பீடோர், மார்ச் 26-
பேராக், பீடோரிலுள்ள KK Mart-இல் அதிகாலை 5 மணியளவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜாலான் மோஸியிலுள்ள அந்த கடையின் முன் அந்த பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகவும் அது வெடிக்கவில்லை என்றும் China Press ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இச்சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. இதன் தொடர்பில் அந்த கடையின் பணியாளர் போலீசில் புகார் செய்துள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
KK Mart-இல் அல்லா சொல் பதிக்கப்பட்ட காலுறை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த விவகாரத்தை தொடர்ந்து இச்சம்பவம் நடந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
0 Comments