ரஜினி கட்சி தொடங்குவது குறித்து தமிழ்ப்புத்தாண்டில் தெரிவிப்பார் என்றும், கட்சி தொடங்குவதற்கு முன்பு தங்களது சொந்த கிராமமான வேப்பனஹள்ளி அருகே உள்ள நாச்சிக்குப்பத்திற்கு அவர் நிச்சயம் வந்து செல்வார். இதற்காக மாவட்ட செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் முயற்சி செய்து வருவதாகவும் ரஜினியின் அண்ணன் சத்தியநாராண ராவ் தெரிவித்தார்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மக்கள் மாற்றப்பட்டுள்ளார்கள். மக்களிடம் சகோதரத்துவம் இல்லாதநிலை உருவாகி உள்ளது. சி.ஏ.ஏ. சட்டம் குறித்து பிரதமர் மோடி சிறப்பாகச் செய்து வருகிறார். சில நாட்களில் அனைத்து பிரச்சனைகளும் சரியாகி விடும்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன்.
டெல்லியில் ஏற்பட்ட கலவரம் எதிர்கட்சிகள் அல்லது யாருடைய தூண்டுதல் பேரிலோ ஏற்பாடு செய்துள்ளனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் வந்த நிலையில் இதுபோன்ற சம்பவம் நடைபெறுவது நல்லதல்ல. இதுமிகவும் தவறு என அவர் தெரிவித்தார்!
0 Comments