loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

கோலாலம்பூர்,ஆக.12-

அந்நிய தொழிலாளர்களை தருவிப்பதற்கான புதிய நடைமுறைகள் தொடர்பில் மலேசியதுணை குத்தகையாளர் சங்கம் ஏற்பாடு செய்த விளக்கக்கூட்டத்தில் நாடு முழுவதிலும்இருந்து சுமார் 100 உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

வர்த்தகர்கள் அந்நிய தொழிலாளர்களை விண்ணப்பிப்பது, தேவையான ஆவணங்களைச்சமர்ப்பிப்பது மற்றும் FWCMS இணையதளம் வழியாகப் பதிவு செய்வது தொடர்பானநடைமுறைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவான விளக்கம் வழங்கப்பட்டது.

மலேசிய துணை குத்தகையாளர் சங்கத்தின் ஆலோசகர் மோகனா கூறுகையில், தொழில்துறைகளில் அந்நிய தொழிலாளர்களை தருவிப்பது தொடர்பான நடைமுறைகளைவர்த்தகர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இந்த விளக்கக்கூட்டம்ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

அவர் கூறுகையில், அனைத்து வர்த்தகர்களும் FWCMS இணையதளம் வழியாகப் பதிவுசெய்ய வேண்டும் என்றும், இன்றைய கூட்டத்தில் FWCMS துறையைச் சேர்ந்த அதிகாரிநேரடியாக கலந்து கொண்டு பதிவு மற்றும் விண்ணப்ப நடைமுறைகள் குறித்துவிளக்கமளித்ததாகவும் தெரிவித்தார்.

“உள்நாட்டவர்களுக்கு வேலைவாய்ப்பில் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதில்மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் சில தொழில் துறைகளில் உள்நாட்டவர்கள் வேலைசெய்ய முன்வருவதில்லை. இதனால் அந்தத் துறைகளின் தொழிலாளர் தேவையை பூர்த்திசெய்ய அந்நிய தொழிலாளர்களின் தேவை ஏற்படுகிறது,” என்றார்.

மேலும், தங்களது சங்கத்தின் வாயிலாக உறுப்பினர்களுக்கு பல்வேறு வர்த்தக வாய்ப்புகள்மற்றும் தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் மோகனா குறிப்பிட்டார்.

“இந்த விளக்கக்கூட்டத்தில் நாடு முழுவதிலும் இருந்து வர்த்தகர்கள் கலந்துகொண்டுள்ளனர். ஒவ்வொரு தொழில் துறைக்கும் ஏற்றவாறு விண்ணப்ப நடைமுறைகள்மாறுபடக்கூடும். அதற்கேற்ப தேவையான அந்நிய தொழிலாளர்களை பெற்றுக்கொள்ளும்வாய்ப்பும் உள்ளது. விண்ணப்பதாரர்கள் தேவையான ஆவணங்களை முறையாகச்சமர்ப்பித்தால், புதிய நடைமுறையின் மூலம் விண்ணப்ப செயல்முறையை எளிதாக முடிக்கமுடியும்,” என்றும் அவர் கூறினார்.

மலேசிய துணை குத்தகையாளர் சங்கத்தின் தலைவராக சந்திரா எல். ராம் பிரகாஷ்செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

முடிதிருத்தும் நிலைய உரிமையாளர் கண்ணன் பழனிச்சாமி கூறுகையில், அந்நியதொழிலாளர்களை தருவிப்பதற்கு அரசு வழங்கியுள்ள இந்த வாய்ப்பை வரவேற்பதாகதெரிவித்தார்.

“FWCMS இணையதளம் வழியாக எவ்வாறு பதிவு செய்வது என்பது குறித்து பலர்கேள்விகளை எழுப்பி வந்தனர். இந்த விளக்கக்கூட்டம் அதற்கான தெளிவான பதிலைவழங்கியுள்ளது. குறிப்பாக இணையப் பதிவு செய்வது தொடர்பான விரிவான விளக்கம்எங்களுக்கு இந்தக் கூட்டத்தின் மூலம் கிடைத்துள்ளது,” என்றார்.

பாதுகாவலர் துறையைச் சேர்ந்த இராஷினி கூறுகையில், இந்தக் கூட்டத்தின் மூலம் பலபுதிய தகவல்களை அறிந்துகொள்ள முடிந்ததாக தெரிவித்தார்.

