக்னேஸ்வரி நாராஜா கூறுகையில், சிறுவயது முதலே பேக்கரிதுறையில் தனக்கு அதிக ஆர்வம் இருந்ததாக தெரிவித்தார். 

அந்த ஆர்வத்தின் அடிப்படையில் ஆரம்பத்தில் சிறிய அளவில் கேக் தயாரித்து விற்பனைசெய்யும் தொழிலில் ஈடுபட்டதாகவும், பின்னர் தனது அனுபவத்தையும் திறமையையும்மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு சிலருக்கு கேக் தயாரிப்பு தொடர்பான பயிற்சிகளைவழங்கியதாகவும் கூறினார்.

கேக் விற்பனையில் தொடங்கிய தனது பயணம், தற்போது பயிற்சி வழங்கும் அக்கடாமியைதொடங்கும் அளவுக்கு வளர்ந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“சிறுவயதில் எனக்கு இருந்த விருப்பத்தை இன்று ஒரு சொந்த தொழிலாக மாற்றியுள்ளேன். ஆரம்பத்தில் சிறிய அளவில் கேக் வியாபாரத்தை மேற்கொண்டேன். அதன் பின்னர்என்னிடம் கற்றுக்கொள்ள விரும்பிய சிலருக்கு பயிற்சி வழங்கினேன். அந்த அனுபவத்தின்தொடர்ச்சியாகவே தற்போது பென்சி அக்கடாமியை ஆரம்பித்துள்ளேன்,” என விக்னேஸ்வரிதெரிவித்தார்.

அக்கடாமியின் திறப்பு விழா இன்று நடைப்பெறுகிறது. இதனை திறந்து வைக்ககோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தின் தலைவர் வி.கே.கே.ராஜாவருகையளித்திருந்தார். இந்த குறுகிய நிலையில், அதற்குள் 5 பேர் பயிற்சியில்இணைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

இது தமது முயற்சிக்கு கிடைத்துள்ள ஆரம்பகட்ட வரவேற்பாக அமைந்துள்ளதாகவும் அவர்மகிழ்ச்சி தெரிவித்தார்.

மேலும், இந்த வார சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் பென்சிஅக்கடாமிக்கு நேரடியாக வந்து, அங்கு வழங்கப்படும் பயிற்சிகள், பாடத்திட்டங்கள் மற்றும்பேக்கரி துறை தொடர்பான முழுமையான விவரங்களை அறிந்து கொள்ளலாம் என்றும்அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

அக்கடாமியின் தொடக்கத்தை முன்னிட்டு, அடுத்த ஒரு வாரத்தில் பதிவு செய்யும் புதியபயிலாளர்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேக்கரி துறையில் ஆர்வம் கொண்டவர்கள், குறிப்பாக கேக் தயாரிப்பு மற்றும் அதனைதொழிலாக முன்னெடுக்க விரும்புவோர், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பென்சிஅக்கடாமியை அணுகலாம் என விக்னேஸ்வரி நாராஜா தெரிவித்தார்.

சிறுவயது விருப்பத்தை விடாமுயற்சியுடன் வளர்த்து, சிறிய அளவிலான கேக்வியாபாரத்திலிருந்து பயிற்சி அக்கடாமி வரை தனது பயணத்தை முன்னெடுத்துள்ளவிக்னேஸ்வரி நாராஜாவின் இந்த முயற்சி, பேக்கரி துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு புதியவாய்ப்பை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.