loader
அரசியல் ஜோதிடர்  கணித்த  கணிப்பு  சொதப்பல் !  மன உளைச்சலில் இருக்கிறார் !

அரசியல் ஜோதிடர் கணித்த கணிப்பு சொதப்பல் ! மன உளைச்சலில் இருக்கிறார் !

கோலாலம்பூர்  ஏப்ரல் - 20

நாட்டில்  புதிய அரசியல் ஜோதிடர் உருவாகி 1 மாதம் கூட நிறைவு பெறாத நிலையில்  அந்த அரசியல் ஜோதிடர் கணித்த கணிப்பு சொதப்பலாகி, இந்த புதிய தொழிலை கைவிடும் அளவில் அந்த ஜோதிடர் இருக்கிறார்.

நான் சொன்னால் எல்லாம் நடக்கும் என பத்திரிக்கையில் விளம்பரம் செய்த அந்த ஜோதிடர்  , யார் பிரதமர், யார் அமைச்சர், யார் கட்சி தலைவர் என அவர் சொன்னால் எல்லாம் நடக்கும்   என்றார்.  இவர் கட்டம்  தான் பார்த்து ஜோதிடம் சொல்கிறாரா ? இல்லை குறுக்கு புத்தி திட்டம் போட்டு ஜோதிடம் சொல்கிறாரா என  தெரியவில்லை , ஆனால் இந்த முறை அவர் சொன்ன ஜோதிடத்தில் மிக பெரிய சொதப்பல் நடந்துள்ளது.

ஜோதிடர் பற்றிய புதிய தகவலும் இப்போது  நமக்கு கிடைத்துள்ளது. நம்ம ஜோசியம் இன்னும் கீழே இறங்கி யார் கவுன்சிலராக வரவேண்டும் என்று எல்லாம் கட்டம் பார்க்கிறாராம்.

தனக்கு கீழே இருந்த பசங்க... அரசியலில் வளர்ச்சி அடைந்து கவுன்சிலர் ஆனதை கூட பொறுத்து கொள்ள முடியாத நம்ம ஜோசியர் , இப்போது அவர்கள் ஜாதகத்தை மாற்ற  திட்டம் - கட்டம் உருட்டுகிறார். ஆனால் எல்லாம் சொதப்பல்.

அடுத்து அடுத்து   இவரது கணிப்பு எல்லாம் சொதப்பல் ஆன நிலையில் இந்த ஜோதிடரின் ஜோசியத்தில் பலருக்கு நம்பிக்கை இல்லாமல் போனது , பெரிய பெரியவர்களிடன்  இந்த ஜோதிடர் போட்ட கட்டம்  பலிக்கவில்லை, அவர்கள் இவரை கண்டுகொள்ளவே இல்லை .

அதோடு ஜோதிடர் போட்ட ஒரு கட்டத்தில் அல்லது திட்டத்தில் பாதிப்பு அடைந்த  ஏதோ ஓர் அப்பாவி நம்ம ஜோதிடர்  மீது வழக்கு தொடுத்து  உள்ளதாக தகவல் வருகிறது.  அந்த வழக்கின் முடிவு ஜோதிடரின் தலை எழுத்தை நிர்ணயிக்கும் என்கிறார்கள்  .இதனால் மிகுந்த மன  உளைச்சலில் நம்ம  அரசியல் ஜோதிடர்  இருக்கிறார்.

0 Comments

leave a reply

Recent News