கோலாலம்பூர் ஜூலை -2
மலேசிய இந்திய பொற்கொல்லார் நகை வணிகர் சங்கத்தின் தலைவராக டத்தோ அப்துல் ரசூல் போட்டியின்றி மீண்டும் தேர்வு பெற்றார்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை அச்சங்கத்தின் 24-வது ஆண்டுக் கூட்டம் தலைநகர் இஸ்தானா தங்கும் விடுதியில் நடைபெற்றது. தேர்தல் ஆண்டான இவ்வாண்டில் வழக்கம் போல் சில சலசலப்புகள் ஆண்டு கூட்டத்தில் காணப்பட்டன.
அதன் பின் நடைபெற்ற புதிய தலைமைத்துவ தேர்தலில், டத்தோ அப்துல் ரசூல் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
துணைத் தலைவராக சண்முகராசு தேர்வு செய்யப்பட்ட நிலையில், செயலாளர் பதவிக்கு போட்டி நிலவியது. இதில் வீரபாலம் 44 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். டத்தோ முகமட் இப்ராஹிம் சங்கத்தின் துணைச் செயலாளராகத் தேர்வுபெற்ற நிலையில், மனோகரன் பொருளாளராகத் தேர்வு பெற்றார்.
புஷ்பநாதன், சைட், வி.கே.என் பாலா, கசாலி ஆகியோர் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த நிர்வாகக் குழு தேர்தல் தேவன் தலைமையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவில் உள்ள இந்திய பொற்கொல்லர்கள் அந்நிய தொழிலாளர்கள் பற்றாக்குறையால் அவதியுற்று வருகின்றனர். இப்பிரச்னையைக் களைய சங்கம் தீவிரமாகச் செயல்பட்டுவருவதாக டத்தோ அப்துல் ரசூல் தெரிவித்தார்!
0 Comments