loader
எம்சிஐஎஸ் உடன் இணையும் ராம்  - ஆனந்தா!

எம்சிஐஎஸ் உடன் இணையும் ராம் - ஆனந்தா!

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர் ஏப்ரல் 26-

ராகாவின் நட்சத்திரங்களான ராம் - ஆனந்தா சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைந்து நிகழ்ச்சி படைத்து வருகின்றனர். இணைபிரியா சகோதரர்களை மீண்டும் ராகவில் நிகழ்ச்சி படைக்க ராம் - ஆனந்தாவுடன் கைகோர்த்துள்ளது எம்சிஐஎஸ்  காப்புறுதி நிறுவனம்.

நீண்ட காலமாக ராகாவில் பயணம் செய்த ராம் மற்றும் ஆனந்தா, பல நேயர்களின் மனம் கவர்ந்த அறிவிப்பாளர்கள் ஆவார்கள். அதிலும் ராகாவின் துவக்கக் காலத்தில் இந்த இரு சகோதரர்களின் இணைப் படைப்பு பலருக்கு விருந்து. அதன் பின் ராம் -ரேவதி கூட்டணி, ஆனந்தா -உதயா என்ற இணைப்பில் தனி-தனி நிகழ்ச்சியில் வெற்றிநடை போட்டனர். இந்த இரு சகோதரர்களும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் புதியவர்களுக்கு வழிவிட்டு ராகாவில் இருந்து ஒய்வு பெற்றனர்.

‘கலக்கல் காலை’யில் ஆனந்தா -உதயா கூட்டணியையும், ‘ஹைப்பர் மாலை’ ராம் - ரேவதி கூட்டணியையும் இழந்தது நோயர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. அதற்கு மருந்தாக இந்த இரு சகோதர்களும் இணைந்து இப்போது எம்சிஐஎஸ் ஆதரவில் ராகவில் புதிய நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கி வருகின்றனர்.

காப்புறுதி பாதுகாப்புத் துறையில் பல ஆண்டுகளாக மலேசியாவில் பிரபலமான நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் எம்சிஐஎஸ், புதிய மாற்றத்தை நோக்கிப் பயணிக்கத் தெடங்கியுள்ளது. இதன் தொடக்கமாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக 41 வயதான பிரஷேம் ஷிப்ரன் பொறுப்பேற்றுள்ளார்.

நிதிச் சேவைத் துறையில் பல ஆண்டுகள் அனுபவத்தைக் கொண்ட இவர், எம்சிஐஎஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டிருப்பது அந்நிறுவனத்திற்குப் புதிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மலேசியாவின் முதன்மை காப்புறுதி நிறுவனமாக எம்சிஐஎஸ் நிறுவனத்தைக் கொண்டுவருவதுதான் தமது நோக்கம் என அவர் தெரிவித்தார். பெட்டாலிங் ஜெயா ஷெரட்டன் தங்கும் விடுதியில், புதிய நியமனம் அதோடு  ராம் ஆனந்தா படைக்கும் நிகழ்ச்சி குறித்த செய்தியாளர் சந்திப்பில் இத்தகவலை அவர் தெரிவித்தார்.

தென்னாப்பிரிக்காவின் முதன்மை காப்புறுதி நிறுவனமான ‘சன்லம்’ குழுமத்துடன் இணைந்து, எம்சிஐஎஸ் காப்புறுதி நிறுவனம் செயல்படுவதால், புதிய மாற்றங்கள் நிச்சயம் உருவாகும் என பிரஷேம் கூறினார்.

தமது நிறுவனத்தின் செயல் திட்டங்கள்  குறித்து மக்களுக்கு உடனுக்குடன் தெரிவிப்பதற்கும், அவர்களுக்கு உதவும் மனப்பான்மையிலும், ராகா வானொலியுடன் இணைந்து  புதிய நிகழ்ச்சி வழங்க தமது நிறுவனம் தயார் என்றார்.

கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் ராம் – ஆனந்தா இருவரும்,  வாரம் தோறும் சனி-ஞாயிறு ஆகிய இரு தினங்களில் நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கி வருகின்றனர்.

ஒலிபரப்புத் துறையில் இருந்தாலும், மக்களுக்கு உதவும் மனப்பான்மையை நாங்கள் கொண்டுள்ளோம். எங்கள் நிகழ்ச்சியில் எங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி, இயலாதவர்களுக்கு உதவுவதை குறிக்கோளாக கொண்டு இருக்கிறோம். இந்த நிகழ்ச்சியில் வழக்கம் போல் எங்கள் ரகளை வேறு வண்ணத்தில் இருக்கும். அதேவேளை புதிய காப்புறுதி குறித்த விளக்கங்கள் மற்றும் எதிர்கால செயல் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என ராம் -ஆனந்தா தெரிவித்தனர்!

0 Comments

leave a reply

Recent News