loader
ரஷ்யா-உக்ரைன் மோதலைத் தீர்ப்பதற்கு இந்தியாவின் ஆதரவு இருக்கும்: இந்திய பிரதமர் மோடி உறுதி!

ரஷ்யா-உக்ரைன் மோதலைத் தீர்ப்பதற்கு இந்தியாவின் ஆதரவு இருக்கும்: இந்திய பிரதமர் மோடி உறுதி!

வாஷிங்டன், செப் 24-

ரஷ்யா-உக்ரைன் மோதலைத் தீர்ப்பதற்கு இந்தியாவின் ஆதரவு இருக்கும் இந்திய பிரதமர் மோடி உறுதியளித்தார்.
அமெரிக்காவில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை சந்தித்த  பிரதமர் மோடி இத்தகவலை தெரிவித்தார்.

அமெரிக்கா, நியூயார்க்கில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, இருதரப்பு உறவுகள் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்பான விவகாரங்கள் குறித்து விவாதித்தார். இது, ஒரு மாதத்தில் பிரதமர் மோடி மற்றும் ஜெலென்ஸ்கி இடையே இரண்டாவது சந்திப்பு ஆகும்.

இது குறித்து சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், '
 நியூயார்க்கில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை சந்தித்தேன். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த கடந்த மாதம் உக்ரைன் பயணத்தின் போது எடுத்த முடிவுகளை செயல்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். மோதலைத் தீர்ப்பதற்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என தெரிவித்தேன். உக்ரைனில் உள்ள மோதலை தீர்க்கவும், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என குறிப்பிட்டுள்ளார்.

0 Comments

leave a reply

Recent News