கோலாலம்பூர், மார்ச் 16-
நம் நாட்டில் பல ஆண்டுகளாக மேடை நாடகம் போடப் படவில்லை. அந்த குறையை தீர்க்கும் வண்ணமாக, மேடைக்கு மேடை அரசியல் நாடகத்தை நடத்தி நடிகர் திலக்கத்தை மிஞ்சும் அளவிற்கு கை வண்ணத்தை காட்டி வருகின்றனர் அரசியல்வாதிகள்.
குறிப்பாக அரசாங்கத்தில் இருக்கும் ஜால்ரா அரசியல்வாதிகளுக்கு ஆஸ்கர் விருது வழங்கலாம்.
நாட்டில் பிரச்சினை செய்யும் 4 நபர்கள் இவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று எத்தனை போலீஸ் புகார் செய்து மக்கள் நாட்டு சட்டத்தை மதித்து இந்த அரசாங்கத்திற்கு தெரிய படுத்தினார்கள். அப்போது கண் இருந்தும் குருடராகவும் காது இருந்தும் செவுடராகவும் வாய் இருந்தும் உமையாகவும் அரசாங்க நாற்காலியை அலங்கரித்த இந்திய அரசியல் தலைவர்கள் இப்போதுதான் அருவை சிகிச்சை முடித்தார்கள் போல.. நமக்கே ஆச்சரியம் வரும் அளவில் இரண்டு தினங்களாக பல அறிக்கை. இவர்களுக்கு பேச வருமா? காது கேட்க தொடங்கி விட்டதா? இந்தியர்கள் பக்கம் பார்வை தெரிகிறதா என்று பார்த்தால்...
பூனை புலியான கதைக்கு விடை கிடைத்தது. நாட்டில் சர்ச்சை ஏற்படுத்திய இருவர் நாட்டில் இல்லை. உடனே பூனை புலியாக மாரி மியாவ் மியாவ் என்று கத்தி வருகிறது.
இந்த பூனைகள் தான் இந்திய சமுதாயத்தை அமைதியாக இருக்க சொன்ன பூனைகள். இப்போது திடீர் என புலியாக மாரி மீண்டும் அதே பூனை சத்தத்தை கொடுத்து தங்களை புலி போல் காட்ட முயற்சி செய்து வருகிறார்கள்.
இந்த இரு சர்ச்சை குறிய நபர் இந்த நாட்டில் இருந்து செய்த நடவடிக்கை பார்த்து கண்டு காணாமல் இருந்த இந்த பூனைகள், நமக்கு எதுக்கு பா வம்பு நாம் பெரும்பான்மையான சமுதாயத்தை பகைத்து கொள்ள வேண்டாம் என்று வாயை பொத்திக்கொண்டிருந்த கூட்டம்.
இரு தனி நபரை அமைச்சரவையில் பேசி நடவடிக்கை எடுக்கத் தெரியாத கையாளகாத கூட்டம் .
அந்த இருவர் இல்லாத போது, ஒரு அமைச்சர் விசாரணைக்கு ஒத்துழைக்கவும் என கூச்சல் போடுவது என்ன.. இன்னொரு துணை அமைச்சர் அவர் பதவி எடுத்ததில் இருந்து அவரை இப்போது தான் பார்க்கிறோம்.
போலீஸ் படை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது விரைந்து கைது செய்வார்கள் என்று இவர் ஒரு பக்கம் கூச்சல்.
திருசுழத்தை மிதித்து இந்த நாட்டில் தான் அந்த நபர் இருந்தார். நீங்கள் எல்லாம் வாயை திறக்கவே இல்லையே.. இப்போது எப்படி உங்களுக்கு பேச்சு வந்தது என்ற ஆச்சரியத்தில் மக்கள் உள்ளனர்.
மக்களே இந்த ஆட்சி எப்படி உள்ளது என்றால் முதல்வன் படத்தில் வரும் அரங்கநாதன் அரசியல் ஆட்சி தான் இவர்கள் ஆட்சியும்.
இவர்கள் 4 நாற்காலி கால்களை நம்பி ஆட்சி நடத்துகிறார்கள். அதில் ஒரு கால் உடைந்தாலும் ஆட்சி கவிழ்ந்து விடும்... ஆகையால் இவர்கள் வேடிக்கை மட்டும் தான் பார்பார்கள்.
அவர்களே அடித்து கொண்டு ஆவர்களே சமாதானம் ஆகட்டும்.. நாம் அமைதியாக வேடிக்கை பார்ப்போம் என்பதே இவர்களின் நிலை கடமைக்கு சில கண்துடைப்பு நடக்கும் அவ்வளவு தான்.
இவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று இன்னுமா சமுதாயம் நம்புகிறது... ?
பூனை புலியாகி விட்டது என்று ஆச்சரியம் வேண்டாம் மக்களே இன்னொரு நாடகம் அரங்கேற்றம் செய்யப்படுகிறது அரசியல் நடிகர் திலகங்கள் நடிப்பு போட்டியில் கலம் இறங்கியுள்ளனர்..
வேடிக்கை மட்டும் பாருங்கள், இந்த பூனை சத்ததில் கடுகு அளவு கூட பிரோஜனம் இல்லை..
-வெற்றி விக்டர்
0 Comments