loader
நூற்றுக்கும் அதிகமான கடைகள் மூடப்பட்டன! தொழிலாளர் பற்றாக்குறையால் இந்திய வியாபாரம் முடக்கம்!

நூற்றுக்கும் அதிகமான கடைகள் மூடப்பட்டன! தொழிலாளர் பற்றாக்குறையால் இந்திய வியாபாரம் முடக்கம்!

நூற்றுக்கும் அதிகமான கடைகள் மூடப்பட்டன!

தொழிலாளர் பற்றாக்குறையால் இந்திய வியாபாரம் முடக்கம்!

 

அந்நியத் தொழிலாளர் விவகாரம் நாட்டில் பெரிய பிரச்னையாய் உருவெடுத்துள்ளது. தொடர்ச்சியான தொழிலாளர் பற்றாக்குறையால் நூற்றுக்கும் அதிகமான இந்தியர் வியாபாரம் தொடர்பான கடைகள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

சிகை அலங்காரக் கடைகளைப் பொருத்தவரை நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுவிட்டதாக ‘மிண்டாஸ்’ எனப்படும் மலேசிய இந்திய சிகை அலங்கார நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இத்துறையில் நிலவி வரும் தொழிலாளர் பற்றாக்குறையால் 3000 தொழிலாளர்களை வழங்க அரசு முன்வர வேண்டும் என மகேந்திரன் வேண்டுகோள் விடுத்தார்.

‘மிண்டாஸ்’ அமைப்பில் நூற்றுக்கணக்கானோர் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் அனைவரும் சொந்தமாக சிகை அலங்கார நிலையங்களை வைத்துள்ளனர். அனவைருமே பாரம்பரியமாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள தொழிலாளர் பற்றாக்குறையால் அவர்கள் வாழ்வாதார ரீதியில் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர். எனவே அரசாங்கம் இச்சிக்கலுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்.

இது குறித்துப் பலமுறை அரசிடம் கோரிக்கை வைத்தும், இதுவரைக்கும் எந்தத் தீர்வும் ஏற்படவில்லை.

சங்க ஆண்டுக்கூட்டத்திற்கு வருகை தந்த, கெ அடிலான் கட்சியின் உதவித் தலைவர் தியான் சுவா, குடிநுழைவு இலாகா நடவடிக்கை பிரிவு துணை இயக்குநர் முகமட் ஃபூசி ஆகியோரிடம் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

பாரம்பரியமாக நம் நாட்டைச் சேர்ந்தவர்கள் கடைகளை மூடும் இந்த நேரத்தில், சட்ட விரோதமாகத் தங்கியிருப்பவர்கள் தற்போது சிகை அலங்கார நிலையங்களை இயக்க ஆரம்பித்துவிட்டனர்.

அவர்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதும் வேதனையான விஷயம்தான் என மகேந்திரன் தெரிவித்தார்.

தலைநகரில் இச்சங்கத்திற்காக நடைபெற்ற ஆண்டுக்கூட்டத்தில் சங்கச் செயலாளர் ஆர்.ராஜசேகரன், பொருளாளர் ஜெயக்குமார், உதவித் தலைவர்கள் டாக்டர் சுந்தரம், கனதீபன், விஜயகுமார், ஆசைத்தம்பி, சூர்யகுமார், மீனா குமார், காப்பாளர் டாக்டர் மதிராஜன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்!

0 Comments

leave a reply

Recent News