புத்ரா ஜெயா, மே 29-
பொது சேவை மற்றும் மனிதநேய மேம்பாட்டு பணிகளில் பெருமிதமான பங்களிப்பை வழங்கியதற்காக தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகாவின் தேசிய துணைத் தலைவருமான மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணனுக்கு SDG IMPACT விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருது நிலையான மேம்பாடு வாரியத்தின் சார்பில், புத்ராஜெயாவில் இன்று காலை நடைபெற்ற அனைத்துலக அமைதி மற்றும் நல்வாழ்வு மாநாட்டின் போது வழங்கப்பட்டது.
மனிதநேயத்தையும், சமூக நலனையும் முன்னிலைப்படுத்தும் வளர்ச்சி பாதையில் தனது தலைமைத்துவத்தில் டத்தோஸ்ரீ எம்.சரவணன் வகித்திருக்கும் பங்கினை பாராட்டும் வகையிலும், சர்வதேச அளவிலான இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
0 Comments