ஷா ஆலம் மார்ச்-22
ஆசியாவில் தீம் பார்க்கின் மையமாக மலேசியா உருவாகும் என்று மாட்ஃபாவின் தலைவர் டான்ஸ்ரீ ரிச்சர்ட் கோ கூறினார்.
ஃபன்பேர் தொடங்கி இன்று பல பில்லியன் வெள்ளி முதலீடு செய்யும் துறையாக இந்த தீம் பார்க் துறை விளங்கி வருகிறது.
ஆயிரக்கணக்கானோர் இத்துறையில் பணியாற்றி வருகின்றனர்.
தரமாகவும் ,நவீனத்துவத்துடனும், பாதுக்கப்பு மற்றும் நியாயமான கட்டணங்களுடன் இந்த தீம் பார்க்குகள் செயல்பட்டு வருகிறது.
இந்நிலை நீடிக்கும் வகையில் ஆசியாவிலேயே தீம் பார்க்கின் மையமாக மலேசியா விளங்கும். அதோடு தீம் பார்க் துறையை மேம்படுத்த இந்தோனேசிய தீம் பார்க் துறை நம் உதவியை நாடுவது, இதில் மலேசிய நிபுணத்துவம் பெற்றுள்ளது என்பதை காட்டுவதாக ரிச்சர்ட் தெரிவித்தார்.
இந்நிலையில் நாட்டில் உள்ள டீம் பார்க், குடும்பங்களுக்கான உல்லாச மையங்களை ஒன்றிணைக்கும் நோக்கில் தான் மாட்ஃபா அமைப்பு செயல்பட்டு வருகிறது.
தற்போது இந்த அமைப்பின் முயற்சியில் மாட்ஃபா கோல்டன் ஹோர்ஸ் விருது விழா மிகப்பெரிய அளவில் நடைபெறவுள்ளது.
இவ்விழா வரும் ஜூன் 11ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு கெந்திங்மலை ஃபேர்ஸ்வேல்டு தங்கும் விடுதியில் நடைபெறவுள்ளது.
நாட்டில் உள்ள தீம் பார்க், குடும்பங்களுக்கான உல்லாச மையங்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த விழா நடைபெறவுள்ளது.
இத்துறையில் சிறந்து விளங்குபவர்களை கௌரவிக்கும் வகையில் கிட்டத்தட்ட 15 பிரிவுகளில் 40 விருதுகளை வழங்கவுள்ளதாக டான் ஸ்ரீ ரிச்சர்ட் தெரிவித்தார்.
இந்த விருதுகளுக்கு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். நடுவர் குழுவின் முடிவுக்கு பின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படும் என்று டான்ஸ்ரீ ரிச்சர்ட் கோ தெளிவுபடுத்தினார்.
இந்த விருது விழாவின் அறிமுக நிகழ்வில் மாட்ஃபாவின் ஆலோசகர் டத்தோ டாக்டர் குமரராஜா கலந்து கொண்டார். இவ்வியகத்திற்கு டாக்டர் குமாரராஜா ஆலோசகராக இருப்பது மாட்ஃபா இயக்கத்தின் பெரும் சக்தியாக இருப்பதாக டான் ஸ்ரீ
ரிச்சர்ட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
0 Comments