loader
பேராவில் நடக்கவிருந்த விற்பனைப் பெருவிழா ரத்தா?

பேராவில் நடக்கவிருந்த விற்பனைப் பெருவிழா ரத்தா?

(வெற்றி விக்டர்)

 

கோலாலம்பூர் ஜூன் 10-

 

பேராக் தைப்பிங்கில் எதிர்வரும் ஜுன் 12 முதல் 16-ஆம் தேதி வரை நடக்கவிருந்த இந்திய விற்பனைப் பெருவிழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத்  தகவல் கசிந்துள்ளது.

 

விற்பனைப் பெருவிழாவில் அந்நிய வியாபாரிகள் முறையான அனுமதி பெறாமல், வரியையும் செலுத்தாமல் வியாபாரம் செய்து வருவதாகவும், இதனால் உள்நாட்டு வியாபாரிகள் பாதிப்படைவதாகவும் அண்மையில், மலேசிய ஜவுளி விற்பனை உரிமையாளர் சங்கம் மற்றும் உள்நாட்டு வணிகச் சங்கங்கள் கருத்துத் தெரிவித்திருந்தன. அதோடு  மலேசிய ஜவுளி விற்பனை உரிமையாளர் சங்கச் செயலாளர் டத்தின் மகேஸ்வரி இது தொடர்பாக போலீஸ் புகார் செய்து, இப்படிப்பட்ட விற்பனைப் பெருவிழாவில் அதிகாரிகள் அதிரடிச் சோதனை செய்ய வேண்டும் எனவும், சட்ட விரோதமாக நாட்டில் வியாபாரம் செய்யும் அந்நிய வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரியும் வலியுறுத்தினார்.

 

உள்நாட்டு வணிகர்களின் எதிர்ப்பு அலை விற்பனைப் பெருவிழா நடத்துனர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி விட்டதோ என்னவோ? இப்போது ரத்து செய்யப்போவதாகத் தெரிய வந்துள்ளது. விற்பனைப் பெருவிழா ரத்து செய்யப்படுவது இதுவே முதன்முறையாகும்.   இந்தப் பெருவிழா தொடங்க இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், இறுதிக்கட்ட நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டதன் காரணம் என்ன?

அரசாங்கம் அனுமதி வழங்கவில்லையா?  இல்லை அதிகமான அந்நிய வியாபாரிகள் வியாபாரம் செய்வது சோதனையில் அம்பலம் ஆகிவிடும் என்கிற அச்சமா? இல்லை ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறா? என்பது தெரியவில்லை.

 

ஆனால், இதுபோன்ற விற்பனைப் பெருவிழாக்களை இப்போது அரசு தீவிரமாகக் கண்காணித்து வருகிறது என்பது மட்டும் உண்மை.

விரைவில் அதிரடிச் சோதனை ஆரம்பமாகலாம்!

0 Comments

leave a reply

Recent News