கோலாலம்பூர், செப்.9-
சிலம்பம் போட்டி சுக்மாவில் இடம் பெறவில்லை என்றதும் பல தரப்பினர் இதன் தொடர்பில் குரல் கொடுத்தனர். அதன் பின்னர் சுக்மாவில் சிலம்பம் போட்டி இணைக்கப்பட்டது.
இந்த நிலையை நாம் மாற்ற வேண்டும் என்றால் நாம் நம் தற்காப்பு கலையான சிலம்பத்தை காக்க நாம் இணைந்து இந்த கலையை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென மஇகா விளையாட்டுப் பிரிவுத் தலைவர் எண்ரூ டேவிட் தெரிவித்தார்.
அந்த வகையில் மலேசிய சிலம்ப கழகத்துடன் இணைந்து மஇகா விளையாட்டுப் பிரிவு டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன் சிலம்ப கிண்ணத்தை இம்மாதம் 13 முதல் 15ஆம் தேதி வரை கெடா லுனாஸ், ஸ்ரீ கருமாரியம்மன் ஆலய மண்டபத்தில் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த போட்டியில் நாடு தழுவிய அளவில் 300 போட்டியாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த போட்டி 30 பிரிவுகளாக நடக்கவுள்ள வேளையில்,12 குழுக்கள் கலந்து கொள்ளவர்.
இந்த போட்டிக்கான பதிவு நடந்து முடிந்து விட்டது. மாணவர்கள் உட்பட இளைஞர்கள் மத்தியில் சிலம்பத்திற்கு அதிக வரவேற்பு இருப்பது இந்த போட்டியில் பதிவு செய்துள்ள போட்டியாளர்களின் எண்ணிக்கை நமக்கு எடுத்து காட்டுகிறது.
நமது பாரம்பரிய கலைகள், தற்காப்பு கலை ஆகியவற்றை வளர்ப்பதற்கும் பாதுகாக்கவும் மஇகா தொடர்ந்து இதுபோன்ற போட்டிகளை நடத்தும் என எண்ரூ டேவிட் தெரிவித்தார்.
இந்த சிலம்ப போட்டியின் அதிகாரப்பூர்வ தொடக்க விழா 14ஆம் தேதி நடைப்பெறவுள்ளதாகவும் அதனை அதிகாரப்பூர்வமாக மஇகாவின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தொடக்கி வைப்பார் என எண்ரூ தெரிவித்தார்.
இந்த போட்டி தொடர்பான செய்தியாளர் சந்திப்புக் கூட்டம் இன்று செராஸில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் மலேசிய சிலம்ப கழகத்தின் தலைவர் டாக்டர் சுரேஷ்வுடன் கழக பொருப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
0 Comments