'சேது' திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமானவர் பாலா. அதன் பின் வித்தியாசமான கதைக்களத்தில் படங்களை எடுத்துக் கவனம் ஈர்த்தார்.
ஆர்யாவை வைத்து அவர் இயக்கிய நான் கடவுள் திரைப்படத்திற்கு சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதும் பெற்றார்.
விக்ரம், சூர்யா ஆகிய இருவரையும் வித்தியாசமான வேடங்கள் மூலம் முழு நடிகராக மாற்றிய பெருமை பாலாவுக்கு மட்டுமே உண்டு.
இவர், முத்துமலர் என்பவரை கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.
இந்நிலையில், யாரும் எதிர்பார்த்திராத வகையில் நேற்று அவர் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றுள்ளார்.
அவரும், முத்து மலரும் கடந்த 4 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் சட்டப்பூர்வமாக இருவரும் பிரிந்துள்ளனர்.
இந்த செய்தி ரசிகர்கள் மற்றும் திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், விவாகரத்து பெற்ற பின்னரே இந்த விஷயம் அனைவருக்கும் தெரியவந்துள்ளது.
பாலா அடுத்து சூர்யா நடிக்கவுள்ள புதிய படத்தை இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது!
0 Comments