loader
இந்தியாவில் வெள்ளத்தில் சிக்கியுள்ள மலேசியர்கள் பாதுகாப்பாக தாயகத்திற்கு அழைத்துவரப்படுவர்!

இந்தியாவில் வெள்ளத்தில் சிக்கியுள்ள மலேசியர்கள் பாதுகாப்பாக தாயகத்திற்கு அழைத்துவரப்படுவர்!

புத்ராஜெயா, ஆக.28-
தொடர் பருவமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் பலர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, வட இந்தியாவில் சிக்கித் தவிக்கும் தனது குடிமக்களை விரைவில் விமானங்கள் மூலம் வெளியேற்ற மலேசியா ஏற்பாடு செய்து வருகிறது.

ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட வட இந்தியாவின் பல மாநிலங்களில் ஏற்பட்ட பெரும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்குப் பிறகு, புது டில்லியில் உள்ள மலேசிய தூதரகம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜம்மு மற்றும் லே, லடாக்கில் சிக்கித் தவிக்கும் மலேசிய குடிமக்கள் குறித்த தகவல்கள் தூதரகத்திற்கு கிடைத்துள்ளன. அவர்களை வெற்றிகரமாகத் தொடர்பு கொண்டு, விரைவில் கிடைக்கக்கூடிய விமானங்களில் அவர்கள் திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நிலைமை மோசமடைந்து வருவதால், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்க மலேசியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

leave a reply

Recent News