loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

கோலாலம்பூர், மார்ச் 3-
பிபிபி கட்சிக்கு 8 நாடாளுமன்ற தொகுதிகள் கிடைக்கும் வரை நான் கட்சியின் தலைவர் என நான் கூறிக் கொள்ளமாட்டேன். கட்சியின் சேவகராரகதான் இதுப்பேன். இந்த நிலை கண்டிப்பாக மாறும் என்று அவர் சூளுரைத்தார்.

இதுவரை கட்சி சுமுகமாக செயல்பட்டு வருகிறது. ஆனால் எங்களின் கொள்கை நிறைவேறும் வரை நாங்கள் அனைவரும் உழைப்போம் என அவர் சொன்னார்.

8 தொகுதிகளை வென்றோம் என்றால் எங்களின் முழு சேவையை மக்களுக்கு வழங்குவோம். என்களின் எதிர்ப்பார்ப்பு ஒரு நாள் நடக்கும் என்று அவர் உறுதியுடன் கூறினார்.

அவரின் 60ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் இன்று பத்து கேவ்ஸ் செங்கா மண்டபத்தில் விமரிசையாக நடைப்பெற்றது.

நிகழ்ச்சியின்போது அவருக்கான AI வடிவத்தில் பாடல் ஒளிப்பரப்பட்டது. சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் சுரேந்திரன் தன் தலைவருக்காக இந்த முயற்சியை ஏடுத்திருந்தார்.

இந்த பாடல் காட்சி வந்திருந்தவர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டது. அதன் பின்னர் டத்தோ லோகா பாலவிற்கு சிலாங்கூர் பிபிபியினர் பெரிய அளவிலான மாலையை அணிவித்தனர்.

மாலை அணிவிக்கு பிறகு டத்தோ லோகா பாலா பேசுவையில், இந்த கொண்டாட்டத்தையும் மாலையையும் ஏற்பதற்கான காலம் இது கிடையாது. பிபிபி கட்சிக்கு 8 நாடாளுமன்ற தொகுதிகள் கிடைத்த பின்னர் நான் இந்த சிறப்பை ஏற்றுக் கொள்கிறேன் என அவர் சொன்னார்.


கோலாலம்பூர், ஏப்.3- 
செலாயாங்  பகுதியில் பதிவு செய்யப்படாத குழந்தைகள் இல்லத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பாலியல் வன்கொடுமை சம்பவத்தைத் தொடர்ந்து, நாட்டிலுள்ள ஆதரவற்ற மற்றும் முதியோர் இல்லங்களில் உடனடியாக திடீர் சோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்று பிபிபி கட்சியின் தலைவர் டத்தோ டாக்டர் லோகபால மோகன் வலியுறுத்தியுள்ளார்.
சுமார் 10 ஆண்டுகளாக ஒரு ஆதரவற்ற இல்லம் சட்டவிரோதமாக இயங்கிக் கொண்டு இருப்பது என்பது  ஆச்சரியத்தையும் கவலையும்  ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது உரிய அதிகாரிகள் வழங்கும் உரிமம் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் குறைபாடு உள்ளதா என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

மேலும், இதுபோன்று பதிவு செய்யப்படாத ஆதரவற்ற இல்லங்கள் உள்ளனவா, இல்லங்களிலும், அதில் குழந்தைகள் அபாயத்தில் உள்ளார்களா என்ற அச்சமும் இந்த சம்பவம் எழுப்புகிறது.

ஒன்பது வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் நீண்டகாலமாக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி இருப்பது மிகவும் வேதனைக்குரியது என்றும், இத்தகைய சம்பவங்கள் இனி எக்காரணம் கொண்டும் நிகழக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தை விரைவாக வெளிக்கொண்டு வந்து, குழந்தைகள் மற்றும் இளைஞர்களை காப்பாற்றிய போலீசாரின் உடனடி நடவடிக்கைக்கு அவர் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

அனைத்து குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லங்களும் முறையாக பதிவு செய்யப்பட்டு, உரிமம் பெறப்பட்டு, வழக்கமான கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவதை உறுதி செய்ய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தவறுகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்டவிரோதமாக இயங்கும் அனைத்து இல்லங்களும் உடனடியாக மூடப்பட வேண்டும் என்றும், அதற்கு பொறுப்பானவர்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், பொதுமக்கள் அதிகாரிகளின் “கண்கள் மற்றும் காதுகள்” ஆக இருந்து, இத்தகைய துஷ்பிரயோகங்களை பற்றி தகவல் அளிக்க வேண்டும் என்றும், பலவீனமானவர்களை பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


கோலாலம்பூர், மார்ச் 31-
இவ்வாண்டு எஸ்பிஎம் தேர்வு முடிவுகளை பெற்ற மாணவர்களுக்காக மஇகா இளைஞர் பிரிவு உயர்க்கல்வி குறித்த வழிக்காட்டி கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது.

