loader
நைரோபியில் விமான நிலையத்தை கையகப்பத்த எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் போராட்டம்!

நைரோபியில் விமான நிலையத்தை கையகப்பத்த எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் போராட்டம்!

நைரோபி, செப் 12-
கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள ஜோமோ சர்வதேச விமான நிலையத்தை அதானி குழுமத்திற்கு ஒப்பந்தம் விட முடிவெடுக்கப்பட்டிருந்தது. இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து விமான நிலைய ஊழியர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

விமான நிலையங்களை பராமரிப்புக்காக குத்தகை விடும் வழக்கம் உலகம் முழுவதும் இருக்கிறது. மேலும்  சில நாடுகளிலும் விமான நிலையங்களை அதானி நிறுவனம் குத்தகைக்கு எடுத்து வருகிறது. இதில் கென்யாவில் உள்ள ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலையம் ஒன்று.

இந்த விமான நிலையத்தை குத்தகைக்கு எடுத்துள்ள அதானி நிறுவனம், புதிய ஓடுபாதை, புதிய முனையத்தை கட்டி, புதுப்பிக்க இருக்கிறது. ஒப்பந்தம் மூலம் அடுத்த 30 ஆண்டுகளுக்கு அதானி நிறுவனம் இதனை பராமரிக்கும். இப்படியான ஒப்பந்தத்திற்கு ஆரம்பம் முதலே கடுமையான எதிர்ப்பு இருந்தது. ஒப்பந்தம் ரத்து செய்யப்படாவிட்டால், வேலை நிறுத்தம் நடத்தப்படும் என்று விமான நிலைய ஊழியர்கள் எச்சரித்திருந்தனர்.

போராட்டத்தில் பங்கேற்றுள்ள தொழிலாளர்கள் இது குறித்து கூறுகையில், "தனியார் நிறுவனத்திற்கு விமான நிலையம் குத்தகைக்கு விடப்படுவதன் மூலம், எங்களின் தொழிற்சங்க உரிமைகள் பறிபோகும். மட்டுமல்லாது அதிரடியான ஆட்குறைப்பு நடத்தப்படும். எனவேதான் நாங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம்" என்று கூறியுள்ளனர்.

இந்த போராட்டம் காரணமாக நைரோபிக்கு வரும் விமானங்கள் சில திருப்பிவிடப்பட்டிருக்கின்றன.

0 Comments

leave a reply

Recent News