“இதற்கு முன்னர் முறையான விண்ணப்ப நடைமுறை இல்லாததால் பல்வேறுபிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளபுதிய முறை எளிதாகவும் தெளிவாகவும் உள்ளது. இதன் மூலம் அன்னிய தொழிலாளர்களைவிண்ணப்பிப்பதில் உள்ள சிரமங்கள் குறையும் என எதிர்பார்க்கிறோம்,” என்றார்.

அந்நிய தொழிலாளர்களை தருவிப்பது தொடர்பான நடைமுறைகளை எளிதாக்குவதுடன், தொழில் துறைகளின் உண்மையான தொழிலாளர் தேவையை கருத்தில் கொண்டுவிண்ணப்பங்களைச் செய்வதற்கும் இந்த விளக்கக்கூட்டம் வர்த்தகர்களுக்கு பயனுள்ளதாகஅமைந்தது.

கோலாலம்பூர்,ஆக.11- 

சமூகத்தில் குறிப்பாக இளம் தலைமுறையினர் எதிர்கொள்ளும்முக்கியமான பிரச்சினையை முன்னிறுத்தி உருவாக்கப்பட்டுள்ள ‘இரும்புத் தோட்டம்’ திரைப்படத்தை பெற்றோர்களும் பிள்ளைகளும் திரையரங்குகளுக்குச் சென்று பார்க்கவேண்டும் என படக்குழுவினர் வலியுறுத்தினர்.

ஜெய்டேவ் ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம், 15 வயது சிறுமிக்குநேர்ந்த கொடூரச் சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கதைவெறும் திரைப்படக் கற்பனை அல்ல என்றும், தனது தோழிக்கு நேர்ந்த உண்மைச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஜெய்டேவ்ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

சமூகத்தில் பல்வேறு வடிவங்களில் இடம்பெறும் சிறுவர் மற்றும் இளையோர்எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அவர்களின் மனநிலை, குடும்பத்தினருடன் அவர்கள்எதிர்கொள்ளும் தொடர்பு சிக்கல்கள் உள்ளிட்டவற்றை ‘இரும்புத் தோட்டம்’ திரைப்படம்பேசுகிறது.

இத்திரைப்படம் குறித்து பலரும் நல்ல கருத்துகளைத் தெரிவித்து வருவதாகக் கூறியதயாரிப்பாளர் ஜெகன் ஜோன் பீட்டர், எவிஎல்டி புரொடக்ஷன் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளஇப்படத்திற்கு திரையரங்குகளில் எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் வருகை இல்லை எனவருத்தம் தெரிவித்தார்.

“படத்தை பார்த்தவர்கள் திரைப்படம் நன்றாக இருப்பதாகக் கூறுகின்றனர். ஆனால், திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

இந்தப் படம் நமது சமுதாயத்தில் உண்மையாகவே நடைபெறும் ஒரு முக்கியமானபிரச்சினையை முன்னிறுத்தி எடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்களும் பிள்ளைகளும்முன்வந்து இப்படத்தைப் பார்க்க வேண்டும்.

ஒரு திரைப்படத்தை பொழுதுபோக்காக மட்டுமே பார்க்காமல், அதில் சொல்லப்படும் சமூகச்செய்தியையும் புரிந்துகொள்ள வேண்டும்,” என அவர் கேட்டுக்கொண்டார்.

இதனிடையே, ஸ்ரீ முருகன் நிலையத்தின் இயக்குநர் சுரேன் கந்தா, இத்திரைப்படம்சமூகத்திற்கு தேவையான ஒரு முக்கியமான செய்தியை முன்வைப்பதாகக் குறிப்பிட்டார்.

சமூகத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் நடைபெற்று வரும் நிலையில், அவற்றைவெளிச்சத்திற்குக் கொண்டு வந்து திரைப்படமாக உருவாக்கிய படக்குழுவினருக்கு அவர்நன்றி தெரிவித்தார்.

“மனரீதியாக பாதிக்கப்படும் சில பிள்ளைகளால் தங்களுடைய பிரச்சினைகளை அப்பா, அம்மாவிடம் வெளிப்படையாகப் பேச முடியாமல் போகலாம். அந்த நிலையில் அவர்கள்தனிமைப்படுத்தப்படும்போது, நிலைமை மேலும் மோசமடையக்கூடும்.

எனவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் நெருக்கமாகப் பேச வேண்டும். பிள்ளைகள்எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு, அவர்களுக்கு ஆதரவாக இருப்பதுமிகவும் முக்கியம்,” என்றார்.

