loader
எல்லாம் முறைப்படி நடந்தால் பிறகு ஏன் மூன்றில் இரண்டு வளாகத்தை மூடினீர்கள்?  -	டத்தோ கோபால கிருஷ்ணன் கேள்வி

எல்லாம் முறைப்படி நடந்தால் பிறகு ஏன் மூன்றில் இரண்டு வளாகத்தை மூடினீர்கள்? - டத்தோ கோபால கிருஷ்ணன் கேள்வி

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர் ஜூன் 20-

நாட்டில் நடக்கும் விற்பனைப் பெருவிழாவில் சட்டவிரோத அந்நிய வியாபரிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது என்பதே எங்கள் கண்டனமே தவிர,  விற்பனைப் பெருவிழா ஏற்பாட்டு நிறுவனம் வரி கட்டுகிறதா இல்லையா? லைசென்ஸ் இருக்கிறதா? இல்லையா?  என்பது அல்ல என மைக்கி எனப்படும் மலேசிய இந்திய வர்த்தகத் தொழிலியல் சங்கங்களின் சம்மேளனத் தலைவர்  டத்தோ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

இங்கு வந்து வியாபாரம் செய்யும் அந்நிய வியாபாரிகள் முறையாக அனுமதி பெற்று , வரிச்  செலுத்தி வியாபாரம் செய்கிறார்களா? இவர்களின் லாபக் கணக்கு  என்ன? அதற்கான வரி  என்ன? என்பதே எங்கள் கேள்வி. இப்படிக் கூடாரம் அமைத்துப் பணத்தைச் சம்பாதிக்கும் இவர்களால், நாட்டிற்கு என்ன லாபம்? என அரசாங்கத்திடம் கேட்டோமே தவிர, உங்களிடம் அல்ல என டத்தோ கோபாலகிருஷ்ணன் சம்பந்தப்பட்டவர்களுக்குப் பதிலடி கொடுத்தார்.

எங்கள் கேள்வியின் பிரதிபலிப்பாக உடனடி நடவடிக்கை எடுத்த அரசு, ஒரு விற்பனைப்  பெருவிழாவில் அதிரடிச் சோதனை நடத்தியது. அங்குச் சில நபர்களையும் கைது செய்ததது. அவர்கள் சொல்வதுபோல் எல்லாம் முறைப்படி நடந்தால், பிறகு ஏன் அச்சோதனை சமயத்தில் மூன்றில் இரண்டு வளாகத்தை மூடினீர்கள்? எனவும் டத்தோ கோபாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.

நாங்கள் உங்களிடம் கேள்வி கேட்கவில்லை. முறையாக வரி செலுத்தி வியாபாரம் செய்வதால்,  நாங்கள் அரசாங்கத்திடம் கேள்வி கேட்டோம்.  அரசு முறையான நடவடிக்கையை அல்லது பதிலை எங்களுக்கு வழங்கும்.  எங்களைத் தெருவில் வந்து வியாபாரம் செய்யச் சொல்ல நீங்கள் யார்? பல லட்சம் செலவில் முறையாக அனுமதி பெற்று வாடிக்கையாளர்களுக்கு வசதி செய்து, தொழிலாளர்களைக் கொண்டு நாங்கள் வியாபாரம் செய்கிறோம். இலக்கவியல் முறையில் தொழில் நடக்கிறது. நாங்கள் அதையெல்லாம் வரவேற்கிறோம். அது அரசின் விடுமுறைகளைப் பின்பற்றி நடக்கும் நவீன வணிகம்.  ஆனால் எந்த ஒரு வரியையும் கட்டாமல் சட்டவிரோதமாக நடக்கும் வியாபாரங்களை நாங்கள் எதிர்க்கிறோம்.

இந்தப் பெருவிழா நிறுவனங்கள் தளத்தை வாடைக்கு விட்டு, அவர்களுக்குக் கிடைக்கும் லாபத்தைத்தான் அரசுக்கு வரியாகக் கட்டுகிறார்கள். ஆனால், அங்கு வியாபாராம் செய்யும் அந்நிய வியாபாரிகளின் விற்பனை லாபத்திற்கு

யார் வரி கட்டுவது? என டத்தோ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

எல்லாம் முறையாக நடந்தால், நடுக்கம் வேண்டாம்.  உள்நாட்டு வியாபாரிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் சட்ட விரோத அந்நிய வியாபாரிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் என டத்தோ கோபாலகிருஷ்ணன் கூறினார்!

0 Comments

leave a reply

Recent News