loader
மாஸ்டர் படப்பிடிப்பு ரத்து! விஜயை அழைத்துச் சென்ற வருமான வரித்துறையினர்!

மாஸ்டர் படப்பிடிப்பு ரத்து! விஜயை அழைத்துச் சென்ற வருமான வரித்துறையினர்!

 

நடிகர் விஜய் நடித்து கடந்த ஆண்டு தீபாவளியன்று வெளியான திரைப்படம் பிகில். இதனை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த நிலையில் இன்று (பிப்ரவரி 5) ஏஜிஎஸ் குழும உரிமையாளர் கல்பாத்தி அகோரத்தின் வீடு உள்ளிட்ட 20 இடங்களில் வருமானவரி புலனாய்வுத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நெய்வேலி நிலக்கரி சுரங்கம் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னையிலிருந்து படப்பிடிப்பு நடந்த பகுதிக்கு இன்று காலை சென்ற வருமான வரித் துறை அதிகாரிகள் விஜய்யை விசாரிக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். ஆனால், நீங்கள் யாரென்று தெரியவில்லை எனக் கூறி படப்பிடிப்பு தளத்தில் இருந்த பாதுகாவலர்கள் அவர்களை உள்ளே விட மறுத்துள்ளனர்.

இதனையடுத்து, ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெறும் வருமான வரித் துறை சோதனை தொடர்பாக விஜய்யை விசாரிக்க வேண்டுமென சம்மன் தயாரித்த அதிகாரிகள், அதனை படப்பிடிப்பு தளத்தில் இருப்பவர்களிடம் வழங்கினர். இதன்பிறகு விஜய்யை சந்திக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதுவரை தனது கேரவனிலேயே விஜய் இருந்திருக்கிறார்.

விஜய்யுடன் சிறிது நேரம் உரையாடிய அதிகாரிகள், விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, விஜய்யை அவரது காரிலேயே விசாரணைக்கான அழைத்துச் சென்றனர். கார் விருத்தாச்சலம் நோக்கிச் சென்றதாக அங்கிருந்தவர்கள் கூறினர். விஜய்யை சென்னை அழைத்துச் சென்று விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஜய்யை விசாரணைக்கான அழைத்துச் சென்ற நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது!

0 Comments

leave a reply

Recent News