மேலும், இளைஞர்களின் மனநலம் மற்றும் குடும்ப உறவுகள் தொடர்பான பிரச்சினைகளைப்பற்றி சமூகத்தில் திறந்த உரையாடல் அவசியம் என சுரேன் கந்தா வலியுறுத்தினார்.

இளம் வயதினர் எதிர்கொள்ளும் மன அழுத்தம், பயம், தனிமை மற்றும் குடும்பத்தினரிடம்பிரச்சினைகளைப் பகிர முடியாத நிலை போன்றவை கவனிக்கப்பட வேண்டிய முக்கியஅம்சங்களாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இளைஞர்கள் எதிர்கொள்ளும் கடுமையான மனநிலைப் பிரச்சினைகளால் பல துயரமானசம்பவங்கள் ஏற்படுகின்றன. அவற்றைத் தடுப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும்வகையில் இந்தத் திரைப்படம் அமைந்துள்ளது.

எனவே, பெற்றோர்கள் அனைவரும் இந்தப் படத்தை திரையரங்கில் சென்று பார்க்கவேண்டும். குறிப்பாக, பிள்ளைகளின் மனநிலையைப் புரிந்துகொள்வதற்கும், அவர்களுடன்எவ்வாறு பேச வேண்டும் என்பதை சிந்திப்பதற்கும் இந்தப் படம் ஒரு வாய்ப்பாக அமையும்,” என அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய சுரேன் கந்தா, சமூகத்தில் நிலவும் பிரச்சினைகளை மையமாகக் கொண்டுதரமான உள்ளூர் திரைப்படங்களை உருவாக்கும் படைப்பாளிகளுக்கு மக்கள் ஆதரவு வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

“இதுபோன்ற நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து திரைப்படங்களை உருவாக்கும்குழுவினர்களுக்கு நாம் ஆதரவு வழங்கினால்தான், எதிர்காலத்திலும் தரமான உள்நாட்டுதிரைப்படங்கள் தொடர்ந்து உருவாகும்.

சமூகத்திற்கு ஒரு செய்தியைச் சொல்லும் திரைப்படங்களுக்கு மக்கள்திரையரங்குகளுக்குச் சென்று ஆதரவு வழங்குவது அவசியம். குறிப்பாக, இளம்தலைமுறையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பேசும் படைப்புகளுக்கு நமது ஆதரவுஇருக்க வேண்டும்,” என்றார்.

‘இரும்புத் தோட்டம்’ திரைப்படம், பொழுதுபோக்கைத் தாண்டி சமூகத்தில் நிலவும் ஒருமுக்கியமான பிரச்சினையைப் பற்றி சிந்திக்க வைக்கும் படைப்பாக அமைந்துள்ளதாகபடக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பெற்றோர் – பிள்ளைகள் இடையிலான உரையாடல், இளம் தலைமுறையினரின் மனநிலைமற்றும் சமூகப் பொறுப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்ட இப்படத்திற்கு மக்கள்திரையரங்குகளுக்குச் சென்று ஆதரவு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

கண்ணதாசன் அறவாரியத்தின் ஏற்பாட்டில் நூற்றாண்டு விழாவின் பயணத்தில், பினாங்குமாநிலத்தைத் தொடர்ந்து தற்போது பேராக் மாநிலத்தில் ஈப்போ மாநகரத்தில்கண்ணதாசன் விழா கோலாகலமாக கொண்டாடப்படவிருக்கிறது.

எதிர்வரும் ஆகஸ்ட்டு 15ஆம் தேதி சனிக்கிழமை மதியம் ஒன்றரை தொடங்கி மாலை 5 மணி வரை தமிழ்நாட்டின் மிகச் சிறந்த பேச்சாளர்கள் ஐயா தா.இராமலிங்கம் அவர்களும், மரபின் மைந்தன் முத்தையா அவர்களும், தாமல் கோ.சரவணன் அவர்களும் வெவ்வேறுதலைப்புகளில் மிகச் சிறந்த இலக்கிய உரையை ஆற்றவிருக்கிறார்கள். மாண்புமிகு டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன்  அவர்களின் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்ச்சியில்,   பேராக் மாநிலத்தைச் சேர்ந்த ஐவருக்கு கண்ணதாசன் அறவாரியத்தின் சார்பில் விருதும்வழங்கப்பட விருக்கிறது. 

