கோலாலம்பூர், பிப்.7-
பிறப்பு சான்றிதழில் இந்தியர் என குறிப்பிடப்பட்டுள்ளதை தமிழராக மாற்ற வேண்டும் என்பதற்காக தமிழர் தேசிய பேரவை இன அடையாள மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.
நமது பிறப்பு சான்றிதழில் இனம் தமிழர் என்று குறிப்பிடப்பட வேண்டும் என்பதை குறிக்கோலாக கொண்டு இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பேரவையின் தலைவர் தமிழ்திரன் தெரிவித்தார்.
நமது முன்னோர்களின் பிறப்பு சான்றிதழில் தமிழர் என குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் ஆவணங்கள் கணினிமயமாக மாற்றப்பட்டபோது அது இந்தியராக மாற்றப்பட்டுள்ளது. ஆகையால் இதனை நாங்கள் மீட்டெடுக்கதான் பாடுபடுகிறோம்.
இந்த விவகாரம் குறித்து பதிவிலாகா அதிகாரியை நாங்கள் சந்தித்து உள்ளோம். பிரதமரின் உத்தரவின் அடிப்படையில்தான் இது மாற்றப்பட முடியும் என்று கூறப்பட்டதால் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளோம்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்பவர்கள் முன்னிலையில் இந்த கோரிக்கையை முன்னெடுக்கப்பட்டு பின்னர் இந்த கோரிக்கையை நாங்கள் பிரதமரிடம் முன்னெடுத்து செல்வோம் என அவர் சொன்னார்.
எங்களின் இந்த நிலைப்பாட்டில் மலேசிய தெலுங்கு சங்கமும் அதன் ஆதரவை தெரிவித்துள்ளது.
இந்த மாநாடு வரும் மே மாதம் 17ஆம் தேதி காலை 9 மணி முதல் 4.30 மணி வரை ஷா ஆலம், இலத்தானிய மண்டபத்தில் நடைப்பெறவுள்ளது.
0 Comments