கோலாலம்பூர், ஏப்.26-
இந்தியச் சமுதாயம் கல்வியில் முன்னேற வேண்டும் என்ற தூரநோக்கு சிந்தனையுடன் எம்.ஐ.இ.டி கல்வி கடன் திட்டம், ஏய்ம்ஸ்ட் பல்கலைகழகம், டேஃவ் கல்லூரி என பல ஆக்க்கபூர்வமான நடவடிக்கைகளை இந்தியச் சமுதாயத்திற்கு விட்டுச் சென்ற துன் சாமிவேலு நன்றி, அவரின் இந்த சாதனையை நாம் நினைவு கூற வேண்டும் என இன்று எம்.ஐ.இ.டி கல்விக் காசோலை வழங்கும் விழாவை தலைமையேற்ற பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
ம.இ.கா, கல்விக்கு முக்கியதுவம் கொடுத்து செய்து வரும் இந்த நடவடிக்கைக்கு அரசாங்கம் நல்ல ஒத்துழைப்பை கொடுக்கும். அதே நேரத்தில் சமுதாய தலைவர்கள் ம.இ.கா தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் பாணியில் சமுதாய பிரச்சினைகளை கையாள வேண்டும் என அன்வார் தெரிவித்தார்.
வெளியில் குறையை மட்டும் பேசுவதை நிறுத்தி விட்டு, சமுதாயத்தில் இருக்கும் பிரச்சினைகளை களைய டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் போல், என் நேரடி பார்வைக்கு கொண்டு வந்து கலந்து பேசி என்ன நடவடிக்கை எடுக்கலாம் என ஒத்துழைத்து பேசுவதுதான் நல்ல அணுகுமுறை என அன்வார் தெரிவித்தார்.
இவ்வேளையில் டேஃப் கல்லூரியில் டிவேட் கல்வி திட்டம் மேம்பாட்டிக்கு அரசாங்கம் 2 மில்லியன் நிதி வழங்கும் என தெரிவித்த டத்தோஸ்ரீ அன்வார், இதன் வாயிலாக பல இந்திய மாணவர்கள் தொழில் திறன் பயிற்சி பெற அது உதவியாக இருக்கும் என்றார்.
செய்தி : வெற்றி விக்டர்
0 Comments