கண்ணதாசனின் கருத்தாழமிக்கப் பாடல்களோடு தொடங்கும்இந்நிகழ்ச்சி சிறந்த இலக்கிய விருந்தாக அமையும். நூறு ஆண்டுகள் மக்களின் மனதில்நீங்கா இடம் பெற்று, இன்றும் உலகம் எங்கும் கண்ணதாசனின் நூற்றாண்டு விழா சிறப்பாகஅரங்கேறிக் கொண்டிருக்கிறது. 'காவியத்தாயின் இளைய மகன்' கவியரசு கண்ணதாசன்அவர்களைக் கொண்டாடவும், தமிழைப் போற்றவும், இலக்கியச்சுவையில் நனையவும்திரண்டு வாருங்கள். நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் தேநீர் விருந்துவழங்கப்படும். 


ஜோகூர் பாரு, ஆக. 7 – 
ஜோகூர் மாநிலத்தின் முன்னேற்றம் அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடனும் இணக்கத்துடனும் செயல்படுவதன் மூலமே சாத்தியமாகும் என ஜோகூர் மந்திரி புசார் டத்தோ ஒன் ஹபிஸ் காசி வலியுறுத்தினார்.

'பங்சா ஜோகூர்' (Bangsa Johor) என்ற ஒற்றுமைக் கொள்கையின் அடிப்படையில், 2030ஆம் ஆண்டுக்குள் ஜோகூரை முன்னேறிய மாநிலமாக மாற்றும் இலக்கு சரியான பாதையில் முன்னேறி வருவதாக அவர் தெரிவித்தார்.

பொருளாதார வளர்ச்சி, உயர்ந்த வருமானம் தரும் வேலைவாய்ப்புகள் மற்றும் அனைத்து மக்களுக்கும் பயன் அளிக்கும் முழுமையான வளர்ச்சி ஆகியவை இதற்கு அடித்தளமாக இருக்கும் என்றும் கூறினார்.

ஜோகூர் மாநில இளைஞர்கள் வேறு மாநிலங்களுக்கோ வெளிநாடுகளுக்கோ வேலைக்காகச் செல்ல வேண்டிய அவசியமின்றி, தங்கள் சொந்த மாநிலத்திலேயே உயர்ந்த வருமானம் தரும் வேலைவாய்ப்புகளைப் பெற வேண்டும் என்பதில் மாநில அரசு உறுதியாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்காக தரமான கல்வி, மனிதவள மேம்பாடு மற்றும் பொருளாதார வாய்ப்புகளை விரிவுபடுத்தும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இன்று ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், அப்பள்ளி தொடங்கப்பட்டதிலிருந்து ஜோகூர் மாநில மந்திரி புசார் ஒருவர் அதிகாரப்பூர்வமாக வருகை தந்தது இதுவே முதல் முறை என்பது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும் என்றார்.

அனைத்து வகைப் பள்ளிகளின் கல்வி வளர்ச்சியிலும் மாநில அரசு சமமான அக்கறை செலுத்துவதை இந்த வருகை வெளிப்படுத்துவதாகவும் கூறினார்.

தமது உரையில், அப்பள்ளியின் முன்னாள் மாணவர்களில் ஒருவர் ஏர்ஏசியா விமானியாகவும், மற்றொருவர் 'ஓராங் மூடா ஜோகூர்' கல்வி உதவித்தொகை பெற்று இங்கிலாந்தின் இம்பீரியல் கல்லூரியில் உயர்கல்வி பயிலும் மாணவராகவும் சாதனை படைத்திருப்பதை சுட்டிக்காட்டினார். 

வாய்ப்பும் விடாமுயற்சியும் இருந்தால் ஜோகூர் மாணவர்கள் உலக அரங்கில் சாதிக்க முடியும் என்பதற்கு அவர்கள் எடுத்துக்காட்டாக உள்ளனர் என்றார்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாணவர்களுடன் நேரடி கலந்துரையாடல் மற்றும் கேள்வி–பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாணவர்கள் தலைவர்களை நேரில் சந்தித்து உரையாடும் வாய்ப்பைப் பெறுவது அவர்களின் கல்வி ஆர்வத்தையும் உயர்ந்த இலக்குகளை நோக்கிச் செல்லும் மனப்பாங்கையும் அதிகரிக்கும் என மந்திரி புசார் தெரிவித்தார்.

