loader
சுபாங்கில் A2BI BISTRO உணவகத்தின் புதிய கிளை!

சுபாங்கில் A2BI BISTRO உணவகத்தின் புதிய கிளை!

சுபாங், ஆக.4-
மலேசியாவில் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உணவுகளை வழங்கி வந்த A2BI BISTRO உணவகம் தனது இரண்டாவது கிளையை தற்பொழுது சுபாங் வட்டாரத்தில் திறந்து உள்ளது.

இந்த புதிய கிளையின் திறப்பு விழா நேற்று பிற்பகல் 12 மணி அளவில் பண்டார் பிங்கிரான் சுபாங் எனும் இடத்தில் நடைபெற்றது. சுங்கை புலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ  ரமணனின் தலைமையில் இந்த புதிய உணவகம் திறப்பு விழா கண்டதைத் தொடர்ந்து அங்கு 1500 பேருக்கு இலவச உணவுகளும் வழங்கப்பட்டது.

சிறிய அளவில் தொடங்கப்பட்ட  இந்த உணவு வியாபாரத்தை அடுத்த கட்ட நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் தனது முதல் உணவகத்தை ஆரம்பித்து தற்போது இரண்டாவது கிளையையும் திறந்து விட்டதாக அதன் உரிமையாளர் சுரேஷ் கலியபெருமாள் தெரிவித்தார்.

தனது சக நண்பராகிய வெங்கடசாமி உடன் இணைந்து முதல் முதலில் மோட்டார் சைக்கிளின் மூலம் இந்திய பாரம்பரிய பலகாரங்களை விற்பனை செய்து வந்ததாகவும், அந்த வியாபாரத்தை அடுத்த கட்ட நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் முதல் முறையாக ஓர் உணவகத்தை திறந்ததாகவும் அவர் கூறினார்.

அதன்பின் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த உணவை வழங்க வேண்டும் என்ற முயற்சியில் தங்களின் முதல் உணவகத்தை மிகச் சிறப்பாக நடத்தி தற்போது மற்றொரு கிளையையும் திறந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மலேசியாவில் உள்ள அனைத்து இன மக்களும் விரும்பி உண்ணக்கூடிய அனைத்து வகையான உணவுகளும் தனது உணவகத்தில் தயார் செய்து தரப்படும். அதுமட்டுமின்றி ஆரம்ப காலத்தில் தான் வியாபாரம் செய்த இந்திய பாரம்பரிய பலகாரங்களை அதே சுவையில் தனது உணவகத்தில் தயார் செய்து விற்பனை செய்வதாக அவர் தெரிவித்தார்.

A2BI BISTRO உணவகத்தில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய உணவு ஹைதராபாத் பிரியாணி மற்றும்  இடியப்பத்தை இந்த புதிய உணவகத்திலும் வாடிக்கையாளர்கள் வாங்கிக்கொள்ளலாம்.  

மேலும் தென்னிந்திய மற்றும் வட இந்திய பாரம்பரிய பலகாரங்களும் எங்களின் உணவகத்தில் கிடைக்கும். மேலும் உணவகம் மட்டுமின்றி கேட்டரிங் சர்வீசும்  எங்களிடம் உண்டு.

இதனை தொடர்ந்து தனது உணவகத்தின் 3 ஆவது கிளையை  சைபர் ஜெயாவில்  திறப்பதற்கு தற்பொழுது திட்டமிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

-காளிதாசன் இளங்கோவன்

0 Comments

leave a reply

Recent News