கோலாலம்பூர்,பிப்.26-
தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் அங்கத்தினர்களுக்கான வட்டார பொதுக்கூட்டம் மாநில வாரியாக நடைபெறவுள்ளதாக சங்கத்தின் செயலாளர் டத்தோ பா. சகாதேவன் அறிவிப்பாக அறிவித்துள்ளார்.
ஜோகூர் மாநில வட்டார பொதுக்கூட்டம் ஜாலான் மெங்கிபோல், குளுவாங், ஜோகூர் எனும் முகவரியில் அமைந்துள்ள இந்தியர் சங்க மண்டபத்தில் 28.2.2026ம் தேதி சனிக்கிழமை 4.30 மணி அளவிலும்
மலாக்கா மாநில வட்டார பொதுக்கூட்டம் 1.3.2026ம் தேதி ஞாயிற்றுக்கிழமை KM-23, ஜாலான் பத்து 14, பெம்பான் மலாக்கா எனும் முகவரியில் அமைந்துள்ள தேவி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மண்டபத்தில் மாலை 4.30 மணிக்கு நடைப்பெறவுள்ளது.
பகாங்-கிளந்தான்-திரெங்கானு ஆகிய மாநிலங்களின் வட்டார பொதுக்கூட்டம் மார்ச் மாதம் 5ஆம் தேதி மாலை 4.30 மணிக்கும், கேமரன் மலை - கம்போங் ராஜா, புளுவேலி எனும் முகவரியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் மண்டபத்தில் நடைப்பெறும்.
பேரா வட்டார பொதுக்கூட்டம் 6.3.2026 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு லோட் எண்: ஜாலான் 4890 N, ஜாலான் கொம்ளக்ஸ் சுக்கான், ஈப்போ, பேராக் எனும் முகவரியில் அமைந்துள்ள (ஸ்டேடியம் பேரா அருகில்) மண்டபத்தில் நடைபெறும்.
தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் துணை சட்டவிதிகளின் பிரிவு 15ன் கீழ், 2025ம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் நாள் அல்லது அதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட அங்கத்தினர்கள் மட்டுமே இந்த வட்டார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள முடியும் என்பதும் இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.
மேற்கண்ட தகுதிகளை பெற்றுள்ள அங்கத்தினர்கள் தவறாமல் குறிப்பிட்ட தேதிகளில் வட்டார பொதுக்கூட்டத்தில் வந்து கலந்து கொள்ளுமாறு தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் செயலாளரும் - நிர்வாக இயக்குநரும் டத்தோ பா. சகாதேவன் இதன் மூலம் அறிவித்துக் கொள்கிறார்.
(குறிப்பு: அங்கத்தினர்கள் மறக்காமல் தங்களது அடையாள அட்டையை உடன் கொண்டு வரவும்)
0 Comments