தனது சொந்த தயாரிப்பில் உருவான மசாலைப் பொருள்களைக் கொண்டு, தரமான சைவ – அசைவ பிரியாணி வழங்கி அசத்தி வருகிறது பத்துமலை போலீஸ் நிலையத்திற்கு அருகே அமைந்துள்ள பெரியாச்சி உணவகம்.
தமிழ்நாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட ஸ்பெஷல் ஃபில்டர் காபி பொடியைக் கொண்டு தயாரிக்கப்படும் காஃபி இங்கு பலராலும் விரும்பப்படும் ஒன்றாக இருக்கிறது.
கோழி, ஆடு, மீன், இறால், முட்டை என வகை வகையான அசைவ பிரியாணியை வழங்குவதோடு, சைவ பிரியர்களுக்கு என பிரத்யேகமாக சைவ பிரியாணியும் செய்து அசத்துகிறார்கள் இங்கே. அதுமட்டுமல்லாது பொன்னி அரிசியில் தயாரான, சுவையான சைவ – அசைவ சாப்பாடும் இங்கே கிடைக்கிறது. விதவிதமான வகைகளில், பாரம்பரியச் சுவையில் மணக்க மணக்கத் தயாரகும் இவர்களின் உணவு வகைகளில் ‘அஜினோ மோட்டோ’ எனும் வேதியல் பொருள் கலக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பெரியாச்சி பிரியாணி ‘வித்’ ஃபில்டார்காபி-ன்னா செமையா இருக்கும் என்கிறனர் ருசி பார்த்தவர்கள்.
குளுகுளு ஏர்கண்டிஷன் வசதியுடன், சுத்தமான சூழலில் வாடிக்கையாளர்களின் மனதைக் கவரும் வண்ணத்தில் அமைந்துள்ள பெரியாச்சி உணவகம், அண்மையில்தான் திறப்பு விழா கண்டது.
இப்போதே தயாராகுங்கள் பெரியாச்சி உணவகத்தின் ‘கம’கம அசத்தல்’ சுவையை குடும்பத்தோடு ருசிக்க!
0 Comments