கோலாலம்பூர், மார்ச் 13-
பெரிக்காத்தான் நேஷனலுள்ள (PN) உயரிய அந்தஸ்து கொண்ட இன்னும் சில தலைவர்கள் அக்கட்சியை விட்டு விலகி பிகேஆரில் வந்து இணைவார்கள் என பிகேஆர் கட்சியின் பொதுச் செயலாளர் சைப்புடின் நசுத்தியோன் தெரிவித்தார்.
நாட்டு அரசியலில் பெயர் கொண்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் பிகேஆரில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பிகேஆரில் யாரையும் வற்புறுத்தி அல்லது அச்சுறுத்தி உறுப்பினர்களாக இணைப்பது போன்ற எந்த கூறுகளையும் பயன்படுத்துவதில்லை. மாறாக, கட்சி உறுப்பினர் என்பது ஒருவரின் சொந்த விருப்பமாக இருந்தால் மிகவும் மதிப்புமிக்கது என்று அவர் கூறினார்.
0 Comments