loader
இந்தியரின் சிக்கன் ராய்ஸ் உணவகம் பிரிக்பீல்ட்சில் திறப்பு!

இந்தியரின் சிக்கன் ராய்ஸ் உணவகம் பிரிக்பீல்ட்சில் திறப்பு!

கோலாலம்பூர், ஜூலை 3-
பிரிக்பீல்ட்ஸ் டிஎல்கே காம்பிலக்சில் இந்தியர் ஒருவரின் முயற்சியில் சீனர்களின் பிரசித்திப் பெற்ற உணவுகளில் ஒன்றான சிக்கன் ராய்ஸ் உணவு விற்பனை செய்யப்படவுள்ளது.

பல மக்கள் வாழும் இந்நாட்டில் அனவருக்கும் பிடித்த உணவாக சிக்கன் ராய்ஸ் உள்ளது. அந்த வகையில் அந்த உணவை விற்பனை செய்வதற்காக பிரிக்பீல்ட்ஸ்சில் கே.எஸ்.சிக்கன் ராய்ஸ் உணவகம் திறக்கப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர் காளிச்சரண் தெரிவித்தார்.

காலை 9.30 முதல் பிற்பகல் 3 மணி வரை செயல்படவுள்ள இந்த உணவகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் சிறப்பு கழிவு வழங்கப்படவுள்ளது. அதுமட்டுமின்றி உள்நாட்டு கலைஞர்களின் நிகழ்ச்சிகளுக்கு சிக்கன் ராய்ஸ் ஆடர் வழங்கப்பட்டால் அதற்கும் சிறப்பு கழிவு விலை வழங்கப்படும் என அவர் சொன்னார்.

இதற்கிடையில் இந்த உணவகத்தை இன்று காலையில் திறந்து வைத்து பேசிய கோலாலம்பூர், சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தின் செயலவை உறுப்பினர் கவிமாறன், சிறுத்தொழில் ஈடுபடும் இந்தியர்களை நாம் வரவேற்பதுடன் அவர்களுக்கு ஆதரவை வழங்க வேண்டும் என்றார்.

பிரிக்பீல்ட்ஸ் திஎல்கே உணவு மையத்தில் இந்தியர்களின் கடைகள் அதிகம் உண்டு. அதில் நமது பாரம்பரிய உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் புதிய மாற்றமாக சிக்கன் ராய்ஸ் உணவும் விற்பனை செய்யப்படவுள்ளது. இது இங்கு வரும் வாடிக்கையாளர்களை கவரும் என அவர் சொன்னார்.

சீனர்களின் இந்த உணவை மலாய்க்காரர்களும் விற்பனை செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்தியரும் இந்த உணவை தயாரித்து விற்பனை செய்ய முன்வந்துள்ளது வரவேற்கத்தக்கது என கவிமாறன் தெரிவித்தார்.

ஆகையால் பிரிக்பீல்ட்ஸ் திஎல்கே காம்பிலக்ஸில் திறக்கப்பட்டுள்ள கே.எஸ்.சிக்கன் ராய்ஸ் உணவகத்திற்கு மக்கள் ஆதரவை வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது.

0 Comments

leave a reply

Recent News