கடந்த ஆண்டில் 4 லட்சம் மாணவர்கள் எஸ்பிஎம் தேர்வை எழுதியுள்ளனர். இவ்வாண்டு அதன் முடிவுகள் வெளிடப்பட்ட வேளையில் 14 ஆயிரம் மாணவர் அனைத்து பாடங்களிலும் ஏ-க்கள் பெற்றுள்ளனர்.

ஆகையால் அவர்களின் மேற்கல்வி குறித்த விளக்கத்தை மாணவர்களுக்கு வழங்கவே உயர்க்ல்வி இலட்சியப் பயணம் எனும் வழிக்காட்டி கருத்தரங்கை மஇகா இளைஞர் பிரிவு நாடு முழுவதிலும் நடத்தவுள்ளதாக தேசிய ரீதியிலான ஏற்பாட்டுக் குழுத் தலைவர் எல்.சத்திஸ்குமார் தெரிவித்தார்.

கடந்த ஆண்டுகளிலும் இந்த உயர்க்கல்வி மாணவர்களுக்கான வழிக்காட்டி கருத்தரங்கு நடத்தப்பட்டது. கடந்த ஆண்டில் மட்டும் நாடு தழுவிய அளவில் 1,500 மாணவர்கள் இதில் கலந்து கொண்டதாகவும் அவர் சொன்னார்.

நாளை ஏப்ரல் 1ஆம் தேதி மலாக்காவிலும் ஏப்ரல் 4ஆம் தேதி பகாங்கிலும் ஏப்ரல் 5ஆம் தேதி கெடா, பேரா, சிலாங்கூர், கூட்டரசு பிரதேசம், நெகிரி, ஜொகூர் ஆகிய மாநிலங்களிலும் இந்த வழிக்காட்டி கருத்தரங்கு நடைப்பெறவுள்ளது.

எஸ்பிஎம் முடித்த மாணவர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும், எந்த துறையை தேர்ந்தெடுத்தால் சிறப்பாக இருக்கும் என பல விளக்கங்கள் இந்த கருத்தரங்கில் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளன.

மேலும் மாணவர்களுக்கு நேருக்கு நேர் (1 to 1) விளக்கமும் அளிக்கப்படும் என அவர் மேலும் சொன்னார்.

உயர்க்கல்வி பற்றிய விளக்கத்தை போலிடெக்னிக், உயர்க்கல்வி அமைச்சு, போன்றவையை சேர்ந்த அதிகாரிகளால் வழங்கப்படும்.

ஆகையால் இந்த வழிக்காட்டி கருத்தரங்கு தொடர்பில் விவரங்களை பெற 019-4860087 என்ற எண்ணுடன் சத்திஸ்குமாரை தொடர்புக் கொள்ளலாம்.


கோலாலம்பூர், மார்ச் 31-
மது போதையில் வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட சாலை விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றைத் தடுக்கும் வகையில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் அவசியம் என மஇகா பிரிகேட் வலியுறுத்தியுள்ளது.

சமீபத்தில், பள்ளிக்கான புத்தகங்களை வாங்கி வீடு திரும்பிக் கொண்டிருந்த அமிருல் ஹபிஸ் ஒமர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவரது மறைவால் மனைவியும் மூன்று பிள்ளைகளும் தந்தையை இழந்துள்ள நிலையில், “இதற்குப் பொறுப்பேற்க வேண்டியது யார்?” என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தச் சம்பவம் போன்றவை அலட்சியம் மற்றும் பொறுப்பின்மை காரணமாக நிகழும் துயரமான நிகழ்வுகளாகும். மது போதையில் வாகனம் ஓட்டும் பழக்கம் நாட்டில் அதிகரித்து வருவது மிகுந்த கவலைக்குரியது என மஇகா பிரிகேட் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, மஇகா பிரிகேட் தேசியத் தலைவர் ஆண்ட்ரூ டேவிட், அரசாங்கம், குறிப்பாக போக்குவரத்து அமைச்சும், காவல்துறையும் சாலைப் போக்குவரத்து துறையும் மது போதையில் வாகனம் ஓட்டும் குற்றச்சாட்டுகளுக்கான சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும், தடுப்புச் செயல்திறன் கொண்ட கடுமையான தண்டனைகள், கட்டாய சிறைத் தண்டனை மற்றும் அதிகபட்ச அபராதங்கள் விதிக்கப்பட வேண்டும் என்றும்  அவர் கூறினார்.

