தாம் பதவி விலகுவதற்கு பல காரணங்கள் உள்ளதாகவும், இருப்பினும் பல தரப்புகளின் ஆதரவும் தமக்கு இருப்பதை உணர்வதாகவும் இன்று மகாதீர் தெரிவித்துள்ளார்.
நான் பதவியை விட்டு விலக மாட்டேன் என்றும குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. எனவே நான் பதவி விலகினேன். எனக்குப் பதவி ஆசை இல்லை என மகாதீர் கூறினார்.
குறிப்பிட்ட குறிக்கோளை அடைவதற்கு மட்டுமே அரசியல் பதவிகள் இருக்க வேண்டும். மக்களின் நலனைக் காப்பதில் மட்டுமே அரசியல்வாதிகளின் எண்ணம் இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
கட்சிகள் சார்பற்ற அரசாங்கத்தை இரு தரப்பும் ஆதரித்தால், தாம் தொடர்ந்து பிரதமர் பதவியில் நீடிக்க முடியும் என்றார்.
அரசியல் மற்றும் அரசியல் கட்சிகளை இப்போதைக்கு ஒதுக்கி வைக்க வேண்டும்.
முடிந்தால் எந்தவொரு கட்சிக்கும் ஆதரவாக இல்லாத ஓர் அரசாங்கத்தை நிறுவ முயற்சி செய்ய வேண்டும் அவர் கூறினார்!
0 Comments