loader
எஸ்.டபள்யூ நிறுவனத்தின் கல்யாண கண்காட்சி!

எஸ்.டபள்யூ நிறுவனத்தின் கல்யாண கண்காட்சி!

(இ.எஸ்.காளிதாசன்)

கோலாலம்பூர். ஏப்:7-

தலைநகர் பிரிக்பீல்ட்ஸ் டி.எல்.கே கட்டடத்தில் அமைந்திருக்கும் எஸ் டபள்யூ மண்டபத்தில், கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை திருமண கண்காட்சி  நடைபெற்று வருகிறது.
எஸ் டபள்யூ நிகழ்ச்சி ஏற்பாட்டில் நடைபெறும் இக்கண்காட்சியில், திருமணத்திற்குத் தேவையான அலங்காரம், டிஜே, புகைப்பட சேவை, உணவு, சிகை அலங்காரம், முக ஒப்பனை போன்ற துறையைச் சார்ந்தவர்கள் கண்காட்சி நடத்துகின்றனர்.
அதுமட்டுமின்றி இந்தியர்களின் ஆடை விற்பனையும் இங்கே உண்டு.
இந்நிலையில், நாளை அக்கண்காட்சியில் சிறப்புக் கலை நிகழ்ச்சியையும் ஏற்பாட்டுக் குழுவினர் நடத்தவிருக்கின்றனர். தொடர்ச்சியாக எஸ் டபள்யூ பெங்கியூட் மண்டபத்தில் இன்னும் சில கண்காட்சிகள் நடத்தப்படவிருப்பதாகவும் ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்தனர்!

0 Comments

leave a reply

Recent News