அதேபோல், “போர்ட் பானாஸ்” என வகைப்படுத்தப்பட்ட பகுதிகளில் முறையான சோதனைச்சாவடிகள் அமைத்து, தீவிரமான மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னர், தேசிய கயாக் வீராங்கனை சிதி நுருல் மசியிதா மது போதையில் இருந்த ஓட்டுநரால் மோதி கடுமையாக காயமடைந்த சம்பவமும் நினைவுகூரப்பட்டது. இத்தகைய சம்பவங்கள் உயிரிழப்புகளையே அல்லாமல், பாதிக்கப்பட்டவர்களின் எதிர்காலத்தையும் அழித்து விடுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், மீண்டும் மீண்டும் குற்றம் புரியும் ஓட்டுநர்களுக்கு நீண்டகாலம் அல்லது வாழ்நாள் முழுவதும் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வது போன்ற கூடுதல் நடவடிக்கைகளையும் அரசு பரிசீலிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

“#GenANTIjenayah” என்ற இயக்கத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகளை மஇகா பிரிகேட் விரிவுபடுத்தப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கூலிம்: தமிழ் செய்தி இணையதளமான தினத்தந்தியை சார்ந்த செய்தியாளர் காளிதாஸ் சுப்பிரமணியம், அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இன்று கூலிம் மாவட்ட காவல் தலைமையகத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த கைது தொடர்பாக, அந்த இணையதளத்தின் இயக்குநர் பவளசெல்வன் மாரிமுத்து உறுதிப்படுத்தினார். இன்று பிற்பகல் சுமார் 3 மணியளவில் இதுகுறித்த தகவல் தமக்கு கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

பவளசெல்வன் கூறுகையில், கடந்த மார்ச் 26ஆம் தேதி காளிதாஸ் மற்ற ஊடகவியலாளர்களுடனுன் சில அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் சேர்ந்து கூலிம் ஹைடெக் பார்க் (KHTP) பகுதிக்கு சென்றிருந்தார்.

அங்கு 300க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேறிகள் பணியாற்றுவதாக வந்த குற்றச்சாட்டை குறித்து செய்தி சேகரிக்கவே அவர்கள் சென்றதாக பவளசெல்வன் விளக்கினார்.

நாங்கள் தகவல் துறையில் பதிவு செய்யப்பட்டவர்கள்; அதிகாரப்பூர்வ ஊடக அட்டை எங்களிடம் உள்ளது. இப்படியான கைது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது என அவர் கூறினார்.

மேலும், இதற்கு முன்பே காளிதாஸை  கூலிம் போலீசார் விசாரணைக்காக வருமாறு அழைத்திருந்தனர்.

இதற்கு முன்னர் அவரை போலீசார் அழைத்து விசாரணைக்கு வரச் சொன்னார்கள். அது அத்துமீறல் குற்றச்சாட்டுடன் தொடர்புடையது என தெரிவித்தனர்.

ஆனால் இன்று அவர் காவல் நிலையத்துக்கு சென்றபோது மேலதிக விசாரணைக்காக கைது செய்ததாக கூறப்பட்டது என பவளசெல்வன் மேலும் கூறினார்.

இதே குற்றச்சாட்டில் மேலும் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

*உடனடி விடுதலை கோரிக்கை*

இதற்கிடையில், மலேசியத் தமிழ்ப்பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் எஸ். முத்தமிழ் மன்னன், இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் அதிருப்தி வெளியிட்டார்.

ஒரு செய்தியாளர் தனது கடமையை செய்ததற்காக கைது செய்யப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது. அவரிடம் அதிகாரப்பூர்வ ஊடக அட்டை உள்ளது. அவரை கைது செய்யாமல் வாக்குமூலம் பதிவு செய்திருந்தாலே போதுமானது என அவர் தெரிவித்தார்.

மேலும், காளிதாஸை உடனடியாக எந்த தாமதமும் இன்றி விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த விவகாரம் தொடர்பாக தொடர்புடைய அமைச்சர் ஃபாமி பட்சில் அவர்களிடம் எடுத்துச் செல்லப்படும் என்றும் அவர் கூறினார்.

இதுகுறித்து உள்துறை அமைச்சகத்திடமும் (KDN) கருத்து கோரப்பட்டுள்ளது.