loader
தைரியம் இருந்தா பகடையை உருட்டு!  - பரமபதம்

தைரியம் இருந்தா பகடையை உருட்டு! - பரமபதம்

 

வெற்றி விக்டர்

கோலாலம்பூர் ஜூன் 21-

மலேசியாவில் முதல்முறையாக பழங்காலத்து விளையாட்டான பரமபதத்தைக் கருவாகக் கொண்டு ஒரு திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

விக்னேஷ் பிரபு இயக்கத்தில், வெளியாகவிருக்கும்  இத்திரைப்படம் ஒரு சரித்திரப்படமல்ல என்றாலும், சுமார் 20,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பரமபதத்தைத் தொட்டவர்கள் என்ன ஆகிறார்கள் என்பதுதான்  படத்தின் கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிகவும் சுவாரஸ்யமாக எடுக்கப்பட்டுள்ள இப்படம், மலேசியாவில் உள்ள பல சரித்திரப்பூர்வமான இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

கடினமான முயற்சிக்குப் பிறகு,  சரித்திர மர்மம் வாய்ந்த இடங்களில் காட்சியமைக்க  அனுமதி பெற்று இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக, இத்திரைப்படத்தின் இயக்குனர் விக்னேஸ் பிரபு தெரிவித்தார்.

நாளை (சனிக்கிழமை)  உலு கிள்ளான்  ஃபினாஸ் மண்டபத்தில்,  மதியம் 2 மணி முதல் மாலை 6 மணிக்குள் 'பரமபதம்' திரைப்படத்தின்  இரண்டாவது டீசர் வெளியிடப்படவிருக்கிறது. மலேசியக் கலைஞர் ரேபிட் மேக்  தலைமையில் இந்த டீசர் வெளியாகிறது.

'பரமபதம்' இதைத் தொடர்ந்து ஆராய்வோம்...

அதற்கு முன்,

நாளை அதன் இரண்டாவது டீசரைக் காணத் தவறாதீர்கள்.

தைரியம் இருந்தால் தயராகுங்கள் பகடையை உருட்ட...

'பரமபதம்' விரைவில் திரையில் விளையாடும்!

0 Comments

leave a reply

Recent News