கோலாலம்பூர் மார்ச் 22-
Covid-19 காலகட்டத்தில் வியாபாரத்தில் பின்னடைவை அடைந்த சிறு -நடுத்தர இந்திய வியாபாரிகளுக்கு உதவும் வகையில் அவர்கள் தங்களது வியாபாரத்தை பழைய நிலைமைக்குக் கொண்டு வர முஹாமலாட் வங்கியின் வாயிலாக கடனுதவி பெற்று தரும் முயற்சியில் மைக்கி எனப்படும் மலேசிய இந்திய வர்த்தகத் தொழிலியல் சங்கங்களின் சம்மேளனம் இறங்கியுள்ளது.
இது தொடர்பாக இன்று மைக்கி அலுவலகத்தில் பேங்க் முஹாமலாட் அதிகாரிகளை தொழில் முனைவர்கள் சந்திக்கும் சிறப்பு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் சிறு நடுத்தர வியாபாரம் செய்யும் இந்திய தொழில் முனைவர்கள் சுமார் 67 பேர் கலந்துகொண்டு வங்கியில் இருக்கும் வாய்ப்புகள், ஆலோசனைகள் மற்றும் வழிமுறைகளைக் கேட்டறிந்தனர்.
முதல் கட்டமாக நடத்தப்படும் இந்த சந்திப்பில் இந்த 67 பேரில் வங்கி கடன் எடுக்க விரும்புவோருக்கு மைக்கி வழிகாட்டி, கடனை பெற உறுதுணையாக இருக்கும் என மைக்கியின் தலைவர் டத்தோ ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதனிடையே மைக்கியின் உதவி தலைவரான திருநாவுக்கரசு பேசுகையில் எதிர்வரும் மே மாதம் மைக்கியும் பேங்க் முஹாமலாட் வங்கியும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்ததைச் செய்யப் போவதாகவும் அதன் வழி மாநில ரீதியில் இந்த கடனுதவி திட்டத்தை இந்திய தொழில் முனைவர்களுக்கு கொண்டுச் சேர்த்து பயன் அளிக்கும் விதமாக மைக்கி இது போன்ற கூட்டங்களை ஏற்பாடு செய்யவிருப்பதாக அவர் தெரிவித்தார். இன்று கூட சிலாங்கூர், மலாக்கா, நெகரி செம்பிலான், பினாங்கு, சரவாக் போன்ற மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வந்ததாக அவர் குறிப்பிட்டார் .
இந்தச் சந்திப்பு கூட்டத்தில் வங்கி தரப்பில் இருந்து தொழில்துறைக்கான தலைமை நிர்வாகி டத்தோ நசீர் மற்றும் பேங் முஹாமலாட் வங்கியின் கிளைகளுக்கான உதவித் தலைவர் குலா அவர்களும் இன்னும் சில அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
0 Comments