loader
பெர்சாத்துவில் மீண்டும் மகாதீர்!? மகாதீரின் புது ஸ்கிரிப்ட்!

பெர்சாத்துவில் மீண்டும் மகாதீர்!? மகாதீரின் புது ஸ்கிரிப்ட்!

கோலாலம்பூர்: நாட்டில் அரசியல் பரபரப்பு உச்சத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு நாளும் அரங்கேறும் நாடகங்களால் மக்கள் குழம்பிப்போயுள்ளனர். மகாதீரின் ஆடு புலி ஆட்டம்தான் பெரும் குழப்பமாய் இருக்கிறது இங்கே.

கடந்த திங்களன்று பெர்சாத்து தலைவர் பதவியில் இருந்து அதிரடியாய் விலகினார்  துன் டாக்டர் மகாதீர் முகமட். அம்னோவுடன் கைகோர்க்கும் பெர்சாத்துவின் போக்கு பிடிக்காததால் விலகியதாகச் சொல்லப்பட்டது. பின்னர் கட்சிகள் அற்ற அரசாங்கம் அமைப்பதற்குத் தலைமை தாங்குவேன் என புது ஸ்கிரிப்ட் ரெடி செய்தார்.

இதனை அடுத்து மகாதீரை விட்டுக்கொடுக்காமல் இருந்த பிகேஆர் தரப்பு அன்வாரே பிரதமர் என புதிய கீதம் இசைத்தது.

இதன் எதிரொலியோ என்னவோ, இப்போது மீண்டும் பெர்சாத்துவின் தலைவர் பதவியில் மகாதீர் அமர இருப்பதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

பெர்சாத்து பொதுச்செயலாளர் மார்சுகி யஹ்யா இதனை உறுதிப்படுத்தியதாகத் தெரிகிறது!

0 Comments

leave a reply

Recent News