முன்னதாக துன் அமினா தமிழ்ப்பள்ளிக்கு மேற்கொண்ட வருகையின்போது வழங்கிய வாக்குறுதியின்படி அப்பள்ளியின் பயன்பாட்டு கட்டணப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதை நினைவுகூர்ந்த அவர், மாநில அரசு அளிக்கும் ஒவ்வொரு வாக்குறுதியும் தொடர்ந்து நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்.

இந்தச் சந்திப்பின் போது, ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளியின் வசதிகளை மேம்படுத்த வெ.200,000 சிறப்பு நிதியை ஜோகூர் மாநில அரசு ஒதுக்கியுள்ளதாக அவர் அறிவித்தார்.

பள்ளி நிர்வாகம் வெ.107,000 மட்டுமே கோரியிருந்தபோதிலும், பள்ளியின் நிலையை நேரில் பார்வையிட்டபின் கூடுதல் தேவைகள் இருப்பதை கருத்தில் கொண்டு ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டதாக அவர் விளக்கினார்.

இந்த நிதியின் மூலம் பள்ளி மண்டபம், கூரையுடன் கூடிய நடைபாதை, குளிர்சாதன வசதி, துருப்பிடித்த படிக்கட்டுகள், மின்சார சுவிட்ச் அமைப்பு, தண்ணீர் பம்பு, வேலி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளன.

பள்ளி நிர்வாகமும் பெற்றோர்–ஆசிரியர் சங்கமும் இந்த நிதியை முழுமையாகப் பயன்படுத்தி மாணவர்களுக்கு பாதுகாப்பான, வசதியான மற்றும் சிறந்த கல்விச் சூழலை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இறுதியாக, மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதோடு ஆசிரியர்களின் அர்ப்பணிப்பை மதித்து, எதிர்காலத்தில் வெற்றி பெற்ற பின்னர் ஜோகூர் மாநிலத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

இந்நிகழ்ச்சியில் கெமெலா சட்டமன்ற உறுப்பினரும் ஜோகூர் மாநில மஇகா தலைவருமான கே. ரேவன் குமார், காஹாங் சட்டமன்ற உறுப்பினரும் ஜோகூர் மாநில கல்வி மற்றும் தகவல் தொடர்புத் துறை துணை ஆட்சிக்குழுத் தலைவருமான வி. ருகிந்திரன், ஜோகூர் மாநில கல்வித் துறை அதிகாரி ரவீந்திரன், துணை கல்வி இயக்குநர் ஹாஜி கமால், பள்ளி நிர்வாக சபைத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ். கிருஷ்ணன், தலைமையாசிரியர் ப.குணாளன், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

பாசிர் கூடாங், ஆக. 5 – 
ஜொகூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாசிர் கூடாங் மருத்துவமனை நவீன மருத்துவ வசதிகள், அதிக நோயாளிகளை கையாளும் கொள்ளளவு மற்றும் பல்வேறு சிறப்பு மருத்துவப் பிரிவுகளுடன் உருவாக்கப்பட்டிருந்தாலும், கடுமையான பணியாளர் பற்றாக்குறை காரணமாக இன்னும் முழுத் திறனில் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ஜொகூர் மந்திரி புசார் டத்தோ ஓன் ஹபிஸ் காசி தெரிவித்ததாவது, மருத்துவமனைக்கு மொத்தமாக 2,271 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 1,079 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. இதனால், மேலும் 1,192 பணியிடங்கள் இன்னும் காலியாக உள்ளன என்றார்.

குறிப்பாக மருத்துவ நிபுணர்கள், தாதியர்கள் மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்களுக்கான பணியிடங்களே அதிகளவில் நிரப்பப்படாமல் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜொகூர் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த மருத்துவமனை, முழுமையாகப் பயன்பாட்டுக்கு வர வேண்டுமெனில் மனிதவளப் பற்றாக்குறையை உடனடியாக சரிசெய்வது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

நவீன உபகரணங்கள் மற்றும் உயர்தர மருத்துவ வசதிகள் இருந்தபோதிலும், போதிய பணியாளர்கள் இல்லாததால் மருத்துவமனை தனது முழு சேவைத் திறனை வெளிப்படுத்த முடியாமல் இருப்பதாகவும், இந்த நிலை நோயாளிகளுக்கான சேவையையும் பாதிக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

எனவே, காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்புவதற்கு சுகாதார அமைச்சு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அப்போதுதான் பாசிர் கூடாங் மருத்துவமனை அதன் முழுத் திறனுடன் மக்களுக்கு சேவையாற்ற முடியும் என்றும் ஓன் ஹபிஸ் வலியுறுத்தினார்.