கோலாலம்பூர், மே.12-
டாக்கியின் சம்பா ராக் கலைநிகழ்ச்சிக்கு மக்கள் ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருவதாகவும் , அதோடு இன்னும் இரண்டு நாள்தான் உள்ள நிலையில் கூடுதல் ஆதரவு தேவை என அதன் ஏற்பாட்டுகுழுவான WHIMSY STREAMS உரிமையாளர் சிவகுமார் கேட்டுக்கொண்டார்.
நாளை மறுநாள் 14ஆம் தேதி இரவு செந்தூல் எச்.ஜி.எச் அரங்கத்தில் நடைபெறவிருக்கும்
உள்ளூர் ராக் பாடல்களின் ஜாம்பவான் டாக்கியின் SAMBA ROCK LIKE NEVER BEFORE எனும் மாபெரும் கலைநிகழ்ச்சிக்கு தற்போது மக்களின் ஆதரவு கிடைத்து வருகிறது மகிழ்ச்சி . இருப்பினும் இதுநாள் வரையில் 50 விழுக்காடு டிக்கேட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அவ்வகையில் அந்நிகழ்ச்சிக்கான டிக்கெட் விலையில் 20 விழுக்காடு கழிவு வழங்க ஏற்ப்பாட்டுக்குழு முன் வந்துள்ளது என ஏற்பாட்டு குழு தலைவர் சிவகுமார் தெரிவித்தார்.
பிரிமியர் ஜோன், கோல்ட் ஜோன் மற்றும் ராக் ஜோன் ஆகியவற்றிக்கு மட்டும் இந்த சிறப்புக் கழிவு வழங்கப்படுகிறது என்ற தகவலை அவர் அறிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் டாக்கி உட்பட மற்ற பிரபல உள்ளூர் களைஞர்களான ஹெர்வின், சந்தேஷ், கபில் ராஜ், என்.எம்.லிங்கேஷ், எம்.சி.ராஜ், பிராடெர்கன், டிரீம் கேச்சர் ஆகியோரின் படைப்புகளும் இடம்பெறவுள்ளது.
அவ்வகையில் சம்பா ராக் நிகழ்ச்சி நிச்சயம் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு நடைபெறும். இந்நிகழ்ச்சிக்கு ஆதரவு வழங்கும் மக்களை மகிழ்விக்கும் வகையில் பல சிறப்பு அங்கங்களை ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
அதோடு இந்த கலை நிகழ்ச்சியை தலைமை தாங்க ம.இ.காவின் தேசிய துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் வருகை புரிய உள்ளதாக சிவகுமார் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிக்கான டிக்கேட்டுகளை மக்கள் my ticket.Asia என்ற அகப்பக்கத்தில் அல்லது நேரடியாக நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவான WHIMSY STREAMS 016-9164345 / 016 -916 4325 என்ற எஎண்ணில் தொடர்புக் கொண்டு வாங்கிக் கொள்ளலாம்.
0 Comments