கோலாலம்பூர்,மார்ச் 29-
கோலாலம்பூர்-காரக் நெடுஞ்சாலை கிலோமீட்டர் 51.4 இல் 16 பயணிகளை ஏற்றிச்சென்ற விரைவுப் பேருந்து விபத்துக்குள்ளானது.
காலை 7.50 மணியளவில் புக்கிட் திங்கியிலிருந்து லென்டாங் நோக்கிச் செல்லும் வழியில் உள்ள ஓய்வெடுக்கும் இடத்திற்கு அருகே இந்த சம்பவம் நிகழ்ந்ததால் கிழக்கை நோக்கி செல்லும் வழியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக பெந்தோங் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் கமாண்டர் பாட்ருல் இஷாம் சாரி தெரிவித்தார்.
விரைவு பேருந்து விபத்து தொடர்பாக தகவல் அறிந்ததும் சுமார் 19 தீயணைப்பு வீரர்கள் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் பயணிகளை மீட்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு விபத்தில் கடும் காயம் அடைந்த மூவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மேலும் இந்த விபத்தினால் சுமார் 4.7 கிலோமீட்டர் தூரம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும், அதனை குறைப்பதற்கு விறைவாக அப்புறப்படுத்தும் பணி மேற்கொண்டு வருவதாக மலேசிய நெடுஞ்சாலை இலாகா தனது முகநூலின் வழி தெரிவித்தது.
0 Comments