குயின்ஸ்லாந்து, ஏப்.27- ஆஸ்திரேலியாவின் கெயின்ஸ் நகரில் இருந்து வடக்கு பிரதேசத்தில் உள்ள குரூட் எய்லாண்ட் நகர் நோக்கி செல்லும் விமானத்தில் பயணிகள் சிலர் அடிதடியில் ஈடுபட்டனர்.
அடிதடியில் ஈடுபட்ட பயணிகள் பாட்டிகளைக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் விமானத்தின் கண்ணாடி உடைந்தது. இதனால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அடிதடியில் ஈடுபட்ட 4 பயணிகளை போலீசார் கைது செய்தனர். உள்நோக்கத்துடன் பிறருக்கு ஆபத்து விளைவிக்க முயற்சித்தல், சொத்துகளுக்கு பாதிப்பு, ஒழுங்கற்ற நடத்தை, வன்முறை உள்ளிட்ட குற்றச்சாட்டில் கீழ் அந்த நபர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
0 Comments