கோலாலம்பூர் மார்ச்- 26
நாளை ம.இ.காவின் தேசியத் தலைவர் பதவிற்கான வேட்புமனு தாக்கல் நடைப்பெறும் நிலையில் நடப்பு தலைவர் டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையை தான் ம.இ.கா இளைஞர் பிரிவு விரும்புவதாக ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவு உச்சமன்ற உறுப்பினர் லெட்சு மாறன் தெரிவித்தார்.
டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் - டத்தோ ஸ்ரீ சரவணன் ஆகியோர் தலைமைக்கு வந்த பிறகு குழுக்களாக பிரிந்து கிடந்த விவகாரம் ஒழித்து கட்டப்பட்டது. இருவரும் இணைந்து ம.இ.காவிற்கு புதிய தோற்றம் கொடுத்து, உரிமைகளை கேட்க தொடங்கினர்.
அதோடு மட்டுமல்ல ம.இ.காவின் புதிய கட்டடத்தை கட்டும் இவர்களின் முயற்சி காலத்திற்கும் பேசப்படும் என லெட்சு தெரிவித்தார்.
இப்போது தலைவர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் நடைப்பெறவுள்ளது. அதே போல் துணை தலைவர் பதவிக்கான தேர்தலும் விரைவில் நடைப்பெறும் நிலையில் தலைவருக்கு பக்கபலமாக இருக்கவேண்டிய அந்த பொறுப்புக்கு டத்தோ ஸ்ரீ சரவணன் சரியானவர்.
கடந்த காலங்களில் இந்த இரு முக்கிய பதவிகளினால் ம.இ.கா பிளவு படுத்தியது. அதை சரி செய்தவர்கள் இந்த இருவர்களே.
எங்களை போன்ற இளைஞர்களுக்கு இப்படிப்பட்ட தலைவர்கள் மட்டுமே வழிகாட்ட முடியும் என லெட்சு தெரிவித்தார்.
0 Comments