loader
இனி பேச்சுக்கு இடமில்லை செயல்தான் சிம்பு!   மார்ச் 30 வெளியாகிறது பத்து தல திரைப்படம் !

இனி பேச்சுக்கு இடமில்லை செயல்தான் சிம்பு! மார்ச் 30 வெளியாகிறது பத்து தல திரைப்படம் !

சென்னை - மார்ச் -20

ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக் நடித்துள்ள 'பத்து தல' திரைப்படம்  மார்ச் 30 ஆம் வெளியாகிறது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில்  பேசிய நடிகர் சிம்பு, நான் இங்கே வரும்போது ஒரே விஷயம் தான் மனதில் நினைத்தேன். அது இந்த நிகழ்ச்சியில் அழக்கூடாது என்பதாகும். அது மட்டும் தான் என் மனதில் இருந்தது.படங்களில் சின்ன சென்டிமென்ட் காட்சி வந்தால்கூட அழுதுவிடுவேன். ஆனால் உங்களுக்காக தான் இன்று அழக்கூடாது என்று நினைத்தேன்.
ஏனென்றால் நாம் வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை சந்தித்து உள்ளோம். இனி சந்தோஷமாக வாழ வேண்டும் என சிம்பு நம்பிக்கை வார்த்தை கூறியுள்ளார்.

இந்தப் படத்தை கன்னடத்தில் சிவ ராஜ்குமார் நடித்திருப்பார். அவர் அங்கே ஒரு சூப்பர் ஸ்டார். அவர் கதாபாத்திரத்தில் நான் எப்படி நடிக்க முடியும் என தயங்கினேன். அதையும் தாண்டி இந்தப் படம் ஒத்துக் கொண்டதற்கு காரணம் இயக்குனர் கவுதம் தான். சிறிய படம், பெரிய படம் எதுவாக இருந்தாலும் எனக்கு பிடித்திருந்தால் அந்தப் படத்தில் நடித்தவர்களை கூப்பிட்டு பாராட்டும் வழக்கம் எனக்கு உண்டு.ஏனென்றால் இங்க தட்டி விடுவதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் தட்டி கொடுப்பதற்கு யாரும் இல்லை.எனக்கு தட்டிக்கொடுக்க என் ரசிகர்கள் மட்டும் தான் உள்ளனர் என சிம்பு  கூறினார். 

இனி பெரிதாக பேசுவதற்கெல்லாம் ஒன்றும் இல்லை; செயல் மட்டும்தான். இனிமே ரசிகர்கள் சந்தோஷமாக இருக்கலாம். மற்றவற்றை நான் பார்த்துக்கொள்கிறேன். இனிமே நான் என்ன பண்ணுகிறேன் என்பதை மட்டும் பாருங்கள். சாதாரணமாக வரவில்லை, வேறு மாதிரி வந்துள்ளேன். இனிமே உங்களை தலை குனிய விடமாட்டேன். இந்த படத்தில் எனக்கு ஜோடி இல்லை. படத்திலும் இல்லை நிஜத்திலும்  ஜோடி இல்லை என  சிம்பு பேசினார்.

0 Comments

leave a reply

Recent News